தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயற்கையியல் அறிஞர் சலீம் அலி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயற்கையியல் அறிஞர் சலீம் அலி Empty இயற்கையியல் அறிஞர் சலீம் அலி

Tue Jul 28, 2015 9:53 am
இயற்கையியல் அறிஞர் சலீம் அலி 13753_965241533534637_8199232318184443071_n

சலீம் அலி என்கிற இந்த பெயரோடு பேசுகிற பொழுது ஏதோ ஒரு பறவை நன்றியோடு கீதம் எழுப்பிக்கொண்டு இருக்கும் என்றே படுகிறது. வாழ்க்கை முழுக்க பறவைகளை பற்றிய ஆராய்ச்சியிலும் ,ஆவணப்படுத்தலிலும் ஒரு மனிதன் பங்காற்ற முடியும் என வாழ்ந்து காட்டியவர் அவர் .

அப்பா,அம்மாவை மிக இளம்வயதில் இழந்து மாமா வீட்டில் வளர்ந்த பொழுது மாமாவின் வேட்டையை தொடர்ந்து பார்க்கிற பழக்கம் சசலீம் அலிக்கு இருந்தது. மாமா ஒரு நாள் ஒரு மஞ்சள் நிற தொண்டை கொண்ட சிட்டுக்குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதன் பெயரென்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல் சலீம் அலிக்கு உண்டானது. மாமா மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் மில்லார்ட் எனும் ஆங்கிலேயரிடம் அழைத்து போனார். கண்கள் விரிய நின்று கொண்டிருந்த சிறுவனை நோக்கி அப்பறவையை பற்றி விவரமாக விவரித்து,அதன் பாடம் செய்யப்பட்ட ஒரு மாதிரியை காண்பித்துவிட்டு இரண்டு பறவைகள் பற்றிய புத்தகத்தை தருகிறார். அங்கே தான் பறவைகள் மீதான காதல் சலீம் அலிக்கு தொடங்கியது கைடாக இருந்து வருமானம் போதாத நிலையில் மனைவியின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் வந்த பொழுதும் பறவைகளை தேடுவதை அவர் நிறுத்தவே இல்லை.

பறவையியலில் முக்கியமாக ஒரு பறவையை வீழ்த்தி அதன் இறக்கை,சிறகுகள்,கால் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள். பின்னர் இரைப்பையை கீறி அது என்ன உண்ணும் என்றும் அறிந்து கொள்வார்கள். அதன் உடம்பில் என்னென்ன உண்ணி உள்ளன என்றும் அறிந்து குறிப்பெடுப்பார்கள். பின் பறவையை பாடம் செய்வார்கள். இதற்கான உழைப்பு அதீதமானது. அதை ஒரு மனிதர் எழுபது வருடங்களுக்கு மேலே செய்தார் என்பதில் இருந்தே சலீம் அலியின் உழைப்பின் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம் பறவைகள் காதல் மீதான தான் திருமணம் ஆன பின்னும் பர்மாவின் காடுகளின் ஊடாக பறவைகளை தேடிப்போகிற அளவுக்கு பறந்து விரிந்தது. ஒட்டகங்களோடு பாலைவனங்களில் பயணம் ,லடாக் ஊடாக இதயம் சிலிர்க்கும் பயணம் என ஓடிக்கொண்டே இருந்த நாயகன் அவர்.

முன்னூறு வகை பறவைகளை கண்டுபிடித்த இவர் ,பறவைகளுக்கு என்றொரு மொழி,உணர்வு,வலி உண்டு எனத்தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் .அவருக்கே காடே ஆய்வகம்.அவரின் பென்சில் ஸ்கெட்ச்களை தேடிப்பாருங்கள். அசந்து போவீர்கள். பிராணி நலன்,விலங்குரிமை,காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை போட்டு குழப்பி கொள்கிறோம் நாம் என்று உறுதியாக பேசினார் அவர்.

அவரின் சுயசரிதையை எண்பத்தி ஏழு வயதில் எழுதினார். நூலின் ஆரம்பத்தில் மட்டுமே அவரைப்பற்றி பேசுவார். பின்னர் எல்லா இடத்திலும் பறவைகள்,தன்னை ஆக்கிய மனிதர்கள் என்று மட்டுமே நூலை நகர்த்தி இருப்பார். ஒ"இன்றைக்கு வாழும் வாழ்க்கை மட்டுமே நிஜம் ; பனிமூட்டம் போன்ற கேள்விகளில் மனதை குழப்பிக்கொள்ளாமல் வாழ்வை நல்ல செயல்களில் ஈடுபட்ட நிலை நிறுத்த வேண்டும் " என்ற அவர் அப்படியே வாழ்ந்தார். அவரின் சுயசரிதை சிட்டுக்குருவியின் வீழ்ச்சி . ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சியில் தான் அந்த நாயகனின் எழுச்சித்தேடல் தொடங்கியது சுவையான முரண் தான் !
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum