தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தண்டனைகள் என்னென்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தண்டனைகள் என்னென்ன? Empty குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தண்டனைகள் என்னென்ன?

Sat Jul 04, 2015 10:40 pm
இந்தியாவில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012ல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படுகிறது.. 

உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் (Penetrative sexual assault):

ஒருவர் தன்னுடைய பிறப்புறுப்பையோ அல்லது வேறெந்த உறுப்புகளையோ (விரல் மற்றும் பொருள்களை) உட்செலுத்துவதையோ, உடலுறவு கொள்வதோ ‘உட்செலுத்தும் பாலியல் தாக்குதல்’ எனப்படும். இதற்கு 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை அல்லது அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படும். 

கடுமையான உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் (Aggravated penetrative sexual assault):

சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் காவல் துறை, ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், சிறைச்சாலை ஊழியர்கள், அரசு/தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், குழந்தைகளிடம் பிறப்புறுப்பை உட்செலுத்தி பாலியல் தாக்குதலுக்குண்டான செயல்கள் மற்றும் பல்வேறு இதர செயல்பாடுகளை செய்தால் அது ‘கடுமையான உட்செலுத்தும் பாலியல் தாக்குதல்’ என கருதப்படும். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படும். இவர்களே குழந்தைகள் மீது பிறப்புறுப்புக்களை உட்செலுத்தாமல் சில்மிஷம் தொடர்பான காரியங்களில் ஈடுப்பட்டால் அதுவும் 'கடுமையான பாலியல் தாக்குதல்' என கருதப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் தாக்குதல் (Sexual Assault):

பாலியல் உள்நோக்கத்துடன் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, குழந்தைகளை தொடச்செய்வது, பார்க்கச் செய்வது போன்றவை 'பாலியல் தாக்குதல்' ஆகும். இதற்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு.

பாலியல் தொந்தரவு (Sexual Harassment): 

பாலியல் உள்நோக்கத்துடன் குழந்தைகளிடம் பேசுவது, படம் காட்டுவது, ஜாடைக்காட்டுவது, ஒலி எழுப்புவது, ஆபாச படம் எடுக்க முயல்வது ஆகியவை 'பாலியல் தொந்தரவு' ஆகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை. அதுபோல் ஆபாச படம் எடுப்பதில் குழந்தைகளை ஈடுபடுத்துவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு உடந்தை/தூண்டுதலாக (Abetment) இருந்தால், செய்யப்பட்ட குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும். ஒரு நிறுவனத்தின் பணியாளர் மேற்கூறிய குற்றங்கள் செய்து அதை அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவிக்காதிருத்தால் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தையை குறித்த தகவல் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவை தொடர்பான புகார்களை காவல் நிலையங்கள், சிறப்பு சிறார் காவல் மையம், பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றில் புகார் செய்யலாம். குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் மாவட்டம் தோறும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு விரைவாக விசாரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum