பாலியல் தொந்தரவு தவிர்க்க 4 டிப்ஸ் ..
Mon Jun 24, 2013 7:16 pm
(1) வீட்டில் தனியாக இருக்கும் போது யாராவது உங்களை தாக்கவோ, நகையை பறிக்கவோ வந்தால்… நேராக கிச்சனுக்குள் ஓடி விடுங்கள். கிச்சனில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கத்தி எல்லாம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத்தான் தெரியும், அதை வைத்து அவனை எச்சரிக்கலாம். அதுவும் கைகளில் அகப்படவில்லையெனில், கைகளில் கிடைக்கும் பாத்திரத்தை எல்லாம் அவன் மீது தூக்கி வீசுங்கள். சத்தம் கேட்டு உதவிக்கு யாராவது வரலாம். தூக்கி வீசிக்கொண்டே கத்துங்கள். சத்தம்தான் இதுப்போன்ற ஆட்களின் முதல் எதிரி.
(2) தனியாக நடந்து செல்லும்போது யாரோ உங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தால்… வேகமாக நடந்தோ, ஓடியோ ஏதாவது ஒரு வீடு அல்லது கடையின் உள்ளே நுழைந்து விவரத்தை கூறுங்கள், கடை, வீடு, எதுவும் திறந்து இல்லையென்றால் ஏடிஎம் சென்டரில் நுழைந்து விடுங்கள். பெரும்பாலான ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். மேராக்கள் இருக்கும் உள்ளே நுழைந்தால் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள்.
(3) இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது அலுவலக லிப்டில் தனியாக செல்லும் போதோ லிப்டில் உங்களுடன் பயணிக்கும் நபரின் நடவடிக்கை சரியாக இல்லை என நீங்கள் நினைத்தால்.. லிப்டில் நுழைந்தவுட்ன் நீங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். உதாரணத்துக்கு நீங்கள் 13வது தளத்தை அடைய வேண்டுமென்றால் 13வது தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். இதனால், லிப்ட் ஒவ்வொரு தளத்திலும் நின்று கதவை திறந்து திறந்து செல்லும், இதனால், லிப்டினுள் உள்ள நபரால் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது.
(4) இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவிலோ, டாக்சியிலோ பயணித்தால்.. ஆட்டோவிலோ, டாக்கியிலோ ஏறுவதுக்கு முன் அதன் பதிவு என்னை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், ஆட்டோவில் ஏறியதும் உங்கள் வீட்டினர் யாருக்காவது போன் செய்து, நான் இந்த எண் உள்ள ஆட்டோவில், டாக்சியில் பயணிக்கிறேன். இந்த இடத்தில் இருக்கிறேன் என்று டிரைவர் காதில் விழும்படி உரக்கச் சொல்லுங்கள். யாரும் எடுக்காவட்டாலும் சொல்வது போன்று நடியுங்கள், இப்படி செய்வதால், இவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து என்று டிரைவர்களுக்கு பயம் வரும்.
நன்றியுடன்.. பெண்கள் மலர்,
(2) தனியாக நடந்து செல்லும்போது யாரோ உங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தால்… வேகமாக நடந்தோ, ஓடியோ ஏதாவது ஒரு வீடு அல்லது கடையின் உள்ளே நுழைந்து விவரத்தை கூறுங்கள், கடை, வீடு, எதுவும் திறந்து இல்லையென்றால் ஏடிஎம் சென்டரில் நுழைந்து விடுங்கள். பெரும்பாலான ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். மேராக்கள் இருக்கும் உள்ளே நுழைந்தால் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள்.
(3) இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது அலுவலக லிப்டில் தனியாக செல்லும் போதோ லிப்டில் உங்களுடன் பயணிக்கும் நபரின் நடவடிக்கை சரியாக இல்லை என நீங்கள் நினைத்தால்.. லிப்டில் நுழைந்தவுட்ன் நீங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். உதாரணத்துக்கு நீங்கள் 13வது தளத்தை அடைய வேண்டுமென்றால் 13வது தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். இதனால், லிப்ட் ஒவ்வொரு தளத்திலும் நின்று கதவை திறந்து திறந்து செல்லும், இதனால், லிப்டினுள் உள்ள நபரால் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது.
(4) இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவிலோ, டாக்சியிலோ பயணித்தால்.. ஆட்டோவிலோ, டாக்கியிலோ ஏறுவதுக்கு முன் அதன் பதிவு என்னை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், ஆட்டோவில் ஏறியதும் உங்கள் வீட்டினர் யாருக்காவது போன் செய்து, நான் இந்த எண் உள்ள ஆட்டோவில், டாக்சியில் பயணிக்கிறேன். இந்த இடத்தில் இருக்கிறேன் என்று டிரைவர் காதில் விழும்படி உரக்கச் சொல்லுங்கள். யாரும் எடுக்காவட்டாலும் சொல்வது போன்று நடியுங்கள், இப்படி செய்வதால், இவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து என்று டிரைவர்களுக்கு பயம் வரும்.
நன்றியுடன்.. பெண்கள் மலர்,
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|