தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? Empty மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை?

Mon Apr 13, 2015 11:39 pm
ந்தியாவில் இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, அனைவரையும் அடிப்படை செல்போன் வசதி சென்றடைந்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் அதிவேகமான வளர்ச்சியில் வளர்ந்து மக்களை சென்றடைந்து வருகின்றன. இது வளர்ச்சிதானே என நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், செல்போன் நிறுவனங்கள் வாயிலாக புதிய பிரச்னை ஒன்று தலை தூக்கியுள்ளது. அது தான் நெட் நியூட்ராலிட்டி.
மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? 4
நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன?

நெட் நியூட்ராலிட்டி எனும் இணையதள சமநிலை என்பது இணையதள சேவையை வழங்கும் செல்போன் சேவை நிறுவனமும், அரசும் அனைத்து இணையதள டேட்டாக்களையும் சமநிலையில் வழங்க வேண்டும், ஒரு வாடிக்கையாளருக்கும் மற்றொரு வாடிக்கையாளருக்கும் கட்டணத்தில் வித்தியாசத்தை காட்டக் கூடாது, அதேபோல் தகவல், இணையதளம், இயங்குதளம், ஆப்ஸ், தொலைதொடர்பு முறை ஆகியவற்றிலும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி ஆகும். இது கொலம்பியா யுனிவர்சிட்டி மீடியா சட்ட பிரிவின் பேராசிரியர் டிம் வூவால் 2003 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது.

என்ன பிரச்னை?

ஆரம்ப காலத்தில் செல்போன்கள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை பெற்று வந்தன. இதே நேரத்தில் சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் 800 மில்லியன் செல்போன் இணைப்புகளை வழங்கின., ஆனால், அதே செயல்தான் இப்போது செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக மாறியுள்ளன. காரணம், இன்று அதிகரித்துள்ள உடனடி ஆப்ஸ் நிறுவனங்கள் தான். உடனடி ஆப்ஸ் நிறுவனங்களும், வாய்ஸ் ஓவர் இண்டெர்நெட் ப்ரோட்டோகால் (VOIP) எனும் இணையதள கால் வசதி அதிகமாகி வருவதும்தான். இதன் மூலம் என்ன பிரச்னை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறிதானே வருகிறோம் என்றால், அதற்கு பதிலாய் உருவமெடுக்கிறது இணையதள சமநிலையின்மை என்ற புகார்.

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? 5
வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸை இலவசமாக ப்ளே ஸ்டோர்களில் வைத்துள்ளன. அதனை டவுன்லோடு செய்து குறைந்தபட்ச இணையதள சேவை இருந்தாலே செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன. அதுமட்டுமின்றி வாய்ஸ் கால், வீடியோ கால் போன்றவற்றை அறிமுகப்படுத்தி தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கியுள்ளன. இதனால், தேசிய அளவில் எஸ்.எம்.எஸ் மற்றும் கால் செய்பவர்களது எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. இதனால், கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது என செல்போன் சேவை நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து செல்போன் நெறிமுறையாளரான ட்ராய் அமைப்பிடம் ஏற்கெனவே செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த பிரச்னையை முன் வைத்துள்ளன. இதில் உடனடி ஆப்ஸ் நிறுவனங்களால் செல்போன் நிறுவனங்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் 350 மில்லியன் செல்போன் பயன்பாட்டாளர்களை கொண்ட இந்தியாவில், ஸ்மார்ட்போன் வேகமாக பரவி வரும் வேளையில், செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் குறையும் என கூறியுள்ளன.

இந்தப் பிரச்னையில் மக்கள் மத்தியில் என்ன மனநிலை உள்ளது?  செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துவிட்டால் உங்களுக்கு அது சிரமமாக இருக்குமா? என்ற அடிப்படையில் நெறிமுறையாளரான ட்ராய், 20 கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளது. இதனை நிரப்பி advqos@trai.gov.in என்ற ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இதற்கு வரும் பதில்களை பொறுத்து முடிவெடுக்க ட்ராய் முடிவு செய்துள்ளது.

என்ன கேள்விகள் என்பதை அறிய க்ளிக் செய்க
www.trai.gov.in/WriteReadData/WhatsNew/Documents/OTT-CP-27032015.pdf

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? 3(1)
மக்களை பாதிக்குமா?

அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் இதே போன்ற பிரச்னை தலை துக்கியபோது, அரசு நெட் நியூட்ராலிட்டி பக்கமே இருந்துள்ளது. நெட் நியூட்ராலிட்டி கொண்டு வர வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சில ஆப்ஸ்கள் செல்போன் சேவை நிறுவனங்கள் வழங்கும் அனைத்து சேவையையும் இலவசமாக வழங்குவது தான். இதற்கு செல்போன் சேவை நிறுவனங்கள் கையில் எடுக்கும் முடிவு, மக்களை பாதிக்கும் விதமாக உள்ளது. வருமானத்தை இழக்கும் சேவை நிறுவனங்கள் இரண்டு உத்திகளை கையாளலாம். ஒன்று இணையதள சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தலாம். அல்லது ஆப்ஸ் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் இருந்து பெரிய தொகையை பெற்று குறைந்த விலையில் சேவையை வழங்கலாம். ஆனால், ஆப்ஸ் நிறுவனங்கள் அதிக பணத்தை செலவழிக்க முன் வராது என்பதால் இணையதள சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணம் இப்போது தனித்தனியாக ஒவ்வொரு ஆப்ஸுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உள்ள சூழலில் கட்டணம் எப்படி அதிகரிக்கும் எனில் மாதாந்திர சேவைக்காக அடிப்படை கட்டணம் 150 ரூபாயாக இருக்கலாம் என்றும், கூகுள், யாகூ போன்ற தேடுதல் தளங்களுக்கு கட்டணம் 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மாதம் வசூலிக்கப்படலாம் என்றும், வாட்ஸ் அப், வீசாட் போன்ற உடனடி ஆப்ஸ்கள் 80 ரூபாய் என்ற அளவில் விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவை தவிர, இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்ஸில் பர்சேஸ் செய்ய அனைவரையும் பழக்கி விட்டன. அதன் விலை 50 ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. இப்படியே போனால், ஒரு மாதம் இந்த ஆப்ஸ்களை பயன்படுத்த மட்டும் தோராயமாக 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.
சாதாரணமாக 200 முதல் 300 ரூபாய்க்குள் இந்த அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1,000 ரூபாய் பெரிய தொகையாக இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. செல்போன் நிறுவனங்கள் விலையை அதிகரித்தால் மக்களுக்கு பிரச்னை. ஆப்ஸ் நிறுவனங்கள் தரும் சேவைகளால் செல்பொன் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

ட்ராய் மக்கள் கருத்துக்களை கேட்டு இதற்கு ஒரு நல்ல முடிவை அளித்து அதேசமயம் விலை நிர்ணயித்தலுக்கும் சரியான தீர்வை அளிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் விலை அதிகரிக்கவோ அல்லது இணையதள பயன்பாடு குறைந்து தொழில்நுட்ப ரீதியாக பின்னடைவை சந்திக்கவோ வாய்ப்புள்ளது. செல்போன்களும், ஆப்ஸ்களும் தான் இன்றைக்கு அனைத்தும் எனும்போது வாடிக்கையாளர்கள் இந்த செல்போன் நிறுவனங்களை தவிர்க்கவும், வேறு சில தனியார் வை-பை இணையதள வசதிகளை பயன்படுத்தி கால் மற்றும் எஸ்.எம்.எஸ்களை செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால் இருதரப்புக்கும் பிரச்னையான விஷயத்தை அரசு கவனத்துடன் கையாண்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு கிடைக்கும். டிஜிட்டல் இந்தியா, அனைவருக்கும் இணையதள சேவை என்று மார்தட்டி கொள்ளும் அரசும் இந்த பிரச்னையை சரியாக கையாண்டால் தான் சமநிலை உண்டாகும்.

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? 6
விதிமுறையை மீறியதா ஏர்டெல்?

நெட் நியூட்ராலிட்டிக்கான விதிமுறைகள் குறித்த ஆய்வு நடந்து வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் ''ஏர்டெல் ஜீரோ'' திட்டத்தின் மூலம் ஆப்ஸ்களில் சிலவற்றை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக உள்ளது என சேவை நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் குறைந்த விலையில் மார்க்கெட்டிங் வாய்ப்பபுகளை வழங்கி வரும் ஏர்டெல், நெட் நியூட்ராலிட்டி விதிமுறையை மீறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ராய் ''பிரச்னையை பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என்று கூறியுள்ளது.

ச.ஸ்ரீராம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? Empty Re: மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை?

Tue Apr 14, 2015 9:42 am
மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை? Net01_2372876f
இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள்!
நீங்கள் தினமும் 100 இ-மெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கியப் பணிகளுக்கு மட்டுமே இ-மெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம்.
இந்த நம்பிக்கையில்தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்-க்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால், நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம்.
அதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி (இணையதள சமநிலை) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டியை காக்கவேஇணையவாசிகள் இ-மெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து, இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணையதள சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்துகொள்ளலாம். அதாவது, எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.
இதன் உட்பொருள் எந்த ஓர் இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும், இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பதுதான்.
நெட் நியூட்ராலிட்டி பாதிப்பின் விபரீதம்
இணைய சேவைய வழங்குவது மட்டும்தான் நிறுவனங்களின் வேலையே தவிர, அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பதுதான் இணைய சமநிலையின் அடிநாதம்.
ஆனால், இப்போதே இணையத்தை அப்படித்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம்.
எப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பதுதான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.
உதாரணத்துக்கு, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அதேபோல செல்பேசியில் வாட்ஸ்அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.
இத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம். அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.
இதுதான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும்போது ஏற்படும் விபரீதம்.
ஏனெனில், நிறுவனங்கள் இணைய சேவையை சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம்போல வழங்கத் துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு, அதன் ஆதாரத் தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.
பொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்துக்கு, அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடம் அனுமதி கோரி வருகின்றன. இவை இன்டெர்நெட் பாஸ்ட் லேன் என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.
ஆனால், இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஓர் இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இன்டெர்நெட். ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இன்டெர்நெட்டும் சரி... இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே, இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன. அதேபோல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன.
இது தொடர்பாகத்தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.
நெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும், அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.
இணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக சேவ் தி இன்டெர்நெட் (http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.
இதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி (http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
நெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்!
சைபர்சிம்மனின் அதிகாரபூர்வ வலைதளம்: http://cybersimman.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum