தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Tue Nov 21, 2017 9:57 pm
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? 22405828_557913614600176_573301713201961294_n


ஒரு கத்தோலிக்க பாதிரியார் தன் சபையிலிருந்த மக்களிடம், “உங்களைப் போன்ற அதிகம் படிக்காதவர்களால் வேதப்புத்தகத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது” எனக் கூறியிருந்தார். ஆனால் அங்குள்ள ஒரு சகோதரனுக்கு தற்செயலாய் ஒரு புதிய ஏற்பாடு கிடைத்தபடியால் அதை வாசிக்கத் தொடங்கினார். சீக்கிரத்தில் இரட்சிக்கவும்பட்டார். ஒருநாள் அவர் தன் வீட்டில் புதிய ஏற்பாட்டை வாசித்துக்கொண்டிருந்தபோது பாதிரியார் வந்துவிட்டார். “வேதப்புத்தகத்தை நீ படிக்கலாகாது; இது கற்றுத்தேர்ந்த அறிஞர்களுக்கு மாத்திரமேயாகும்” என கடுமையாக எதிர்த்தார்.

அச்சகோதரன், “ஐயா இதை வாசித்ததின் விளைவாக நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்; அதுமாத்திரமல்ல நான் கிறிஸ்துவுக்குள் வளர திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் நான் வாஞ்சையாய் இருக்கவேண்டும் எனவும் (1பேதுரு 2:3) வசனம் எனக்கு கூறுகிறது” என்றார். ஞானப்பால் என்ற வார்த்தையைக் கேட்டதும் பாதிரியார், “சரிதான் ஆகிலும் பாதிரியாராகிய எங்களைத் தான் பால் கறந்து தரும்படி வைத்திருக்கிறார்” என்று பெருமிதத்தோடு கூறினார். அச்சகோதரன் சற்றும் தயங்காமல், “எனக்குக் கூட தினமும் பால் கொண்டுவரும் பால்காரன் இருந்தான். ஆனால் அவன், பாலில் தண்ணீர் கலப்பதை நான் சீக்கிரத்தில் கண்டுபிடித்தேன். ஆகவே பால்காரனுக்கு பதிலாக ஒரு பசுவை வாங்கிவிட தீர்மானித்தேன். ஐயா, இப்போது எனக்கு சுத்தமான பால் கிடைக்கிறது.” என தைரியத்துடன் பதிலளித்தார். அந்த பாதிரியாருக்கோ திகைப்புடன் கூடிய வெட்கம் சூழ்ந்துகொண்டது.

அன்பான சகோதர-சகோதரிகளே, பாவம் நிறைந்த இந்த இருளான உலகத்தில் நாம் முன்னேறி நடந்து செல்ல நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வெளிச்சம் வேதவசனம் மாத்திரமே! நாமாக வேதவசனத்தை ஆராய்ந்து ஆர்வமுடன் கற்றால் மட்டுமே கலப்படமற்ற உபதேசமாகிய சுத்தமான பாலை நாம் பெற்றிட முடியும். நம் வாழ்வின் எந்த பிரச்சனைக்கும் வேதவசனத்திலிருந்தே பதிலைப் பெறமுடியும். அதற்கு தேவனுடைய வசனத்தை தியானிப்பதற்கென கிரமமாய் நேரத்தை செலவு செய்ய வேண்டும். 

ஆனால் இன்றைய நிலையோ 
வேத வாசிப்பு இல்லாமையால், நமக்கு போதிக்கபடுவதில் எது உண்மை? எது பொய்? என்பதை அறிந்துகொள்ள முடியாமல் எல்லாவற்றையும் நம்புகின்றனர். 

ஆனால் பெரோயா பட்டணத்து விசுவாசிகள் பவுல் பிரசங்கத்தைக் கூட அவைகள் வேதவாக்கியங்களில் இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தபிறகே ஏற்றுக்கொண்டார்கள். 

இப்படிப்பட்ட ஒரு அறிவு நமக்கு இருக்குமென்றால் பிசாசானவனின் வஞ்சகத்தில் நாம் எளிதில் வீழ்ந்துவிட முடியாது.

விழித்துகொள் சகோதரனே விழித்துகொள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty Re: வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Tue Nov 21, 2017 9:57 pm
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? 22196021_555597004831837_6820872139586618418_n

சோரம் போக்கும் 
சொர்க்க வாசல்!....
-----------------------
பல்லாயிரம் மக்களின் கனவுப் பயணமாக, 
கடவுளின் கோவிலைப் பார்க்கும் ஆவலாக,
கத்தோலிக்க சபையால் நிர்மாணிக்கப்பட்டு, சுற்றுலாத் தளமாக காண்பிக்கப்படும் இடம்தான் இத்தாலியில் seina என்ற இடத்திலுள்ள "சொர்க்கவாசல்"...... 
கிபி 1215-1300 கும் இடையில் 
கட்டப்பட்டதுதான் இந்த நரகவாசல்!.... கலைநயத்தோடு காண்போரை வசீகரிக்கும் கட்டடக் கலையமைப்போடு அமைக்கப்பட்ட இந்த ஆலயமானது இப்போது உலகெங்கும் பிரபலமாகி, சுற்றுலாத் தளமாகி விட்டது! 
இங்கு செல்லும் பக்தர்கள், வாழ்நாளில் தாம் செய்துவிட்ட தெய்வீகக் காரியம் இதுவென்று நம்பிக்கொண்டிருக்கும் படியாக இது குறித்த சபையால் மெருகூட்டப்பட்டு போதிக்கப்படுகிறது! இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஒவ்வொரு கத்தோலிக்க விசுவாசியும் ஏங்குகிற அளவுக்கு, செல்வந்தர்கள் மாத்திரமே சென்றுவரக்கூடியதாக இது அமைந்திருக்கிறது! "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத்தேயு 19:24) என்று இயேசு சொல்லுகிறார்! இன்று இந்த சொர்க்கவாசல்கள் பல மதங்களிலும் காணப்படுகின்றன!
பிசாசானவன் இறைவனை விட்டு மக்களை வேறுபிரிக்கும்படிக்கு தனது ஊழியர்கள் மூலம் இவ்வாறான காரியங்களை மனமகிழ்வுக்கென்று ஏற்படுத்துகின்றான்!
வேதத்துக்குப் பொருந்தாத காரியங்களை அறிவித்து, பணம் பெருக்கிக்கொண்டு, சுவிசேஷத்திலிருந்து விசுவாசியை அப்புறப்படுத்தி, உலகத்தோடு இணைத்து, சாகும்வரை அறியாமையிலேயே நடத்தி, செத்துபோனபின்பும் நரகபாதாளத்தில் தள்ளும் இந்தப் பொல்லாங்கரின் காலத்துக்கு முடிவு சமீபமாகி விட்டது! இயேசுவின் மீள்வருகையில் இந்த வாசல்கள் மண்மேடுகளாகி உருத்தெரியாமல் ஆகிப்போகும் என்பதை, ஒவ்வொரு உண்மை விசுவாசியும் நன்கறிவான்!அறியாமையால் பலியாகும் எம் சகோதர சகோதரிகளின் கண்கள் திறக்கப்படவும், கட்டுகள் அவிழ்க்கப்படவும் ஒவ்வொரு ஆத்துமாவும் பாரத்துடன் ஜெபிப்போம்! 
"மாரநாதா "
இயேசு வருகிறார்!

வலைதளம்:-http://slowitaly.yourguidetoitaly.com/2015/03/siena-cathedral-reopens-its-stairway-to-heaven/

https://www.florence-tickets.com/the-gate-of-heaven.html
https://www.tripadvisor.co.uk/ShowUserReviews-g294226-d4155196-r273605886-Pura_Lempuyang-Bali.html

(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty Re: வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Tue Nov 21, 2017 9:58 pm
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? 22221607_555492608175610_3976173652952675452_n

கத்தோலிக்க சகோதரா...
நீ யாருடைய உபதேசத்தில் நிலைத்திருக்கிறாய்..??

கிருஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்கிறவனே உண்மையான கிருஸ்தவன்.

கிருஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் "மீறி" உன் சபையின் போதனையிலே நிலைதிருந்தால் நீ தேவனை உடையவன் அல்ல...

சிந்திப்பாயா...!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty Re: வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Tue Nov 21, 2017 9:59 pm
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? 22228561_554697328255138_5745302341436817969_n

மறைந்த வேதசாட்சி 
மறுபடி மரிப்பாரோ!.......
--------------------------
இயேசுவின் அப்போஸ்தலரான யாக்கோபு (யாகப்பர்) கிபி 44 இல் யூதேயாவில் ரோமா அரசால் வாளால் சிரச்சேதம் செய்யப்பட்டு வேத சாட்சியாய் மரித்தார்! அவர் இயேசுவை வணங்கும்படி போதித்ததால்தான் அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்! ஆனால் இன்று அந்த 
யாக்கோபு இவர்கள் இறையியலில் எவ்வாறு கேலிக்குரியவராகிறார் என்பதற்கு இலங்கை மன்னாரில் நிகழ்ந்த சம்பவம் சான்று பகர்கிறது! யாக்கோபுவை எவரும் பார்க்கவுமில்லை, படம் வரைந்து வைக்கவுமில்லை! பின்னே எப்படி அவர் (திருச்)சொரூபமானார்? வத்திக்கானின் சித்துவிளையாட்டில் வடிக்கப்பட்ட உருவத்துக்கு யாகப்பர் என்று பெயரிட்டு, வீதிதோறும் நட்டு, உண்டியலும் இட்டு, பெருவயிற்று சோம்பேறிகளுக்காக பிச்சையெடுக்க வைக்கப்பட்டிருப்பது நாடெங்கும் காணப்படுகிறது! இதில் மன்னாரில் உள்ள சொரூபத்தை சில விஷமிகள் உடைத்து விட்டார்களாம்!.. சொல்பவர்கள் யார்? வேதத்துக்குப் புறம்பான சொரூபத்தை நட்ட, இறைவனுக்கெதிரான இறையியலை கொண்ட, ஆடுகளை அடித்துப் புசிக்கும் மெய்யறிவை மறந்த மேய்ப்பர்கள்!.... உடைக்கப்பட்டது கிறீஸ்தவர்களின் பாதுகாவலரல்ல, கிறீஸ்துவுக்கெதிரான 
பாகாலின் படிமம்!....... 
உயிரோடு இருக்க மாட்டார் யாகப்பர்! உயிர்தெழுதலுக்காய் அவர் 
உறக்கத்தில் இருப்பார்!
ஊரைக்காக்க யார் தயவு தேவையென்று 
உண்மைக் கிறீஸ்தவன் உணர்ந்துகொள்வான்!
'மாரநாதா'
இயேசு வருகிறார்!........

வலைதளம்:- http://www.tamilwin.com/community/01/158394?ref=home-feed

(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty Re: வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Tue Nov 21, 2017 10:00 pm
வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? 22090166_553599288364942_8832356053873364603_n

திருந்துங்களேன்...!!

கடவுளை மறந்து கன்றுக்குட்டிகளை முத்தமிடும் 
கத்தோலிக்கம்!.....
-----------------------------
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவித்த இறைவன், சிவந்த சமுத்திரத்தைப் பிளந்து பாலைநிலத்தில் கூட்டியபோது, பத்துக்கட்டளைகளை பெற்றுவர மோசே மலையேறிப்போனார்! 

போன மோசே திரும்பிவர நாளானதால் இஸ்ரவேல் மக்கள் எகிப்திய வாழ்வை நினைத்து முறுமுறுக்கத் தொடங்கினர்! அடிமையாய் இருந்தாலும், கொண்டாட்டங்களும், கும்மாளங்களும், பண்டிகைகளும், விருந்துகளுமாக வாழ்ந்த, இறைசித்தத்துக்கெதிரான வாழ்வில் பிரியப்பட்டு, தாமும் அவ்வாறு மாற முயற்சித்து, எகிப்தை பின்பற்றி, பொன்கன்றுக் குட்டியை உருவாக்கி, விழுந்து வணங்கி விருந்துகொண்டாடினர்! 
விளைவு நாமறிந்தது!........

கிறிஸ்துவின் வருகையின்பின்னர் 
அப்போஸ்தலர்களால் உருவாக்கப்பட்ட சபைகள், உபத்திரவங்களுக்குள்ளானபோதுசிதறடிக்கப்பட்டு பலதேசங்களுக்கு பரவியபோது கிறீஸ்தவமும் பரவிக்கொண்டே வந்தது! இந்த நேரத்தில் பரிசுத்த பவுலால் ஸ்தாபிக்கப்பட்ட உரோம சபை, அக்காலப்பகுதியில் அங்கு அரசாண்ட கொன்ஸ்டாண்டிநோபிள் மன்னனுடைய தயவால் கிறீஸ்தவத்தை அரச மதப்பிரிவாக ஆக்கியபோது, பிறமதத்தவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்! 

சபைக்குள்வந்த பிறமத மக்களின் வழிபாட்டுக்கும் அவர்கள் திருப்திக்குமாக சிலைகளை நிறுத்தி, விவிலியத்துக்கு முரணாக சபையை நடத்தி, "ரோமன் கத்தோலிக்கம்" என்று பெயரில், அப்போதிருந்த போப் அவர்களால், உலகெங்கும் சபை உருவாக்கப்பட்டது! கிறிஸ்துவை ஏற்கனவே அறிந்திருந்தவர்கள் இதை எதிர்த்தபோது, "inquisition" என்ற பெயரில் விசாரணை செய்து துன்புறுத்தி கொலைசெய்தார்கள்! இதனால் உண்மையான சபை பாழடிக்கப்பட்டு, பொய்யான சபை உலகத்தை கட்டுப்படுத்தியது! 

விவிலியத்துக்கு எதிரான சடங்குகளும் சட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது! தலைமுறை மாறும்போது இரகசியங்கள் தடுக்கப்பட்டு, இதுவே சரியான இரட்சிப்பு 
வழி என்று போதிக்கப்பட்டதால், 
பக்தி சிரத்தையான அப்பாவி ரோமன் 
கத்தோலிக்க மக்கள் அதுவே சரியானதென்று ஏற்றுக்கொண்டு வாழப்பழகினர்!
உண்மையோ அதுவல்ல!......... 

இன்றுள்ள நவீன தொடர்பாடல், இணையத்தள வசதிகள், ரோமன் கத்தோலிக்கத்தின் இரகசியங்களை உடைத்து உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தி, தரவுரீதியாக சம்பவங்களை ஆதாரத்துடன் நிரூபித்து, சத்தியத்தை அறிந்து கொள்ளவும், சபையைவிட்டு வெளிவரவும் பேருதவி புரிந்தது!

ஆனால்!....... இதையும் அறிய மனதில்லாது, பாரம்பரியங்களையும், பழமைவாதங்களையும் பேசும் எம் பகுத்தறிவில்லாத சில முன்னோர்கள், சமூகத்தில் தாங்கள் பெற்றுக்கொண்ட அந்தஸ்து கௌரவங்களுக்காக, தலைமுறைகளை நாசத்துக்குள் வழிநடத்தி, காலம் முடிந்து கண்மூடிப் போகின்றனர்! இவர்கள் நியாயத்தீர்ப்பின் வேளையில் நெருங்கியிருந்தாலும், அதன் பலன்களை தம் சந்ததியே அனுபவிக்கும்படி விட்டுப் போய்விடுகிறார்கள்! 

கிறிஸ்துவின் வருகையின்போது ஆக்கினைத்தீர்ப்புக்கு உரியவர்களாக தாமும் எழுவதுடன், சந்ததியையும் பின்தொடரப் பண்ணுகிறார்கள்!

இஸ்ரவேலர்கள் செய்த கன்றுக்குட்டி வழிபாடுகள், மனித உருக்களாய் மாறி, புனிதர்கள் என்று பெயரில் பூலோகம் எங்கும் பொறிகளாய் நிற்கின்றன!

ஆயிரக்கணக்கான பேராலயங்களை நாடுகள் தோறும் எழுப்பி, இறந்துபோன மனிதர்களை இரட்சகர்களாக்கி, அவற்றை திருச்சொரூபம் என்று விலங்குகளுக்கொப்பாக அஃறிணையாக மாற்றி, ஆராதனைக்குரியதாக்கியிருக்கிறது கத்தோலிக்க சபை! 

இஸ்ரவேலிலும் பேரளவு ஆலயங்கள் இவர்களின் விக்கிரகங்களால் நிறைந்து இன்றிருக்கும் நிலை, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" (ஓசியா 8:14) என்று வேதம் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியதன் நிறைவேற்றமாக காணப்படுகிறது!

காற்றடைத்த இந்தக் கல்லுகளும், கையால் வரையப்பட்ட இந்த கடவுள் சித்திரங்களும், நியாயாதிபதி இயேசுவின் நியாயத்தீர்ப்பு வருகையின்போது, கடலிலும், கனலிலும், கடும் காற்றிலும் சிதிலமாகி சின்னாபின்னப்படுமே தவிர, இயேசுவுக்கு முன்பாக இவர்களை நீதிமானாக ஒருபோதும் நிலைநிறுத்த மாட்டாது என்பது மறைந்துபோன அப்பாவிக் கத்தோலிக்க சகோதரங்களுக்கு மட்டுமல்ல, உயிரோடிருக்கும் சகோதரங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!.......................
இது எச்சரிப்பின் காலம்!

விவிலிய வார்த்தைகளை விசுவாசிப்போம்!
வீணானவைகளைக் கண்டு 
வழிவிலகுவோம்!......
"மாரநாதா"
இயேசு சீக்கிரம் வருகிறார்!..
Sponsored content

வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா? Empty Re: வேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum