தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சேம நல (PF) நிதி விபரங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சேம நல (PF) நிதி விபரங்கள் Empty சேம நல (PF) நிதி விபரங்கள்

Wed Aug 10, 2016 9:14 am
சேமநலநிதியான PF மூன்று வகைப்படும். அரசு ஊழியர்களுக்கான GPF, மற்ற ஊழியர்களுக்கான CPF தவிர, ஊழியர் அல்லாதவர்களுக்கான PPF. மூன்றையும் சற்று விரிவாகவே பார்த்துவிடலாம். சேமநலநிதி பற்றி அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கென்று தனியாக ஒரு சட்டமே உண்டு. ஊழியர்கள் பி.எப் மற்றும் ஏனைய சில சலுகைகள் கொண்ட அந்தத் திட்டத்திற்கு Employees PF and Misc Provisions Act என்று பெயர். 1952_ம் வருடம் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் சட்டம் இது. இருபதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களில், நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சேமநல நிதி என்கிற இந்தத் திட்டத்தினை வழங்கியே ஆகவேண்டும்.

எல்லாம் பணம்தான் என்றாலும், ஒருவர் பெறுகிற மாதச்சம்பளம் என்பது சில பகுதிகளால் ஆனது. அதில் முக்கியப் பகுதி, அடிப்படை சம்பளம். இதனை ஆங்கிலத்தில் ‘பேசிக் பே’ என்பார்கள். அடுத்த பெரிய பகுதி பஞ்சப்படி. ஆங்கிலத்தில் இதனைக் கொஞ்சம் கௌரவமாகச் சொல்லலாம். ‘டியர்னெஸ் அலவன்ஸ்’. அதாவது சுருக்கமாக டி.ஏ. இவை தவிர, இன்னும் கூட சில பகுதிகள் உண்டு. (வீட்டு வாடகைப்படி போன்றவை). அவையெல்லாம் இருக்கட்டும். காரணம், சேமநலநிதியைப் பொறுத்தவரை, முதல் இரண்டு பகுதிகளான அடிப்படைச் சம்பளமும், டி.ஏ.வும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

‘பேசிக்+டி.ஏ’ எவ்வளவோ, அந்தத் தொகையில் நூற்றுக்கு 12 ரூபாய் வீதம் (12%) ஊழியரின் சம்பளத்தில் இருந்து சேமநலநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படும். இப்படி பிடித்தம் செய்யப்படும் தொகைக்குப் பெயர், ‘ஊழியர் பங்கு’. ‘பேசிக்+டி.ஏ’ எவ்வளவு இருந்தாலும், அதிகபட்சமாக 6500 ரூபாய்க்கு மட்டும், 12 % பி.எப். பிடித்தால் போதும். அதற்கு மேலும் கொடுக்கப்படுகிற ‘தொகை’க்கு பி.எப். பிடித்தம் செய்வதென்றாலும் செய்யலாம். அது நிறுவனத்தின் விருப்பத்தினைப் பொறுத்தது.

எதற்காக நிறுவனத்தின் ‘விருப்பம்‘ என்று சொல்லப்படுகிறது என்கிற சந்தேகம் வரலாம். காரணம் இருக்கிறது. ஊழியரிடம் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறதோ, அதே அளவு தொகையினை, நிறுவனமும் அதன் பங்காக (‘நிறுவனத்தின் பங்கு’) கொடுக்க வேண்டும். இரண்டு பங்குகளையும் சேர்த்து, அரசு நடத்தும் சேமநல அலுவலகத்தில், ஊழியரின் கணக்கில் கட்ட வேண்டியது நிறுவனத்தின் கடமை.

முன்பெல்லாம், ‘ஒருவர் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கழித்து’ என்றும், அதன் பின், ‘6 மாதம் கழித்து’ என்றும், அதன் பின் , ‘மூன்றுமாதம் முடிந்ததும்‘ என்றெல்லாம் இருந்த சட்டம், இப்போது, ‘ஒருவர், ஒரு நாள் வேலை செய்தால் கூட’ அவருக்கு நிறுவனம் சேம நலநிதி கட்ட வேண்டும்‘ என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆக, (அரசு அல்லாத) நிறுவனங்களில் வேலை செய்யும் எவருக்கும், அவரது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதி கட்டாய சேமிப்பாகிவிடுகிறது. ஒரு பகுதி என்றால், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 24% ( ஊழியர் பங்கு 12% + நிறுவனத்தின் பங்கு 12%). கிட்டத்தட்ட நாலில் ஒரு பகுதி. கணிசமான தொகை.

அரசு ஊழியர்களுக்கு EPF சட்டம் 1952 பொருந்தாது. அவர்களுக்கு, ஜெனரல் பிராவிடெண்ட் பண்ட் (GPF) என்று ஒரு தனிச்சட்டம் இருக்கிறது. அதில் நிறுவனத்தின் பங்கு என்பது கிடையாது. ஊழியரின் பங்கு மட்டும்தான். (சேமநல நிதிக்குத் தருவதற்குப் பதிலாக ஓய்வூதியம் என்கிற நலன் தரப்படுகிறது). அதனால் அவர்கள் ஊதியத்தில் ஒரு பகுதி (பேசிக்+டி.ஏ. வில், குறைந்தபட்சம் 10%) கட்டாய சேமிப்பு ஆகிவிடுகிறது. அவர்கள் விரும்பினால், அதற்கு மேலும் கூட நிறிதில் போடலாம், சேமிக்கலாம்.

மொத்தத்தில், முறைப்படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும், ஏதாவது ஒரு சேமநல நிதி உண்டு. கூடுதலோ அல்லது குறைவோ. மாதா மாதம் ஏதோ ஒரு தொகை சேமிப்பிற்குப் போய்விடுகிறது. ஒருவர், 25 வயதில் வேலைக்குச் சேர்வதாக வைத்துக்கொண்டால் கூட, ஓய்வு பெறும் 60 வயது வரை கணக்கிட்டால், 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செய்கிற தொடர் சேமிப்பு. சேமிக்கும் அந்தப் பணத்திற்கு வருமான வரி விலக்கு. தவிர, சேமிப்பு மொத்தத்திற்கும் எட்டரை சதவிதம் வட்டி. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வட்டிக்கும் வருமானவரி கிடையாது.

அறுபது வயது வரை வேலை செய்துவிட்டு ஓய்வு பெறும்போது, கணிசமாக சேர்ந்தும் வளர்ந்துமிருக்கும் சேமநல நிதி கைகொடுக்கும். சௌகர்யமாகவும், கௌரவமாகவும் வாழ உதவும்.

“வேலைக்குப் போகிறவர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கிறதே! நாங்கள் வியாபாரம் செய்கிறோம், விவசாயம் செய்கிறோம், கைத்தொழில் செய்கிறோம். எங்களுக்குச் சம்பளம் என்று ஒன்று கிடையாது. அது பரவாயில்லை. ஆனால், வயதான பிறகு என்ன செய்ய? எங்களுக்கு இப்படி, சேமநல நிதி போன்ற பாதுகாப்பு ஏதும் இருக்கிறதா?” என்று கேட்கலாம்.

அதற்கான பதில், பி.பி.எப். (PPF) பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட்.

பொதுமக்களுக்கான சேம நல நிதி. ஊழியர், ஊழியர் அல்லாதவர் என்கிற பாகுபாடு இதில் கிடையாது. எவரும் இதில் சேரலாம். அரசு ஊழியர்களின் ஜி.பி.எப். போன்றது. காரணம், இங்கேயும் ஒரு ‘பங்கு’ தான். நிறுவனர், ஊழியர் என்பது கிடையாது.

இதில் போடப்படும் பணத்திற்கு , பொது மற்றும் ஊழியர்களின் சேமநல நிதி போன்றே, ‘80 சி’ பிரிவின் கீழ், வரிவிலக்கு உண்டு. இதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது (பொது மற்றும் ஊழியர் சேம நல நிதி போன்றே).

அந்த சேமநல நிதிகளை இடையில் எடுக்காமல், ஓய்வுகாலம் வரை சேமித்தாக வேண்டும் என்பது போலவே இங்கேயும் காலவரையறை உண்டு. அது 15 வருடங்கள். அங்கேயும் கடன் பெறலாம். இங்கேயும் கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. எல்லா சேமநல நிதிகளிலும், ஒரு பகுதியை சில அவசியத் தேவைகளுக்கு வேண்டுமானால் இடையிலும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த வசதி, பி.பி.எப்._ல் ஏழு வருடங்களுக்குப் பிறகு உண்டு.

வருடம் ஒன்றுக்கு ஒருவர் அதிகபட்சமாக எழுபதாயிரம் ரூபாய் வரைகூட PPFல் போடலாம். (80 சி பிரிவில் மொத்தம் ஒரு லட்சம் தான். அதற்குள் தான் இதுவும் வரும்). கணக்கு தொடங்கிவிட்டால், இடைவெளி விடாது ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்சம் ரூ 500 கட்ட வேண்டும்.

15 வருடங்கள் என்பது குறைந்தபட்சம் தான். அதற்கு மேலும் விட்டு வைக்கலாம். விட்டுவைக்க வேண்டும். நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனம் செய்யும் சேமநல நிதி இருக்கிறது. தேவைப்பட்டால், அவர்கள் அதே நிதியில் கூட , விருப்பப் பங்களிப்பு (Voluntry PF) என்று தங்கள் ஊதியத்தில் இருந்து 12 % க்கும் அதிகமான பணத்தினைச் செலுத்தலாம். அதற்கும் வரியில்லாத வட்டி கிடைக்கும். அவர்களுக்கு பி.பி.எப் என்பது கூடுதல் வாய்ப்புதான். விரும்பினால் சேரலாம். இல்லாவிட்டால், 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும் மற்ற முதலீட்டு வாய்ப்புகளுக்கும் ( காப்பீடு, ELSS, 5 ஆண்டுகால வங்கி வைப்பு போன்றவற்றுக்கு) போகலாம்.

ஆனால், பணிபுரியாத, மாத ஊதியம் பெறாத ஒவ்வொருவரும், பி.பி.எப் ல் சேருவதைப் பற்றி கட்டாயம் யோசிக்க வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடு , மிதமான வருமானம் (8% வட்டி), கட்டும் பணம் மொத்தத்திற்கும் வரிவிலக்கு, வரும் வட்டிக்கும் வரிவிலக்கு, போன்றவை மட்டுமல்ல அதற்கான காரணங்கள். ஓய்வு காலத்திற்காக, எல்லோருமே கொஞ்சமேனும் சேமித்தாக வேண்டும்.

வியாபாரியோ, தொழில் செய்பவரோ, ஓய்வுகால தேவை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வியாபாரம், சுயதொழில் என்பதெல்லாம் வேறு. தனிப்பட்ட சேமிப்பு என்பது வேறு.

அப்படிச் சேமிக்கும் பணம் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டியதும், ஓய்வுக் காலத்தில் கணிசமாக சேர்ந்தும் வளர்ந்தும் இருக்க வேண்டியதும் அவசியம். அதற்கு பி.பி.எப் ஒரு நல்ல வாய்ப்பு. பி.பி.எப் கணக்குகளை குறிப்பிட்ட அஞ்சலகங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் தொடங்கலாம்..

நன்றி: சோம.வள்ளியப்பன் - குமுதம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum