கிராமத்து விடுகதைகள்
Sat Nov 14, 2015 3:54 pm
1)"பேயாத பெருமழை பேஞ்சாலும் ,குறுகாத குஞ்சு என்ன குஞ்சு"-
பதில்-மீன் குஞ்சு
2)"ஒரு பாத்தியில நாலு வெள்ளாம, நாலு வெள்ளாம வெளேர்னு இருக்கும்"-அது என்ன?
பதில்--பால்,மோர்,தயிர்,வெண்ணெய்
3) "காடெல்லாம் சுத்தி வரும் கண்டலப்பசுவே..!"
கண்ட தண்ணிய குடிக்காத! வெங்கலப்பசுவே...!அது என்ன?
மிதியடி(அ) செருப்பு
4) "சடுகுடு....சடுகுடுன்னு ஓடற...புறாவே..."
"உள்ளிப்பிடிச்சா...சதையில்ல..."-அது என்ன?
பதில் ---- தண்ணீர்
5)"ஓ...ஓ மரமே...ஒசந்தமரமே...
ஒரு பிடி இலைக்கு கெதிகெட்டமரமே....அதுஎன்ன?
பதில்---கள்ளிமரம்
6)"கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
கையத்தட்டுன்னா...கை..வலிக்கல..
கிண்டிவிட்ட வெள்ளாம வரலை- அது என்ன?
பதில்---கொண்டை சேவல்
7)"அட்டைக்கு ஆயிரம் கண்ணு,"
"முட்டைக்கு மூன்று கண்ணு"- அது என்ன?
பதில்-கட்டிலும் தேங்காயும்
"திங்க பழம் காய்க்கும்...திங்காத காய் காய்க்கும்"- அது என்ன?
பதில்--வேப்ப மரம்
9)"ஆகாயத்து மணி ஆட்டு...லா..லா.."
வெட்டி நறுக்கி...லா..லா..
ஏப்பி...சூப்பி...லா...லா- அது என்ன?
விடை-முருங்கைக்காய்
10)"ஒசரப்பறக்குது...மைனா..குருவி..."
"நெஞ்சு அறுத்தா..நத்தம் (இரத்தம்) இல்ல?-அது என்ன?
விடை:ஈசல்
11)"செவலைக்காளை..பட்ட வெளியில் தின்னுது
பச்சைப்புல்..திங்க..மாட்டியுது- அது என்ன?
விடை--தீ
12) கட்ட காளை...பழியா...பாயுது...ஆளா...அது என்ன?
விடை--நெருஞ்சி முள்
13) மண்ணுக்குள்ளயிருக்கிற...மயிராண்டி....
உரிக்க...உரிக்க தோளாண்டி- அது எனன?
விடை---வெங்காயம்
14)"கதைகதையாக்காரணமாம்...
காரணத்துல...ஒரு ஊரணியாம்...
ஊரணியில....ஒரு...உழக்குத்தண்ணி...
குடிச்சுப்பார்த்த இனிச்சுக்கிடக்கு"-அது என்ன?
விடை---இளநீர்
ம.மாரிமுத்து
பதில்-மீன் குஞ்சு
2)"ஒரு பாத்தியில நாலு வெள்ளாம, நாலு வெள்ளாம வெளேர்னு இருக்கும்"-அது என்ன?
பதில்--பால்,மோர்,தயிர்,வெண்ணெய்
3) "காடெல்லாம் சுத்தி வரும் கண்டலப்பசுவே..!"
கண்ட தண்ணிய குடிக்காத! வெங்கலப்பசுவே...!அது என்ன?
மிதியடி(அ) செருப்பு
4) "சடுகுடு....சடுகுடுன்னு ஓடற...புறாவே..."
"உள்ளிப்பிடிச்சா...சதையில்ல..."-அது என்ன?
பதில் ---- தண்ணீர்
5)"ஓ...ஓ மரமே...ஒசந்தமரமே...
ஒரு பிடி இலைக்கு கெதிகெட்டமரமே....அதுஎன்ன?
பதில்---கள்ளிமரம்
6)"கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
கையத்தட்டுன்னா...கை..வலிக்கல..
கிண்டிவிட்ட வெள்ளாம வரலை- அது என்ன?
பதில்---கொண்டை சேவல்
7)"அட்டைக்கு ஆயிரம் கண்ணு,"
"முட்டைக்கு மூன்று கண்ணு"- அது என்ன?
பதில்-கட்டிலும் தேங்காயும்
"திங்க பழம் காய்க்கும்...திங்காத காய் காய்க்கும்"- அது என்ன?
பதில்--வேப்ப மரம்
9)"ஆகாயத்து மணி ஆட்டு...லா..லா.."
வெட்டி நறுக்கி...லா..லா..
ஏப்பி...சூப்பி...லா...லா- அது என்ன?
விடை-முருங்கைக்காய்
10)"ஒசரப்பறக்குது...மைனா..குருவி..."
"நெஞ்சு அறுத்தா..நத்தம் (இரத்தம்) இல்ல?-அது என்ன?
விடை:ஈசல்
11)"செவலைக்காளை..பட்ட வெளியில் தின்னுது
பச்சைப்புல்..திங்க..மாட்டியுது- அது என்ன?
விடை--தீ
12) கட்ட காளை...பழியா...பாயுது...ஆளா...அது என்ன?
விடை--நெருஞ்சி முள்
13) மண்ணுக்குள்ளயிருக்கிற...மயிராண்டி....
உரிக்க...உரிக்க தோளாண்டி- அது எனன?
விடை---வெங்காயம்
14)"கதைகதையாக்காரணமாம்...
காரணத்துல...ஒரு ஊரணியாம்...
ஊரணியில....ஒரு...உழக்குத்தண்ணி...
குடிச்சுப்பார்த்த இனிச்சுக்கிடக்கு"-அது என்ன?
விடை---இளநீர்
ம.மாரிமுத்து
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|