தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ISIS தீவிரவாதியின் அற்புத மனமாற்ற சாட்சி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ISIS தீவிரவாதியின் அற்புத மனமாற்ற சாட்சி Empty ISIS தீவிரவாதியின் அற்புத மனமாற்ற சாட்சி

Thu Mar 26, 2015 7:25 pm

ISIS தீவிரவாதியின் அற்புத மனமாற்ற சாட்சி 10953716_761944767253057_2286581418635820953_n

நிலத்தில் விழுந்த கோதுமை மணி
உங்களை அசைக்க போகும் ஓர் ISIS தீவிரவாதியின் அற்புத மனமாற்ற சாட்சி.
I பேதுரு 1:5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
32 வயது உள்ள இந்த தீவிரவாதி சமீபத்தில் சிரியாவில் நடைபெற்ற போரில் படுகாயமுற்றார். சண்டையில் தோற்றுப்போன தீவிரவாதிகள் குண்டடிபட்டு விழுந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். சிலர் பலமணிநேரம் உயிருக்கு போராடி இறந்து போக இந்த நபரும் அப்படியே நினைவிழந்தார். அப்போது அங்கு வந்த சில கிறிஸ்தவ நண்பர்கள் இறந்து கிடந்தவர்களை கண்டு அவர்களை நல்லடக்கம் செய்ய 26 கிலோமீட்டர் வரை தூக்கி சென்றனர். அப்போது யாரும் எதிர்பாரா வண்ணமாக இந்த நபருக்கு சுயநினைவு வந்தது.
தங்கள் குடும்பத்தினர் பலரை இப்படிப்பட்ட தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றிருந்தாலும் குண்டடிபட்டு சுயநினைவுக்கு வந்தவரை அன்போடு மருத்துவமனையில் அனுமதித்து பாதுகாத்தனர். சுயநினைவு பெற்றவர் கிறிஸ்தவர்களின் அன்பும் ஆதரவும் அசைத்தது. தான் சந்தித்த பரலோக காட்சியை வேதாகமத்தை வைத்து புரிந்து கொண்டார். வேதாகமத்தை படித்த இவருக்கு கடவுள் எவ்வளவு அன்புள்ளவர் என புரிய ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களின் உண்மையான அன்பும், ஜெபமும் பல படுகொலைகளை செய்தவரை மனமாற்றம் அடைய செய்தது. அப்போது அவர் கொடுத்த சாட்சி இப்போது உலகையே உலுக்கி வருகிறது. அவைகள் உங்களுக்காக.
"என் மதத்திற்காக மரித்தால் பரலோகத்திற்கு வாசல் (Gates of Jannah) செல்லலாம் என்று நினைத்திருந்தேன். நான் இறந்த பிறகு பரலோகம் நோக்கி செல்வதை உணர்ந்தேன். ஆனாலும் என்முன் சாத்தான்கள் தோன்றி "JINN" என்னை நரகத்திற்கு இழுத்து செல்வதை உணர்ந்தேன். நான் பலரை கழுத்தை வெட்டி கொலை செய்ததற்காக நரகத்தில் என் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். அப்போது என்னால் துடிதுடித்து இறந்தவர்கள் என் கண்முன் வந்தார்கள். இதை நான் முழுவதும் உணர்ந்தேன். இவர்களை கொண்டதற்காக என் நாட்களை நரகத்தில் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
அப்பொழுது என்னோடு கடவுள் எனப்பட்டவர் பேசினார். "உனக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாட்களை துன்பகரமாக கழித்துவிட்டாய். இப்போது உனக்கு நரகத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறேன். ஆனாலும் உன் பாவங்களை அறிக்கையிட்டு கடவுளோடு வாழும் வாழ்க்கையை வாழ விரும்பினால் மீண்டும் வாழும் ஓர் வாய்ப்பு கொடுக்கிறேன்"
இதை தான் இந்த 32 வயது ISIS தீவிரவாதி கூறி இருக்கிறான். மிகவேகமாக குணம் அடைந்த இவர் இப்பொழுது அங்குள்ள போதகர்கள் உதவியுடன் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். முக்கியமாக தீவிரவாதிகளுக்கு சாட்சியாக இருக்க முனைந்துள்ளார். கிறிஸ்தவர்களின் அன்பும் அரவணைப்பும் இவரை முற்றிலுமாக மாற்றிவிட்டது.
இதுவரை மற்றவர்களின் உயிரை எடுக்கவும், தலையை துண்டாக்கவும் பாடுபட்ட இவர் இப்போது மற்றவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கவும், துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளார்.
இவருக்காகவும் இவரின் எதிர்க்கால நன்மைக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். ரோமர் 12:20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு;
இப்படிப்பட்ட சாட்சிகள் பல உண்டு. இன்னமும் பல கிறிஸ்தவ ஊழியர்கள் ISIS தீவிரவாதிகள் மத்தியில் வாழ்ந்து அவர்களுக்கு இயேசுவை பற்றியும், அவர் கொடுத்த அன்பில் வாழ்க்கையை பற்றியும், கடவுள் எவ்வளவு அன்புள்ளவர் என்பதை பற்றியும் கூறி வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் இருந்தாலும் தைரியமாய் பலர் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
கிறிஸ்துவின் பணியில் 
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
“He told me that he was always taught that to die as a martyr would open him the Gates of Jannah, or Gates of Heaven” recalled the priest. “Yet, as he had started to ascend towards the light of the Heavens, devilish entities, or Jinns he called them, appeared and led him to the fiery pits of Hell. There he had to relive all the pain he had inflicted upon others and every death he had caused throughout his entire life. He even had to relive the decapitations of his victims through their own eyes”, images the jihadist claims will haunt him for the rest of his life, admits the priest.
“Then Allah, (in Arabic) or God, (in English) the true God YAWEH spoke unto him and told him that he had failed miserably as a human soul, that he would be banned from the Gates of Heaven if he chose to die, but that if he chose to live again, he would have another chance to repent of his sins and walk along God’s path once again”
http://worldnewsdailyreport.com/isis-fighter-converts-to-c…/
http://conservativepost.com/isis-terrorist-miraculously-re…/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum