தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதாகமத்தில் மணவாட்டி என்றும் மணவாளன் என்றும் எவரை குறிப்பிடுகிறது?. Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகமத்தில் மணவாட்டி என்றும் மணவாளன் என்றும் எவரை குறிப்பிடுகிறது?. Empty வேதாகமத்தில் மணவாட்டி என்றும் மணவாளன் என்றும் எவரை குறிப்பிடுகிறது?.

Thu May 22, 2014 5:58 pm
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
(வெளி 19:7)

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது, அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

( வெளி 19 :8,) 

பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

(வெளி 19 :9 )

மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி 

வெளி 19:7-ன் படி ஆட்டுக்குட்டியானவர் இயேசுவே மணவாளன் என்றும் 

வெளி 19:8-ன் படி அவளுடைய மனைவியாய் கடைசிக்காலத்தில் ஒரு கூட்ட பரிசுத்தவான்கள் சபையாய் ஆயத்தமாகின்றவர்கள் அவரது இயேசுவின் மனைவி(மணவாட்டி) என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது.

இயேசு தான் மணவாளன் அவளது மனைவி மணவாட்டியாகிய பரிசுத்தவான்களே:-

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டுமணவாளனுக்கு (இயேசுவுக்கு) எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு(பரிசுத்தவான்களுக்கு) ஒப்பாயிருக்கும்.

(மத் 25 :1)

அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும்(மணவாட்டி) , ஐந்துபேர் 

(பெயர் கிறிஸ்தவர்கள்) புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

(மத் 25 :2 ) 

புத்தியுள்ளவர்கள்(மனைவியாகிய பரிசுத்தவான்கள்) தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும்(பூரண பரிசுத்தம்) கொண்டுபோனார்கள்.

(மத் 25 :4 )

மணவாளன்(இயேசு) வரத் தாமதித்தபோது, அவர்கள்(பெயர் கிறிஸ்தவர்கள்) எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

(மத் 25 :5 )

நடுராத்திரியிலே(உலகத்தில் உள்ள பெயர் கிறிஸ்தவர்கள் அறியாத வேளையிலே): இதோ, மணவாளன் (இயேசு) வருகிறார், அவருக்கு(இயேசுவுக்கு ) எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

(மத் 25 :6)

அப்படியே அவர்கள்(பூரண பரிசுத்தமாகிய அபிஷேகத்தை வாங்கிப்போனபோது மணவாளன்(இயேசு) வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள்(அவரதுமனைவியாகிய பூரண பரிசுத்தமடைந்த பரிசுத்தவான்கள்) அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது.

(மத் 25:10)

பின்பு, மற்றக் கன்னிகைகளும்(பூரண பரிசுத்தமடையாத பெயர் கிறிஸ்தவர்கள்) வந்து: ஆண்டவரே, எங்களுக்குத் (மறுபடியும் நாங்கள் பூரண பரிசுத்தமடைகிறோம் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்) திறக்கவேண்டும் என்றார்கள்.

(மத் 25 :11 )

அதற்கு அவர்: உங்களை(பூரண பரிசுத்தமடையாத பெயர் கிறிஸ்தவர்களை) அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(மத் 25 :12 )

மேற்குறிப்பிட்ட வசனம் நமக்கு மணவாளன் இயேசு என்றும் அவரை எதிர்கொண்டு பூரண பரிசுத்ததொடு போகிறவர்கள் மணவாட்டி என்றும் தெளிவாக கூறுகிறது.

மணவாட்டி என்றால் கிறிஸ்தவர்கள் மற்றும் எல்லா சபையுமே மணவாட்டியா? 

எல்லா சபையும், எல்லா கிறிஸ்தவர்களும் நிச்சயமாக இல்லவே இல்லை மணவாட்டி என்பது தேவனால் கடைசிக்காலத்தில் எழுப்பப்படுகின்ற ஒரே ஒரு சபையை கூறுகிறது. அந்த சபையில் தேவன் வாசம் செய்து அந்த திருச்சபையில் உள்ள பிள்ளைகளை தேவன் பரிசுத்தப்படுத்தி பூரனபரிசுத்தர்களாய் ஆயத்தப்படுத்துவார்,. அந்த சபைக்கு தேவன் தன்னுடைய திட்டங்கள், தீர்மானங்கள்,வேதத்தின் மறைவான இரகசியங்களை சபைக்கு அறிவிப்பார், சபை தேவனுடைய வார்த்தையின்படி செயல்படும், இவர்களே மணவாட்டி, இவர்களே பரிசுத்தவான்கள், தேவன் இவர்கள் மத்தியில் உலாவுவார்,

இங்க பாவம் கிரியை செய்யாது,

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள்(கலாத்தியர் 5:19-ல் சொல்லப்பட்ட 17 விதமான பாவங்கள்) அதை மேற்கொள்வதில்லை.(இந்த சபைக்கு இயேசு தலையாய் இருப்பதால் பாவங்கள் நுழைவதில்லை)

(மத் 16 :18 )

இந்த கடைசிக்கால சபையாக தேவன் ஒரே ஒரு சபையை மட்டுமே எழுப்புகிறாறா அப்படியானால் ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தப்படுத்தும் வேறு அநேக சபைகள்? 

சாலமோன் ராஜாவைக் கொண்டு ஆவியானவர்:-

ராஜாஸ்திரீகள்,(ஐஸ்வரியமான சபைகள்) அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் (அந்த சபைகளிலிருந்து பிரிந்து சென்ற சபைகள்)எண்பதுபேருமுண்டு, கன்னியருக்குத்(இந்தகாலங்களில் மனிதர்களால் எழுப்பப்பட்ட சபைகளுக்கு) தொகையில்லை.என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே, 

(பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை) (பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை)

அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை, அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள், குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள், ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.(உன் 6 :8,9)

எல்லா சபைகளும் இந்த பரிசுத்த புதிய எருசலேம் மனவாட்டியானவளை வாழ்த்துகிறது,

முந்தின(சாலமோன்) ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின 

(பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை) ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.(ஆகா 2 :9)

ஆனபடியினால் மிச்சமுள்ள சபைகள் மனிதனால் எழுப்பபட்டது.. அது சபையின் உபதேசம் சியோனிற்கு மனிதனை கொண்டு போகாமல் நரகத்திற்கு தான் கொண்டு போகும்.
இயேசு மணவாட்டி சபை பூரண மடைவதர்க்காகவே சபைக்காகவே தன் ஜீவனைக்கொடுத்தார்:-

(மணவாட்டி சபை)கறை,திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான (பூரண) மகிமையுள்ள (மணவாட்டி)சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே(மணவாட்டி சபைக்ககாவே) அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

(எபே 5 :27 )
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

(வெளி 21 :2 )

இந்த பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபையை அப்போ யோவான் சுமார் கி.பி 95-ம் ஆண்டு தரிசனத்திலே காண்கிறார். அந்த சபை இந்த நாட்களில் இந்த தமிழ் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மதுரையை தலைமையிடமாக கொண்டு.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன், என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

உராய்ஞ்சுகிற ஒரு (மணவாட்டி சபையை)பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் (மணவாட்டி சபையின் அப்போஸ்தலனை)மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் (இந்திய)வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.

(ஏசா 46 :10,11)

ஏசாயா தீர்க்கனைக்கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் சுமார் 3000 ஆண்டுகள் மேலாக ஆவியானவரால் அறிவிக்கப்பட்டது. அது இஸ்ரேல் நாட்டில் அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் கிழக்கு தேசத்தில் தான் இந்திய உள்ளது. அந்த மணவாட்டி சபை இந்தியாவில் தான் எழுப்பபடவேண்டும். 
தேவன் வேதாகமத்தில் சொன்ன இந்த பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபையை ஸ்தாபிக்க கட்டளை இட்டார் அதின்படி 1996-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிறுவப்பட்டது 
எந்த ஒரு மனிதனானாலும் சரி இந்த கடைசிகால மணவாட்டியின் வழியாகவே சியோன் போக முடியும் இல்லாவிட்டால் நிச்சயமாகவே போகமுடியாது. ஜெபித்து கர்த்தரிடத்தில் கேளுங்கள் உங்களுக்கு அறிவிக்கப்படும்,

இன்னும் அநேக வேத வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன அவைகள் அறிவித்தால் இதற்க்கு முடிவிறாது.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

(வெளி 22 :17)

அருமையான கர்த்தருடைய ஜனமே மக்கள் கூடுகின்ற இடமெல்லாம் தேவனின் ஆலயம் அல்லே அங்கு தேவன் வாசம் செய்யமாண்டார்.

ஆனபடியினால் கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்கும் ஜனமே இதுவே வழி அவருடைய மனவாட்டியாகிய உலகில் உள்ள பரிசுத்தவான்களே வா என்கிறார், இதை வாசிக்கிறவன் வாருங்கள் இந்த வழி மட்டுமே உள்ளது, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் இலவசமாய் ஜீவத்தண்ணீரை 
இலவசமாய் மணவாட்டிச் சபையின் மூலமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 

"இயேசு தமது சபையாகிய மணவாட்டி சபையை தன்னோடு இரகசிய வருகையில் சேர்த்துக்கொள்ளும் நேரம் மிகவும் சமிபமாயிற்று"



நன்றி: இரகசிய வருகை
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum