பொறியாளர் எனும் பொம்மைகளை உருவாக்கும் AICTE
Mon May 19, 2014 7:21 pm
AICTE
இந்த நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு! ஒவ்வொரு வருடமும் பொறியாளர் எனும் பொம்மைகளை உருவாக்கும் AICTE ..........
இன்றைய தினம் பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் கதி கேட்டினைக் கண்டபோது, கண்களில் இரத்தம் வடிகிறது!
செய்தி இதுதான்...... 769 இடங்களுக்கு இந்தியாவின் டெக் இருதயமான IIT களில் சேர மாணவர்கள் முன் வரவில்லை.......
IIT இந்தியாவின் அறிவுக் கிடங்கு..... 90% மாணவர்கள் படித்து முடித்ததும் பொறியியல் துறையில் சாதிக்கிறார்கள்...... அவர்கள் சாதனையெல்லாம் வெளிநாட்டில் மட்டுமே இருக்கிறது. உள்நாட்டில் ஒருவரும் தங்குவதில்லை....
காரணம்....அவர்கள் அல்ல...... இந்த அரசாங்கம்....... இந்த அறிவு ஜீவிகளை தக்க வைத்துக் கொள்ள இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அல்ல, எப்போது IIT க்கள் தொடங்கப் பட்டதோ அன்று தொட்டே.......
அமெரிக்காவில் உள்ள செந்தில் நாசா வில் முதன்மை திட்ட இயக்குனராக இருக்கிறார்.....ஸ்ரீதர் என்பவர் திருச்சி REC யில் படித்தவர்.....அவர் காசு செலவில்லாத மின்சார உற்பத்தி செய்யும் bloom energy எனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து கலக்கிக் கொண்டு இருக்கிறார்..... இன்னும் எத்தனையோ பேர் அமெரிக்காவில் தங்களின் அறிவினை உடைமையாக்கி அந்த நாட்டிற்கு வளம் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.......
எங்கே நாம் தவறு செய்தோம் ?
இந்த அறிவுஜீவிகளை தக்க வைத்துக் கொள்ள நாம் எந்த முயற்சியும் செய்யாததுதான் இந்தியாவின் மிகப் பெரிய தவறு.......
இந்தியாவில் என்ன நடக்கிறது?
AICTE எனும் ஒரு இயந்திரம், புதிய கல்லூரிகள் தொடங்கினால் அதற்கு அனுமதி என்ற பெயரில் கல்லும், கட்டிடமும், பரிசோதனைக் கூடமும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறதே தவிர, அங்கு உள்ள மாணவர்களை ஏதாவது ஒரு தர அடிப்படையில் உருவாக்கு கிறார்களா என்று பரிசோதிப்பதில்லை........ வந்தார்கள் இந்த வருடத்திற்கு அப்ப்ரூவல் கொடுத்தார்கள் சோறு தின்று விட்டுப் போனார்கள் என்றுதான் தங்கள் அலுவலகத்தை நடத்துகிறார்கள்........ கேட்டால் அதற்கு மேல் அவர்கள் பணியல்ல என்று தங்களின் பொறுப்பை அடுத்தவர் மீது தூக்கிப் போடுகிறார்கள்.
புற்றீசல் போல முளைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் எனும் தொழிற்சாலைகள் பொறியாளர்களை உருவாக்காமல், அடிமை வேலை செய்யும் பிண்டங்களை உருவாக்குகிறார்கள்......
இந்தத் தலைமுறையில் படித்து ஜொலிக்கும் எந்த ஒரு தொழிலதிபரையும் நான் இது வரை காணவில்லை ...... பெங்களூரில் உள்ள ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தும் இள வயதுப் பொறியாளர் நண்பர் ஒருவர் என்னை மட்டுமே தன் தொழிலுக்கு நம்பி இருக்கிறார்.....அவரும் பொறியியல் படித்தவர்..... எங்கே போய் நான் இதை சொல்வேன்?
AICTE செய்யும் மிகப் பெரும் தவறுகள் கீழ்க் கண்டவாறு......
1. அடிக்கடி சிலபஸ் மாற்ற வேண்டும். டெக்னாலாஜி முன்னேற்றம் அடையும்போதெல்லாம் அதை சிலபஸில் ஏற்றி மாணவர்களை தயார் படுத்த வேண்டும்...
2. படிப்பில் தர நிர்ணயக் குறியீடுகளை அடையாத கல்லூரிகளின் அனுமதி மறுக்க வேண்டும்.
3.கல்லூரி ஆசிரியர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப் பட வேண்டும். இங்கே BE படிப்பை சொதப்பிவிட்டு, ME படிப்பை ஜஸ்ட் I கிளாஸ் வாங்கியவர்களே ஆசிரியர்கள். அவர்களும் மக் அடித்துப் படித்தவர்கள். எப்படி மாணவனுக்கு அறிவுபூர்வமாக சொல்லிக் கொடுக்க முடியும்? அவர்கள் 10 வருடங்களாக ஒரே ஒரு சப்ஜெக்டை சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் அதை 11 வது வருஷமும் புரியாமல்தான் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்......
4. மதிப்பெண் மட்டுமே அறிவுக் குறியீடு அல்ல...... அதை வைத்து ஒருவன் புத்திசாலி என்று மதிப்பிட முடியாது..... அனுபவம் என்பதும் சேர்வதுதான் அறிவிக் குறியீட்டின் சரியான அணுகு முறை...... இதை AICTE உணரவில்லை.
5. பொறியியல் மாணவர்களுக்கு பிடித்தமான சப்ஜெக்ட் மட்டுமே சொல்லிக் கொடுத்து மற்ற சம்மந்தம் இல்லாத பாடங்களை தூக்கி எறியச் செய்திருக்க வேண்டும்.....
6. பொறியியல் என்றாலே ப்ராக்டிகல் படிப்புதான்.....அதை AICTE மிகத் தெளிவாக செயல் படுத்தி இருக்க வேண்டும். காரணம், அது இல்லாமல் போனதால் பொறியியல் படித்த பிள்ளைகள் இன்றைக்கு எங்கே ப்யூஸ் போயிருக்கிறது என்று தெரியாமல், வீட்டில் உள்ள குழாயை சரி செய்யத் தெரியாமல், வீட்டில் உள்ள அயரன் பெட்டியை திறந்து கூடப் பார்க்கத் தெரியாமல், தன சொந்த பைக்கின் பெட்ரோல் ஓவர் ஃ ப்ளோவைக் கூட நிறுத்தத் தெரியாமல் BE படித்து முடித்து இருக்கிறார்கள்.
வீட்டிற்கு அருகே ஒரு பொறியியல் கல்லூரி. நான்கு வருடம் முடிந்தால் கேம்பஸ் தேர்வு, அதன் பின் ரூ 25000 மாத சம்பளம் என்று ஒரு பொம்மை மாணவனை ஒரே அச்சில் இட்டு வருடா வருடம் உருவாக்குவதுதான் AICTE தன மிகப் பெரும் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது........
இந்த நாட்டின் தேவை கல்விக் கொள்கை.........கல்விக் கொள்ளை அல்ல.....
"மிகவும் மன வருத்தத்துடன் மற்றும் இந்த நாட்டின் சாபக் கேட்டைப் போக்க என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே எனும் இயலாமையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...."
- டிமிடித் பெட்கோவ்ஸ்கி
இந்த நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு! ஒவ்வொரு வருடமும் பொறியாளர் எனும் பொம்மைகளை உருவாக்கும் AICTE ..........
இன்றைய தினம் பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் கதி கேட்டினைக் கண்டபோது, கண்களில் இரத்தம் வடிகிறது!
செய்தி இதுதான்...... 769 இடங்களுக்கு இந்தியாவின் டெக் இருதயமான IIT களில் சேர மாணவர்கள் முன் வரவில்லை.......
IIT இந்தியாவின் அறிவுக் கிடங்கு..... 90% மாணவர்கள் படித்து முடித்ததும் பொறியியல் துறையில் சாதிக்கிறார்கள்...... அவர்கள் சாதனையெல்லாம் வெளிநாட்டில் மட்டுமே இருக்கிறது. உள்நாட்டில் ஒருவரும் தங்குவதில்லை....
காரணம்....அவர்கள் அல்ல...... இந்த அரசாங்கம்....... இந்த அறிவு ஜீவிகளை தக்க வைத்துக் கொள்ள இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அல்ல, எப்போது IIT க்கள் தொடங்கப் பட்டதோ அன்று தொட்டே.......
அமெரிக்காவில் உள்ள செந்தில் நாசா வில் முதன்மை திட்ட இயக்குனராக இருக்கிறார்.....ஸ்ரீதர் என்பவர் திருச்சி REC யில் படித்தவர்.....அவர் காசு செலவில்லாத மின்சார உற்பத்தி செய்யும் bloom energy எனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து கலக்கிக் கொண்டு இருக்கிறார்..... இன்னும் எத்தனையோ பேர் அமெரிக்காவில் தங்களின் அறிவினை உடைமையாக்கி அந்த நாட்டிற்கு வளம் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.......
எங்கே நாம் தவறு செய்தோம் ?
இந்த அறிவுஜீவிகளை தக்க வைத்துக் கொள்ள நாம் எந்த முயற்சியும் செய்யாததுதான் இந்தியாவின் மிகப் பெரிய தவறு.......
இந்தியாவில் என்ன நடக்கிறது?
AICTE எனும் ஒரு இயந்திரம், புதிய கல்லூரிகள் தொடங்கினால் அதற்கு அனுமதி என்ற பெயரில் கல்லும், கட்டிடமும், பரிசோதனைக் கூடமும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறதே தவிர, அங்கு உள்ள மாணவர்களை ஏதாவது ஒரு தர அடிப்படையில் உருவாக்கு கிறார்களா என்று பரிசோதிப்பதில்லை........ வந்தார்கள் இந்த வருடத்திற்கு அப்ப்ரூவல் கொடுத்தார்கள் சோறு தின்று விட்டுப் போனார்கள் என்றுதான் தங்கள் அலுவலகத்தை நடத்துகிறார்கள்........ கேட்டால் அதற்கு மேல் அவர்கள் பணியல்ல என்று தங்களின் பொறுப்பை அடுத்தவர் மீது தூக்கிப் போடுகிறார்கள்.
புற்றீசல் போல முளைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் எனும் தொழிற்சாலைகள் பொறியாளர்களை உருவாக்காமல், அடிமை வேலை செய்யும் பிண்டங்களை உருவாக்குகிறார்கள்......
இந்தத் தலைமுறையில் படித்து ஜொலிக்கும் எந்த ஒரு தொழிலதிபரையும் நான் இது வரை காணவில்லை ...... பெங்களூரில் உள்ள ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தும் இள வயதுப் பொறியாளர் நண்பர் ஒருவர் என்னை மட்டுமே தன் தொழிலுக்கு நம்பி இருக்கிறார்.....அவரும் பொறியியல் படித்தவர்..... எங்கே போய் நான் இதை சொல்வேன்?
AICTE செய்யும் மிகப் பெரும் தவறுகள் கீழ்க் கண்டவாறு......
1. அடிக்கடி சிலபஸ் மாற்ற வேண்டும். டெக்னாலாஜி முன்னேற்றம் அடையும்போதெல்லாம் அதை சிலபஸில் ஏற்றி மாணவர்களை தயார் படுத்த வேண்டும்...
2. படிப்பில் தர நிர்ணயக் குறியீடுகளை அடையாத கல்லூரிகளின் அனுமதி மறுக்க வேண்டும்.
3.கல்லூரி ஆசிரியர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப் பட வேண்டும். இங்கே BE படிப்பை சொதப்பிவிட்டு, ME படிப்பை ஜஸ்ட் I கிளாஸ் வாங்கியவர்களே ஆசிரியர்கள். அவர்களும் மக் அடித்துப் படித்தவர்கள். எப்படி மாணவனுக்கு அறிவுபூர்வமாக சொல்லிக் கொடுக்க முடியும்? அவர்கள் 10 வருடங்களாக ஒரே ஒரு சப்ஜெக்டை சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் அதை 11 வது வருஷமும் புரியாமல்தான் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்......
4. மதிப்பெண் மட்டுமே அறிவுக் குறியீடு அல்ல...... அதை வைத்து ஒருவன் புத்திசாலி என்று மதிப்பிட முடியாது..... அனுபவம் என்பதும் சேர்வதுதான் அறிவிக் குறியீட்டின் சரியான அணுகு முறை...... இதை AICTE உணரவில்லை.
5. பொறியியல் மாணவர்களுக்கு பிடித்தமான சப்ஜெக்ட் மட்டுமே சொல்லிக் கொடுத்து மற்ற சம்மந்தம் இல்லாத பாடங்களை தூக்கி எறியச் செய்திருக்க வேண்டும்.....
6. பொறியியல் என்றாலே ப்ராக்டிகல் படிப்புதான்.....அதை AICTE மிகத் தெளிவாக செயல் படுத்தி இருக்க வேண்டும். காரணம், அது இல்லாமல் போனதால் பொறியியல் படித்த பிள்ளைகள் இன்றைக்கு எங்கே ப்யூஸ் போயிருக்கிறது என்று தெரியாமல், வீட்டில் உள்ள குழாயை சரி செய்யத் தெரியாமல், வீட்டில் உள்ள அயரன் பெட்டியை திறந்து கூடப் பார்க்கத் தெரியாமல், தன சொந்த பைக்கின் பெட்ரோல் ஓவர் ஃ ப்ளோவைக் கூட நிறுத்தத் தெரியாமல் BE படித்து முடித்து இருக்கிறார்கள்.
வீட்டிற்கு அருகே ஒரு பொறியியல் கல்லூரி. நான்கு வருடம் முடிந்தால் கேம்பஸ் தேர்வு, அதன் பின் ரூ 25000 மாத சம்பளம் என்று ஒரு பொம்மை மாணவனை ஒரே அச்சில் இட்டு வருடா வருடம் உருவாக்குவதுதான் AICTE தன மிகப் பெரும் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது........
இந்த நாட்டின் தேவை கல்விக் கொள்கை.........கல்விக் கொள்ளை அல்ல.....
"மிகவும் மன வருத்தத்துடன் மற்றும் இந்த நாட்டின் சாபக் கேட்டைப் போக்க என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே எனும் இயலாமையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...."
- டிமிடித் பெட்கோவ்ஸ்கி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|