தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவு Empty இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவு

Mon Sep 16, 2013 9:52 am
இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவு 1236323_727699360589668_980478140_n


ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்…

கடந்த திங்கட்கிழமை மாலை, இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவை, அரங்கம் ஒன்றில் கேட்க நேர்ந்தது.

ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்மா ரிட்டன் தந்தைக்கு, மும்பையில் பிறந்து, தனது ஏழாம் வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் சிவா அய்யாதுரை.

“நான் தமிழும் இங்லிஷும் மிக்ஸ் பண்ணி பேசுறேன்” என்று மேடையேறியவர், கிட்டத்தட்ட 98 விழுகாடு ஆங்கிலத்தில்தான் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சொற்பொழிவு, 100 விழுக்காடு புரியும்படி எளிமையாக இருந்தது.

எனக்கு ஆங்கிலப் புலமை இப்போதுவரை கைகூடவில்லை. அலுவல் நிமித்தமாக பல்வேறு ஆங்கிலக் கூட்டங்களுக்கு சென்றபோதும், மண்டை குழம்பியே வெளியேறியிருக்கிறேன்.

சிவா அய்யாதுரை, 42 வருடங்களாக அமெரிக்காவில் வளர்ந்தவர். அதி புத்திசாலி. அங்குள்ள எம்.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். வெள்ளைக்காரன் உச்சரிப்புதான் அவருடைய உச்சரிப்பும்.
அப்படியிருக்க, எனக்கே புரியும்படி எப்படி உரையாற்றினார்?
நீங்களே முடிவுக்கு வாருங்கள். அப்படியே, இங்குள்ள ஆங்கில மேதாவிகள் கழுத்தறுப்பது குறித்தும்.(ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலமும் எனக்கு புரியாது)

சிவா அய்யாதுரையின் அந்த ஒரு மணி நேர சொற்பொழிவு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 

“ஒருவன் மிகச்சிறந்த படைப்பாற்றல் மிக்கவனாக வரவேண்டும் என்றால், முதலில் அவன் சுதந்திரமானவனாக வளர்க்கப்படவேண்டும் என்கிறார் சிவா. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் ஓவியங்களை எடுத்துப் பாருங்கள்… பாலியல் சார்ந்து எத்தனையோ தீட்டியிருக்கிறார்கள். எனவே, பின்னாளில்தான் இந்த சுதந்திரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. சிறிய வயதில் இருந்தே, பெற்றோர் எனக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். நியூயார்க் மற்றும் நெவொர்க் பல்கலைக்கழகங்களிலும் அந்த சுதந்திரம் கிடைத்தது. 

நான் இமெயில் கண்டுபிடித்தபோது எனக்கு 14 வயது. என்னுடைய துறை தலைவருக்கு 40. பதினான்கு வயது பையனிடம் பொறுப்பை ஒப்படைப்பதா என்று அவர் தயங்கவில்லை. என் அறிவாற்றலைக் கண்டு அவர் பொறாமை கொள்ளவில்லை.ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இங்கே, மாணவர்களைக் கண்டு ஆசிரியர்களே பொறாமைப்படுகிறார்கள். தலை இருக்க வால் ஆடலாமா என்று கட்டுப்படுத்துகிறார்கள்.” என்று விளக்கியவர், இன்றியமையாத இன்னொரு உண்மையை போட்டுடைத்தார்.

“நான், இமெயிலை கண்டு பிடித்ததை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்காததற்கு காரணம் மிகக் குறுகியது. நான் கருப்பாக இருக்கிறேன். நாடுவிட்டு நாடு பிழைக்க வந்தவன். தமிழன். இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதாவது, அறிவாளிகள் எனப்படுவோர், குறிப்பிட்ட குடும்பத்தில், சாதியில், நாட்டில், வசிப்பிடத்தில் மட்டுமே இருப்பார்கள் என்று இந்த 2013-வரை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில், xxxxxxx-லிருந்து பேட்டியெடுக்க அந்த ரிப்போர்ட்டர் வந்திருந்தார்(ஆங்கில நாளிதிழ் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார்). நான், ‘non Brahmin’ என்பதை அவரது எடிட்டரால் நம்ப முடியவில்லையாம். ஒரு பிராமின்தான் இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை செய்வார் என்று அவர் அழுத்தம் திருத்தமாக நம்பிக்கொண்டிருந்தாராம். எனவே, முதலில் இந்த சாதி ஒழியவேண்டும். அதற்கு நிறைய சாதி கலப்பு திருமணங்கள் செய்யவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

சிவாவின் தாய் வழிக் குடும்பம், சித்த மருத்துவத்தில் கை தேர்ந்தது. சிவாவின் பாட்டி, ஒருவருடைய முகத்தை பார்த்தே உடலில் இருக்கும் நோயை கண்டறியும் ஆற்றல் பெற்றிருந்தாராம். எனவே, சித்த மருத்துவத்தால் ஈர்க்கப்பட்ட சிவா, தற்போது ‘மசாசூஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(எம்.ஐ.டி)’யில், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் பேராசியராக இருக்கிறார். 

சிஸ்டம் விஷுவலைசேஷன் என்பது பாட்டியிடமிருந்து கற்றதுதான். 

இதிலிருந்து, “காட்சிகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக மனித மூளையில் பதியும்போது, அதுவே ஒரு செயலியாக(programme) மாறிவிடுகிறது. இந்த செயலிதான், கருப்பா இருக்கிறவனுக்கு அறிவு இருக்காது. குறிப்பிட்ட சாதிதான் உயர்ந்தது என்று நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்கிறார் சிவா.

அடுத்ததாக, கல்விமுறை குறித்து பேசினார்.
“ஃபோர்டு கம்பெனில ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற மாதிரிதான் ஸ்டூடண்ட்ஸை உருவாக்குறாங்க. இந்தியாவில் ஒரு முறை வைத்திருக்கிறார்கள். ‘ஸ்கூல் போகணும், காலேஜ் போகணும், சம்பாதிக்கணும், சாப்பிட்டு தூங்கணும், செத்துடணும் என்பதைப்போல. நமக்கு தேவை ரோபோக்கள் அல்ல. இது நல்லதொரு கல்விமுறையும் அல்ல.

எத்தனையோ திறமை வாய்ந்த மாணவர்கள் ஆசிரியர்களால், அடையாளம் காணப்படாமல் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள், சிலர் குறைந்த மதிப்பெண் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தொழில்முனைவோராக்கவே தமிழகம் வந்திருக்கிறேன்” என்றவர், 

“டி,வியை கண்டுபிடித்தவர் யாரென்று தெரியுமா?” எனக் கேட்டார். அரங்கில், ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள். 

“இல்லை, டி.வி.யை கண்டுபிடித்தவரும் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன்தான்.(philo Farnsworth-ஐ குறிப்பிட்டதாக நினைவு). எனவே, அறிவும் திறமையும் எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கும் என்பதற்கு இதுவே சான்று” எனக் குறிப்பிட்டார்.

“இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் உலகம் முழுக்க 180 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டுமாம். இல்லயென்றால், ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டுக் கலவரம் மூளும் என்று எச்சரித்த சிவா, 

“இந்த பிரச்னையை சமாளிக்க நமக்குத் தேவை, வேலை கொடுக்கும் தொழில் முனைவோர்கள்(entrepreneur)தான். மாறாக, வேலை தேடுவோர் அல்ல. ஆனால், இன்றைக்கு பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை, தங்களுடைய தேவைக்காக வேலை தேடுவோரை மட்டுமே உருவாக்கி வருகின்றன.” என்கிறார்.

தற்போது தமிழகம் வந்திருக்கும் சிவா, 18 முதல் 21 வயதுடைய திறமையான 12 மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சர்வதேச தொழில்முனைவோர் பயிற்சியளிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

‘innovation corps’ எனப்படும் இந்த திட்டம், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படத் துவங்கும். ஆண்லைனில் இதற்கான விண்ணப்பத்தை தேர்வு செய்து மாணவர்கள் பயன்பெறலாம். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் திட்டம் தொடரும்.

*மேற்கண்ட ஆங்கில சொற்பொழிவை நான் குறிப்பெடுக்கவில்லை. காதால் கேட்டதை வைத்தே மொழி பெயர்த்திருக்கிறேன். “ஆங்கில வழிக் கல்வி அவசியமா?” என்று சிவாவிடம் கேட்டேன். 

"அவசியம்தான். அதற்காக, திருக்குறளை ஆங்கிலத்தில் கற்க வேண்டிய அவசியம் இல்லை. தாய் மொழியில் பாடங்களை கற்றுக்கொண்டு, மொழிப்பாடமாக ஆங்கிலம் படித்தாலே(சரளமாக பேசவும் வேண்டும்) போதும்" என்றார்.

நன்றி : பேரழகன் பாலா - தமிழ் மண்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum