கொஞ்சம் மாத்திக்கணும்..
Sun Dec 17, 2017 8:52 am
இந்த விஷயங்களெல்லாம் நம்மகிட்ட இருந்தா கொஞ்சம் மாத்திக்கணும்..
1. கிறிஸ்துமஸ், புதுவருடம், ஈஸ்டர்
நல்ல நாளுக்கு மட்டும் சபைக்கு போறது உங்களுக்கு பிடிச்சிருந்தாலும்,
அது தேவனுக்கு பிரியமில்லாதது..
So,
வாரந்தோறும் சபைக்கு போங்க..
ஜனாதிபதியே உங்கள பார்க்க வந்தாலும் சபைக்கு போய்ட்டுதான் வருவேனு கண்டிப்பா சொல்லிடுங்க..!
2. சபை ஆராதனை உள்ளே நடக்கும்போது
வெளியே Watchman வேலை பார்க்கும் பாஸ்.
உங்களுக்கு அங்கென்ன வேலை..
கொஞ்சம் சபைக்கு உள்ளே வாங்க பாஸ்..
3. சபைக்கு Bible கொண்டு வராம,
Mobail phone ல தான் Bible Download பண்ணி வச்சுருக்கேன்ல அப்புறம் எதுக்கு Bible னு கேட்க்கின்ற நவீன புத்திசாலியா நீங்கள்.?
வேதத்தை சுமங்க Brother
வேதத்தை நீங்க சுமந்தா
வேதாகமம் உங்கள சுமக்குமே தெரியாதா..
4. நாம் போகின்ற Train 6.00 மணிக்கு செல்வதாக இருந்தால் 5.00 மணிக்கே சென்றிடும் நாம்,
உற்றார், உறவினர்களின் திருமணத்திற்கு முதல் நபராக சென்றிடும் நாம்,
நாம் பணிபுரிகின்ற இடங்களுக்கும்,
அரசு அலுவலகங்களுக்கும் சரியான நேரத்தை கடைபிடிக்கும் Perfect நண்பரே..
தேவனுடைய சபைக்கு மட்டும் அசால்டாக வருவது சரிதானா.?
5. அட சபையிலும் Mobail phone use பண்ணும் அசால்ட் அம்பானி அண்ணணா நீங்கள்..
கொஞ்ச நேரம் Mobile switch off பண்ணிடுங்க Brother & Sister..
இல்லனா தேவன் தம்முடைய ஆசிர்வாதத்தை Switch off பண்ணிடுவாரே..
6. போதகர் எப்பொழுது ஆமென் சொல்வாரு,
எப்பொழுது நடையை கட்டலாம்னு எதிர்பார்க்கின்ற நண்பரா நீங்கள்..
தேவ வார்த்தைக்கு செவி கொடுப்போம்.
இன்றைய நாட்களிலும் குடும்பமாக தேவனுடைய ஆராதனையில் கலந்து கொள்வோம்,
நாம் நிற்பதும் நீர்மூலமாகததும் அவருடைய மேலான கிருபையே.
ஆயிரம் நாட்களை பார்க்கிலும் அவருடைய சமூகத்தில் கூடி வரும் ஒரு நல்லது என்பதை வேதத்தில் பார்க்கின்றோம்,
வீடுகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் பார்ப்பது சிறந்ததுதான் என்றாலும்,
நாமும் நமது குடும்பமும் தேவனுடைய சபைக்கு சென்று அவர் செய்த நன்மைகளை சொல்லி துதிப்பதை தேவன் விரும்புகின்றார்.
நான் இனிமேல் ஒவ்வொரு நாட்களும் ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்வேன் என்று
தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு செயல்படுத்தி பாருங்கள்,
நாம் ஆராதனைக்கு செல்வதற்காக உள்ள அனைத்து தடைகளையும் தேவன் மாற்றுவார்..
நம்மை உயர்த்துவார்..
நம்மை ஆசிர்வதிப்பார்..
சபை மட்டும் இல்லாதிருந்தால்
சாத்தான் என்றைக்கோ நம்முடைய குடும்பத்தையும், இந்த உலகத்தையும் நரகமாக்கியிருப்பான்.
குடும்பமாய் தேவனை ஆராதிப்போம்.!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|