தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!” Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!” Empty “வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

Thu Aug 25, 2016 4:28 pm
அனுபவசாலிகளின் அசத்தல் பாடம்த.ஜெயகுமார், துரை.நாகராஜன், படங்கள்: ரா.ராம்குமார், ரமேஷ் கந்தசாமி

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!” P57a
ஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மாடித்தோட்டத்தில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த பம்மல் இந்திரகுமார், “நடவு செய்யும்போது, மண்ணுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விதைத்தால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காலையிலும், மாலையிலும் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பதே நமக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். குழாய் மூலம், தண்ணீர் விடும்போது அதிகம் வீணாகும். இப்படி அதிகமாக ஊற்றப்படும் தண்ணீரோடு உரச்சத்துக்களும் வெளியேறி விடும். இதனால், குறைவான அளவில் மண்ணை ஈரப்படுத்தும் அளவு மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரமான மண்ணோடு கூடிய மாடித்தோட்டப் பைகளை தரையில் நேரடியாக வைக்கும்போது, தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இதனால் மாடியின் மேல்தளம் பழுதடைய வாய்ப்புண்டு. அதில் கவனம் தேவை. 

செடிகளுக்கு பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தினால் செழிப்பாக வளரும்.  அறுவடை முடிந்த பிறகு ஒரு வாரம் தொட்டியைக் காய விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. பஞ்சகவ்யா, சூடோமோனஸ்... போன்ற இயற்கை இடுபொருட்கள் தமிழ்நாட்டில், பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!” P57b
வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்கு தக்கப்படி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாக கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகி விடுவீர்கள். முயற்சியும், அதை சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை” என்றார்.

சென்னை, ஆழ்வார்திருநகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் சுப, “தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை குழித்தட்டில் நாற்று விடும்போது, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம்தான் விதைக்க வேண்டும். நாற்றுகளைத் தயார் செய்ய கொட்டாங்குச்சிகளையும் பயன்படுத்தலாம். குழிகள் 2 அங்குலத்தில் இருந்து 5 அங்குலம் வரை ஆழம் கொண்டவையாக இருக்க வேண்டும். நாற்று வளர்க்கும் குழித்தட்டு அல்லது கொட்டாங்குச்சியில் அதிகப்படியான நீர் வெளியேற துளை இருக்க வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால், வேர்கள் அழுகி விடும். குழிகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பி விதைக்க வேண்டும்.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!” P60a
வளர்ந்த நாற்றுக்களை ஒரு தொட்டி அல்லது ஒரு பைக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடலாம். பைகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பும்போது விளிம்பில் இருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்ப வேண்டும். இந்தப் பைகளின் அடியிலும் துளைகள் அவசியம். 

தேமோர்க்கரைசல், வேப்பம் பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி தெளித்து வந்தால், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை விட மாடித்தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு நோய்த்தொற்று குறைவாகத்தான் இருக்கும். ஒரு செடியில் ஒரு சுற்று அறுவடை முடிந்தவுடன்... மண்ணில் சிறிது வேப்பம் பிண்ணாக்கு இட்டு இரண்டு நாட்கள் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அறுவடை செய்யும்போது... தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், அவரை, வெண்டை, கொத்தவரை, கத்திரி போன்றவற்றை இளம் காயாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு,
இந்திரகுமார்,
செல்போன்: 994100-07057.
சுபஸ்ரீ,
செல்போன்: 96771-01627



மாடித்தோட்டம்...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் தவிர, அனைத்து மாதங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

பாலிதீன் விரிப்பின் மேல் தொட்டிகளை வைத்தால், தரையில் ஈரக்கசிவு இருக்காது.

கொட்டாங்குச்சிகள், மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள், பாலிதீன் பைகள், வீட்டைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கும் இடம்... தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டும். மாடி, மாடிப்படிகள், ஜன்னல் ஓரங்கள் என எங்கு வேண்டுமானாலும் செடிகள் வளர்க்கலாம்.

தொட்டிகள், பைகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து நடவு செய்ய வேண்டும்.

தயார் நிலையில் கிடைக்கும் தேங்காய்நார்க்கட்டிகளோடு கூடிய செடி வளர்ப்புப் பைகளில்... 2 கிலோ தேங்காய்நார்க்கட்டிக்கு 10 லிட்டர் தண்ணீர்  என்ற விகிததத்தில் ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய பிறகு, 2 கிலோ தொழுவுரம், தலா 10 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அஸோஸ்பைரில்லம்,  சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பிறகே நடவு செய்யவேண்டும்.

மாடித்தோட்டத்தில் நாட்டு விதைகள் பயன்படுத்துவது நல்லது. நாட்டு விதைகள் கிடைக்காத பட்சத்தில், கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளையும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலை துறை மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன.

கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல் உள்ளிட்ட பயிர்களை நாற்று விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் காய்ப்பு நன்றாக இருக்கும்.

வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, செடி அவரை மற்றும் கீரை வகைகளுக்கு விதைகளை ஓர் அங்குல ஆழத்தில் நேரடியாக விதைக்கலாம்.

மாடித்தோட்டத்தில் பயிர்களின் ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

தேவையற்ற களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செடிகளில் நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளையும் அப்புறப்படுத்துவது நல்லது. 

நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க...வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், புகையிலைக் கரைசல், இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

காலை, மாலை வேளைகளில், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து லேசாக  தண்ணீர் தெளித்தாலே போதுமானது. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக்  கூடாது. மழைக் காலங்களில் போதுமான ஈரம் இருப்பதால், செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டியதில்லை.

இயற்கை அங்காடிகளில் விசாரித்தால், இயற்கை உரங்கள், நாட்டு விதைகள் கிடைக்கும். மாநகரப் பகுதியில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தேமோர்க் கரைசல், மீன் அமிலத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். வேப்பெண்ணெய் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தொட்டி, பைகளில் ஒரே மாதிரியான பயிர்களை திரும்பத் திரும்ப வளர்க்காமல் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வளர்ப்பது நல்லது. இதனால் மண்ணில் சத்துக்கள் நிலைநிறுத்தப்படும்.

அறுவடை முடிந்த பிறகு, செடியை வேரோடு பிடுங்கிவிட வேண்டும். 

சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளவர்கள் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். மாநகர பகுதிகளை ஒட்டி கோசாலைகள் செயல்படுகின்றன. அங்கே அணுகினால் இந்த சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும். சில கோசாலைகள் பஞ்சகவ்யா, மண்புழு உரம், தொழுவுரத்தை நேரடியாகவும் விற்பனை செய்து வருகின்றன.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum