சர்க்கரை நோயாளிகளுக்கு
Fri Sep 16, 2016 2:20 pm
சர்க்கரை நோய் வந்துவிட்டால் சரி செய்யவே முடியாது என்று சொல்வது உண்மையல்ல. முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் யாருக்கும் சர்க்கரை நோய் வருவதில்லை. இதனால் இன்சுலின் உதவி இல்லாமலேயே இயற்கை முறையில் கணையத்தை வேலை செய்ய வைக்க முடியும். இதற்காக ஒரு சில விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது. அவை:
நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
அடுத்து உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில் செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப் பழக வேண்டும். முதல் இரண்டு நாள்கள் உடல் அதை ஏற்க மறுக்கும். அதன்பிறகு
பழகிவிடும்.
அதுபோல காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில் கட்டுக்குள்
வந்துவிடும்.
உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர் முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில் வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி. இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும். இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
ஒரு பிடி காம்புடன் உள்ள கறிவேப்பிலை, ஒரு பிடி வேருடன் உள்ள கொத்தமல்லி, ஒரு பிடி புதினா இலைகள் இம்மூன்றையும் நன்கு அலசி மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் 1 லிட்டராக வந்த பிறகு ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு குடித்து வரலாம்.
நெஞ்சு கரிப்பு ஏற்பட்டால் உடனே வீட்டில் கருப்பட்டி இருந்தால் ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டால் பின்னாளில் எந்த நோயும் வராது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ 1 பெரிய நெல்லிக்காய், 1 பிடி கறிவேப்பிலை, சீரகம், 1 சுண்டு விரல் அளவு இஞ்சி எடுத்து மிக்சியில் அரைத்துக் குடித்து வர கணையம் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி ஆரோக்கியமற்ற உணவு. காரணம் மாவு புளித்த பிறகுதான் இட்லியைச் செய்கிறோம். இந்த புளிப்புத் தன்மையானது கணையத்திற்கு ஏற்றது அல்ல. ஆனால் இட்லிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், காரம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடச் சிறந்தது, சிறு தானியங்களைத் தனித்தனியாக முளைகட்டி அதனை நிழலில் உலர்த்தி அரைத்து மாவாக்கி அதனுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கலந்து இட்லி செய்து உண்ணலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவை எல்லாமே செய்தாலும், தினமும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்: உணவை தினமும் 20 நிமிடம் சாப்பிட வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது, காலை 9-11 மணிவரை கட்டாயமாக எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி செய்து வந்தால் நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாகிவிடலாம்''
நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
அடுத்து உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில் செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப் பழக வேண்டும். முதல் இரண்டு நாள்கள் உடல் அதை ஏற்க மறுக்கும். அதன்பிறகு
பழகிவிடும்.
அதுபோல காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில் கட்டுக்குள்
வந்துவிடும்.
அடுத்து மூளைக்கு வேலையா? உடலுக்கு வேலையா? என்று பார்க்க வேண்டும்.
உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர் முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில் வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி. இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும். இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
ஒரு பிடி காம்புடன் உள்ள கறிவேப்பிலை, ஒரு பிடி வேருடன் உள்ள கொத்தமல்லி, ஒரு பிடி புதினா இலைகள் இம்மூன்றையும் நன்கு அலசி மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் 1 லிட்டராக வந்த பிறகு ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு குடித்து வரலாம்.
நெஞ்சு கரிப்பு ஏற்பட்டால் உடனே வீட்டில் கருப்பட்டி இருந்தால் ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டால் பின்னாளில் எந்த நோயும் வராது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ 1 பெரிய நெல்லிக்காய், 1 பிடி கறிவேப்பிலை, சீரகம், 1 சுண்டு விரல் அளவு இஞ்சி எடுத்து மிக்சியில் அரைத்துக் குடித்து வர கணையம் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி ஆரோக்கியமற்ற உணவு. காரணம் மாவு புளித்த பிறகுதான் இட்லியைச் செய்கிறோம். இந்த புளிப்புத் தன்மையானது கணையத்திற்கு ஏற்றது அல்ல. ஆனால் இட்லிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், காரம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடச் சிறந்தது, சிறு தானியங்களைத் தனித்தனியாக முளைகட்டி அதனை நிழலில் உலர்த்தி அரைத்து மாவாக்கி அதனுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கலந்து இட்லி செய்து உண்ணலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவை எல்லாமே செய்தாலும், தினமும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்: உணவை தினமும் 20 நிமிடம் சாப்பிட வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது, காலை 9-11 மணிவரை கட்டாயமாக எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி செய்து வந்தால் நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாகிவிடலாம்''
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|