குழந்தை சித்ரவதை
Sat Sep 10, 2016 10:23 pm
⚡குழந்தை சித்ரவதை குறித்து இந்த உலகம் என்ன சொல்கிறது. வேதத்தின் மூலம் தேவன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்
குழந்தைகளை தவறான விதத்தில் நடத்துவதோ , காயப்படுத்துவதோ , சித்ரவதை செய்வதோ குழந்தை சித்ரவதை என உலகம் மேற்கோடிட்டு காட்டுகிறது. இதனை அவர்கள் 4 வகையாக பிரிக்கின்றனர்.
1. அக்கரையின்மை சித்ரவதை
2. உடல் ரீதியான சித்ரவதை
3. மனரீதியான சித்ரவதை
4. பால் உணர்வு ரீதியான சித்ரவதை
இந்த 4 வகை சித்ரவதைகளை விளக்குவதில் தான் வேதத்திற்கும் உலக விளக்கத்திற்கும் வித்யாசம் இருக்கிறது.
1. அக்கரையின்மை சித்ரவதை
குழந்தைகளின் அடிப்படைத் தேவையான உணவு , உடை , கல்வி , பாதுகாப்பு இவற்றைத் தர தவறிய பெற்றோர்களோ (அ) பாதுகாவலரோ அந்த குழந்தையை அக்கரையின்மை சித்ரவதை செய்வதாக கருதப்படுகின்றனர்.
2. உடல் ரீதியான சித்ரவதை என்பது அவர்களது சரீரத்தை பாதிக்கும் வகையில் சித்ரவதை செய்வதாகும்.
3. மன ரீதியான சித்ரவதை என்பது அவர்களின் மனதை பாதிக்கக்கூடிய விதத்தில் நடத்துவதாகும்
4. பால் உணர்வு ரீதியான சித்ரவதை என்பது அவர்களை தவறான உறவு கொள்ள பயன்படுத்துவதையும் , அவர்களது அந்தரங்க உறுப்புக்களை தவறான விதத்தில் கையாள்வதையும் குறிக்கிறது.
யார் இந்த சித்ரவதைகளை செய்ய முடியும் என்ற கேள்விக்கு இந்த உலகம் தரும் பதில் பெற்றோர்கள் , பாதுகாவலர்கள் (gardian) , பெரியவர்கள் (சமுதாயம்) இவர்கள் தான் குழந்தைகளின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.
தேவன் இதை எப்படிப் பார்க்கிறார்
குழந்தைகளின் பொறுப்பாளர்களாக தேவனுக்கு அடுத்தபடியாக இருப்பது தாயும் தகப்பனும் தான்
தேவன் குழந்தைகளை எதிரியின் வல்லமையில் இருந்து இரட்சிக்கும் பொறுப்பை தாய் தகப்பனிடம் கொடுத்துள்ளார். (நியாயாதி 13 : 13 , 14)
குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய் தகப்பனுக்கு அடுத்த படியான பொறுப்பு (இரண்டாவதாக) சபைக்கு கொடுத்துள்ளார். (யோவான் 21:15)
அக்கரையின்மை சித்ரவதை
குழந்தைகளின் அடிப்படை தேவையான உணவு , உடை , கல்வி , பாதுகாப்பு போன்றவற்றை கொடுத்திருந்தாலும் தேவனுடைய பார்வையில் அக்கரையின்மை என்னும் சித்ரவதையில்
முதலாவது வருவது குழந்தைகளின் குணக்கேடுகளைப் பற்றிய அக்கரையின்மைதான்.
கிறிஸ்துவின் இருதயம் எப்படி இயங்குகிறது என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் பாவம் செய்யும்போது அவர் வேதனை படுகிறார். நாம் பாவத்தை ஜெயிக்கும் போது மகிழ்ச்சியடைகிறார் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் செய்யும் நன்மையான காரியங்களும் , தீமையான காரியங்களும் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகிறது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆப்ரகாமைப் போல பெற்றோராகிய நாம் தேவன் பேசுகின்ற மெல்லிய சத்தத்தை தெளிவாக கேட்டால் தான் நம்முடைய பிள்ளைகளும் தேவன் பேசுகின்ற மெல்லிய சத்தத்தை கேட்க சொல்லித் தர முடியும்.
நம்முடைய பிள்ளைகளை பரிசுத்த ஆவியானவர் வழி நடத்த ஜெபிக்க வேண்டும் .
குழந்தைகளை தவறான விதத்தில் நடத்துவதோ , காயப்படுத்துவதோ , சித்ரவதை செய்வதோ குழந்தை சித்ரவதை என உலகம் மேற்கோடிட்டு காட்டுகிறது. இதனை அவர்கள் 4 வகையாக பிரிக்கின்றனர்.
1. அக்கரையின்மை சித்ரவதை
2. உடல் ரீதியான சித்ரவதை
3. மனரீதியான சித்ரவதை
4. பால் உணர்வு ரீதியான சித்ரவதை
இந்த 4 வகை சித்ரவதைகளை விளக்குவதில் தான் வேதத்திற்கும் உலக விளக்கத்திற்கும் வித்யாசம் இருக்கிறது.
1. அக்கரையின்மை சித்ரவதை
குழந்தைகளின் அடிப்படைத் தேவையான உணவு , உடை , கல்வி , பாதுகாப்பு இவற்றைத் தர தவறிய பெற்றோர்களோ (அ) பாதுகாவலரோ அந்த குழந்தையை அக்கரையின்மை சித்ரவதை செய்வதாக கருதப்படுகின்றனர்.
2. உடல் ரீதியான சித்ரவதை என்பது அவர்களது சரீரத்தை பாதிக்கும் வகையில் சித்ரவதை செய்வதாகும்.
3. மன ரீதியான சித்ரவதை என்பது அவர்களின் மனதை பாதிக்கக்கூடிய விதத்தில் நடத்துவதாகும்
4. பால் உணர்வு ரீதியான சித்ரவதை என்பது அவர்களை தவறான உறவு கொள்ள பயன்படுத்துவதையும் , அவர்களது அந்தரங்க உறுப்புக்களை தவறான விதத்தில் கையாள்வதையும் குறிக்கிறது.
யார் இந்த சித்ரவதைகளை செய்ய முடியும் என்ற கேள்விக்கு இந்த உலகம் தரும் பதில் பெற்றோர்கள் , பாதுகாவலர்கள் (gardian) , பெரியவர்கள் (சமுதாயம்) இவர்கள் தான் குழந்தைகளின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.
தேவன் இதை எப்படிப் பார்க்கிறார்
குழந்தைகளின் பொறுப்பாளர்களாக தேவனுக்கு அடுத்தபடியாக இருப்பது தாயும் தகப்பனும் தான்
தேவன் குழந்தைகளை எதிரியின் வல்லமையில் இருந்து இரட்சிக்கும் பொறுப்பை தாய் தகப்பனிடம் கொடுத்துள்ளார். (நியாயாதி 13 : 13 , 14)
குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய் தகப்பனுக்கு அடுத்த படியான பொறுப்பு (இரண்டாவதாக) சபைக்கு கொடுத்துள்ளார். (யோவான் 21:15)
அக்கரையின்மை சித்ரவதை
குழந்தைகளின் அடிப்படை தேவையான உணவு , உடை , கல்வி , பாதுகாப்பு போன்றவற்றை கொடுத்திருந்தாலும் தேவனுடைய பார்வையில் அக்கரையின்மை என்னும் சித்ரவதையில்
முதலாவது வருவது குழந்தைகளின் குணக்கேடுகளைப் பற்றிய அக்கரையின்மைதான்.
கிறிஸ்துவின் இருதயம் எப்படி இயங்குகிறது என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் பாவம் செய்யும்போது அவர் வேதனை படுகிறார். நாம் பாவத்தை ஜெயிக்கும் போது மகிழ்ச்சியடைகிறார் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் செய்யும் நன்மையான காரியங்களும் , தீமையான காரியங்களும் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகிறது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆப்ரகாமைப் போல பெற்றோராகிய நாம் தேவன் பேசுகின்ற மெல்லிய சத்தத்தை தெளிவாக கேட்டால் தான் நம்முடைய பிள்ளைகளும் தேவன் பேசுகின்ற மெல்லிய சத்தத்தை கேட்க சொல்லித் தர முடியும்.
நம்முடைய பிள்ளைகளை பரிசுத்த ஆவியானவர் வழி நடத்த ஜெபிக்க வேண்டும் .
Re: குழந்தை சித்ரவதை
Sat Sep 10, 2016 10:46 pm
தாயின் கருவரையில் இருந்தே குழந்தைக்கு தேவையான நல்ல குணநலன்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் . (சிம்சோனின் தாயை போல)
ஆவிக்குரிய சரியான உணவை , சரியான விதத்தில் நாம் நம் குழந்தைகந க்கு கொடுக்காமல் இருக்கும் போது அவர்கள் குணக்கேடு உள்ளவர்களும் ஆவிக்குரிய சரீர , மன , பாதுகாப்பையும் பெறாமல் பிசாசினுடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள். பாவம் செய்யாமல் இருந்து எப்படி தங்களுடைய குணத்தை கிறிஸ்துவின் குணத்தைப் போல் மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி ஆப்ரகாம் போதித்தது போல போதிப்பது பெற்றோர் ஆகிய சபைக்கும் , தாய் தகப்பனுக்கும் உரிய கடமையாகும்.
ஆப்ரகாம் தன்னுடைய எடுத்துக் காட்டை முன்வைத்து தன் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது எப்படி என போதித்து அவர்களது குணத்தை மேம்படுத்தினார்.
(ஆதி 18 : 19)
அநேக பெற்றோர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் தங்கள் குழந்தைகளின் மேல் உள்ள அக்கரையின்மைக்கு பயப்படத்தக்க கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
உனக்கு கொடுக்கப்பட்டிருந்த மந்தையும் , உன் மகிமையான ஆட்டுக் கிடையும் எங்கே அவர் உன்னை விசாரிக்கும் போது என்ன சொல்லுவாய்
எரேமியா 13 : 20 , 21
பெற்றோராகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்ல , நம்முடைய பிள்ளைகளிடம் பழகும் பிள்ளைகளையும் , சபையிலும் , அக்கம் பக்கத்திலுள்ள பிள்ளைகளின் கணக்கையும் தேவன நம்மிடத்தில் கேட்பார்.
இந்த அக்கரையின்மை சித்ரவதையை நாம் செய்கிறோமா
சிந்திப்போம்
செயல்படுவோம்‼
நன்றி கீதா ஐசக்
ஆவிக்குரிய சரியான உணவை , சரியான விதத்தில் நாம் நம் குழந்தைகந க்கு கொடுக்காமல் இருக்கும் போது அவர்கள் குணக்கேடு உள்ளவர்களும் ஆவிக்குரிய சரீர , மன , பாதுகாப்பையும் பெறாமல் பிசாசினுடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள். பாவம் செய்யாமல் இருந்து எப்படி தங்களுடைய குணத்தை கிறிஸ்துவின் குணத்தைப் போல் மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி ஆப்ரகாம் போதித்தது போல போதிப்பது பெற்றோர் ஆகிய சபைக்கும் , தாய் தகப்பனுக்கும் உரிய கடமையாகும்.
ஆப்ரகாம் தன்னுடைய எடுத்துக் காட்டை முன்வைத்து தன் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது எப்படி என போதித்து அவர்களது குணத்தை மேம்படுத்தினார்.
(ஆதி 18 : 19)
அநேக பெற்றோர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் தங்கள் குழந்தைகளின் மேல் உள்ள அக்கரையின்மைக்கு பயப்படத்தக்க கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
உனக்கு கொடுக்கப்பட்டிருந்த மந்தையும் , உன் மகிமையான ஆட்டுக் கிடையும் எங்கே அவர் உன்னை விசாரிக்கும் போது என்ன சொல்லுவாய்
எரேமியா 13 : 20 , 21
பெற்றோராகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்ல , நம்முடைய பிள்ளைகளிடம் பழகும் பிள்ளைகளையும் , சபையிலும் , அக்கம் பக்கத்திலுள்ள பிள்ளைகளின் கணக்கையும் தேவன நம்மிடத்தில் கேட்பார்.
இந்த அக்கரையின்மை சித்ரவதையை நாம் செய்கிறோமா
சிந்திப்போம்
செயல்படுவோம்‼
நன்றி கீதா ஐசக்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|