விழித்துகொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்!
Wed Jul 06, 2016 1:17 am
ஹெர்பல் லைஃப், ஆம்வே:
எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் என் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் வந்தார்.நன்றாக பேசி உபசரித்தோம்.கொஞ்ச நேரம் நன்றாக பேசினார்.அதன்பின் தான் ஒரு புது பிசினஸ் ஆரம்பித்திருப்பதாகவும் தன் கூட வந்தால் விவரம் தெரியும் என்றும் சொன்னார்.சரி என போனேன்.
ஒரு பெரிய ஹால்.அதில் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.எல்லாரையும் புது பிசினஸ் என சொல்லி தான் அழைத்து வந்திருந்தனர்.அதன்பின் தான் தெரிந்தது அது ஆம்வே என்ற பிரபல கம்பனி தரும் பிசினஸ் என்று.
மீட்டிங் துவங்கியதும் ஆம்வேயில் கோடீஸ்வரரானவர் என ஒருவர் மேடை ஏறினார்.தான் இந்த கம்பனியில் சேர்வதற்கு முன் ஒரு கம்பனியில் வாட்ச்மேனாக இருந்ததை சொன்னார்.இதில் சேர்ந்த பின் இப்போது கோடீஸ்வரராகி விட்டாராம்.ஏதோ டையமண்ட் ஆகிவிட்டாராம்.கோட்,சூட் எல்லாம் போட்டிருந்தார்.
இந்த கம்பனியில் சேர்ந்து எப்படி பணக்காரராகலாம் என ஒரு கணக்கு சொன்னார்.அதாவது 5000 ரூ கட்டி உறுப்பினராக வேண்டும்.அதன்பின் நமக்கு கீழே 4 பேரை சேர்க்க வேண்டும்.உடனே நமக்கு அவர்கள் கட்டிய 20000ல் இருந்து ஒரு தொகை கிடைக்கும்.அதன்பின் அந்த 4 பேரும் தலைக்கு 4 பேரை பிடிக்க வேண்டும்.அந்த தொகையில் நமக்கும் ஒரு பங்கு வரும்.நாம் நியமித்தவர்களுக்கு கீழ் எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம் நமக்கு கிடைக்கும்.இந்த முறையின் பெயர் MLM (Multi level marketing)என்பதாகும்.
ஒரு சின்ன கணக்கு போட்டதும் இது போகாத ஊருக்கு வழி என அப்போதே தெரிந்துவிட்டது.எப்படி சொல்கிறேன் என பாருங்கள்.
நான் (1)
எனக்கு கீழே நாலு பேர் (4)
அவர்களுக்கு கீழே 4 (16)
அவர்களுக்கு கீழே 4 (64)
இப்படி போகும் பிரமிட் எங்கே போகிறதென்று பாருங்கள்
1
4
16
64
256
1000
4000
16000
64000 (9வது ரவுண்டில் ஒரு நகரமே இந்த சங்கிலியில் இணையவேண்டும்)
240,000
10 லட்சம்
40 லட்சம்
1.6 கோடி
4 கோடி
16 கோடி
64 கோடி
240 கோடி
1000 கோடி
தியரிட்டகலாக பார்த்தால் 1 ரவுண்டில் ஒரு நபரோடு துவங்கிய ஆட்டம் 17வது ரவுண்டில் முழு உலகத்தில் வந்து நிற்கிறது.இத்தனை நபர்களை உறுப்பினராக சேர்ப்பது காரிய சாத்தியமே இல்லை.இந்த சங்கிலி 12 அல்லது 13வது ரவுண்டை தாண்டி வளராது.
1000 கோடி பேரை நீங்கள் கோடீஸ்வரராவீர்கள் என ஆசை காட்டி சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் கோடிஸ்வரராபவர்கள் 1000 பேர்தான்.1000 கோடி பேர் சேர்ந்தால் கூட ஆயிரம் பேருக்கு மேல் கோடிஸ்வராராக முடியாது(சின்ன கனக்குதான்.1000 கோடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 1 கோடி)மீதம் அத்தனை பேருக்கும் கிடைப்பது நெய்மணக்க கிண்டிய திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?இது எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என்பது தெரிகிறதா?
ஆக பழுதடைந்த,வேலை செய்யவே செய்யாத இந்த பிசினஸ் மாடலை வைத்துக்கொண்டு கோடிஸ்வராவீர்கள்,டையமண்ட்,எமெரால்ட் என சொல்லி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆம்வேயை போல் பல கம்பனிகள் புற்றிசலாய் கிளம்பின.சிம்பயோனிக்,காந்த படுக்கை கம்பனி,ஸ்கைவே என பல கம்பனிகள் கிளம்பி மக்கள் காசை சூறையாடின.
சட்டப்படி இது செல்லுபடியாக்கூடிய மாடல் என்பதை சொல்லியாக வேண்டும்.ஏனென்றால் இவர்கள் விவரமாக ஒரு விஷயத்தை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள்.அதாவது 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் ஒரு கிட்டை மக்களுக்கு கொடுக்கிறோம்.மக்கள் வினியோகஸ்தர்களாக இதில் சேரவேண்டியதில்லை.உபயோகிப்பளராக சேரலாம் என்று.
ஆனால் இவர்கள் மக்களை சேர்ப்பதே "கோடிஸ்வராகலாம்.வாருங்கள்" என்றுதான்.
விழித்துகொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்!
Neander Selvan
எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் என் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் வந்தார்.நன்றாக பேசி உபசரித்தோம்.கொஞ்ச நேரம் நன்றாக பேசினார்.அதன்பின் தான் ஒரு புது பிசினஸ் ஆரம்பித்திருப்பதாகவும் தன் கூட வந்தால் விவரம் தெரியும் என்றும் சொன்னார்.சரி என போனேன்.
ஒரு பெரிய ஹால்.அதில் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.எல்லாரையும் புது பிசினஸ் என சொல்லி தான் அழைத்து வந்திருந்தனர்.அதன்பின் தான் தெரிந்தது அது ஆம்வே என்ற பிரபல கம்பனி தரும் பிசினஸ் என்று.
மீட்டிங் துவங்கியதும் ஆம்வேயில் கோடீஸ்வரரானவர் என ஒருவர் மேடை ஏறினார்.தான் இந்த கம்பனியில் சேர்வதற்கு முன் ஒரு கம்பனியில் வாட்ச்மேனாக இருந்ததை சொன்னார்.இதில் சேர்ந்த பின் இப்போது கோடீஸ்வரராகி விட்டாராம்.ஏதோ டையமண்ட் ஆகிவிட்டாராம்.கோட்,சூட் எல்லாம் போட்டிருந்தார்.
இந்த கம்பனியில் சேர்ந்து எப்படி பணக்காரராகலாம் என ஒரு கணக்கு சொன்னார்.அதாவது 5000 ரூ கட்டி உறுப்பினராக வேண்டும்.அதன்பின் நமக்கு கீழே 4 பேரை சேர்க்க வேண்டும்.உடனே நமக்கு அவர்கள் கட்டிய 20000ல் இருந்து ஒரு தொகை கிடைக்கும்.அதன்பின் அந்த 4 பேரும் தலைக்கு 4 பேரை பிடிக்க வேண்டும்.அந்த தொகையில் நமக்கும் ஒரு பங்கு வரும்.நாம் நியமித்தவர்களுக்கு கீழ் எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம் நமக்கு கிடைக்கும்.இந்த முறையின் பெயர் MLM (Multi level marketing)என்பதாகும்.
ஒரு சின்ன கணக்கு போட்டதும் இது போகாத ஊருக்கு வழி என அப்போதே தெரிந்துவிட்டது.எப்படி சொல்கிறேன் என பாருங்கள்.
நான் (1)
எனக்கு கீழே நாலு பேர் (4)
அவர்களுக்கு கீழே 4 (16)
அவர்களுக்கு கீழே 4 (64)
இப்படி போகும் பிரமிட் எங்கே போகிறதென்று பாருங்கள்
1
4
16
64
256
1000
4000
16000
64000 (9வது ரவுண்டில் ஒரு நகரமே இந்த சங்கிலியில் இணையவேண்டும்)
240,000
10 லட்சம்
40 லட்சம்
1.6 கோடி
4 கோடி
16 கோடி
64 கோடி
240 கோடி
1000 கோடி
தியரிட்டகலாக பார்த்தால் 1 ரவுண்டில் ஒரு நபரோடு துவங்கிய ஆட்டம் 17வது ரவுண்டில் முழு உலகத்தில் வந்து நிற்கிறது.இத்தனை நபர்களை உறுப்பினராக சேர்ப்பது காரிய சாத்தியமே இல்லை.இந்த சங்கிலி 12 அல்லது 13வது ரவுண்டை தாண்டி வளராது.
1000 கோடி பேரை நீங்கள் கோடீஸ்வரராவீர்கள் என ஆசை காட்டி சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் கோடிஸ்வரராபவர்கள் 1000 பேர்தான்.1000 கோடி பேர் சேர்ந்தால் கூட ஆயிரம் பேருக்கு மேல் கோடிஸ்வராராக முடியாது(சின்ன கனக்குதான்.1000 கோடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 1 கோடி)மீதம் அத்தனை பேருக்கும் கிடைப்பது நெய்மணக்க கிண்டிய திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?இது எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என்பது தெரிகிறதா?
ஆக பழுதடைந்த,வேலை செய்யவே செய்யாத இந்த பிசினஸ் மாடலை வைத்துக்கொண்டு கோடிஸ்வராவீர்கள்,டையமண்ட்,எமெரால்ட் என சொல்லி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆம்வேயை போல் பல கம்பனிகள் புற்றிசலாய் கிளம்பின.சிம்பயோனிக்,காந்த படுக்கை கம்பனி,ஸ்கைவே என பல கம்பனிகள் கிளம்பி மக்கள் காசை சூறையாடின.
சட்டப்படி இது செல்லுபடியாக்கூடிய மாடல் என்பதை சொல்லியாக வேண்டும்.ஏனென்றால் இவர்கள் விவரமாக ஒரு விஷயத்தை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள்.அதாவது 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் ஒரு கிட்டை மக்களுக்கு கொடுக்கிறோம்.மக்கள் வினியோகஸ்தர்களாக இதில் சேரவேண்டியதில்லை.உபயோகிப்பளராக சேரலாம் என்று.
ஆனால் இவர்கள் மக்களை சேர்ப்பதே "கோடிஸ்வராகலாம்.வாருங்கள்" என்றுதான்.
விழித்துகொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்!
Neander Selvan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|