பதவியேற்பிலும் குமாரசாமி கணக்கா?
Tue May 24, 2016 9:48 am
பதவியேற்பிலும் குமாரசாமி கணக்கா?
------------------------------------------------------------------
ஜெயலலிதா 6வது முறையாக முதல்வர் பொறுப்பேற்கிறார் என்று அத்தனை டி.விகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அவரது தலைமையில் அ.தி.மு.க 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை வெற்றிபெற்றிருக்கிறது. 4 முறை வெற்றி பெற்றுவிட்டு எப்படி 6 முறை பதவி ஏற்கமுடியும்?
டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் 2001ல் அவர் பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் காரணமாக அவரது பதவி பறிபோய், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
அதன்பிறகு, முறைகேடாக வாங்கிய நிலத்தை திருப்பி ஒப்படைக்கிறேன் (திருடியதை திருப்பித் தருகிறேன்) என்று ஒப்புக்கொண்டு, அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி 2002ல் மீண்டும் பதவியேற்றார்.
அதுபோல 2014ல் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால் முதல்வர் பதவி பறிபோனது. திரும்பவும் ஓ.பி.எஸ் முதல்வரானார். அதன்பிறகு கர்நாடக கணித மேதை குமாரசாமி தந்த விடுதலையால் 2015ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.
அதாவது, “அடுத்தவர்களின் பென்சில் டப்பாவை திருடும் உன் நடத்தையைக் கண்டிக்கிறோம்” என்று பள்ளிக்கூடத்தில் டி.சி. கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட மாணவி அதன்பிறகு பெரிய மனிதர்களின் சிபாரிசு கடிதம் வாங்கி வந்து ரீ-அட்மிஷன் ஆவதுபோலத்தான் இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே முதல்வர் ஜெயலலிதா என்கிற அவமானகரமான கணக்கையும் சேர்த்தால்தான் மே 23ந் தேதி ஜெயலலிதா பதவியேற்பது 6வது முறையாகிறது.
மக்களின் தீர்ப்பினால் அவர் பதவியேற்பது நான்காவது முறைதான்.
எது எதற்கோ disclaimerகள் போடும் ஊடகங்கள் ஜெயலலிதா பதவியேற்புக்கும் உரிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்க அறிவிப்புகளையே ‘breaking news‘ ஆக்கிய நமது ஊடகங்களிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால் ஜெயலலிதாவின் பதவிற்பு எண்ணிக்கை என்பதும் குமாரசாமி கணக்காகவே உள்ளது.
நன்றி- கோவி.லெனின்
------------------------------------------------------------------
ஜெயலலிதா 6வது முறையாக முதல்வர் பொறுப்பேற்கிறார் என்று அத்தனை டி.விகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அவரது தலைமையில் அ.தி.மு.க 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை வெற்றிபெற்றிருக்கிறது. 4 முறை வெற்றி பெற்றுவிட்டு எப்படி 6 முறை பதவி ஏற்கமுடியும்?
டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் 2001ல் அவர் பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் காரணமாக அவரது பதவி பறிபோய், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
அதன்பிறகு, முறைகேடாக வாங்கிய நிலத்தை திருப்பி ஒப்படைக்கிறேன் (திருடியதை திருப்பித் தருகிறேன்) என்று ஒப்புக்கொண்டு, அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி 2002ல் மீண்டும் பதவியேற்றார்.
அதுபோல 2014ல் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால் முதல்வர் பதவி பறிபோனது. திரும்பவும் ஓ.பி.எஸ் முதல்வரானார். அதன்பிறகு கர்நாடக கணித மேதை குமாரசாமி தந்த விடுதலையால் 2015ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.
அதாவது, “அடுத்தவர்களின் பென்சில் டப்பாவை திருடும் உன் நடத்தையைக் கண்டிக்கிறோம்” என்று பள்ளிக்கூடத்தில் டி.சி. கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட மாணவி அதன்பிறகு பெரிய மனிதர்களின் சிபாரிசு கடிதம் வாங்கி வந்து ரீ-அட்மிஷன் ஆவதுபோலத்தான் இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே முதல்வர் ஜெயலலிதா என்கிற அவமானகரமான கணக்கையும் சேர்த்தால்தான் மே 23ந் தேதி ஜெயலலிதா பதவியேற்பது 6வது முறையாகிறது.
மக்களின் தீர்ப்பினால் அவர் பதவியேற்பது நான்காவது முறைதான்.
எது எதற்கோ disclaimerகள் போடும் ஊடகங்கள் ஜெயலலிதா பதவியேற்புக்கும் உரிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்க அறிவிப்புகளையே ‘breaking news‘ ஆக்கிய நமது ஊடகங்களிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால் ஜெயலலிதாவின் பதவிற்பு எண்ணிக்கை என்பதும் குமாரசாமி கணக்காகவே உள்ளது.
நன்றி- கோவி.லெனின்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|