தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Empty பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்!

Tue Feb 02, 2016 5:33 am
மண்டை ஓடுகளையும், எலும்புத் துண்டுகளையும் வைத்து கொண்டு பரிணாம வாதிகள் பல மக்களை நாத்திகர்களாக்கி வருவது வேதனையான செய்தி. பரிணாம கொள்கையை  அறிவியல் உண்மையாக ஏற்பது சரியா? கீழுள்ள கதைகளை சற்று படிக்கவும்.

1) அறிவியல் புத்தகங்களில் 40 ஆண்டுகள் விளங்கிய இல்லாத குரங்கினம்!

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Piltdownman
பில்ட்டொவ்ன் மனிதனின் கேலிச்சித்திரம்

1912ஆம் ஆண்டு டாவ்சன் என்ற பிரபல மருத்துவர் பழங்கால தாடை எலும்பு ஒன்றை பரிணாமவாதிகளிடம் ஒப்படைத்தார். அந்த தாடை எலும்பு மனிதனின் தாடை எலும்பை ஒத்திருப்பதாகவும், அதில் உள்ள பற்கள் குரங்கின் பற்களை ஒத்திருப்பதாகவும் பத்திரைக்களில் செய்திகள் வெளியாயின. மனிதனின் பரிணாமத்திற்கென முக்கிய ஆதாரமாக அந்த படிமம் கருதப்பட்டது. அப்படிமம் 5,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் அந்த குரங்கினத்தில் இருந்தே இன்றைய மனிதன் வந்ததாகவும் பரிணாமவாதிகள் கூறினர். அந்த குரங்கினத்திற்கு 'பிள்ட்டவுன் மனிதன்' என்ற பெயரிட்டு அவனிற்கு ஒரு உருவ படத்தை வரைந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் புத்தகங்களில் கற்பித்து வந்த கொடுமையும் நிகழ்ந்தது. இங்கிலாந்து அருங்காட்சியத்திற்கு 1949-இல் வருகை தந்த கென்னெத் என்பவர் அந்த படிமத்தை தற்செயலாக சோதிக்க அது 500 ஆண்டுகள் மட்டுமே பழமையான மனித தாடை எலும்பு என்பதும், அதில் உள்ள பற்கள் 100 ஆண்டுகளுக்குள் இறந்த ஒரு குரங்கின் பற்கள் என்பதும் தெரியவந்தது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மனித தாடை எலும்போடு 100 ஆண்டுகள் பழமையான குரங்கின் பற்களை பொருத்தி பொட்டாசியம் டைக்ரோமேட் என்ற வேதி பொருளை சாயமாக பூசி ஒரு மோசடி படிமத்தை உண்டாக்கியுள்ளனர். மனித பரிமாற்றத்திற்கென 40 ஆண்டுகள் ஆதாரமாக சமர்பித்து வந்த ஏமாற்று வேலை அம்பலமானதும் 'பிள்ட்டவுன் மனிதன்' அறிவியல் புத்தங்களில் இருந்து பரிணாம வாதிகளால் நீக்கப்பட்டான். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 40 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த அந்த படிமம் அகற்றப்பட்டது. 

2) ஒரே ஒரு பன்றி பல்லை வைத்து ஒரு குரங்கினத்தையே உருவாக்கிய கொடுமை!

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Nebraska-man
நெப்ரஸ்கா மனிதன்

1922-இல் ஹென்ரி ஆஸ்போர்ன் என்ற பரிணாமவாதி ஒரு பழங்கால பல்லை கண்டெடுத்தார். அந்த பல் குரங்கின் பல்லை போலவும் உள்ளது, மனிதனின் பல்லை போலவும் உள்ளது என்று ஹென்றி பத்திரிக்கைகளுக்கு அறிவிக்க, பரிணாமவாதம் சூடு பிடித்தது. அந்த பல்லை மேஜையில் வைத்து, சுற்றி பரிணாமவாதிகள் லென்ஸ்களை வைத்து நோக்குவது போல படங்கள் செய்தி தாள்களில் வெளியாயின. அப்படிமத்தை குரங்கிகிற்கும் மனிதனுக்கும் இடைநிலை என்று உறுதி செய்து , அதற்கு'நெப்ரஸ்கா மனிதன்' என்று பெயரிட்டனர். "ஹெஸ்பேரோபிதிகஸ் ஹரால்ட்கூகி"என்று அதற்கு ஒரு அறிவியல் பெயரும் கொடுக்கப்பட்டது. ஹென்றிக்கு பல பரிணாமவாதிகள் கைகொடுக்க, நெப்ரஸ்கா மனிதனுக்கு உருவத்தை கொடுக்கும் பணி தொடங்கியது. நெப்ரஸ்கா மனிதன் இப்படி தான் இருப்பான் என்று பரிணாம வாதிகள் படங்களை வரைந்து வெளியிட்டனர். சிறிது காலம் கழித்து நெப்ரஸ்கா மனிதனின் மனைவியும், குழந்தைகளும் இவ்வாறு இருப்பார்கள் என்று ஒரு பெண் குரங்கின் படித்தையும், சில குரங்கு குட்டிகளின் படத்தையும் வெளியிட்டனர். இவை எல்லாம் ஒரே ஒரு பல்லை வைத்து!

வில்லியம் பிரய்யான் என்ற ஆய்வாளர் இது குறித்து கேள்விகளை கேட்க தொடங்க அவர் பலவாறு இகழப்பட்டார். அந்தளவு ஒரு பல்லின் மேல் பரிணாம வாதிகளிடம் நம்பிக்கை இருந்தது. ஆனால், 1927-இல், அந்த பல் எட்டுக்கப்பட்ட இடத்தில் இருந்து சில எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டன. அப்பொழுது அது குரங்கினத்தின் பல் அல்ல என்பதும் இறந்த அரியவகை பன்றி ஒன்றின் பல் என்பதும் கண்டுபிடிக்கபட்டது. உடனடியாக நெப்ரஸ்கா மனிதனும், அவன் குடும்பமும் பரிணாம புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டனர்.

3) ஒட்டா பென்கா என்ற 'மனிதனின்' பரிதாப தற்கொலை! 

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Tumblr_mblqmjIlfr1rxtv35
குரங்குடன் நிறுத்தப்பட்ட மனிதன்

மனிதன் குரங்கில் இருந்து வந்தவன் என்ற கொள்கையை டார்வின் முன்வைத்து அதற்கு ஆதாரமாக சமர்பிக்க படிமங்களை தேட தொடங்கினார். ஆனால், சில பரிணாமவாதிகள் குரங்கிற்கும் மனிதனிற்கும் இடைநிலை உயிரினங்கள் அழியவில்லை என்று கூற தொடங்கினர். அதன் படி, ஒரு சாரார் எலும்பு துண்டுகளை தேட, இன்னொரு சாரார் உயிருடன் வாழும் இடைநிலை குரங்கினங்களை தேடி ஆப்ரிக்காவிற்கு சென்றனர்.

அங்கு அவர்கள் கண்களில் ஒரு ஆபிரிக்க மனிதன் மாட்டி கொண்டான். அவன் பெயர் ஒட்டா பென்கா. அவனிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அவன் தான் இன்று குரங்கிற்கும் மனிதனிற்கும் இடை நிலையில் உள்ள ஒரே உயிர் என்று பரிணாம வாதிகள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டனர். பென்கா கூண்டில் அடைக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டான். கொரில்லா குரங்குகளுடனும், ஆங்குற்றான் குரங்குகளுடனும் அவனை அடைத்து 'இவைகளே நம் முன்னோர்கள்' என்ற பெயரில் கண்காட்சி நடத்தினர். 2 வருடங்களுக்கு பிறகு, நியூ யார்க்கில் உள்ள பிரான்ஷ் மிருககாட்சி சாலைக்கு அவனை இடம் மாற்றினர். அங்கும் அவனை வைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த மிருககாட்சி சாலையின் மேலாளர் வில்லியம் ஹார்னடெ பென்காவை குறித்து பேசுகையில், "இந்த அரிய வகை உயிரினம் இந்த ஜூவில் இருப்பதை கண்டு நான் பெருமிதப் படுகிறேன்"என்றார். இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் ஒட்டா பென்கா தற்கொலை செய்து கொண்டான். அதன் பின்பே அவன் உணர்வுள்ள மனிதன் என்பது பரிணாம வாதிகளுக்கு புரிந்தது.

4) குரங்கு எலும்பு மனித எலும்பானது!

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Evolutionists_false_drawings_3
ரமாபிதிகஸ் மனிதன்

1930-இல் ஜி.இ.லூயிஸ் என்பவரால் இந்திய சிவாலிக் மலையில் இருந்து ஒரு தாடை எலும்பு எடுக்கப்பட்டது.  வழக்கம் போல் பரிணாமவாதிகளால் அந்த எலும்பு 15 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைநிலை உயிரினம் என்றும் உறுதி செய்யப்பட்டது. அதற்கு ரமாபிதிகஸ் மனிதன் என்ற பெயர் சூட்டினர். 50 வருடங்களாக குரங்கிற்கும் மனிதனிற்கும் இடைநிலை என்று கருதப்பட்ட ரமாபிதிகஸ் மனிதன் இன்று காணவில்லை. அவன் 100% குரங்கு என்பது 1981-இல் தற்செயலாக செய்யப்பட்ட சோதனையில் வெளிவந்தது. 50 வருடங்களாக ஒரு குரங்கின் எலும்பு மனித எலும்பாக அறிவியல் புத்தகங்களில் மாறின விந்தையை என்ன என்று சொல்ல?

5) ஒரே குரங்கில் இருந்து இன்றுள்ள அத்தனை மனிதர்களும் வந்துள்ளனர்!

பரிணாமம் கண்ட ஏமாற்றங்கள்! Catholics_believe_in_evolution
விஞ்ஞானி

MITOCHONDRIAL  EVE - மனிதர்கள் அனைவரிடமும் இழைமணி என்ற உயிரணு பகுதியில் ஒரே மரபணுக்கள் காணப்படுகின்றன. ஒரே தாயில் இருந்து வந்திருந்தால் மட்டுமே இத்தகைய சமன்பாடு சாத்தியமாகும். எனவே இன்று உலகில் உள்ள அத்தனை மக்களும்  பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தாயில் இருந்தே தோன்றியுள்ளனர்  என்று அறிவியல் உறுதி செய்துள்ளது. இந்த மரபணு எந்த குரங்குகளுடனும் கண்டெடுக்கப்பட்ட பழங்கால எலும்புகளுடனும்  ஒத்து போவதில்லை. ஆதாம் ஏவாள் வாழ்க்கைக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் குரல் எழுப்ப தொடங்கினர். பரிணாமவாதிகளோ ஒரே குரங்கில் இருந்து இன்றுள்ள அத்தனை மக்களும் வந்துள்ளனர் என்கின்றனர். மனிதர்களாக மாறிய பிற குரங்குகள் அழிந்துவிட்டன என்றும் ஒரே ஒரு குரங்கின் வம்ச வாரிசுகள் மட்டும் இன்றும் மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். அறிவியல் ஆராய்ச்சிகள் அந்த தாய் 6,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூற பரிணாம வாதிகள் அந்த தாய் 1,50,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறி வருகின்றனர். இதனால் அந்த ஒரே தாய் இன்றும் ஆய்வின் நிலையிலேயே முகம் காணப்படாமல் மறைந்துள்ளாள். பரிணாம வாதிகளுக்கு காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்....


"ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிற படியால், அக்கிரமக் காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியில் இருந்து விலகி விழுந்து போகாத படிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்" - 2 பேதுரு 3:17,18
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum