துதிகீதங்கள், ஜெபம் இருதயத்திலிருந்து வரட்டும்
Sat Aug 08, 2015 6:04 pm
“நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக் கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்” – சங்.71:23
பிரியமானவர்களே!
நீங்கள் இனிய குரலில், தாளம் தவறாதவிதத்தில், வார்த்தைகள் தடுமாறாமல் பாடலாம். அது பாடும் உங்களுக்கும், கேட்கிற மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் நீங்கள் பாடுவது, தேவனை உயர்த்துவது, ஆராதிப்பது எல்லாமே உங்கள் இருதயத்திலிருந்து, ஆத்தும பகுதியிலிருந்து வந்தால் மட்டுமே தேவனை சந்தோஷிப்பிக்க முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
1 சாமுவேல் 1ஆம் அதிகாரத்தில் 12 முதல் 18 வரை வாசித்துப் பார்க்கும்போது அன்னாள் தேவசமூகத்தில் விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோது கர்த்தருடைய ஊழியக்கரானாகிய ஏலி அன்னாளுடைய வாயைக் கவனித்துக் கொண்டே இருந்தான். ஆனால் அன்னாளோ தன் வாயாலே பேசாமல் தன் இருதயத்திலே பேசினாள். இதையறியாத ஏலி அவள் குடித்து வெறித்திருப்பதாக நினைத்தான். ஆனால் அன்னாளோ தான் கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றிவிட்டதாகக் கூறியவுடன் ஏலி தன்னுடைய வெளிப் பார்வையில் அவளை அளவிடாமல் அவளுடைய இருதயத்தைப் புரிந்து கொண்டவனாக தேவனுடைய ஊழியக்காரனாக நின்று சமாதானத்தோடே போ. நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படியே அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்று தீர்க்கதரிசனம் உரைத்து ஆறுதல் கூறுகிறான்.
ஆம்.உங்கள் துதி, ஆராதனை, நன்றி கீதங்கள், ஜெபங்கள் எல்லாமே உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்படட்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|