மாறாதிருக்கும் நம் மன்னவர்
Fri Jul 17, 2015 10:09 pm
ஒரு குடியானவர் பக்கத்து ஊருக்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்.
வழியில் ஒரு பெரிய மனிதர்போலத் தோற்றமளித்த ஒருவரை சந்தித்தார். அவரது சிரித்த முகமும், இனிய பேச்சும் குடியானவரை மிகவும் கவர்ந்தன. தான் வழித்துணைக்கு கொண்டு வந்த பலகாரங்களை அவரோடு பகிர்ந்து கொண்டார்.
பெரிய மனிதர் விடை பெறுகையில் ,
" ஐயா! உங்களை சந்தித்தது என் பாக்கியம். என் வீடு பக்கத்து கிராமத்தில்தான் உள்ளது. நீங்கள் அங்கு வரும்போது என் வீட்டில்தான் தங்க வேண்டும் " என்று சொல்லி விட்டு தன் பெயர், முகவரியையும் கூறிச் சென்றார். குடியானவரும் அவரது இனிமையான பேச்சுக்காகவே அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஒரு நாள் அதற்கான வேளையும் வந்தது. அந்த கிராமத்தில் ஒரு வேலை நிமித்தமாக சென்றார். பெரிய மனிதரின் வீட்டை எளிதாகத் கண்டு பிடித்து விட்டார். அவரும் இவரை நன்கு வரவேற்றுக் குடிக்க நீர் கொடுத்து திண்ணையில் அமரவைத்தார். குடியானவரும் அவரது அன்பு உபசரிப்பில் நெகிழ்ந்து போனார்.
பெரிய மனிதர் சொன்னார்,
வழியில் ஒரு பெரிய மனிதர்போலத் தோற்றமளித்த ஒருவரை சந்தித்தார். அவரது சிரித்த முகமும், இனிய பேச்சும் குடியானவரை மிகவும் கவர்ந்தன. தான் வழித்துணைக்கு கொண்டு வந்த பலகாரங்களை அவரோடு பகிர்ந்து கொண்டார்.
பெரிய மனிதர் விடை பெறுகையில் ,
" ஐயா! உங்களை சந்தித்தது என் பாக்கியம். என் வீடு பக்கத்து கிராமத்தில்தான் உள்ளது. நீங்கள் அங்கு வரும்போது என் வீட்டில்தான் தங்க வேண்டும் " என்று சொல்லி விட்டு தன் பெயர், முகவரியையும் கூறிச் சென்றார். குடியானவரும் அவரது இனிமையான பேச்சுக்காகவே அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஒரு நாள் அதற்கான வேளையும் வந்தது. அந்த கிராமத்தில் ஒரு வேலை நிமித்தமாக சென்றார். பெரிய மனிதரின் வீட்டை எளிதாகத் கண்டு பிடித்து விட்டார். அவரும் இவரை நன்கு வரவேற்றுக் குடிக்க நீர் கொடுத்து திண்ணையில் அமரவைத்தார். குடியானவரும் அவரது அன்பு உபசரிப்பில் நெகிழ்ந்து போனார்.
பெரிய மனிதர் சொன்னார்,
" நீங்கள் என்னை தேடி வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இன்று என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. இருந்தாலும் வீடு தேடி வந்துவிட்ட உங்களை வெறுமையாக அனுப்பிவிட மனம் ஏற்கவில்லை. நாம் இணைந்து சென்று இந்த ஊரின் மிகச் சிறந்த உணவை உண்டு வரலாம் வாருங்கள் என்று அன்புடன் அழைத்தார். குடியானவரும் மறுக்காமல் உடன் சென்றார்.
வழியில் தென்பட்ட ஒருவரிடம் பெரிய மனிதர் கேட்டார் ,
" ஐயா! நம்ம ஊர்ல கிடைக்கும் சிறப்பு உணவு என்ன? "
அவர்,
"நம்ம ஊரு ரொட்டி ரொம்ப சிறப்பானதுன்னு உலகத்துக்கே தெரியுமே! " என்றார்.
"அப்படின்னா வாங்க. சுவையான
ரொட்டியையே
உண்ணலாம் " என்று அழைத்துச் சென்றார்.
"அடடா! இருப்பதிலேயே தலைசிறந்த உணவைத் தேடிப்பிடித்து விருந்தினருக்குக் கொடுக்கும் இவரது பண்பை என்ன சொல்ல? " குடியானவர் சிலிர்த்துப் போனார்.
சிறிது நேர நடையில் ரொட்டிக் கடை வந்தது. உண்மையாகவே அந்த ஊரின் ரொட்டிகள் மணமாகவும் , அழகாகவும் இருந்தன. பெரிய மனிதர், ரொட்டிக் கடைக்காரரிடம் கேட்டார்,
" என்னய்யா, ரொட்டியெல்லாம் புதிதுதானா ?
நல்லாருக்குமா ?"
கடைக்காரர் சொன்னார்,
" புது ரொட்டிதான் ஐயா! வாயில் போட்டா சும்மா வெண்ணெய் மாதிரி கரையும் ". பெரிய மனிதர் உடனே சொன்னார்,
" அப்படின்னா இந்த ரொட்டியை விட சிறப்பானது வெண்ணெய்தானா ?
ஐயா! நீங்க வாங்க. நாம வெண்ணெயையே வாங்கி சாப்பிடலாம் " கரம் பிடித்து அழைத்து சென்றார்.
குடியானவருக்கு மேலும் புல்லரிப்பு. " உள்ளதிலேயே சிறந்ததை எப்படி கண்டுபிடிக்கிறார் மனிதர்? "
வெண்ணெய் கடைக்கு வந்துவிட்டார்கள். இப்போதும் கடைக்காரரிடம் கேட்டார்,
" ஐயா! இந்த வெண்ணெய் தரமானதுதானா? முக்கியமான விருந்தாளிக்கு கொடுக்குறது" என்றார். கடைக்காரர்,
" ரொம்ப தரமான சரக்குங்க. உருக்குனீங்கன்னா அப்புடியே செக்குல அப்பதான் ஆட்டுன தேங்காய் எண்ணெய் மாதிரி இருக்கும். அப்படி ஒரு வாசம் " . பெரிய மனிதர் முகத்தில் மீண்டும் மாறுதல். குடியானவர் கையைப் பிடித்தார். அவரும் புரிந்து கொண்டு பின்தொடர்ந்தார்.
அவர்கள் நின்ற இடம் எண்ணெய் செக்கு. தேங்காய் எண்ணெயை ஒரு உணவாக குடியானவர் ஒரு போதும் அருந்தியதில்லைதான். இருந்தாலும் அங்கே எழும்பிய புது எண்ணெயின் மணமும், பெரிய மனிதரின் அன்பும் அதற்கும் அவரைத் தயாராக்கி விட்டன.
" இந்த தேங்காய் எண்ணெய் எப்படிய்யா ?
சுத்தமானதுதானா ?
இவங்க நமக்கு ரொம்ப வேண்டியவங்க "
வழக்கம் போலவே கேட்டார்.
" நம்ம செக்குல ஆட்டுன எண்ணெய் பத்தி
கேக்கணுங்களா ?
பண்ணையார் வீட்டுக் கிணத்துத் தண்ணி மாதிரி தெளிவா இருக்கும் ".
இப்போது பெரிய மனிதர், குடியானவரை பார்க்கும் முன்பே அவர் நடக்க ஆரம்பித்திருந்தார். பெரிய மனிதர் பேசினார்,
" பாருங்க. எத்தனையோ உணவுப் பொருளை விசாரிச்சோம். அது எல்லாத்தையும் விட பண்ணையார் கிணத்து தண்ணிதான் மிகவும் சிறந்ததுன்னு தெளிவா. தெரியிது. என்னை தேடி வந்துட்டிங்க. உள்ளதிலேயே சிறந்ததை தரேன் வாங்க " கிணறு வந்தது, " நல்லா வயிறாரக் குடிங்க " என்று இறைத்து ஊற்றியபடி சொன்னார், " நீங்க அடுத்த முறை ஊர்ப்பக்கம் வந்தாலும் நம்ம வீட்லதான் தங்கி சாப்பிடணும் " என்றார்.
குடியானவர் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு திருப்பிப் பார்க்காமல் ஓடினார்.
செல்லமே! மனுஷனுடைய வாக்குறுதிகள் பெரும்பாலும் இப்படித்தான் ரொட்டியில் துவங்கிப் பச்சைத் தண்ணீரில் முடியும்.
பல ஊழியக்காரர்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். சில வேளைகளில் சிலரின் பொருத்தனைகள் கூட ரொட்டியில் துவங்கிப் பச்சைத் தண்ணீரில் முடியும். மாறி மாறிப் பேசும் மனிதனை நம்பாமல் மாறாதிருக்கும் நம் மன்னவனை மட்டுமே விசுவாசிப்பாயா ?
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|