அறிவிலும் சக்கரவர்த்திதான்
Fri Jul 17, 2015 10:04 pm
செல்லமே! இது ஏற்கனவே உனக்குத் தெரிந்த கதையாகக்கூட இருக்கலாம். இருந்தாலும் நமக்குத் தேவையான பல செய்திகள் இதில் உள்ளன.
ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவரது ஆளுகையின்கீழ் பல நாடுகள் இருந்தன. பல நாடுகளில் இருந்து ராஜாக்கள் வந்து கப்பம் கட்டி அவரைப் பணிந்து கொண்டார்கள். ஒரு முறை அவரைப் பார்க்க ஞானி ஒருவர் வந்தார். சக்கரவர்த்தி தாமே வாசல் வரை சென்று அவரை சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்றார்.
இந்த செயல் அவரது மந்திரியின் மனதில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஓரிரு நாட்கள் கழித்து அவர் சக்கரவர்த்தியிடம் கேட்டார். " மன்னர் மன்னா! எத்தனையோ ராஜாக்கள் உங்களைப் பணிந்து நிற்க, நீங்கள் போய் ஒரு சாதாரண மனிதன் முன் தலைவணங்கி நிற்பது நன்றாகவா இருக்கிறது? " சக்கரவர்த்தியோ இதைக் கேட்டதும் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலப் பெரிதாகச் சிரித்தார். மற்றபடி ஏதும் பதில் கூறவில்லை.
மறுநாள் மந்திரி அரசவைக்கு வந்தவுடனே சக்கரவர்த்தி அவரிடம் ஒரு வேலையை ஒப்படைத்தார். ஒரு ஆட்டின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை மூன்றையும் கொண்டு வரச்சொன்னார். மந்திரி திடுக்கிட்டபோதும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து ஓரிரு சிப்பாய்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
ஆட்டுத்தலை கடைவீதியில் எளிதாகக் கிடைத்தது. புலித்தலையை ஒரு வேடன் வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து விட்டான். மனிதத் தலையை ஒரு இடுகாட்டுக் காவலாளி ஒரு பிணத்தில் இருந்து வெட்டிக் கொடுத்தார். மூன்றையும் கொண்டு போய் சக்கரவர்த்தியின் முன்னால் வைத்தார்.
சக்கரவர்த்தி சொன்னார், " நல்லது . சொன்னபடியே செய்தீர்கள். இப்போது அடுத்த வேலை. இவை மூன்றையும் விற்றுக் காசாக்குங்கள் " என்றார். மந்திரி கொஞ்சம் குழம்பிப் போனார். ஆனாலும் ஒன்றும் பேசாமல் தலைகளை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனார்.
ஆட்டுத்தலை போன உடனே விற்றுப் போனது. புலித்தலை விற்பனையாகக் கொஞ்சம் நேரமானாலும் ஒரு பணக்காரர் தன் வீட்டில் மாட்டி வைப்பதற்காக நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார். கடைசியாக மனிதத்தலை. அதை வெளியே எடுத்து வைத்தவுடனே அதைப் பார்த்த பலரும் அலறி ஓடினார்கள். சிலர் முகத்தில் அறுவறுப்பைக் காட்டியபடி விலகிச் சென்றார்கள். யாரும் அதை வாங்க முன்வரவில்லை. மந்திரி அதை இலவசமாகக் கொடுப்பதாக சொல்லியும் எல்லாரும் முகத்தை சுளித்தபடி ஓடிப்போய் விட்டனர். எனவே மனிதத் தலையை மட்டும் மீண்டும் இடுகாட்டுக்கே கொண்டு சென்று புதைக்கச் செய்துவிட்டு சக்கரவர்த்தியிடம் போனார்.
சக்கரவர்த்தி கேட்டார் ,
ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவரது ஆளுகையின்கீழ் பல நாடுகள் இருந்தன. பல நாடுகளில் இருந்து ராஜாக்கள் வந்து கப்பம் கட்டி அவரைப் பணிந்து கொண்டார்கள். ஒரு முறை அவரைப் பார்க்க ஞானி ஒருவர் வந்தார். சக்கரவர்த்தி தாமே வாசல் வரை சென்று அவரை சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்றார்.
இந்த செயல் அவரது மந்திரியின் மனதில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஓரிரு நாட்கள் கழித்து அவர் சக்கரவர்த்தியிடம் கேட்டார். " மன்னர் மன்னா! எத்தனையோ ராஜாக்கள் உங்களைப் பணிந்து நிற்க, நீங்கள் போய் ஒரு சாதாரண மனிதன் முன் தலைவணங்கி நிற்பது நன்றாகவா இருக்கிறது? " சக்கரவர்த்தியோ இதைக் கேட்டதும் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலப் பெரிதாகச் சிரித்தார். மற்றபடி ஏதும் பதில் கூறவில்லை.
மறுநாள் மந்திரி அரசவைக்கு வந்தவுடனே சக்கரவர்த்தி அவரிடம் ஒரு வேலையை ஒப்படைத்தார். ஒரு ஆட்டின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை மூன்றையும் கொண்டு வரச்சொன்னார். மந்திரி திடுக்கிட்டபோதும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து ஓரிரு சிப்பாய்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
ஆட்டுத்தலை கடைவீதியில் எளிதாகக் கிடைத்தது. புலித்தலையை ஒரு வேடன் வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து விட்டான். மனிதத் தலையை ஒரு இடுகாட்டுக் காவலாளி ஒரு பிணத்தில் இருந்து வெட்டிக் கொடுத்தார். மூன்றையும் கொண்டு போய் சக்கரவர்த்தியின் முன்னால் வைத்தார்.
சக்கரவர்த்தி சொன்னார், " நல்லது . சொன்னபடியே செய்தீர்கள். இப்போது அடுத்த வேலை. இவை மூன்றையும் விற்றுக் காசாக்குங்கள் " என்றார். மந்திரி கொஞ்சம் குழம்பிப் போனார். ஆனாலும் ஒன்றும் பேசாமல் தலைகளை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனார்.
ஆட்டுத்தலை போன உடனே விற்றுப் போனது. புலித்தலை விற்பனையாகக் கொஞ்சம் நேரமானாலும் ஒரு பணக்காரர் தன் வீட்டில் மாட்டி வைப்பதற்காக நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார். கடைசியாக மனிதத்தலை. அதை வெளியே எடுத்து வைத்தவுடனே அதைப் பார்த்த பலரும் அலறி ஓடினார்கள். சிலர் முகத்தில் அறுவறுப்பைக் காட்டியபடி விலகிச் சென்றார்கள். யாரும் அதை வாங்க முன்வரவில்லை. மந்திரி அதை இலவசமாகக் கொடுப்பதாக சொல்லியும் எல்லாரும் முகத்தை சுளித்தபடி ஓடிப்போய் விட்டனர். எனவே மனிதத் தலையை மட்டும் மீண்டும் இடுகாட்டுக்கே கொண்டு சென்று புதைக்கச் செய்துவிட்டு சக்கரவர்த்தியிடம் போனார்.
சக்கரவர்த்தி கேட்டார் ,
" என்ன மந்திரியாரே! மூன்று தலைகளையும் விற்று லாபம் பார்த்தீர்களா? ". மந்திரி சொன்னார்,
" மன்னர் மன்னா! ஆட்டுத்தலையும் , புலித்தலையும் ஆட்சேபமின்றி விற்றுத் தீர்ந்து விட்டன. மனிதத் தலையையோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளவும் யாரும் தயாராக இல்லை ".
சக்கரவர்த்தி குறுக்கிட்டார்.
" மந்திரியாரே! பார்த்தீர்களா மனிதத் தலையின் மதிப்பை? கேவலம் ஒரு மிருகத்தின் தலைக்கு இருக்கும் மதிப்பு கூட இல்லாத அறுவறுக்கத் தக்க பொருள். அது என் தலையாக இருந்தாலும் அப்படித்தான். இத்தனை அற்பமான மனிதத்தலை பெரியவர்களைப் பணிந்து வரவேற்பதில் என்ன கேவலம் இருக்கிறது? ".
மந்திரி சொன்னார்,
" சக்கரவர்த்தி ! நீங்கள் நாடுகளுக்கு மட்டும் அல்ல, அறிவிலும் சக்கரவர்த்திதான்".
என்ன செல்லமே! அற்பமான இந்தத் தலை பணிவாய் நடந்து கொள்வதில் தவறில்லை அல்லவா?
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|