பலபேரை வாழ வைப்போம் வா
Fri Jul 17, 2015 9:28 pm
தம்பதிகள் இருவர் கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் ஒரே எண்ணம். அது 'தற்கொலை'. ஆம். அவர்கள் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். கடலின் இரைச்சல் அவர்களை விரைவாய் வரச்சொல்லுவது போல் தோன்றியது. இன்னும் கொஞ்சம் நேரந்தான், பரிபூரண விடுதலை.
அவமானம், நிந்தனை, ஏக்கம் எல்லாவற்றிலிருந்தும். இனிமேல் யாரும் அவளை மலடி என்று சொல்ல மாட்டார்கள். ஆசையாய் ஒரு குழந்தையை உற்றுப் பார்த்தால் கூட வெடுக்கென்று அதைத் தூக்கிச் சென்று விடுவதும், கொள்ளிக்கண் என்று ஜாடை மாடையாய்ப் பேசுவதும் இனிமேல் வேதனைப் படுத்தாது. இருபது வருடங்களாய் பிள்ளைச் செல்வமில்லாமல் பட்ட வேதனைகள் இன்றுடன் முடியப் போகின்றன. ஆஸ்திகள் எழுதி வைத்தபடி அனாதைகளுக்குப் போய்ச் சேரும். போகட்டும்.
கடலை நெருங்க இன்னும் சில அடி தூரம்தான். அவர்களுக்கு வசதியாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஓரிரு படகுகள் தவிர வேறு யாருமில்லை. மனதில் படபடப்பு. இதோ வந்து விட்டோம் மரணமே உன்னைத் தழுவிக்கொள்ள. கடலை நெருங்க இன்னும் சில நொடிகள்தான். திடீரெனப் படகிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி மறைந்தான். இருவருமே கொஞ்சம் தடுமாறிப் போனார்கள். கணவன் சொன்னான் "செத்த பிறகு போகப்போறதுதானே!"
அவள் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கடலை நோக்கி இழுத்தான்.
மனைவி முகத்தில் ஏதோவொரு மாற்றம்.
"சாகறதுக்காகப் போய்க்கிட்டிருக்கிற நம்ம கிட்ட கூட இன்னொரு மனுஷன் வாழ்றதுக்கான ஏதோ ஒரு விஷயம் இருந்திருக்குதுங்க. இன்னும் நம்ம கிட்ட என்னென்ன இருக்குதோ? அதை வச்சு எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமோ!"
அவள் சொல்லும்போதே கணவனின் கண்களில் கண்ணீர். " உலகம் எது வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். நம்ம கிட்ட இருக்கிறதை வச்சு பலபேரை
வாழ வைப்போம் வா".
கடலின் இரைச்சல் இப்போது அவர்கள் எடுத்த முடிவைக் கண்டு கைதட்டி ஆர்ப்பரிப்பது போல இருந்தது.
செல்லமே! நமக்கு எது உண்டோ இல்லையோ , விலைமதிப்பில்லாத ஏசு இருக்கிறார். அவரை நாம் பலருக்கும் கொடுத்தால் எத்தனை தற்கொலைகள் தவிர்க்கப்படும் ! கொடுப்பாயா?
செல்லமாய் John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|