பாவங்கள் பிடிங்கி எறியும்படி வேண்டுதல் செய்வோமா?
Fri Jul 17, 2015 9:27 pm
நாய்கள் எலும்புத்துண்டைக் கடித்து சுவைப்பதைப் பல முறை பார்த்திருப்பாய் செல்லமே!
சில சமயங்களில் பல நாட்களுக்கு முன்னரே காய்ந்து போன எலும்புத்துண்டைக் கூட நாய்கள் வெகு சுவாரஸ்யமாய் கடித்துக் கடித்து சுவைப்பதை அடிக்கடி காணமுடியும்.
ஆனால் அத்தனை முறை சுவைக்கும்படி அதில் ஏதேனும் சாறு கிடைக்குமா?
எனக்கு ஒரு பெரியவர் சொன்னார், நாய்கள் எலும்பு கடிக்கும் சுவாரஸ்யத்தில் அந்த எலும்பின் கூரிய முனைகள் தன்னுடைய வாய்க்குள்ளும் , ஈறுகளிலும் காயப்படுத்தி ரத்தம் கசிய வைப்பதை கவனிக்காதாம் . சற்று நேரம் கழித்து தனது வாய்க்குள் கசியும் தன்னுடைய ரத்தத்தையேகூட எலும்பிலிருந்து கசியும் ரத்தமாய் எண்ணி ஆனந்தமாக ருசிக்குமாம்.
என்ன ஒரு ஒற்றுமை! நாமும் கூடத்தான் பாவத்தினால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தைப் பெரிதென்று எண்ணி உலகத்தின் மாயையான சிற்றின்பங்களாலும் , கர்த்தர் வெறுக்கும் காரியங்களாலும் நம்முடைய ஆத்துமாவை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் உண்மையான சந்தோஷம் என்று நம்பி நம்முடைய ரத்தத்தையே ருசிபார்த்துக் கொண்டிருக்கிறோம் .
இந்த வேளையில் அவ்விதமான பாவங்கள் நம்மிடமிருந்தால்
அதை நம்மிடமிருந்து வேரோடு பிடுங்கி எறியும்படி
தேவ சமூகத்தில் வேண்டுதல் செய்வோமா?
5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
பிரசங்கி 4 :5
John Saravanan
சில சமயங்களில் பல நாட்களுக்கு முன்னரே காய்ந்து போன எலும்புத்துண்டைக் கூட நாய்கள் வெகு சுவாரஸ்யமாய் கடித்துக் கடித்து சுவைப்பதை அடிக்கடி காணமுடியும்.
ஆனால் அத்தனை முறை சுவைக்கும்படி அதில் ஏதேனும் சாறு கிடைக்குமா?
எனக்கு ஒரு பெரியவர் சொன்னார், நாய்கள் எலும்பு கடிக்கும் சுவாரஸ்யத்தில் அந்த எலும்பின் கூரிய முனைகள் தன்னுடைய வாய்க்குள்ளும் , ஈறுகளிலும் காயப்படுத்தி ரத்தம் கசிய வைப்பதை கவனிக்காதாம் . சற்று நேரம் கழித்து தனது வாய்க்குள் கசியும் தன்னுடைய ரத்தத்தையேகூட எலும்பிலிருந்து கசியும் ரத்தமாய் எண்ணி ஆனந்தமாக ருசிக்குமாம்.
என்ன ஒரு ஒற்றுமை! நாமும் கூடத்தான் பாவத்தினால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தைப் பெரிதென்று எண்ணி உலகத்தின் மாயையான சிற்றின்பங்களாலும் , கர்த்தர் வெறுக்கும் காரியங்களாலும் நம்முடைய ஆத்துமாவை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் உண்மையான சந்தோஷம் என்று நம்பி நம்முடைய ரத்தத்தையே ருசிபார்த்துக் கொண்டிருக்கிறோம் .
இந்த வேளையில் அவ்விதமான பாவங்கள் நம்மிடமிருந்தால்
அதை நம்மிடமிருந்து வேரோடு பிடுங்கி எறியும்படி
தேவ சமூகத்தில் வேண்டுதல் செய்வோமா?
5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
பிரசங்கி 4 :5
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|