குறுக்கு வழி சாவுக்கு ஏதுவானது
Fri Jul 17, 2015 9:23 pm
அடர்ந்த காட்டுக்குள் ஒரு எறும்புப் புற்று பல ஆண்டுகளாக அதில் ஆயிரக்கணக்கான எறும்புகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தன.
எறும்புக் கூட்டம் வரிசையாகச் செல்வதும், வருவதும், ஒன்று கூடி உழைப்பதும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அக்கூட்டத்தில் சில இளைய எறும்புகள் இருந்தன. ஒருவர் பின்னால் ஒருவர் ஊர்ந்து போவதும் , இயந்திரம் போல வாழ்வதும், விரைவாகப் பயணிக்க வழி தேடாமல் ஆண்டாண்டு காலமாக ஊர்ந்து கொண்டிருப்பதும் அவற்றுக்குப் பிடிக்கவேயில்லை. ஒன்று கூடி இதையெல்லாம் கேலி செய்து சிரித்தன. புற்றிலிருந்து விரைவாக வெளியேறவும் , உள்ளே பிரவேசிக்கவும் ஒரு புதிய வழியைக் கண்டு பிடிக்க முயன்றன.
இளைய எறும்புகளின் இந்தப் போக்கைத் தெரிந்து கொண்ட ஒரு முதிய எறும்பு அவற்றைக் கண்டித்து, புத்தி சொன்னது . ஒற்றுமையையும், கீழ்ப்படிதலையும் குறித்து விளக்கமாகச் சொன்னது.
இளைய எறும்புகள் சிரிப்பை அடக்கிக் கொண்டபடியே ஆமோதித்துத் தலையசைத்தன. அவற்றின் மனதிலோ
"இரு இரு. ஒரு நாள் நாங்கள் விரைவாகச் செல்ல மாற்று வழி கண்டுபிடிப்போம். அப்ப இந்தக் கூட்டமே எங்களைத் தலைல தூக்கி வச்சிக்கிட்டு ஆடப்போகுது " என்று எண்ணிக் கொண்டன.
ஒரு அழகான காலைப் பொழுது வந்தது. எறும்புகளெல்லாம் உணவு சேகரிக்க ஒன்றன்பின் ஒன்றாக நூல் பிடித்தது போலப் புறப்பட்டன. பரியாசம் பிடித்த இளைய எறும்புகள் மட்டும் அவற்றைக் கேலி செய்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தன.
அப்போது புற்றின் துளை வழியாக ஒரு வழவழப்பான குச்சி இறங்கியது. எப்போதும் பயணிக்கும் சொரசொரப்பானதும் , கரடு முரடானதுமான மண்சுவரையே பார்த்து சலித்த கண்களுக்கு அது மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது .
மூத்த எறும்புகளெல்லாம் மண் சுவரில் ஒன்றை ஒன்று தொடர்ந்து போய்க்கொண்டிருக்க , இவற்றிற்கு வேறொரு யோசனை தோன்றியது.
புதிதாக வந்திருக்கும் குச்சியைப் பாலமாகப் பயன்படுதினால் விரைவாக மேலே ஏறலாம். பழைய மண் சுவற்றில் வளைந்து நெளிந்து ஏற வேண்டிய அவசியம் இருக்காது.
அதில் ஒரு எறும்பு உரக்கச் சொன்னது,
" என் கூட்டமே!
இனி நீங்கள் சிரமப்பட்டுப் பயணிக்க வேண்டாம். இதோ உங்களுக்காக ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடித்து விட்டோம். வாருங்கள். சுலபமாக மேலே ஏறலாம்" என்றது.
எந்த எறும்புமே காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒன்றன் ஒன்றாகப் போய்க்கொண்டே இருந்தன.
இளைய எறும்புக்கூட்டத்துக்குக் கோபம் வந்தது.
" இன்னும் எத்தனை காலந்தான் இந்தக் குறுகலான வழியிலேயே செல்வீர்கள் ? இங்கே பாருங்கள். எத்தனை அழகான, எளிய வழி!
நீங்கள் எப்படியோ போங்கள். இனி இதுதான் எங்கள் வழி "
என்று சொல்லி விட்டுத் தன் நண்பர்களோடு ஆரவாரமாக மேலே ஏறிற்று.
"அடடா! என்ன அருமையான யோசனை. எளிதான பாதை. அந்தக் கிழட்டு முட்டாள்களுக்கு இந்த சந்தோஷம் கிடைக்கப் போவதே இல்லை".
உற்சாகமாய் மேலே ஏறின. அந்த உற்சாகம் சில விநாடிகள் மட்டுமே நீடித்தது.
ஆம். அவை மிக வசதியாக ஏறி வந்த அழகான குச்சி இருந்தது ஒரு குரங்கின் கையில். அது எறும்புகளைப் பிடிக்கும் ஒரு தூண்டிலாய் குச்சியைப் பயன்படுத்தி இருந்திருக்கிறது.
உற்சாகமாய் ஏறி வந்த எறும்புகளைக் , குரங்கு ஒட்டு மொத்தமாய் வாயில் போட்டு மென்று தின்றது.
செல்லமே! நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பிசாசு இப்படி ஒரு short cutடைக் காண்பித்து , நம்முடைய மூத்தவர்கள் போகும் பாதையெல்லாம் முட்டாள்தனமானது என்பான்.
எறும்புக் கூட்டம் வரிசையாகச் செல்வதும், வருவதும், ஒன்று கூடி உழைப்பதும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அக்கூட்டத்தில் சில இளைய எறும்புகள் இருந்தன. ஒருவர் பின்னால் ஒருவர் ஊர்ந்து போவதும் , இயந்திரம் போல வாழ்வதும், விரைவாகப் பயணிக்க வழி தேடாமல் ஆண்டாண்டு காலமாக ஊர்ந்து கொண்டிருப்பதும் அவற்றுக்குப் பிடிக்கவேயில்லை. ஒன்று கூடி இதையெல்லாம் கேலி செய்து சிரித்தன. புற்றிலிருந்து விரைவாக வெளியேறவும் , உள்ளே பிரவேசிக்கவும் ஒரு புதிய வழியைக் கண்டு பிடிக்க முயன்றன.
இளைய எறும்புகளின் இந்தப் போக்கைத் தெரிந்து கொண்ட ஒரு முதிய எறும்பு அவற்றைக் கண்டித்து, புத்தி சொன்னது . ஒற்றுமையையும், கீழ்ப்படிதலையும் குறித்து விளக்கமாகச் சொன்னது.
இளைய எறும்புகள் சிரிப்பை அடக்கிக் கொண்டபடியே ஆமோதித்துத் தலையசைத்தன. அவற்றின் மனதிலோ
"இரு இரு. ஒரு நாள் நாங்கள் விரைவாகச் செல்ல மாற்று வழி கண்டுபிடிப்போம். அப்ப இந்தக் கூட்டமே எங்களைத் தலைல தூக்கி வச்சிக்கிட்டு ஆடப்போகுது " என்று எண்ணிக் கொண்டன.
ஒரு அழகான காலைப் பொழுது வந்தது. எறும்புகளெல்லாம் உணவு சேகரிக்க ஒன்றன்பின் ஒன்றாக நூல் பிடித்தது போலப் புறப்பட்டன. பரியாசம் பிடித்த இளைய எறும்புகள் மட்டும் அவற்றைக் கேலி செய்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தன.
அப்போது புற்றின் துளை வழியாக ஒரு வழவழப்பான குச்சி இறங்கியது. எப்போதும் பயணிக்கும் சொரசொரப்பானதும் , கரடு முரடானதுமான மண்சுவரையே பார்த்து சலித்த கண்களுக்கு அது மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது .
மூத்த எறும்புகளெல்லாம் மண் சுவரில் ஒன்றை ஒன்று தொடர்ந்து போய்க்கொண்டிருக்க , இவற்றிற்கு வேறொரு யோசனை தோன்றியது.
புதிதாக வந்திருக்கும் குச்சியைப் பாலமாகப் பயன்படுதினால் விரைவாக மேலே ஏறலாம். பழைய மண் சுவற்றில் வளைந்து நெளிந்து ஏற வேண்டிய அவசியம் இருக்காது.
அதில் ஒரு எறும்பு உரக்கச் சொன்னது,
" என் கூட்டமே!
இனி நீங்கள் சிரமப்பட்டுப் பயணிக்க வேண்டாம். இதோ உங்களுக்காக ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடித்து விட்டோம். வாருங்கள். சுலபமாக மேலே ஏறலாம்" என்றது.
எந்த எறும்புமே காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒன்றன் ஒன்றாகப் போய்க்கொண்டே இருந்தன.
இளைய எறும்புக்கூட்டத்துக்குக் கோபம் வந்தது.
" இன்னும் எத்தனை காலந்தான் இந்தக் குறுகலான வழியிலேயே செல்வீர்கள் ? இங்கே பாருங்கள். எத்தனை அழகான, எளிய வழி!
நீங்கள் எப்படியோ போங்கள். இனி இதுதான் எங்கள் வழி "
என்று சொல்லி விட்டுத் தன் நண்பர்களோடு ஆரவாரமாக மேலே ஏறிற்று.
"அடடா! என்ன அருமையான யோசனை. எளிதான பாதை. அந்தக் கிழட்டு முட்டாள்களுக்கு இந்த சந்தோஷம் கிடைக்கப் போவதே இல்லை".
உற்சாகமாய் மேலே ஏறின. அந்த உற்சாகம் சில விநாடிகள் மட்டுமே நீடித்தது.
ஆம். அவை மிக வசதியாக ஏறி வந்த அழகான குச்சி இருந்தது ஒரு குரங்கின் கையில். அது எறும்புகளைப் பிடிக்கும் ஒரு தூண்டிலாய் குச்சியைப் பயன்படுத்தி இருந்திருக்கிறது.
உற்சாகமாய் ஏறி வந்த எறும்புகளைக் , குரங்கு ஒட்டு மொத்தமாய் வாயில் போட்டு மென்று தின்றது.
செல்லமே! நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பிசாசு இப்படி ஒரு short cutடைக் காண்பித்து , நம்முடைய மூத்தவர்கள் போகும் பாதையெல்லாம் முட்டாள்தனமானது என்பான்.
நாமும் சுக போகத்தை விரும்பி அவன் வழியில் சென்றால் அந்த எறும்புகளைப் போலவே அவனுக்கு இரையாக வேண்டியதுதான். சத்துருவின்
குறுக்கு வழி சாவுக்கு ஏதுவானது.
ஏசப்பாவின் இடுக்கமான வழியே என்றும் பாதுகாப்பானது.
John Saravanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|