பஞ்ச ரோடு --என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
Mon May 11, 2015 7:04 am
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய
நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில்
யாருக்காவது தெரியுமா ... ???
.
பஞ்ச ரோடு ..... என்று சொல்லுவார்கள் ...!!!
.
பஞ்ச ரோடு --என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
.
1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான
பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன்
தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல்
பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் ...
.
அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க
எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கொண்டானாம் ...
.
வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு
தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை
.
எங்கு பார்த்தாலும் பசி பட்டினி ... மரண ஓலங்கள் ...
.
அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை
விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும்
மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்
.
ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை
அரிசி கஞ்சி குடுப்பானாம் ...
.
என்னுடைய தாத்தா சிறுவயதில் அவங்க அப்பாகூட போயி
ரோடு போடும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாராம்
அவங்க அப்பா ரோடு வேலை செஞ்சுட்டு கூலியா அந்த அரிசி
கஞ்சிய வாங்கி என் தாத்தாவுக்கு குடுத்துட்டு தானும் குடித்துவிட்டு
வீட்டுக்கு மீதியை எடுத்துவருவாராம் ...
.
அதனாலதான் அந்த (திருச்சி - சென்னை) ரோட்டுக்கு
.... பஞ்ச ரோடு .... அப்புடின்னு பேரு வந்துச்சாம் ....
.
அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே ...
இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் ...
.
அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் ... ???
.
அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில்
இருந்து தானியங்களை கொண்டுவந்து இறக்கினான் ...
.
இப்போ நமக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்
.
சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்
.
அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்
.
யாராவது அரிசி குடுப்பானுங்களா .... ???
.
முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம்
என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர் ...
.
வெளிநாட்டுகாரன் ... பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் ....
இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக
சொல்கிறான் ...என்பது உங்களுக்கு தெரியுமா ... ???
.
இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும்
விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக
தெரிவார்கள்
.
நம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதைவிட
நம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ....
.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில்
விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது.
.
அப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள்
ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள்
விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கவேண்டும் ...
.
அப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன் நெல், கரும்பு,
எள், வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய
நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள ...
.
தஞ்சை மாவட்டம், திருவையாறு, திரு அய்யாறு அப்பர்
கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
விலாங்குடிக்கு அருகில், தஞ்சையில் இருந்து அரியலூர்
செல்லும் சாலையை ஒட்டி, நெல் கரும்பு சாகுபடி செய்யும்
விவசாய விலை நிலங்களில் திடீரென தோன்றியுள்ள
... ஹாஜீரா நகர் ...
.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில்
அதுவும் ஐந்து ஆறுகள் பாய்ந்து முப்போகம் நெல்
விளைச்சலில் முதலிடமாக இருக்கும் திருவையாறு
பகுதியில், பொன் விளையும் பூமியில் வீட்டுமனை
போடவேண்டிய அவசியம் என்ன .... ???
.
முக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி ஒருவரால், ஒரு ஏக்கர்
ஒரு கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டு சுமார் இருநூறு
ஏக்கருக்கு மேல் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
.
திருவையாறு தாலுக்கா ஆபீசில் உள்ள அரசு அதிகாரிகள்
கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு
அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர்...
.
இதுபோன்ற நிகழ்வுகள் உடனடியாக
தடுக்கபடவில்லைஎனில் அடுத்த பஞ்சத்தின்போது
பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை
பத்துகோடியாக இருக்கும் ...
.
பஞ்சம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் பிள்ளைகள்
நம் முன்னே பசியால் செத்துமடியும் கோரக்காட்சிகள்
அரங்கேறும் என்பதை மறவாதீர் ...
.
நாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து
வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுடைய
பினாமிகளும் அப்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி
ஒய்யாரமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள் ...
.
அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை
மனதில் வைக்கவும் ...
.
இந்த பதிவை சென்ற ஆண்டு இதே நாட்களில் பதிந்து
சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் இந்த பதிவை
SHARE செய்தது மட்டுமல்லாது,
.
ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை திருவையாறு
பகுதியில், வீட்டு மனை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க
கோரி தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தபால் கார்டு
மூலம் தங்களுடைய கோரிக்கையை தெரிவித்தனர்.
.
அதை அடுத்து, தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் சரியான
நடவடிக்களை எடுத்து திருவையாறு ஹஜீரா நகர் மட்டுமல்லாது
அப்பகுதியில் கஸ்தூரிபா நகருக்கு எதிரே பொறம்போக்கு நிலங்கள்
பட்டா போடப்பட்டு வீட்டு மனை ஆக்கப்பட்டு இருந்ததையும்
கண்டு பிடித்து அதையும் தடுத்து நிறுத்தி ...
.
அந்த இடங்களில் " இங்கு யாரும் வீட்டு மனை வாங்க
கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் விளம்பர
பலகை வைக்கப்பட்டது...
.
ஆனால் தற்பொழுது அதிமுக அமைச்சர் ஒருவரின் பெயரில்
மீண்டும் அதிக அளவிலான நிலங்கள் சோப்பு கம்பெனி
என்ற இடத்தில் வாங்கப்பட்டு மீண்டும் வீட்டு மனைகளாக
மாற்றப்படுகின்றன ...
.
இங்கு யாரும் வீட்டு மனை வாங்க கூடாது என்ற
மாவட்ட ஆட்சியர் உத்தரவு விளம்பர பலகையும்
அகற்றப்பட்டுவிட்டது...
.
முன்பு திமுக அமைச்சர்களின் பினாமிகள் திருவையாறு
பகுதியில் ஹஜீரா நகரை உருவாக்கினார்கள் ...
.
தற்பொழுது அதிமுக அமைச்சர்களின் பினாமிகள்
அதே பகுதியில் வேறு சில நகர்களை உருவாக்குகிறார்கள்
.
தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் திருவையாறு பகுதியில்
வீட்டு மனை போடப்படுவதை உடனடியாக தடுத்து
நிறுத்தி தகுந்த நடவடிக்கையைஎடுத்து நிரந்தர மாற்றத்தை
ஏற்ப்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம் ...
மற்றவர்களும் அறிய இப்பதிவை - SHARE - பண்ணுங்க ப்ளீஸ்
.
------ அமுதா அமுதா ------
நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில்
யாருக்காவது தெரியுமா ... ???
.
பஞ்ச ரோடு ..... என்று சொல்லுவார்கள் ...!!!
.
பஞ்ச ரோடு --என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
.
1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான
பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன்
தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல்
பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் ...
.
அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க
எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கொண்டானாம் ...
.
வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு
தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை
.
எங்கு பார்த்தாலும் பசி பட்டினி ... மரண ஓலங்கள் ...
.
அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை
விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும்
மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்
.
ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை
அரிசி கஞ்சி குடுப்பானாம் ...
.
என்னுடைய தாத்தா சிறுவயதில் அவங்க அப்பாகூட போயி
ரோடு போடும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாராம்
அவங்க அப்பா ரோடு வேலை செஞ்சுட்டு கூலியா அந்த அரிசி
கஞ்சிய வாங்கி என் தாத்தாவுக்கு குடுத்துட்டு தானும் குடித்துவிட்டு
வீட்டுக்கு மீதியை எடுத்துவருவாராம் ...
.
அதனாலதான் அந்த (திருச்சி - சென்னை) ரோட்டுக்கு
.... பஞ்ச ரோடு .... அப்புடின்னு பேரு வந்துச்சாம் ....
.
அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே ...
இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் ...
.
அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் ... ???
.
அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில்
இருந்து தானியங்களை கொண்டுவந்து இறக்கினான் ...
.
இப்போ நமக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்
.
சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்
.
அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்
.
யாராவது அரிசி குடுப்பானுங்களா .... ???
.
முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம்
என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர் ...
.
வெளிநாட்டுகாரன் ... பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் ....
இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக
சொல்கிறான் ...என்பது உங்களுக்கு தெரியுமா ... ???
.
இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும்
விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக
தெரிவார்கள்
.
நம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதைவிட
நம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ....
.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில்
விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது.
.
அப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள்
ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள்
விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கவேண்டும் ...
.
அப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன் நெல், கரும்பு,
எள், வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய
நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள ...
.
தஞ்சை மாவட்டம், திருவையாறு, திரு அய்யாறு அப்பர்
கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
விலாங்குடிக்கு அருகில், தஞ்சையில் இருந்து அரியலூர்
செல்லும் சாலையை ஒட்டி, நெல் கரும்பு சாகுபடி செய்யும்
விவசாய விலை நிலங்களில் திடீரென தோன்றியுள்ள
... ஹாஜீரா நகர் ...
.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில்
அதுவும் ஐந்து ஆறுகள் பாய்ந்து முப்போகம் நெல்
விளைச்சலில் முதலிடமாக இருக்கும் திருவையாறு
பகுதியில், பொன் விளையும் பூமியில் வீட்டுமனை
போடவேண்டிய அவசியம் என்ன .... ???
.
முக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி ஒருவரால், ஒரு ஏக்கர்
ஒரு கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டு சுமார் இருநூறு
ஏக்கருக்கு மேல் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
.
திருவையாறு தாலுக்கா ஆபீசில் உள்ள அரசு அதிகாரிகள்
கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு
அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர்...
.
இதுபோன்ற நிகழ்வுகள் உடனடியாக
தடுக்கபடவில்லைஎனில் அடுத்த பஞ்சத்தின்போது
பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை
பத்துகோடியாக இருக்கும் ...
.
பஞ்சம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் பிள்ளைகள்
நம் முன்னே பசியால் செத்துமடியும் கோரக்காட்சிகள்
அரங்கேறும் என்பதை மறவாதீர் ...
.
நாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து
வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுடைய
பினாமிகளும் அப்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி
ஒய்யாரமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள் ...
.
அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை
மனதில் வைக்கவும் ...
.
இந்த பதிவை சென்ற ஆண்டு இதே நாட்களில் பதிந்து
சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் இந்த பதிவை
SHARE செய்தது மட்டுமல்லாது,
.
ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை திருவையாறு
பகுதியில், வீட்டு மனை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க
கோரி தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தபால் கார்டு
மூலம் தங்களுடைய கோரிக்கையை தெரிவித்தனர்.
.
அதை அடுத்து, தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் சரியான
நடவடிக்களை எடுத்து திருவையாறு ஹஜீரா நகர் மட்டுமல்லாது
அப்பகுதியில் கஸ்தூரிபா நகருக்கு எதிரே பொறம்போக்கு நிலங்கள்
பட்டா போடப்பட்டு வீட்டு மனை ஆக்கப்பட்டு இருந்ததையும்
கண்டு பிடித்து அதையும் தடுத்து நிறுத்தி ...
.
அந்த இடங்களில் " இங்கு யாரும் வீட்டு மனை வாங்க
கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் விளம்பர
பலகை வைக்கப்பட்டது...
.
ஆனால் தற்பொழுது அதிமுக அமைச்சர் ஒருவரின் பெயரில்
மீண்டும் அதிக அளவிலான நிலங்கள் சோப்பு கம்பெனி
என்ற இடத்தில் வாங்கப்பட்டு மீண்டும் வீட்டு மனைகளாக
மாற்றப்படுகின்றன ...
.
இங்கு யாரும் வீட்டு மனை வாங்க கூடாது என்ற
மாவட்ட ஆட்சியர் உத்தரவு விளம்பர பலகையும்
அகற்றப்பட்டுவிட்டது...
.
முன்பு திமுக அமைச்சர்களின் பினாமிகள் திருவையாறு
பகுதியில் ஹஜீரா நகரை உருவாக்கினார்கள் ...
.
தற்பொழுது அதிமுக அமைச்சர்களின் பினாமிகள்
அதே பகுதியில் வேறு சில நகர்களை உருவாக்குகிறார்கள்
.
தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் திருவையாறு பகுதியில்
வீட்டு மனை போடப்படுவதை உடனடியாக தடுத்து
நிறுத்தி தகுந்த நடவடிக்கையைஎடுத்து நிரந்தர மாற்றத்தை
ஏற்ப்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம் ...
மற்றவர்களும் அறிய இப்பதிவை - SHARE - பண்ணுங்க ப்ளீஸ்
.
------ அமுதா அமுதா ------
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|