பாராட்டுவோம்... சமைத்து பரிமாறுபவரை
Tue Feb 17, 2015 8:32 am
வீட்ல உள்ள பெண்கள் கஷ்டப்பட்டு எவ்வளவு தான் ருசியா சமைச்சு போட்டாலும் மண்ண சாப்பிடுற மாதிரி சாப்பிட்டுட்டு எந்திரிச்சு போவாங்க...
இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா...?
உண்மையில் சமையல் என்பது எல்லா கலையிலும் சிறந்த கலை...
ஏன் இப்படி சொல்றேன்னா மற்ற கலைகள் அனைத்தும் நம் புலன்களுக்கு மட்டும் தான் விருந்து...
சமையல் கலை ஒன்று தான் நம் உடலுக்கும் உயிருக்கும் விருந்து...
அப்படிப்பட்ட சமையல் கலையை எல்லோராலும் சிறப்பாக செய்துவிட முடியாது.
ஒரு சிற்பியைப் போல பொறுமையும், ஒரு ஓவியனைப் போல கைவண்ணமும், பார்க்கும் பொருட்களையெல்லாம் ரசிக்கும் ஒரு குழந்தையைப் போல ரசிப்புத் தன்மையும் இருப்பவர்களால் மட்டுமே சமையற்கலையை சிறப்பாக செய்ய முடியும்...
அப்படிப்பட்ட கலையை நம் வீட்டுப் பெண்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தான் செய்கிறார்கள்...
ஆனால் நாம சாப்பிட்டுட்டு சின்னதா ஒரு வார்த்தை பாராட்டி சொன்னா கூட பெரிதா சந்தோசப் படுவாங்க...
ஏனெனில் எதிர்பார்க்காதபோது செய்யப்படும் செயல்கள் மனித மனங்களில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்...
அதற்காக சுவை குறைவா இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால் மூஞ்சியால் அடித்தாற்போல் நல்லாயில்லை என்று ஒற்றை வார்த்தையில் கொ(சொ)ல்லாமல் அதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்தமுறை அதை மட்டும் சரிபண்ணிக்குங்க என்று சொல்லிப் பாருங்க....
அடுத்து அவர்கள் எதை சமைத்தாலும் சுவையோடு சமைக்க முயற்சி செய்வார்கள். ஆர்வமும், அக்கறையும் அதிகமாகி ஒவ்வொரு நாளும் வாழ்விலும் உணவிலும் சுவை கூடும்.
இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் இனியாவது முயற்சி செய்து பாருங்களேன்
இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா...?
உண்மையில் சமையல் என்பது எல்லா கலையிலும் சிறந்த கலை...
ஏன் இப்படி சொல்றேன்னா மற்ற கலைகள் அனைத்தும் நம் புலன்களுக்கு மட்டும் தான் விருந்து...
சமையல் கலை ஒன்று தான் நம் உடலுக்கும் உயிருக்கும் விருந்து...
அப்படிப்பட்ட சமையல் கலையை எல்லோராலும் சிறப்பாக செய்துவிட முடியாது.
ஒரு சிற்பியைப் போல பொறுமையும், ஒரு ஓவியனைப் போல கைவண்ணமும், பார்க்கும் பொருட்களையெல்லாம் ரசிக்கும் ஒரு குழந்தையைப் போல ரசிப்புத் தன்மையும் இருப்பவர்களால் மட்டுமே சமையற்கலையை சிறப்பாக செய்ய முடியும்...
அப்படிப்பட்ட கலையை நம் வீட்டுப் பெண்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தான் செய்கிறார்கள்...
ஆனால் நாம சாப்பிட்டுட்டு சின்னதா ஒரு வார்த்தை பாராட்டி சொன்னா கூட பெரிதா சந்தோசப் படுவாங்க...
ஏனெனில் எதிர்பார்க்காதபோது செய்யப்படும் செயல்கள் மனித மனங்களில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்...
அதற்காக சுவை குறைவா இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால் மூஞ்சியால் அடித்தாற்போல் நல்லாயில்லை என்று ஒற்றை வார்த்தையில் கொ(சொ)ல்லாமல் அதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்தமுறை அதை மட்டும் சரிபண்ணிக்குங்க என்று சொல்லிப் பாருங்க....
அடுத்து அவர்கள் எதை சமைத்தாலும் சுவையோடு சமைக்க முயற்சி செய்வார்கள். ஆர்வமும், அக்கறையும் அதிகமாகி ஒவ்வொரு நாளும் வாழ்விலும் உணவிலும் சுவை கூடும்.
இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் இனியாவது முயற்சி செய்து பாருங்களேன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|