வின்ஸ்டன் சர்ச்சில்
Mon Feb 16, 2015 11:25 pm
விடாமுயற்சி
சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார்.
வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அவர் ஆங்கிலம் கற்க எந்தளவுக்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சர்ச்சில் அவருக்கே உரித்தான உபகரணங்களுடன் மேடையில் ஏறினார். கைதட்டல் அரங்கைப் பிளந்தது. வாசிப்பு பலகை முன் வந்து நின்றார். அந்தப் பலகையில், அவர் எழுதி வந்திருக்கும் குறிப்பை வைப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தன் தொப்பியைக் கழற்றி மேலே வைத்தார். சுருட்டை ஆஷ் டிரேயில் போட்டார். கூட்டத்தினர் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது.
அதையெல்லாம் தாண்டி மிக உச்ச ஸ்தாயியில் “எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்”என்று சொல்லிவிட்டு, தொப்பியைத் தூக்கி தலையில் வைத்தார். ஊன்றுகோலைஎடுத்தார். மேடையில் இருந்து இறங்கி விட்டார். அரங்கமே அவரது அதிரடி பேச்சைக் கேட்டு அமைதியாகி விட்டது. அவர் வெளியேறும் வரை அப்படியே நின்றுகொண்டிருந்தது.
ஆம்…வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை நான்கே வார்த்தைகளில் உலகுக்கு அறிவித்து விட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலை வரலாற்றில் இந்த உரை தான் மிகச்சிறியது. ஆனால், உணர்ச்சிவேகம் கொண்டது, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பது போல..!
இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் இன்றும் வாழ்கிறது. தினமும் காலையில் எழுந்ததும், இந்த வார்த்தைகளைச் சொல்வோம். வாழ்வில் வெற்றியடைவோம். ஆம்… அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!
சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார்.
வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அவர் ஆங்கிலம் கற்க எந்தளவுக்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சர்ச்சில் அவருக்கே உரித்தான உபகரணங்களுடன் மேடையில் ஏறினார். கைதட்டல் அரங்கைப் பிளந்தது. வாசிப்பு பலகை முன் வந்து நின்றார். அந்தப் பலகையில், அவர் எழுதி வந்திருக்கும் குறிப்பை வைப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தன் தொப்பியைக் கழற்றி மேலே வைத்தார். சுருட்டை ஆஷ் டிரேயில் போட்டார். கூட்டத்தினர் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது.
அதையெல்லாம் தாண்டி மிக உச்ச ஸ்தாயியில் “எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்”என்று சொல்லிவிட்டு, தொப்பியைத் தூக்கி தலையில் வைத்தார். ஊன்றுகோலைஎடுத்தார். மேடையில் இருந்து இறங்கி விட்டார். அரங்கமே அவரது அதிரடி பேச்சைக் கேட்டு அமைதியாகி விட்டது. அவர் வெளியேறும் வரை அப்படியே நின்றுகொண்டிருந்தது.
ஆம்…வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை நான்கே வார்த்தைகளில் உலகுக்கு அறிவித்து விட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலை வரலாற்றில் இந்த உரை தான் மிகச்சிறியது. ஆனால், உணர்ச்சிவேகம் கொண்டது, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பது போல..!
இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் இன்றும் வாழ்கிறது. தினமும் காலையில் எழுந்ததும், இந்த வார்த்தைகளைச் சொல்வோம். வாழ்வில் வெற்றியடைவோம். ஆம்… அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!
Re: வின்ஸ்டன் சர்ச்சில்
Sat Mar 28, 2015 8:27 am
ஒரு பிரிட்டிஷ் செல்வந்தர், தன்குடும்பத்தோடு ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கே, ஒரு தோட்டத்தில் விளையாடப் போன அவருடைய ஏழு வயது மகன் ஏரியில் தவறி விழ, தொலைவிலிருந்து ஓடிவந்த ஓர் ஏழைச் சிறுவன், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பணக்காரப் பையனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
மறுநாள் அந்தச் சிறுவனைச் சந்தித்து நன்றி தெரிவிக்கப்போன அந்தச் செல்வந்தர், அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்தப் பையனின் எதிர்காலம் பற்றிக் கேட்க… என் அப்பாவைப் போல நானும் விவசாயி யாக வேண்டியதுதான் அய்யா! என்றான் அவன்.
படிக்க ஆசையில்லையா..? என்று இவர் கேட்க, ஆசைதான்! டாக்டராக வேண்டும் என்று ஆசை. வசதியில்லை! என்றான் சிறுவன். ஏன் டாக்டராக முடியாது..? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார் பணக்காரர். அதிலிருந்து, அவனுடைய கல்விச் செலவு அத்தனையும் ஏற்றுக்கொண்டார்.
வருடங்கள் கழிந்தன…
1943-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். வடஆப்பிரிக்காவில் தங்கியிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் (பிரிட்டிஷ் பிரதமர்) திடீரென நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பிழைப்பது அரிது என்றார்கள். பென்சிலின் என்று புது மருந்து ஒன்றை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். அது ஒன்றுதான் காப்பாற்றும் என்று யாரோ தகவல் சொல்ல, ஃப்ளெமிங்குக்கு அவசர அழைப்புபோனது. உடனே ஒரு சிறப்பு விமானத்தில் பறந்து வந்த ஃப்ளெமிங், பிரிட்டிஷ் பிரதமருக்கு சிகிச்சை தர…
உயிர்பிழைத்த சர்ச்சில், ஃப்ளெமிங்கைப் பார்த்து நன்றியுடன், இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்! என்று புன்னகைத்தார்.
சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல… புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..?
மற்றவர்களுக்கு உதவுவது என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம்.
(படித்துச் சுவைத்தது)
மறுநாள் அந்தச் சிறுவனைச் சந்தித்து நன்றி தெரிவிக்கப்போன அந்தச் செல்வந்தர், அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்தப் பையனின் எதிர்காலம் பற்றிக் கேட்க… என் அப்பாவைப் போல நானும் விவசாயி யாக வேண்டியதுதான் அய்யா! என்றான் அவன்.
படிக்க ஆசையில்லையா..? என்று இவர் கேட்க, ஆசைதான்! டாக்டராக வேண்டும் என்று ஆசை. வசதியில்லை! என்றான் சிறுவன். ஏன் டாக்டராக முடியாது..? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார் பணக்காரர். அதிலிருந்து, அவனுடைய கல்விச் செலவு அத்தனையும் ஏற்றுக்கொண்டார்.
வருடங்கள் கழிந்தன…
1943-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். வடஆப்பிரிக்காவில் தங்கியிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் (பிரிட்டிஷ் பிரதமர்) திடீரென நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பிழைப்பது அரிது என்றார்கள். பென்சிலின் என்று புது மருந்து ஒன்றை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். அது ஒன்றுதான் காப்பாற்றும் என்று யாரோ தகவல் சொல்ல, ஃப்ளெமிங்குக்கு அவசர அழைப்புபோனது. உடனே ஒரு சிறப்பு விமானத்தில் பறந்து வந்த ஃப்ளெமிங், பிரிட்டிஷ் பிரதமருக்கு சிகிச்சை தர…
உயிர்பிழைத்த சர்ச்சில், ஃப்ளெமிங்கைப் பார்த்து நன்றியுடன், இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்! என்று புன்னகைத்தார்.
சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல… புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..?
மற்றவர்களுக்கு உதவுவது என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம்.
(படித்துச் சுவைத்தது)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|