அன்பைக் கொட்டுறதுக்கு வழியில்லைனா...
Sat Jan 24, 2015 6:07 am
சிலநேரங்கள்ல
ஆடு மேய்ச்சலுக்குக்கிளம்பிப்போறநேரத்துல
அதோடகுட்டிங்க என்னாசெய்யும்னா,
அந்த ஆட்டை குறுக்கப்போயிமறிச்சி பால்குடிக்கப்பார்க்கும்.
ஆனா ஆடு அதையெல்லாங்கண்டுக்கிடாம
அதுபாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கும்.
ஏன்னா,
சிலநேரங்கள்ல பாலேயிருக்காது.
அந்தக்குட்டிங்க
பாவமா அந்ந ஆடு போறவரைக்கும் பார்த்துக்கிட்டேநிக்குங்க.
வெளியிலேருந்துபார்க்குற நமக்குக்கூட அந்த ஆட்டுமேலகோவமும் அந்தக்குட்டிங்கமேல இரக்கமும் வரும்.
ஆனா,
மேய்ஞ்சிட்டுவந்ததுமே
அந்த ஆடு என்னாசெய்யுந்தெரியுமா..?
பே..பே..னு கத்திக்கிட்டே அந்தக்குட்டிங்களைத்தேடும்.
அந்தக்குட்டிங்களும் கத்திக்கிட்டே ஓடியாந்து மொச்மொச்னு பால்குடிக்கும்.
அப்போ அந்தக்குட்டிங்களுக்கு அதுங்களோட அம்மா பால்கொடுக்காமபோனதெல்லாம்
நெனப்பிருக்காது.
ஆட்டோட பால்மடிதான் நெனப்பிருக்கும்.
அதுபோலத்தான் சிலநேரங்கள்ல மனிதர்களும்.
ஏதோவொருகோவத்துல உங்களை உதாசீனப்படுத்தினாலும்
அந்தக்கோவந்தெளிஞ்சிவர்றப்போ
நீங்க ஒரேயடியா மூஞ்சைத்திருப்பிக்கிட்டுநிக்காதீங்க.
ஏன்னா,
ஆட்டுக்கு பால்வெளியேறவழியில்லாம மடிகட்டிக்கிட்டா
மடி செமையாவலிக்கும்.
அதுபோல மனுஷனுக்கு அன்பைக்கொட்டுறதுக்குவழியில்லைனா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனசுவெடிச்சிடும்.
- ஃபீனிக்ஸ் பாலா
ஆடு மேய்ச்சலுக்குக்கிளம்பிப்போறநேரத்துல
அதோடகுட்டிங்க என்னாசெய்யும்னா,
அந்த ஆட்டை குறுக்கப்போயிமறிச்சி பால்குடிக்கப்பார்க்கும்.
ஆனா ஆடு அதையெல்லாங்கண்டுக்கிடாம
அதுபாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கும்.
ஏன்னா,
சிலநேரங்கள்ல பாலேயிருக்காது.
அந்தக்குட்டிங்க
பாவமா அந்ந ஆடு போறவரைக்கும் பார்த்துக்கிட்டேநிக்குங்க.
வெளியிலேருந்துபார்க்குற நமக்குக்கூட அந்த ஆட்டுமேலகோவமும் அந்தக்குட்டிங்கமேல இரக்கமும் வரும்.
ஆனா,
மேய்ஞ்சிட்டுவந்ததுமே
அந்த ஆடு என்னாசெய்யுந்தெரியுமா..?
பே..பே..னு கத்திக்கிட்டே அந்தக்குட்டிங்களைத்தேடும்.
அந்தக்குட்டிங்களும் கத்திக்கிட்டே ஓடியாந்து மொச்மொச்னு பால்குடிக்கும்.
அப்போ அந்தக்குட்டிங்களுக்கு அதுங்களோட அம்மா பால்கொடுக்காமபோனதெல்லாம்
நெனப்பிருக்காது.
ஆட்டோட பால்மடிதான் நெனப்பிருக்கும்.
அதுபோலத்தான் சிலநேரங்கள்ல மனிதர்களும்.
ஏதோவொருகோவத்துல உங்களை உதாசீனப்படுத்தினாலும்
அந்தக்கோவந்தெளிஞ்சிவர்றப்போ
நீங்க ஒரேயடியா மூஞ்சைத்திருப்பிக்கிட்டுநிக்காதீங்க.
ஏன்னா,
ஆட்டுக்கு பால்வெளியேறவழியில்லாம மடிகட்டிக்கிட்டா
மடி செமையாவலிக்கும்.
அதுபோல மனுஷனுக்கு அன்பைக்கொட்டுறதுக்குவழியில்லைனா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனசுவெடிச்சிடும்.
- ஃபீனிக்ஸ் பாலா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|