"தோல்வியை-அவமானத்தை கையாள்வது எப்படி? "
Sat Dec 13, 2014 8:10 am
இங்கிலாந்தில் இருந்த பொழுது நடந்த சம்பவம்.
அன்றும் அலுவலகம் முடிந்து வழக்கம் போல் திரும்பிக் கொண்டிருந்தேன். நகரத்தின் மையப்பகுதியில்-சாலையின் ஓரத்தில் இரு மருங்கிலும் பள்ளிக் குழந்தைகள் நின்று கொண்டு, அச்சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்துக் கொண்டிருந்தனர்.அதாவது சிறு வயதில் ரயில் நம்மைக் கடந்து செல்லும் போது கையசைப்போமே அந்த மாதிரி.
அங்கு நடப்பவற்றை,அக்குழந்தைகளின் ஆசிரியர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாகப் பள்ளிக் குழந்தைகள் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு நான் பார்த்ததில்லை.இதில் ஏதோ ஒரு விசயம் உள்ளது என்றெண்ணி, அந்த ஆசிரியரிடம் சென்று கேட்டேன்.அவர் விவரித்த காரணம் உள்ளபடியே "அட" போட வைத்தது.
"இதுவா,இதன் பெயர் "தோல்வியை-அவமானத்தை கையாள்வது எப்படி? " என்ற செய்முறை வகுப்பு.இதில் குழந்தைகளுக்கு,அவமானத்தை, தோல்வியை எதிர்கொள்வது எப்படி,கையாள்வது எப்படி என்று செய்முறை விளக்கமாக கற்றுக் கொடுப்போம்.
அதன் முதல் படியாகவே இந்த வாகனங்களை நோக்கி கையசைத்தல்.எத்தனை பேர் திரும்பக் கையசைக்கிறார்களோ-அது வெற்றி.அது தேவையில்லை. கண்டும் காணாமல் செல்பவர்கள்,தருவது தோல்வி,அவமானம்.ஒருவர் அவ்வாறு சென்றால்-மனமுடையாது அடுத்து வருபவரை நோக்கி கையசைக்க வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாகச் செய்யச் செய்ய-வாய்ப்புகள் என்பது ஒரு முறை வருவதல்ல,ஒன்று போனால் மற்றொன்று கன்டிப்பாக வரும்,நாம் முயற்சியை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது, என்பது குழந்தைகளுக்குத் தானாகவே புரிந்து விடும். அதற்காகவே இந்த செய்முறைப் பயிற்சி. இது அவர்கள் வளர வளர பல்வேறு தோல்வி, அவமானச் சூழ்நிலைகளை திறமையாகக் கையாளப் பயன்படும்" என்றார் உற்சாகமாக!!!
- துரை மோகன்
அன்றும் அலுவலகம் முடிந்து வழக்கம் போல் திரும்பிக் கொண்டிருந்தேன். நகரத்தின் மையப்பகுதியில்-சாலையின் ஓரத்தில் இரு மருங்கிலும் பள்ளிக் குழந்தைகள் நின்று கொண்டு, அச்சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்துக் கொண்டிருந்தனர்.அதாவது சிறு வயதில் ரயில் நம்மைக் கடந்து செல்லும் போது கையசைப்போமே அந்த மாதிரி.
அங்கு நடப்பவற்றை,அக்குழந்தைகளின் ஆசிரியர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாகப் பள்ளிக் குழந்தைகள் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு நான் பார்த்ததில்லை.இதில் ஏதோ ஒரு விசயம் உள்ளது என்றெண்ணி, அந்த ஆசிரியரிடம் சென்று கேட்டேன்.அவர் விவரித்த காரணம் உள்ளபடியே "அட" போட வைத்தது.
"இதுவா,இதன் பெயர் "தோல்வியை-அவமானத்தை கையாள்வது எப்படி? " என்ற செய்முறை வகுப்பு.இதில் குழந்தைகளுக்கு,அவமானத்தை, தோல்வியை எதிர்கொள்வது எப்படி,கையாள்வது எப்படி என்று செய்முறை விளக்கமாக கற்றுக் கொடுப்போம்.
அதன் முதல் படியாகவே இந்த வாகனங்களை நோக்கி கையசைத்தல்.எத்தனை பேர் திரும்பக் கையசைக்கிறார்களோ-அது வெற்றி.அது தேவையில்லை. கண்டும் காணாமல் செல்பவர்கள்,தருவது தோல்வி,அவமானம்.ஒருவர் அவ்வாறு சென்றால்-மனமுடையாது அடுத்து வருபவரை நோக்கி கையசைக்க வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாகச் செய்யச் செய்ய-வாய்ப்புகள் என்பது ஒரு முறை வருவதல்ல,ஒன்று போனால் மற்றொன்று கன்டிப்பாக வரும்,நாம் முயற்சியை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது, என்பது குழந்தைகளுக்குத் தானாகவே புரிந்து விடும். அதற்காகவே இந்த செய்முறைப் பயிற்சி. இது அவர்கள் வளர வளர பல்வேறு தோல்வி, அவமானச் சூழ்நிலைகளை திறமையாகக் கையாளப் பயன்படும்" என்றார் உற்சாகமாக!!!
- துரை மோகன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|