தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் செல்லாது Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் செல்லாது Empty கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் செல்லாது

Tue Nov 25, 2014 11:50 am
சென்னை, 

கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செல்லாது என்று சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து தினத்தந்தி நிருபரிடம், சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் கூறியதாவது:–

‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’கள் 

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ‘பாஸ்போர்ட்’களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்படுகிறது.

பின்னர் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கலாம். ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 10 முதல் 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது.

காலஅவகாசம் 


விசா விண்ணப்பிக்கும் போது குறைந்த பட்சம் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம் 6 மாதங்களாவது இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கும் காலம் குறுகிய காலமாக இருந்தால் விசா வந்தும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படும் என்பதால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

கையால் எழுதப்பட்டவை 


கடந்த 1995, 1996–ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில ‘பாஸ்போர்ட்’கள் புதுப்பிக்க 20 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ‘பாஸ்போர்ட்’களும் 2015–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு செல்லாததாகும். எனவே இந்த இரண்டு வகை பாஸ்போர்டுகளையும் மாற்றித்தர வெளிவிவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’களை பெற்றுக்கொண்டு புதிதாக கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்டும், 20 ஆண்டுகள் புதுப்பிக்கும் காலஅவகாசத்தை மாற்றி 10 ஆண்டுகளாக குறைத்தும் புதிய ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதுபோன்ற ‘பாஸ்போர்ட்’களை வைத்திருப்பவர்கள் கடைசி நேர கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக உடனடியாக மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்துக்கு சென்றோ அல்லது ஆன்–லைனிலோ தங்கள் ‘பாஸ்போர்ட்’களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்காலிக முகவரியில் 


நிரந்தர முகவரியில் வசிக்காமல், தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள் நிரந்தர முகவரியில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது நிரந்தர முகவரியில் போலீஸ் விசாரணை செய்யும் போது விண்ணப்பதாரர் அங்கு இல்லாததால் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள், தற்காலிக முகவரியில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் பெறுவதுடன், அபராதம் கட்டுவதையும் தவிர்க்கலாம்.

பாஸ்போர்ட் சேவா மையம் 


சென்னையில் உள்ள மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்தின் கீழ் சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய 5 இடங்களிலும் ‘பாஸ்போர்ட்’ சேவா மையம் செயல்படுகிறது. இதில் புதுச்சேரியில் உள்ள மையம் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பம் வசூலிக்கும் மையமாக செயல்படுகிறது. இதனை விரைவில் மினி ‘பாஸ்போர்ட்’ சேவா மையமாக மாற்றுவதற்காக புதுச்சேரி அரசுடன் பேசி வருகிறோம். அத்துடன் நிலுவையில் உள்ள ‘பாஸ்போர்ட்’களை உடனுக்குடன் வழங்குவதற்காக குறைதீர்வு அமைப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 சேவா மையங்களிலும் நடத்தப்பட்ட முகாமில் 1,600 முதல் 1,700 விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. அதேபோல் புதுச்சேரியல் நடத்தப்பட்ட ‘பாஸ்போர்ட்’ முகாமில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 262 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து கடலூரில் நடந்த முகாமில் 325 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 20 விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ‘பாஸ்போர்ட்’ வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

29–ந்தேதி சிறப்பு முகாம் 


சென்னையில் உள்ள அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய 3 ‘பாஸ்போர்ட்’ சேவை மையங்களில் வரும் 29–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் 60 வயதுக்கு மேலான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும். விடுமுறை நாளில் நடத்தப்படும் இந்த முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடனும், சிறுவர்கள் பெற்றோருடனும் கலந்து கொள்ளலாம். இவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

முகாமுக்கு வருபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை பதிவு செய்துவிட்டு, இணையதளத்திலிருந்து பெறப்பட்ட நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். வரும் போது உண்மை ஆவணங்கள் மற்றும் நகல்களையும் எடுத்து வரவேண்டும். முகாம் நாளில் சாதாரண வகை விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாறாக ‘தட்கல்’ முறை விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி: தினத்தந்தி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum