வரவும் செலவும்
Sat Feb 08, 2014 11:56 am
மன்னர் ஒருநாள் நகர்வலம் வந்த போது ஒரு ஏழை குடியானவனை கண்டு அவனை நலம் விசாரித்தார்.
'' உனக்கு போதுமான வருமானம் வருகிறதா ?''
"ஓ .. வருகிறதே "
'' எவ்வளவு ?''
'' நாலணா ''
'' நாலணா உனக்கு போதுமா ?'' ''
"போதுமாவா?....அந்த நாலணாவில் தான் சாப்பிடுகிறேன் சேமிக்கிறேன். பழைய கடன் அடைக்கிறேன் தர்மமும் பண்ணுகிறேன் '' என்று சந்தோஷமாக கூறினான் அவன் !
''அட அப்படியா ?'' ஆச்சரியத்துடன் கேட்டார் மன்னர்.
பதிலுக்கு அந்த குடியானவன் , '' ஆம் ...நீங்கள் வேண்டுமானால் என் வீட்டுக்கு வந்து பாருங்கள் !'' என்று சொல்ல, அவனை பின்தொடர்ந்தார் மன்னர்.
வீட்டை அடைந்த குடியானவன் , தன்னிடம் இருந்த நாலணாவை தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அதில் அரிசி வாங்கி வந்து கூழ் காய்ச்சி வீட்டிலிருந்த எட்டு பேருக்கும் கொடுத்தாள்
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மன்னரிடம் விளக்க ஆரம்பித்தான் அந்த குடியானவன்.
அருகேயிருந்த தன் தாய் ,தந்தையரை காட்டி , '' இதோ இவர்கள் என் பெற்றோர்கள் ! சின்ன வயதில் எனக்கு உணவிட்டதால் இவர்களுக்கு நான் கடன் பட்டேன் ! அவர்களுக்கு உணவிடுவதன் மூலம் அந்த கடனை இப்போது அடைக்கிறேன் ''
பின் தன் இரு மகன்களை காட்டி '' இதோ , இவர்களுக்கு நான் அளிக்கும் உணவு சேமிப்பு ! ஆம் எனக்கு வயதான பின் உணவிடுவதன் மூலம் இந்த சேமிப்பை திருப்பி தருவார்கள் ''
பின் அங்கே நின்றிருந்த கணவனை இழந்த தன் சகோதரியையும் , அவளின் மகனையும் காட்டி , '' இதோ ..இவர்களுக்கு இடும் உணவு தான் என்னால் முடிந்த தர்மம் ''
வெகு இயல்பாக கூறிய அந்த குடியானவனை பெருமிதத்துடனும் , வியப்புடனும் நோக்கினார் மன்னர்.
'எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எப்படி நியாயமாக செலவழிக்கிறோம் என்கிற உணர்வே முக்கியம் ' என்கிற உயர்ந்த தத்துவத்தை கற்று கொண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார் மன்னர்
நன்றி: கருபுடிச்சேரி கொபெருதேவி
'' உனக்கு போதுமான வருமானம் வருகிறதா ?''
"ஓ .. வருகிறதே "
'' எவ்வளவு ?''
'' நாலணா ''
'' நாலணா உனக்கு போதுமா ?'' ''
"போதுமாவா?....அந்த நாலணாவில் தான் சாப்பிடுகிறேன் சேமிக்கிறேன். பழைய கடன் அடைக்கிறேன் தர்மமும் பண்ணுகிறேன் '' என்று சந்தோஷமாக கூறினான் அவன் !
''அட அப்படியா ?'' ஆச்சரியத்துடன் கேட்டார் மன்னர்.
பதிலுக்கு அந்த குடியானவன் , '' ஆம் ...நீங்கள் வேண்டுமானால் என் வீட்டுக்கு வந்து பாருங்கள் !'' என்று சொல்ல, அவனை பின்தொடர்ந்தார் மன்னர்.
வீட்டை அடைந்த குடியானவன் , தன்னிடம் இருந்த நாலணாவை தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அதில் அரிசி வாங்கி வந்து கூழ் காய்ச்சி வீட்டிலிருந்த எட்டு பேருக்கும் கொடுத்தாள்
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மன்னரிடம் விளக்க ஆரம்பித்தான் அந்த குடியானவன்.
அருகேயிருந்த தன் தாய் ,தந்தையரை காட்டி , '' இதோ இவர்கள் என் பெற்றோர்கள் ! சின்ன வயதில் எனக்கு உணவிட்டதால் இவர்களுக்கு நான் கடன் பட்டேன் ! அவர்களுக்கு உணவிடுவதன் மூலம் அந்த கடனை இப்போது அடைக்கிறேன் ''
பின் தன் இரு மகன்களை காட்டி '' இதோ , இவர்களுக்கு நான் அளிக்கும் உணவு சேமிப்பு ! ஆம் எனக்கு வயதான பின் உணவிடுவதன் மூலம் இந்த சேமிப்பை திருப்பி தருவார்கள் ''
பின் அங்கே நின்றிருந்த கணவனை இழந்த தன் சகோதரியையும் , அவளின் மகனையும் காட்டி , '' இதோ ..இவர்களுக்கு இடும் உணவு தான் என்னால் முடிந்த தர்மம் ''
வெகு இயல்பாக கூறிய அந்த குடியானவனை பெருமிதத்துடனும் , வியப்புடனும் நோக்கினார் மன்னர்.
'எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எப்படி நியாயமாக செலவழிக்கிறோம் என்கிற உணர்வே முக்கியம் ' என்கிற உயர்ந்த தத்துவத்தை கற்று கொண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார் மன்னர்
நன்றி: கருபுடிச்சேரி கொபெருதேவி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|