சபை என்றால் என்ன?
Fri Aug 02, 2013 11:10 pm
*** சபை என்றால் என்ன? ***
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும் (1 கொரி 1:2)
இதில் பரிசுத்தவான்கள் என்பதை பன்மையிலும்,
கொரிந்து பட்டணம் என்பதை ஒருமையிலும்
பவுவுலடியார் வகைப் படுத்துகிறார்.
ஆகவே, கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் தங்கள் தேசங்களிலே, ஊர்களிலே ஏகமனதொடும், ஏகசிந்தையோடும் கூடி வருவது சபையாகும்.
இவ்வாறு சபையாக தேவஜனம் கூடும் இடம் வசதிக்கேற்ப, எண்ணிக்கைக்கேற்ப கல், மண், மரம் ஆகிய கட்டிடத்திற்குள் நடைபெறுகிறது.
கணவன், மனைவி, மக்கள் ஆகியோரையே குடும்பம் என்கிறோம். ஆனாலும் இவர்கள் அந்நியோனியமாக பழகவும், உறவில் வளரவும், அன்பை பகிரவும், வீடு எனும் கட்டிடம் இன்றியமையாகிறது.
பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்,
பரிசுத்த தேவனை ஆராதிக்கவும்,
பரிசுத்த வேதத்தின் வார்த்தையை போதிக்கவும், கற்கவும்,
பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பகிரவும்,
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவும்,
பரிசுத்த தேவனுக்கேற்ற பரிசுத்தத்தை அடையவும் கூடி வருகிறார்கள்.
இதையே தேவனுடைய சபை என்கிறோம். இந்த சபைக்கு கிறிஸ்துவே தலையாக இருப்பதால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என வேதம் கற்பிக்கிறது.
ஆகவே, பரிசுத்த தேவனுடைய சபைக்கு எதிராக எறியப்படும் எந்தவொரு கல்லும், கிறிஸ்துவின் சரீரத்தை நோக்கியது என்பதை உணர்ந்து பயபக்தியோடு நடக்க தீர்மானிப்போம்!
மற்றபடி கிறிஸ்துவின் சரீரமாகிய
சபைக்கு எதிராக எழுதுவோர், பேசுவோர், செய்து கொண்டிருப்பது
அடிமட்ட காட்டுமிராண்டித்தனம்.
நன்றி: கதம்பம்
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும் (1 கொரி 1:2)
இதில் பரிசுத்தவான்கள் என்பதை பன்மையிலும்,
கொரிந்து பட்டணம் என்பதை ஒருமையிலும்
பவுவுலடியார் வகைப் படுத்துகிறார்.
ஆகவே, கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் தங்கள் தேசங்களிலே, ஊர்களிலே ஏகமனதொடும், ஏகசிந்தையோடும் கூடி வருவது சபையாகும்.
இவ்வாறு சபையாக தேவஜனம் கூடும் இடம் வசதிக்கேற்ப, எண்ணிக்கைக்கேற்ப கல், மண், மரம் ஆகிய கட்டிடத்திற்குள் நடைபெறுகிறது.
கணவன், மனைவி, மக்கள் ஆகியோரையே குடும்பம் என்கிறோம். ஆனாலும் இவர்கள் அந்நியோனியமாக பழகவும், உறவில் வளரவும், அன்பை பகிரவும், வீடு எனும் கட்டிடம் இன்றியமையாகிறது.
பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்,
பரிசுத்த தேவனை ஆராதிக்கவும்,
பரிசுத்த வேதத்தின் வார்த்தையை போதிக்கவும், கற்கவும்,
பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பகிரவும்,
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவும்,
பரிசுத்த தேவனுக்கேற்ற பரிசுத்தத்தை அடையவும் கூடி வருகிறார்கள்.
இதையே தேவனுடைய சபை என்கிறோம். இந்த சபைக்கு கிறிஸ்துவே தலையாக இருப்பதால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என வேதம் கற்பிக்கிறது.
ஆகவே, பரிசுத்த தேவனுடைய சபைக்கு எதிராக எறியப்படும் எந்தவொரு கல்லும், கிறிஸ்துவின் சரீரத்தை நோக்கியது என்பதை உணர்ந்து பயபக்தியோடு நடக்க தீர்மானிப்போம்!
மற்றபடி கிறிஸ்துவின் சரீரமாகிய
சபைக்கு எதிராக எழுதுவோர், பேசுவோர், செய்து கொண்டிருப்பது
அடிமட்ட காட்டுமிராண்டித்தனம்.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|