ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் - 1
Wed Jan 16, 2013 9:26 am
அமெரிக்க தேவ ஆலய ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. ஜெபத்தோடு ஆலய
ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர்
கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில்
அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில்
அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின்
நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
.
இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக
பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர்
சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று
எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார்,
'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக
இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று
எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார்
. பிரசங்கத்தை கேட்ட
ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம்
கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை
சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ
ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய்
வழிநடத்தப்பட்டார்.
கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன்.
(1 இராஜாக்கள் 22:14)
நன்றி: முகநூல்
ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர்
கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில்
அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில்
அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின்
நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
.
இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக
பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர்
சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று
எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார்,
'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக
இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று
எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார்
. பிரசங்கத்தை கேட்ட
ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம்
கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை
சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ
ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய்
வழிநடத்தப்பட்டார்.
கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன்.
(1 இராஜாக்கள் 22:14)
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|