மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்: பிரான்ஸ் அரசு அதிரடி
Sat Jul 06, 2013 8:16 am
இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது.
இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
மேலும் இங்கிலாந்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது, விசா பெற ஆங்கில தேர்வு எழுத வேண்டும் என்று பல விதிகளை அறிவித்தது.
இந்நிலையில் மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்தி பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் தூதர் பிரங்காய்ஸ் ரெய்ச்சர் கூறுகையில், ஒவ்வொரு நாடும் அவர்களுக்குரிய விசா கொள்கைகளை கடைபிடிக்கின்றனர்.
இதில் எந்த நாட்டுக்கும் எவ்வித போட்டியும் கிடையாது.
தற்போதைய நடைமுறைப்படி, இங்கு உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளையும் செய்து தர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்துள்ளார்.
நன்றி: லங்கா வேர்ல்டு
இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
மேலும் இங்கிலாந்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது, விசா பெற ஆங்கில தேர்வு எழுத வேண்டும் என்று பல விதிகளை அறிவித்தது.
இந்நிலையில் மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்தி பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் தூதர் பிரங்காய்ஸ் ரெய்ச்சர் கூறுகையில், ஒவ்வொரு நாடும் அவர்களுக்குரிய விசா கொள்கைகளை கடைபிடிக்கின்றனர்.
இதில் எந்த நாட்டுக்கும் எவ்வித போட்டியும் கிடையாது.
தற்போதைய நடைமுறைப்படி, இங்கு உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளையும் செய்து தர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்துள்ளார்.
நன்றி: லங்கா வேர்ல்டு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|