தேவபிதா எந்தன் மேய்ப்பன்
Thu May 02, 2013 4:40 pm
தேவபிதா எந்தன் மேய்ப்பன்
இந்த பாடலை இயற்றியவர் நெய்யூரை சார்ந்த யோசேப்பு என்பவர். இவர் தன் சிறுவயதிலேயே தன் தாய் தந்தையரையும், உடன் பிறந்தோரையும் இழந்து அனாதையானார். தன் குடும்பத்தை இழந்து தனிமையின் துன்பத்தில் வாழ்ந்த இவர் தனக்கு ஆதரவாக கர்த்தரை ஏற்று கொண்டார். அது முதல் கர்த்தரை தன் சொந்த தந்தையாக நினைத்து, தனக்கு ஓர் உறவு இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார். இவர் இயற்றியை இந்த பாடலை படித்து பார்த்தால் இவர் கர்த்தரை எவ்வளவு நேசித்துள்ளார் என்பது புரியும்.
இந்த பாடல் பைபிளில் உள்ள 23ஆம் சங்கீதத்தை கருவாக கொண்டிருக்கிறது. தாவீது 23ஆம் சங்கீதத்தில் 'கர்த்தர் என் மேய்ப்பர்' என்று பாடியிருப்பார். ஆனால் நெய்யூர் யோசேப்பு 'கர்த்தர்' என்பதற்கு பதிலாக 'தேவபிதா' என்று கர்த்தரை உரிமையோடு தந்தையாக அழைத்து பாடியிருக்கிறார். இந்த பாடல் ஓர் தலைசிறந்த, பழமையான, எழில் கொஞ்சும் கிறிஸ்தவ கீர்த்தனையாக அமைந்துள்ளது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஓர் அழகிய பாடல்.
இங்கிலாந்தில் இருந்து இயேசுநாதரின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர் ஜெசிமன் என்ற ஆங்கிலேயர். இவர் பச்சைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இயேசுவை பற்றி அறிவித்து வந்தார். மொழி தனக்கு இடராக இருப்பதை அறிந்த இவர், தமிழை கற்றார். தமிழை அறிந்த பின் இவருக்கு நெய்யூர் யோசேப்பு இயற்றிய 'தேவபிதா' பாடல் மிகவும் பிடித்துவிட்டது. வெளிநாட்டவரையும் கவர்ந்திழுத்தது தான் இந்த பாடல். கொல்லிமலை பகுதியில் சுவிசேசத்தை அறிவித்து வந்த ஜெசிமன் ஒரு முறை ஜுரம் கண்டு மறைந்தார். அந்த பகுதியிலேயே அவரை அடக்கம் செய்தனர். அடக்க நிகழ்வின் போது, கொல்லிமலை பழங்குடி மக்கள் அவருக்கு பிடித்த 'தேவபிதா எந்தன் மேய்ப்பன்' என்ற இந்த பாடலையே கண்ணீர் மல்க பாடினர்.
இந்த பாடலில் நெய்யூர் யோசேப்பு தன்னை இயேசுவின் மந்தையின் கீழுள்ள ஒரு ஆடாக பாவித்து பாடியுள்ளார். திரியேகரை சொந்த தந்தையை போல அழைத்து அழகாக பாடியுள்ளார். நல்ல மேய்ப்பன் வலைதடியாலும் கோலாலும் தன்னை அதட்டி நேர்த்தியான பாதையில் சுகமாய் நடத்தி செல்வதாகவும், பசும் புல்வெளிகளும், அமர்ந்த தண்ணீரும் உள்ள இடங்களுக்கு தன்னை அழைத்து சென்று மேய்ப்பதாக பாடுகிறார். இருள் நிறைந்த இடங்களில், பள்ளங்களில் செல்லும் போது, 'நல்ல மேய்ப்பன்' உடன் இருப்பதால் பயப்படமாட்டேன் என்கிறார். பகைவர்களான ஓநாய்களிடம் இருந்து தன்னை காத்து கொள்கிறார் என்றும், இறுதிவரை அவரது மந்தையிலேயே நிலைத்திருப்பேன் என்றும் பாடுகிறார்.
பாடல் வரிகள்...
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்!
ஆத்துமந்தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
சாநிழல் பள்ளத்திரங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வலைதடியும் கோலுமே தேற்றும்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
பகைவற்கெதிரே ஒரு பந்தி
பாங்காய் என்கென்றேற்படுத்தி
சுக தயிலம் கொண்டென் தலையை
சுபமாய் அபிஷேகம் செய்குவார்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
இந்த பாடலை செய்ய தரவிறக்கம் செய்ய - இங்கே கிளிக் செய்க - DEVAPITHA ENTHAN MEIPPANALLO.MP3
நன்றி: இவர் யார்?
Re: தேவபிதா எந்தன் மேய்ப்பன்
Tue Sep 13, 2016 7:12 am
தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்
1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
...................................
தென்னிந்தியச் திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல மிஷனரிப் பணித்தளமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலை விளங்குகிறது. இப்பணித்தளத்தின் ஊழிய தரிசனத்தை முதலாவது பெற்றவர், “கொல்லிமலை மிஷனரி” என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார். இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையும், வேலூர் சி.எம்.சி ( C.M.C) மருத்துவ மனையின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் பால் பிராண்டின் தந்தையாவார்.
தமிழைக் கற்று, கொல்லிமலை ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில் உள்ள “தேவபிதா” என்ற இப்பாடலே. தனது 43- வது வயதிலேயே, அவர் கொல்லி மலையின் விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், அம்மலை மக்கள் பாடினார்கள்.
இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக, இப்பாடல் விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், மிகச் சிறந்ததாக இப்பாடல் கணிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார்.
தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார். இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு, “தேவபிதா” என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.
இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம் சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும், திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில், தேவ அருளைப் பெற வேண்டிப் பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கிநிற்கும் வேளைகளிலும், அருமையானவர்களை இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி நிறைந்ததாக விளங்குகிறது.
எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப் பாடலாகத் தனிச்சிறப்புப் பெற்றிருக்கிறது.
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்
1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
...................................
தென்னிந்தியச் திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல மிஷனரிப் பணித்தளமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலை விளங்குகிறது. இப்பணித்தளத்தின் ஊழிய தரிசனத்தை முதலாவது பெற்றவர், “கொல்லிமலை மிஷனரி” என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார். இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையும், வேலூர் சி.எம்.சி ( C.M.C) மருத்துவ மனையின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் பால் பிராண்டின் தந்தையாவார்.
தமிழைக் கற்று, கொல்லிமலை ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில் உள்ள “தேவபிதா” என்ற இப்பாடலே. தனது 43- வது வயதிலேயே, அவர் கொல்லி மலையின் விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், அம்மலை மக்கள் பாடினார்கள்.
இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக, இப்பாடல் விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், மிகச் சிறந்ததாக இப்பாடல் கணிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார்.
தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார். இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு, “தேவபிதா” என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.
இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம் சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும், திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில், தேவ அருளைப் பெற வேண்டிப் பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கிநிற்கும் வேளைகளிலும், அருமையானவர்களை இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி நிறைந்ததாக விளங்குகிறது.
எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப் பாடலாகத் தனிச்சிறப்புப் பெற்றிருக்கிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|