மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?
Tue Nov 21, 2017 9:44 pm
ஆண்டவரே மரியாளின் வயிற்றில் பிறக்கிறார் என்றால் அந்த மரியாள் எவ்வளவு மேலானவர்.
மரியாள் தான் உலகத்திலேயே மிகவும் பாக்கியமுள்ளவர்.
ஆண்டவருக்கே அம்மாவாக மாறிவிட்டதால் மிகவும் பாக்கியமுள்ளவர்.
இப்படி இயேசு பிறந்ததினால்
மரியாள் புனிதமாக மாறிவிட்டார்
மரியாள் சாதாரண பெண்ணே அல்ல
அப்படி ஒரு பாக்கியம் எவருக்கும் கிடைக்கபோவதில்லை
அப்படி இப்படி என்று கத்தோலிக்கம்
மரியாளை உயர்த்தி பேசுகிறது.
இப்படி தான் அந்த நாளிலே ஒரு பெண் நினைத்துகொண்டு அதை இயேசுவிடமே கேட்டுவிட்டார்.
அதற்கு இயேசு நீ சொன்னது மிகவும் சரி
மரியாளே மிகசிறந்த பெண் அவரை தினமும் போற்றுங்கள்,வாழ்த்துங்கள்,
தூக்கிவைத்து கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை..!!
சொல்லவில்லை..!!
சொல்லவில்லை..!!
என்னசொன்னார் தெரியுமா?
மரியாள் என்னை பெற்றெடுத்த பாக்கியத்தை விட மிகவும் பாக்கியவான்கள்....
"தேவனுடைய வார்த்தையின்படி நடப்பவர்களே" என்று கூறினார்.
ஆண்டவரை வயிற்றில் சுமந்த மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?
இன்றே தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதன்படி நடக்க ஆரம்பிங்கள்.
Re: மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?
Tue Nov 21, 2017 9:44 pm
பிரியாணி நன்றாக இருந்தால் பிரியாணியை பார்த்து பாராட்டுவீர்களா..?
பிரியாணி செய்தவரை பாராட்டுவீர்களா..?
பைக் ரேசில் ஒருவர் வெற்றிபெற்றால் வெற்றிபெற்றவருக்கு மாலை போடுவீர்களா..?
பைக்குக்கு மாலை போடுவீர்களா..?
வீடு அழகாக இந்தால்
வீட்டை பாராட்டுவீர்களா..?
அந்த வீட்டை கட்டியவரை பாராட்டுவீர்களா..?
தான் படைத்த பெண்ணுடைய வயிற்றில் வந்து பிறந்த ஆண்டவரை போற்றுவீர்களா?
அந்த பெண்ணை போற்றுவீர்களா..?
படைத்தவரை மட்டும் வணங்கு படைக்கபட்டவர்களை வணங்காதே
எல்லோரையும் உண்டாக்கினவரை
போற்றுங்கள்,
வணங்குங்கள்,
வாழ்த்துக்கள்
அதுவே சரியானது
ஆண்டவரை வணங்குவது தவறு என்று உங்களில் எவனாவது சொல்லமுடியுமா..??
Re: மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?
Tue Nov 21, 2017 9:45 pm
கத்தோலிக்க சகோதரா...!!
இயேசு உயிரோடு இருக்கிறார்...!!
இயேசு சொல்கிறார்:-
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் #உயிரோடிருக்கிறேன், என்று
வெளிப்படுத்தின விசேஷம் 1:18
இந்திய சட்டம் சொல்கிறது:-
உயிரோடு உள்ளவர்களின் படத்தை பேனரில் போடகூடாது என்று
கிருஸ்தவ சட்டம் சொல்கிறது:-
உயிரோடு உள்ள இயேசுவின் படத்தையோ,உருவத்தையோ வைக்ககூடாது என்று
விவிலியத்தை அறியாத அரசாங்கம் கடைபிடிப்பதை கூட விவிலியத்தை அறிந்திருக்கிறவர்களாகிய நீங்கள் கடைபிடிப்பதில்லையே ஏன்..??
சிந்திப்பாயா.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|