கோவை புகழ் ஆனந்தாஸ் வெஜிடபிள் குருமா
Fri Oct 14, 2016 8:57 am
கோவை புகழ் ஆனந்தாஸ் வெஜிடபிள் குருமா
இதன் சுவை அலாதியானது. செய்து ருசித்து விட்டு எனக்கு கமன்ட்ஸ் பண்ணுங்கள்.
நமது நண்பர்கள் சில பேருக்கு தேங்காய் அரவே பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேங்காய் பதில் பொட்டுகடலை சேர்த்து கொள்ளவும். இல்லாவிட்டால் வெங்காய விழுதை சேர்த்து கொள்ளவும். உருளைகிழங்கு மசித்து மசாலா கலவையில் சேர்த்து அரைத்தும் சேர்த்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் 1 1/2 கப் ( பொடியாக நறுக்கிய காலிபிளவர், பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு, பச்சை பட்டாணி )
வெங்காயம் 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/4 மேஜைக்கரண்டி ( அ) 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை 2 கொத்து
உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
முழு முந்திரி பருப்பு 15
கசகசா 3/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய் 1
அண்ணாச்சி மொக்கு 2
மராட்டிய மொக்கு 1
காஜ்சுபத்திரி 1 பூ
பட்டை 1 இன்ச்
கிராம்பு 3
தாளிக்க:
வேர்கடலை எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
வெண்ணை 1 1/2 தேக்கரண்டி
பிரியாணி இலை 1
கறிவேவப்பிலை 1 கொத்து
செய்முறை :
1. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
2. பொடியாக நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் ஒரு முறை அலசி விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளை போட்டு உப்புத்தூள் சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. இந்த கலவை நன்றாக மசிந்து கூழ் போல் ஆனதும் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
6. இச்சமயத்துல அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து தண்ணீர் 1 கப் சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சரியாக இந்த சமயத்துல வேக வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும் , அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
7. இப்பொழுது அடுப்பை சிம்மில் ( சிறுதீயில் ) வைத்து கொள்ளவும். நன்கு கொதித்து குருமா கெட்டியாக ஆகும் சமயத்துல தயிரை சேர்த்துகோங்க நமக்கு ஏற்றவாறு கெட்டி தண்மை வந்த உடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
8. இந்த குருமா சப்பாத்தி, பரோட்டா, பூரி , தோசை மற்றும் கீ ரைஸ் கு ஏற்ற பக்க உணவாகும் ( சைட்டிஷ் ).
குறிப்பு:
1. நாம் தேவையெனில் இறக்கும் சமயத்துல ஃப்ரெஷ் கிரீம் 1 மேஜைக்கரண்டி சேர்த்து இறக்கி கொள்ளவும். ஃப்ரெஷ் கிரீம் சேர்த்தால் சுவை கூடும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|