தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:40 pm
Eze 38:7 நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.
இந்த வார்த்தைகள் யாருக்கு சொல்லப்பட்டது?

இது மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான
கோகுக்கு சொல்லப்பட்டது. இவர்கள் தேவ ஜனத்தின் எதிரிகள் கடைசி நாட்களில்
தேவனுக்கு எதிர்த்து நிற்க போகிற கூட்டம். வெளிப்படுத்தின விசேஷம் 20:8,9.

யாரால் சொல்லப்பட்டது?

தேவனால் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது.

எப்போது சொல்லப்பட்டது?

இஸ்ரவேலர்கள் தேவனால் சமாதானத்தை அனுபவிக்கும் காலத்தில், மறுபடியும்
தேவ ஆளுகை தேவ மக்களிடம் காணப்படும் காலத்தில் எதிர்காலத்தில் அதாவது
கடைசிகாலத்தில் நடைபெறும் சம்பவத்தை கூறும் தீர்க்கதரிசனம். இதை
நிறைவேறிவிட்ட ஒன்று, சபையின் நாட்களில் நிறைவேறிகொண்டிருக்கின்ற ஒன்று,
ஆயிரவருட இயேசு ராஜாவின் ஆளுகை நாட்களில் நடைபெற ஒன்று.

எதற்காக சொல்லப்பட்டது?

கோகு எத்தனை பெரிய கூட்டமாக இருந்தாலும், திறமையான படையாக இருந்தாலும்,
நன்றாக திட்டமிட்டிருந்தாலும், சிறப்பாக ஆயத்தப்பட்டிருந்தாலும் தேவனுக்கு
முன்பாகவும், தேவ ஜனங்களுக்கு முன்பாகவும் தோற்றுப்போகும், அழிந்து
போகும்.

Isa 8:9 ஜனங்களே, நீங்கள்
கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள்
எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Isa 8:10 ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.

தேவன் உங்களோடு இருக்கிறார்.

இந்த வசனம் நமக்கு என்ன சொல்லுகிறது?

சத்துரு எவ்வளவு பெலசாலியாக இருந்தாலும் கலங்காதிருங்கள். எவ்வளவு
திறமையும், ஆயத்தமும் உள்ள கோலியாத்தானாலும் சரி யுத்தம் கர்த்தருடையது.
அவர் உனக்கு வெற்றியை தருவார்.

பரமண்டலங்களில்
இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாம்ம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய
ராஜ்யம் வருவதாக. உம் சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறதுபோல இந்த
பூமியிலும் செய்யப்படுவதாக.


Last edited by Admin on Thu Mar 21, 2013 8:42 pm; edited 1 time in total
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:40 pm
எசேக்கியல் 36:23

புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள்
உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான்
பரிசுத்தம்பண்ணுவேன், அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான்
உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை
அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

தேவன் தம்முடைய ஜனங்கள் கீழ்ப்படியாமையினாலும், அருவருப்புகளினாலும் தேவனுடைய நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்கினார்கள்.
இதினிமித்தம் தேவன் அவா்கள் மேல் கோபம் கொண்டு சிதறடித்தார்.

ஆயினும் தேவன் தம்முடைய பரிசுத்த நாமத்தினிமித்தமும், உடன்படிக்கை நிமித்தமும் இரக்கம் பாராட்டினார்.

எசேக்கியல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன், நான் உங்களுடைய எல்லா
அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி
உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

கீழ்ப்படியாமையையும், அருவருப்புகளையும் மன்னித்தார்.

எசேக்கியல் 36:28
உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,

ஆசீர்வதித்தார். பாவத்திற்காக துக்கப்படுங்கள். கிருபைக்காக நன்றி சொல்லுங்கள்.

எசேக்கியல் 36:32
நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர்
சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது, இஸ்ரவேல்
வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.

இப்போதும் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

எசேக்கியல் 36:37
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக
நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்
பண்ணவேண்டும், மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

கிருபைக்காக கெஞ்சுங்கள். மன்னிக்கும்படி கதறுங்கள். வாக்குதத்தம் நிறைவேற மன்றாடுங்கள்.

பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. …
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:41 pm
தேவன் நம்மை காவற்காரனாகவும், தீர்க்கதரிசியாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்.

Eze 33:7 மனுபுத்திரனே,
நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ
என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

Eze 33:8 நான்
துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில்,
நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை
அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே
சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

Eze 33:9 துன்மார்க்கன்
தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்
வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன்
ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.


Eze 33:33 இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

தேவன் தேசங்களை நியாயந்தீர்க்கும்படி பஞ்சம், கொள்ளை நோய், யுத்தம் என்ற பட்டயத்தை அனுப்புகிறார்.

துன்மார்க்கன் மனம்திரும்பினால், அவன் துரோகங்கள் மன்னிக்கப்படும் அவன் பிழைப்பான்.

நீதிமான் பாவம் செய்தால், அவன் நீதி நினைக்கப்படுவதில்லை அவன் சாவான்.

இதை எச்சரிக்கவே தேவன் பரிசுத்தவான்களை பயன்படுத்துகிறார்.

ஜனங்களின் மாய்மாலம்:

Eze 33:31 ஜனங்கள் கூடிவருகிற
வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல்
உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள்
அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப்
பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது
.

பொருளாசை, உலகபிரகாரமான தேவைகளே அவர்களுடைய மனதை நிறைத்திருக்கிறது.

Mar 4:18 வசனத்தைக் கேட்டும்,
உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற
இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால்
பலனற்றுப்போகிறார்கள்.


தேவ ராஜ்யத்தை குறித்த அக்கறை இல்லை.

நாம் தேவ ராஜ்யத்தை குறித்த அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்,
மற்றவர்களையும் தேவ ராஜ்யத்தை குறித்த அக்கறை உள்ளவர்களாக இருக்க எச்சரிக்க
வேண்டும்.

ராஜ்ய சிந்தனையும். மனப்பான்மையும், நோக்கமும் இல்லையென்றால் நாம் நம் இலக்கை தவறவிடுவோம். அது தண்டனைக்குரிய பாவமாகும்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:42 pm
Eze 32:2 மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய
பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில்
முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக்
கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
Eze 32:3 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு
ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில்
உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

Eze 32:19 மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.

இங்கே விருத்தசேதனமில்லாதவர்கள் நடுவே கிடத்தப்படுவாய் என்று 10 முறை வருகிறது.

விருத்தசேதனம் என்பது Gen 17:11 உங்கள்
நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும்
உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்


தேவன் ஆபிரகாமோடு பண்ணின உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது.

ரோமர் 3:30

விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை
விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. என்னதான்
இருந்தாலும் உடன்படிக்கையின் அடையாளமாகிய விருத்தசேதனத்திற்கு மேன்மை உண்டு
என்றும் பின்னால் அதே அதிகாரத்தில் விருத்தசேதனமுள்ளவர்களானாலும்,
விருத்தசேதனம் இல்லாதவர்களானாலும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுவார்கள்
என்று கூறப்பட்டிருக்கிறது.

1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை
நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின்
உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய
உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; ஞானஸ்நானம் தேவனோடு பன்னும்
உடன்படிக்கை என்று கூறப்பட்டிருக்கிறது.

நாம் தேவனோடு உடன்படிக்கை பண்னிக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதுவரை
ஞானஸ்நானம் எடுக்கவில்லையென்றால் உடனே ஞானஸ்நானம் எடுத்து தேவனோடு
உடன்படிக்கை பண்ணிக் கொள்ளுங்கள்.

இதோ, தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் காலம் வந்துவிட்டது.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:43 pm
தேவன் பெருமையுள்ளவர்களுக்கு
எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று
சொல்லியிருக்கிறது. யாக்கோபு 4:6.


நம்முடைய ஆசீர்வாதம் தேவனுடைய கிருபையால் நமக்கு அருளப்படுவது. அதை
தினம் நினைத்து நன்றியோடு தேவனை துதிப்பதும், ஆராதிப்பதும் நமது கடமை.

Eze 31:10 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர்
சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின்
தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன்
மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,


Eze 31:11 நான் அதை ஜாதிகளில் மகா
வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச்
செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.


Eze 31:10 Therefore thus saith the Lord GOD; Because thou hast
lifted up thyself in height, and he hath shot up his top among the thick
boughs, and his heart is lifted up in his height;

Eze 31:11 I have therefore delivered him into the hand of the mighty
one of the heathen; he shall surely deal with him: I have driven him
out for his wickedness.

Eze 31:14 தண்ணீரின் ஓரமாய் வளருகிற
எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்கள்
கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக்
குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல்
நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின்
நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.


Eze 31:14 To the end that none of all the trees by the waters exalt
themselves for their height, neither shoot up their top among the thick
boughs, neither their trees stand up in their height, all that drink
water: for they are all delivered unto death, to the nether parts of the
earth, in the midst of the children of men, with them that go down to
the pit.

தேவன் நம்மை நம்முடைய சகோதர, சகோதரிகளை விட உயர்த்தும் போது தேவனின்
நோக்கம் நிறைவேற அதிகமாக அர்ப்பனிக்க வேண்டும். நம்மை தாழ்த்த வேண்டும்.
கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாதிருக்க வேண்டும்.

குழு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இனைந்து
தனக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள், வரங்கள், தாலந்துகள் யாவற்றையும்
தேவனுடைய ராஜ்ய மேன்மைக்காக பயன்படுத்த வேண்டும்,

தேவனின் ஆசீவாதங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். அது அநேகருடைய
பிரயோசனத்திற்காக குறிப்பாக இயேசுவின் சரீரமாகிய திருச்சபைக்கு
ஆசீர்வாதமாயிருக்கவே கொடுக்கப்படுகிறது.

தாழ்மையாக நடந்து கொள்ளுங்கள். பிறருக்கு மதிப்பளியுங்கள்.

Php 2:1 ஆதலால்
கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின்
யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,


Php 2:2 நீங்கள் ஏக சிந்தையும் ஏக
அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என்
சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.


Php 2:3 ஒன்றையும் வாதினாலாவது வீண்
பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும்
மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.


Php 2:4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.

Php 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:44 pm
எசேக்கியல் 27:3

சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே
வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது
என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசௌந்தரியவதி என்கிறாய் .

ஆனால் எருசலேம் பூரன வடிவுள்ளது. அங்கே தேவன் பிரகாசிக்கிறார். சங்கீதம் 50:2.

இயேசுவே முற்றிலும் அழகுள்ளவர். உன்னத பாட்டு 5:16.

ஆனால் தீருவோ அழகின் பூரனமே நான் தான் என பெருமை பாரட்டியது. தனக்கு
இருந்த வசதி, வாய்ப்பு, செல்வம், செழிப்பு, வியாபாரம், பல நாட்டு ராஜ்ய
உறவு, இயற்கையாக அமைந்த சுற்று சூழல் தன்னை விட மேன்மையான எருசலேம்
வீழ்ந்து விட்டது இனி தான்தான் என்னை விட்டால் யாருமில்லை, எனக்கு
நிகரில்லை என்று கர்வம் கொண்டபடியால்

எசேக்கியல் 27:27-36ல்
தீருவே இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று கர்த்தர் சொல்கிறார்.

நாமோ கர்த்தருக்கு நன்றி சொல்வோம். தாழ்மையாக நடந்து கொள்வோம்.

சங்கீதம் 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள், ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

கிருபைக்காக மன்றாடுங்கள்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:44 pm
எசேக்கியல் 26:2

மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின்
ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம்
புரண்டுவரும், அதுபாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும்
சொல்லுகிறபடியினால்,

எருசலேம் பாபிலோன் ராஜாவால் சிறைபிடிக்க பட்டபோது. தீரு சும்மா
இருக்காமல் ஆ,ஆ என களிகூர்ந்தது, இப்போது நான் நிரப்பப்படுவேன் என்று
சொன்னது தேவனின் பார்வையில் பொல்லாததாய் காணப்பட்டது.

எனவே
எசேக்கியல் 26:21
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன், இனி நீ இருக்கமாட்டாய், நீ தேடப்பட்டாலும்
இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
என்றார்.

ஒருவர் தேவனால் நியாயம் தீர்க்கப்படும் போதோ, சிட்சிக்க படும்போது நாம்
இரக்கத்திற்காக மன்றாட வேண்டுமே தவிர விமர்சனமோ, வீண் வார்த்தையோ வேணடாம்.
உன் வாயின் வார்த்தையால் நீ ஏன் தண்டிக்கப்பட வேண்டும்.

தேவனே உம்முடைய நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:44 pm
Eze 25:3 அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது

என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக்

கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த

ஸ்தலம் பரிசுத்தக் குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம்

பாழாக்கப் படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே

போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக

ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

Eze 25:6 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கை கொட்டி,

உன் காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

Eze 25:8 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்:

இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று

மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

Eze 25:12 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்:

ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி,

பெரிய குற்றஞ்செய்தபடியினால்,

Eze 25:15 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்:

பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து,

பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று,

வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

தேவன் ஒருவரை நியாயந்தீர்க்காதீர்க்கும் போது

அந்த நபரை நீங்கள் அற்பமாக எண்ணாதிருங்கள்.

அது தேவனுக்கு முன்பாக பாவமாக இருக்கும்.

கூடுமானால் நியாயந்தீர்க்கப்பட்டவர்களுக்காகவும்

மன்றாடுங்கள். யாருக்கு தெரியும் தேவன்

ஒருவேளை மன்னிப்பார்.

அந்த நபர்களும் மனஸ்தாபப்பட்டு, மனம்திரும்புவார்கள்.

எப்போதும் எல்லாருக்கும் கிருபை இரக்கத்திற்காக கெஞ்சுங்கள்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:45 pm
எசேக்கியல் 24:25

பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும்,
அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின்
விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும்,
அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு
எடுத்துக் கொள்ளுகிறேனோ,

1. உஙகள் பலத்தினால் சாதித்த சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

2. எது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது?

3. உங்கள் கண்களால் எதை விருப்பமாய் பார்க்கிறீர்கள்?

4. எதன் மேல் உங்கள் இருதயத்தை வைத்திருக்கிறீர்கள்?

5. உங்களுக்கு மிகவும் பிரியமான நபா் யார்?

இந்த கேள்விகளுக்கு இயேசு ராஜா என்றும், தேவனுடைய ராஜ்யம் என்றும் இருக்க வேண்டும்.

நீங்கள் தேவனுக்கு முதலிடம் கொடுக்கவிட்டால் மற்றவையெல்லாம் அழிக்கப்படும்.

பிந்தி போகும் முன் முன்னுரிமைகளை ஒழுங்குபடுத்துவோம்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:45 pm
எசேக்கியல் 23:36

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும்
அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை
அவர்களுக்குத் தெரியக்காட்டு.

அகோலாள் என்பதற்கு சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்று அர்த்தம்.

இவர்களை தேவன் நியாயந்தீர்ப்பேன் என்கிறார்

எசேக்கியல் 23:46

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு
விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்கள் அலைச்சலுக்கும் கொள்ளைக்கும்
ஒப்புக்கொடுப்பேன்.

எசேக்கியல் 23:47

அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால்
வெட்டிப்போடுவார்கள், அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும்
கொன்று, அவர்களுடையவீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

காரணம் அவர்களின் அருவருப்பு:
கனவனுக்கு துரோகம் செய்து வேசியாய் போன ஒரு பெண் போல அருவருப்பு.

ஞானஸ்நானம் ஒரு உடன்படிக்கை. கட்டுபாட்டுடன் நடக்க எதிர்பார்க்கப்படுகிறது.

கவனமாய் இருக்க வேண்டிய எல்லைகள்:
1. வியாபாரம்
2. விளையாட்டு
3. விக்கிரகம்
4. விபச்சாரம்
5. வீண் பேச்சு

தங்கள் அருவருப்பை உணர்ந்து, மனம் வருந்தி, மனம்திரும்பி, மன்னிப்பு கேட்டால் தேவன் மறுபடியும் சேர்த்துக்கொள்வார்.

அழிக்காதபடி தேவனிடமும், மனம்திரும்பும்படி மக்களிடமும் மன்றாடுவோமாக.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:45 pm
எசேக்கியல் 22:30
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

ஆம், தேவன் ஜனத்தை நியாயந்தீர்க்க பஞ்சம், கொள்ளை நோய், யுத்தம் என்ற பட்டயத்தை அனுப்பும் போது நாம் திறப்பிலே நிற்க வேண்டும்.

அழிக்காதபடி மன்றாடுபவர்களிடம் தேவன்
சொல்லுகிறது என்னவென்றால் …..

எசேக்கியல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ?
வழக்காடமனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,

மன்றாடி ஜெபிக்கும் முன் ஜனங்களுக்கு அவர்கள் பாவத்தையும், அருவருப்புகளையும் சுட்டி காட்ட வேண்டும்.

தேவனிடம் மன்றாடும் அதே சமயம் மக்களிடம் அவர்கள் மனம்திரும்ப வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க. வேண்டும்.

வசனம் 6-12ல் 10 அருவருப்புகளை பார்க்கிறோம்.

1. இரத்தம் சிந்துதல்.
2. தாய்,தகப்பனை அற்பமாக எண்ணுதல்
3. பரதேசியை ஒடுக்குதல்
4. திக்கற்றவர்களை, விதவைகளை ஒடுக்குதல். 5. பரிசுத்த வஸ்துக்கள், ஓய்வு நாளை அலட்சியம் செய்தல்
6. சண்டையை தூண்டக் கூடிய அபாண்டம் பேசுகிறவர்கள்.
7.விக்கிர ஆராதனை.
8.முறை கெட்ட வாழ்க்கை முறை. பாலியல் ஒழுக்ககேடு.
9. லஞ்சம், வட்டி, அபகரிப்பு என்ற பொருளாசை.
10. தேவனை மறந்து அறிவில்லாமல் இருப்பது.

மேலும்
23-29 வரை
1. சுத்தமில்லா தேசம் .
2. போலி தீர்க்கதரிசிகள்.
3. கடமை தவறிய ஆசாரியர்கள்.
4. நெறி தவறிய அதிபதி.
5. பிறரை வருத்தப்படுத்தும் சுய நலமான பொது ஜனங்கள்.

இப்படிப்பட்டவர்களை தேவன் அழிக்க போகிறார்.

நீங்கள் திறப்பிலே நின்று மன்றாடுவீர்களா?
மக்களின் அருவருப்பை எடுத்துரைத்து எச்சரிப்பாயா?
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:46 pm
Eze 21:6 ஆதலால் மனுபுத்திரனே,

உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு;

அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு.

Eze 21:7 நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய்

என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி:

துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால்,

இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து,

மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம்

தண்ணீரைப்போல அலைவுண்ணும்;

இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர்

உரைக்கிறார் என்று சொல் என்றார்.

தேவன் தம்முடைய
தீர்க்கதரிசி வரப்போகிற அழிவை குறித்து பெருமூச்சுவிட்டு ஜெபிக்க
எதிர்பார்க்கிறார். ஆம் தே வ பிள்ளைகளாகிய நாம் தம் தேசத்திற்கு வரப்போகிற
பஞ்சம், கொள்ளை நோய்,

பட்டயம் (யுத்தம்) இவைகளுக்கு மக்கள்
தப்பித்துக் கொள்ள ஜெபிக்க வேண்டும். அழுகையோடும், கண்ணீரோடும்,
பெருமூச்சோடும் ஜெபிப்போமாக. தப்புவிக்கப்படவும், விடுவிக்கப்படவும்,
இரட்சிக்கப்படவும் ஜெபிப்போமாக.

தேசத்திற்குள்
நடைபெறுகிற அருவருப்பைக் குறித்தும், அதனால் வரப்போகிற அழிவை குறித்தும்
பெருமூச்சு விட்டு ஜெபிக்ககிறவர்களை தேவன் தேடுகிறார். அப்படிப்பட்டவர்களை
எழுப்புகிறார். அடையாளம் போடுகிறார்.



இங்கே எசேக் 21ல் பட்டயம் என்ற வார்த்தை 16 முறை
வருகிறது. உருவின பட்டயம், சங்கரிக்கும் பட்டயம், கூர்மையாக்கப்பட்ட
பட்டயம். துலக்கப்பட்ட பட்டயம், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்,
உள்ளறைகளில் பிரவேசிக்கும் பட்டயம், பதமிடப்பட்ட பட்டயம், தீட்டப்பட்ட
பட்டயம்.

வேத்ததில்
பட்டயம் இரண்டு விதமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. ஒன்று
நியாயந்தீர்க்கும் பட்டயம், நம்மை பாதுகாக்கும் பட்டயம். வேதவசனம்
கீழ்ப்படியாதவர்களை நியாயந்தீர்க்கும், கீழ்ப்படிந்தோரை இரட்சித்து
பாதுகாக்கும்.

இயேசுவின்
வார்த்தையை விசுவாசித்து, கீழ்ப்படிந்தால் மீட்பு, கீழ்ப்படியாவிட்டால்
நியாயந்தீர்க்கப்படுவோம். இயேசுவின் வார்த்தையே பட்டயம். இருபுறமும்
கருக்குள்ள பட்டயம். எபிரேயர் 4:12. பத்மூ தீவில் யோவான் கண்ட தரிசனத்தில்
இயேசு வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராக காண்கிறான். கடைசி
கால யுத்தத்தில் இயேசு தம்முடைய பட்டயத்தால் யாவரையும் சங்கரிப்பார்.
இன்றுநீங்கள் பட்டயத்தால் நியாயந்தீர்க்காதபடிக்கு அவரண்டை சேர்ந்து
கொள்வோமாக.

யோசுவா காலத்தில்Jos 5:13
பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப்
பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர்
கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ,
எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். Jos 5:14 அதற்கு அவர்:
அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்;
அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை
நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
உருவின பட்டயத்தை காண்கிறான்.

அந்த பட்டயம்
யாருக்கு சாதகமானது யோசுவாவிற்கா? எரிகோவிற்கா? பதில் அந்த பட்டயம்
கர்த்தருடைய பட்டயம் யார் கர்த்தரை சார்ந்து கொள்கிறார்களோ அவர்களுடைய
பட்சமாக தேவ பட்டயம் இருக்கும்.



பட்டயத்திற்கு தப்புவது எப்படி?


  1. தேவனை சார்ந்து கொள்ளுங்கள், தேவனுக்கு கீழ்ப்படியுங்கள்.
  2. தேவ ஜனத்திற்காக, தேவ இரக்கத்திற்காக பெருமூச்சுவிட்டு ஜெபியுங்கள்.
  3. மனம்திரும்புங்கள், பொல்லாப்பை விட்டு விலகுங்கள். வரப்போகும்
    ஆபத்தை குறித்து தேசத்தை எச்சரியுங்கள்.

தற்சமயம் தேவன் நம்முடைய சபையில் ராஜ்ய எழுப்புதல் ஜெபம்
நடைபெற உணர்த்தினார் அதன்படி தினமும் தேசத்தில் நடைபெறும் அருவருப்புகள்
நீங்கவும், சகல தேசத்தாரும் இரட்சிக்கப்படும்படியாகவும், சத்தியத்தை
அறியும்படியாகவும் மன்றாடி ஜெபித்து வருகிறோம். நீங்களும் ஜெபியுங்கள்.

மற்றவர்களை எச்சரியுங்கள், நீங்களும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பட்டயம் புறப்பட்டுவிட்டது.

ஜனங்கள் பட்டயத்தால் அழிந்து போகாதபடி

மன்றாடி ஜெபியுங்கள், வேதவசனம் என்ற பட்டயத்தால் அவர்கள் மனம்திரும்பும்படி எச்சரியுங்கள்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:46 pm
எசேக்கியல் 20:9

ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என்
நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து
புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.



தேவன் இஸ்ரவேலர்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். தேவன்
அவர்களோடு உடன்படிக்கை பன்னியிருக்கிறார். இஸ்ரவேலர்களோ தேவனுக்கு துரோகம்
பன்னி விக்கிரக ஆராதனைக்கு ஆளானார்கள்.

தேவன் அவர்களை அழிக்க சித்தமானார், ஆயினும் தமது நாமத்தினிமித்தம் கிருபை செய்து அவர்களை நிர்முலமாக்காதிருந்தார்.


அவர்கள் மனம்திரும்ப தவனை கொடுத்தார். இது போல வனாந்திரத்தில்
அவர்கள் தேவனை கோபப்படுத்தினார்கள். அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல்
போனார்கள். ஓய்வு நாளை பரிசுதத்த குலைச்சலாக்கினார்கள். சபை
கூடிவருதலையும். ஆராதனையையும், பலி செலுத்துதலையும் தவறவிட்டார்கள்.
அதுவுமல்லாமல் தேவனை கோபப்படுத்தும்படி நரகலான விக்கிரகங்களை
பின்பற்றினார்கள், நெறி கெட்ட வியாபாரத்தை செய்தனர், விபச்சாரம் செய்து
தங்களை கெடுத்துக் கொண்டார்கள். உடன்படிக்கைக்கு துரோகம் பன்னினார்கள்.

ஆயினும் தேவன் அவர்களை தமது நாமத்னிமித்தம், கிருபையாய் இரங்கினார்.

எசேக்கியல் 20:33-38

Eze
20:33 பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட
உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Eze 20:34 நீங்கள்
ஜனங்களுக்குள் இராதபடிக்கு நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள்
சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும்,
ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கூடிவரச்செய்து,

Eze 20:35 உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.
Eze 20:36 நான்
எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் உங்கள் பிதாக்களோடு வழக்காடினதுபோல
உங்களோடும் வழக்காடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Eze 20:37 நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,
Eze 20:38 கலகக்காரரையும்
துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள்
தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல்
தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று
அறிந்துகொள்வீர்கள்.



தம்முடைய ஜனத்தை கைவிடாமல். அவர்களை பலத்த கையினாலும், ஓங்கிய
புயத்தினாலும், உக்கிரத்தினாலும் அவர்களை ஆளுவேன் என்று கூறுகிறார்.
அவர்கள் பாவத்திலிருந்து அவர்களை விடுவிப்பார்.

எனவே தேவன் அவர்களை இரண்டு விதங்களில் நடத்தினார்.

1. அவர்களை நியாயந்தீர்த்தார்.

2. இரக்கம் பாராட்டினார்.

எசேக்கியல் 20:44

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும், உங்கள்
கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என்
நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று
அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்
என்றார்.


மக்கள் புரிந்து கொள்ளும்படி பலவித உதாரனங்களால் தம்முடைய வார்த்தையை விளங்கப்பன்னுகிறார்.

நாம் மனம்திரும்பவே
விரும்புகிறார். தீர்க்கதரிசிகள் தேவன் தமது ஜனத்தின்மேல் கிருபையாய்
இருக்கவும், உடன்படிக்கையை நினைவுகூர்ந்து. மன்னிக்கவும் மன்றாடி
ஜெபிக்கிறவர்களாக இருந்தனர்.



இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் அவர்களுக்காக மன்றாட தீர்க்கதரிசிகள் இல்லாதிருந்ததில்லை.

கால காலங்களில்
மன்றாடி ஜெபிப்பவர்களையும், ஜனத்தின் அக்கிரமத்தை எடுத்துரைக்கவும்,
மனம்திரும்ப அழைக்கவும் தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பினார், அனுப்பினார்.



இன்று உன்னை
ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக எழுப்புகிறார். நீ ஜனத்திற்காக தேவனிடம்
மன்றாடவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை அறிவிக்கவும் உன்னை
ஏற்படுத்துகிறார்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:46 pm
எசேக்கியல் 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு
பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளேபடுத்திருந்து, பாலசிங்கங்களின்
நடுவிலே தன் குட்டிகளை வளர்தாள்.

எசேக்கியல் 19:10

10 நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய்
நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும்
தழைத்திருக்கிறதுமான திராட்சச் செடியாயிருந்தாள்.

எகிப்துக்கு போன சிங்கம் யோசியா, 2 இராஜா 23:34
பாபிலோனுக்கு போன சிங்கம் யோயாக்கின். 2இராஜா 24:15

திராட்சை செடி இஸ்ரேல்.
அக்கினி புறப்பட்ட கொப்பு சிதேக்கியா 2 இராஜா 24:20, 25:9.

இவைகளெல்லாம் கீழ்ப்படியாமைக்கு வந்த தண்டனைகள்.
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Thu Mar 21, 2013 8:47 pm
எசேக்கியல் 18:31 நீங்கள் துரோகம் பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும்
உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது
ஆவியையும் உண்டு பண்ணிக்கொள்ளுங்கள், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன்
சாகவேண்டும். மனம்திரும்புங்கள். தேவனுக்கு பயப்படுங்கள் புதிய இருதயம்,
புதிய ஆவி. இது தேவன் அருளுவது. இங்கே உங்களுக்கு உண்டுபண்ணிக் கொள்ளுங்கள்
என்று வாசிக்கிறோம். பிரதான கற்பனைக்கும், மாபெரும் கட்டளைக்கும்
கீழ்ப்படிதல், பரிசுத்த ஆவியானவர்க்கு அர்ப்பனித்தல். கர்த்தருக்கு
சித்தமானதையே செய்ய தீர்மானித்தல் என்பதே புதிய இருதயம், புதிய ஆவி.
தேவனுக்கு பயப்படும் இருதயம். கர்த்தருக்கு பயப்படும் ஆவி நமக்குள்
வேண்டும். தேவனுக்கு பயந்து வாழ்பவனே நீதிமான். தேவனுக்கு பயப்படாதவன்
துன்மார்க்கன்.
Sponsored content

எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து  தியானம் Empty Re: எசேக்கியேல் - புஸ்தகத்திலிருந்து தியானம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum