கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Sat May 21, 2016 6:04 am
தமிழகத்தில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (மே 20) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறினார்.
எத்தனை இடங்கள்?:
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (மே 20) காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல் கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, தபால் மூலம், ஜூன் 17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு:
இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆகும்.
பிற பிரிவினர் ரூ. 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றார் அவர்.
Re: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Thu May 26, 2016 9:21 am
கால்நடை பல்கலை 9,148 மாணவர்கள் மனு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, ஐந்து நாட்களில், 'ஆன்லைன்' மூலம், 9,000க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, கால்நடை பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: கடந்த, 20ம் தேதி முதல், www.tanuvas.ac.in என்ற, எங்கள் பல்கலை இணையதளத்தில், ஆன்லைன் மூலம் இளநிலை படிப்புகளுக்கான மனுக்களை வழங்கி வருகிறோம். இதில், 320 இடங்கள் உள்ள பி.வி.எஸ்.சி., படிப்பில் சேர்வதற்கு அதிகபட்சமாக, 6,848மாணவர் விண்ணப்பித்துள்ளனர்.தலா, 20 இடங்களை உடைய பி.டெக்., படிப்புகளை பொறுத்தவரையில், உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு முறையே, 947, 502 மற்றும், 851 மனுக்கள் வந்துள்ளன. மொத்தத்தில், ஐந்து நாட்களில், 9,148 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன், 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின், மனுக்களை நேரடியாக சமர்ப்பிப்பதற்கு, ஜூன் 17, கடைசி தேதி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|