நிதின் கட்கரிக்கு மல்லையா மீது இவ்வளவு பயம் ஏன்?
Thu May 05, 2016 8:33 am
Raja Tamil Iraivan
May 3 at 8:44am ·
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத பொது மக்கள் தான் திருடர்கள், மல்லையா மிகவும் ஒழுக்கமானவர்தான். நிதின் கட்கரிக்கு மல்லையா மீது இவ்வளவு பயம் ஏன்? வங்கிகளின் பணம் இந்த நாட்டின் பணம், மேலும் அது மக்களின் பணம். கட்கரியின் சொந்தப் பணம் 9000 கோடியை மல்லையாவிடம் கொடுத்துவிட்டு, மல்லையா திருடரல்ல் என்று இந்த திருடனுக்கு துணை போகும் கட்கரி சொல்வாரா? திருடப்பட்டது மக்களின் பணம்தானே, அதனால் மல்லையா திருடரல்ல் என இவரால் கருத்து கூற முடிகிறது. கட்கரிக்கும் அவர் தலைவருக்கும் இந்திய நடுத்தர மக்களை கொள்ளையடிப்பதும், அது பற்றி திட்டமிடுவதும்தானே வேலையே. மல்லையாவிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? அவர் வெளிநாட்டிலே இருக்கிறார், இவர்கள் இங்கேயே இருக்கிறார்கள்.
- முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|