- CHARLES MSKபுதியவர்
- Posts : 5
Join date : 09/01/2016
நாவில் பெலன்!
Sun Jan 10, 2016 12:58 am
“உங்கள் விசுவாசம்… தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ள தாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப் பட்டதாயிருந்தது”
(1 கொரி 2:4,5).
கர்த்தருடைய வார்த்தைகளை வல்லமையாய் பேசுவதற்கு உங்கள் நாவில் தேவ பெலன் இருக்க வேண்டியது அவசியம்.
அப். பவுல், தன்னுடைய ஊழியத்தைப் பற்றி சொல்லும்போது, என்னுடைய ஞானத்தினாலே நயவஞ்சகமான வார்த்தையை நான் பேசவில்லை.
பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட் டதாயிருக்கிறது என்பதே அவருடைய சாட்சி.
இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்றபிறகு, உங்களுடைய வார்த்தை வித்தியாசமானதாயிருக்க வேண்டும்.
உங்களுடைய நாவு கர்த்தருக்கு அர்ப்பணிக்கப் பட்டதாயிருக்க வேண்டும்.
ஏசாயா தீர்க்கதரிசி, அசுத்த உதடுகளுள்ள மக்கள் மத்தியிலே வாசம்பண்ணின படியினால், அவருடைய வார்த்தைகளில் அசுத்தம் கலந்துவிட்டது.
தேவ பிரசன்னத் துக்கு, அவர் வந்தபோது, தன்னுடைய அபாத்திர நிலைமையை உணர்ந்தார்.
“ஐயோ, நான் அதமானேன். நான் அசுயத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்று புலம்பினார்.”
“அப்பொழுது சேராபீன்களில் ஒருவன், பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால், ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, அதினால் என் வாயைத் தொட்டு,
“இதோ, இது உன் உதடுகளைத் தொட்டத்தினால், உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்” (ஏசா. 6:5-7).
தேவபிள்ளைகளே, ஏசாயாவின் நாவைத் தொட்டு, கர்த்தர் பலப்படுத்தினபோது, சாதாரண தீர்க்கதரிசியா யிருந்தவர் மகா உன்னதமான தீர்க்கதரிசியாய் மாறினார்.
“பலிபீடத்தின் அக்கினிக் குறடு” என்பது, இரண்டு காரியங்களைக் குறிக்கிறது.
முதலாவது, ‘பலிபீடம்’ என்பது, கல்வாரிச் சிலுவையையும், இயேசுவின் இரத்தத் தையும், மனதுருக்கத்தையும் குறிக்கிறது.
இரண்டாவது, ‘அக்கினிக் குறடு’ என்பது, பரிசுத்த ஆவியினால் வருகிற அக்கினி அபிஷேகத்தையும், உன்னத பெலனையும் குறிக்கிறது.
உங்கள் நாவில் கிறிஸ்துவின் இரத்தமும், மனதுருக்கமும், நிரம்பியிருக்கட்டும்.
பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையும் நிரம்பியிருக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து சொன்னார், “எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:18,20).
கர்த்தர் ஒரு மனிதனை தன்னுடைய அபிஷேகத்தால் நிரப்பும்போது, முதலாவது தொடுகிற அவயவம் அவனுடைய நாவுதான்.
சாதாரண மனுஷனுடைய நாவு தோல்வியைப் பேசுகிறது.
அதைரியத்தைப் பேசுகிறது.
அசுத்தமான வார்த்தைகளைப் பேசுகிறது.
அப். யாக்கோபு எழுதினார், “நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும், பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது” (யாக். 3:5).
ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் பரலோகத்திலிருந்து வந்த அக்கினி மயமான நாவுகள், சீஷர்கள்மேல் வந்து இறங்கினது. அவர்கள் நாவிலே பெரிய பெலன் வந்தது.
நினைவிற்கு:-
“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மாற். 11:23).
(1 கொரி 2:4,5).
கர்த்தருடைய வார்த்தைகளை வல்லமையாய் பேசுவதற்கு உங்கள் நாவில் தேவ பெலன் இருக்க வேண்டியது அவசியம்.
அப். பவுல், தன்னுடைய ஊழியத்தைப் பற்றி சொல்லும்போது, என்னுடைய ஞானத்தினாலே நயவஞ்சகமான வார்த்தையை நான் பேசவில்லை.
பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட் டதாயிருக்கிறது என்பதே அவருடைய சாட்சி.
இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்றபிறகு, உங்களுடைய வார்த்தை வித்தியாசமானதாயிருக்க வேண்டும்.
உங்களுடைய நாவு கர்த்தருக்கு அர்ப்பணிக்கப் பட்டதாயிருக்க வேண்டும்.
ஏசாயா தீர்க்கதரிசி, அசுத்த உதடுகளுள்ள மக்கள் மத்தியிலே வாசம்பண்ணின படியினால், அவருடைய வார்த்தைகளில் அசுத்தம் கலந்துவிட்டது.
தேவ பிரசன்னத் துக்கு, அவர் வந்தபோது, தன்னுடைய அபாத்திர நிலைமையை உணர்ந்தார்.
“ஐயோ, நான் அதமானேன். நான் அசுயத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்று புலம்பினார்.”
“அப்பொழுது சேராபீன்களில் ஒருவன், பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால், ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, அதினால் என் வாயைத் தொட்டு,
“இதோ, இது உன் உதடுகளைத் தொட்டத்தினால், உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்” (ஏசா. 6:5-7).
தேவபிள்ளைகளே, ஏசாயாவின் நாவைத் தொட்டு, கர்த்தர் பலப்படுத்தினபோது, சாதாரண தீர்க்கதரிசியா யிருந்தவர் மகா உன்னதமான தீர்க்கதரிசியாய் மாறினார்.
“பலிபீடத்தின் அக்கினிக் குறடு” என்பது, இரண்டு காரியங்களைக் குறிக்கிறது.
முதலாவது, ‘பலிபீடம்’ என்பது, கல்வாரிச் சிலுவையையும், இயேசுவின் இரத்தத் தையும், மனதுருக்கத்தையும் குறிக்கிறது.
இரண்டாவது, ‘அக்கினிக் குறடு’ என்பது, பரிசுத்த ஆவியினால் வருகிற அக்கினி அபிஷேகத்தையும், உன்னத பெலனையும் குறிக்கிறது.
உங்கள் நாவில் கிறிஸ்துவின் இரத்தமும், மனதுருக்கமும், நிரம்பியிருக்கட்டும்.
பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையும் நிரம்பியிருக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து சொன்னார், “எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:18,20).
கர்த்தர் ஒரு மனிதனை தன்னுடைய அபிஷேகத்தால் நிரப்பும்போது, முதலாவது தொடுகிற அவயவம் அவனுடைய நாவுதான்.
சாதாரண மனுஷனுடைய நாவு தோல்வியைப் பேசுகிறது.
அதைரியத்தைப் பேசுகிறது.
அசுத்தமான வார்த்தைகளைப் பேசுகிறது.
அப். யாக்கோபு எழுதினார், “நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும், பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது” (யாக். 3:5).
ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் பரலோகத்திலிருந்து வந்த அக்கினி மயமான நாவுகள், சீஷர்கள்மேல் வந்து இறங்கினது. அவர்கள் நாவிலே பெரிய பெலன் வந்தது.
நினைவிற்கு:-
“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மாற். 11:23).
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|