உங்களின் திறமையை நிர்ணயம் செய்ய
Thu Dec 17, 2015 9:46 am
சமீப காலமாகவே சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் முன்னிலையில் இருப்பது சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சி தான், இசை மேதைகள் சிலர் நடுவராக இருப்பர், பாடல் பாட தெரிந்தவர்கள் நடுவர்கள் முன்னிலையில் பாடுகிறார்கள்!!!
அதில் தேர்வு பெறாதவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பல குழந்தைகள் தங்கள் தோல்வியை நினைத்து கண்கலங்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றது!
சில கிறிஸ்துவ குழந்தைகளும் இதில் அடங்கும், அப்படி ஒரு கிறிஸ்துவ குழந்தை மிகவும் உருக்கமாக அழுகிறது என்னால் நன்றாக பாடமுடியவில்லை,எனக்கு இந்த இசை கலையில் இடம் இல்லை என்று நடுவர்கள் சொல்லிவிட்டனர் எனது கடைசி முயற்சியும் முடிந்தது என்று சொல்லி முடிப்பதை பார்க்கிறோம்..
1741ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் ஒரு கிறிஸ்துவ இசை கலைஞன் வாழ்ந்து வந்தார், இயேசுகிறிஸ்து மீது தீராத அன்பு கொண்டவர் தேவனுக்காக புதிய இசை அமைப்புகளை இயற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார், ஆனாலும் அனைவராலும் ரசிக்ககூடிய ஒரு இசை அமைப்புகளை அவரால் இயற்றமுடியவில்லை,
ஓர் இரவு நேரம் தேவனோடு ஜெபத்தில் இருந்து தன் இயலாமையை சொல்லிவிட்டு தூங்க செல்கிறார், சிறிது நேரத்தில் அவர் சில தேவதூதர்கள் மூலம் பரலோகம் செல்வதை உணர்கிறார்!!! அங்கு வாசற்படியில் ஐந்து நிமிடம் நிறுத்தப்படுகிறார், அப்பொழுது தேவதூதர்கள் பாடும் பாடல் கேட்கிறது, பயத்தில் கண்திறந்து பார்க்கும்போது தன் அறையில் இருக்கிறார்,
அந்த இரவே தான் கேட்ட இசை அமைப்பை எழுதுகிறார், மறுநாள் முதல் இந்த நொடி வரை அந்த இசை அமைப்பை மீறின எந்த பாடலும் இந்த உலகத்தில் இல்லை, உலக இசை அமைப்பாளர்கள், இசை மேதைகள், அனைவரும் கேட்டு வியந்து நிற்கிறார்கள், அந்த இசை கலைஞன் எட்டாத உயரத்தில் தேவனால் நிறுத்தபடுகிறார் அவர் தான் "ஜார்ஜ் ஃபிரடெரீக் ஹேன்டல்" ("George Frideric Handel") "அல்லேலூயா" "Hallelujah" (chorus) பாடலை நமக்கு கொடுத்தவர்,
இந்த உலகம் உங்களின் திறமையை நிர்ணயம் செய்ய இடம் கொடுக்காதீர்கள், மூளையினால் முடியாதது முழங்காலினால்" முடியும்!!! இன்றே உங்கள் குறைகளை தேவனிடத்தில் அறிக்கை செய்து பாருங்கள், உங்கள் குறைவுகளை அவர் நிறைவாக்குவார். ஆமென்......
-ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்- I கொரிந்தியர் 1:27.
அதில் தேர்வு பெறாதவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பல குழந்தைகள் தங்கள் தோல்வியை நினைத்து கண்கலங்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றது!
சில கிறிஸ்துவ குழந்தைகளும் இதில் அடங்கும், அப்படி ஒரு கிறிஸ்துவ குழந்தை மிகவும் உருக்கமாக அழுகிறது என்னால் நன்றாக பாடமுடியவில்லை,எனக்கு இந்த இசை கலையில் இடம் இல்லை என்று நடுவர்கள் சொல்லிவிட்டனர் எனது கடைசி முயற்சியும் முடிந்தது என்று சொல்லி முடிப்பதை பார்க்கிறோம்..
1741ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் ஒரு கிறிஸ்துவ இசை கலைஞன் வாழ்ந்து வந்தார், இயேசுகிறிஸ்து மீது தீராத அன்பு கொண்டவர் தேவனுக்காக புதிய இசை அமைப்புகளை இயற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார், ஆனாலும் அனைவராலும் ரசிக்ககூடிய ஒரு இசை அமைப்புகளை அவரால் இயற்றமுடியவில்லை,
ஓர் இரவு நேரம் தேவனோடு ஜெபத்தில் இருந்து தன் இயலாமையை சொல்லிவிட்டு தூங்க செல்கிறார், சிறிது நேரத்தில் அவர் சில தேவதூதர்கள் மூலம் பரலோகம் செல்வதை உணர்கிறார்!!! அங்கு வாசற்படியில் ஐந்து நிமிடம் நிறுத்தப்படுகிறார், அப்பொழுது தேவதூதர்கள் பாடும் பாடல் கேட்கிறது, பயத்தில் கண்திறந்து பார்க்கும்போது தன் அறையில் இருக்கிறார்,
அந்த இரவே தான் கேட்ட இசை அமைப்பை எழுதுகிறார், மறுநாள் முதல் இந்த நொடி வரை அந்த இசை அமைப்பை மீறின எந்த பாடலும் இந்த உலகத்தில் இல்லை, உலக இசை அமைப்பாளர்கள், இசை மேதைகள், அனைவரும் கேட்டு வியந்து நிற்கிறார்கள், அந்த இசை கலைஞன் எட்டாத உயரத்தில் தேவனால் நிறுத்தபடுகிறார் அவர் தான் "ஜார்ஜ் ஃபிரடெரீக் ஹேன்டல்" ("George Frideric Handel") "அல்லேலூயா" "Hallelujah" (chorus) பாடலை நமக்கு கொடுத்தவர்,
இந்த உலகம் உங்களின் திறமையை நிர்ணயம் செய்ய இடம் கொடுக்காதீர்கள், மூளையினால் முடியாதது முழங்காலினால்" முடியும்!!! இன்றே உங்கள் குறைகளை தேவனிடத்தில் அறிக்கை செய்து பாருங்கள், உங்கள் குறைவுகளை அவர் நிறைவாக்குவார். ஆமென்......
-ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்- I கொரிந்தியர் 1:27.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|