இயேசு தேவன்
Wed Dec 16, 2015 12:00 am
இயேசு தொழுகைக்கு பாத்திரர் என்பதால் அவர் தேவன் இன்னுமோர் ஆதாரம்.......
குமாரனை இந்த உலகத்தில் பிரவேசிக்கச்செய்த போது தேவன் இயேசுவை தொழுதுகொள்ளும்படி சொன்னதாக எபி 1:6ல் வாசிக்கிறோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக வேதத்தில்கூறப்பட்டாலும் சற்று வித்தியாசமாய் வந்திருக்கிறதை நாம் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
லூக்கா 2: 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
இந்த வசனத்தில் இயேசுவை அவர்கள் துதித்த்தாகவோ; மரியாதை செலுத்தினதாகவோ நாம் பார்க்கமுடியாது, ஆனால் தேவன் குமாரனைத்தான் தொழுதுகொள்ளும்படி சொன்னார் இவர்கள் உன்னத்த்திலிருக்கிற தேவனை துதிக்கிறார்கள் அப்ப தவறு செய்துவிட்டார்களா?
***6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.****
தூதர்கள் தவறு செய்ய வாய்ப்பில்லை..... குமாரனை தொழுதுகொள்ளச்சொன்னால் அந்த மாதிரி ஒரு சம்பவமும் இந்த இடத்தில் நடக்கவில்லையே ஏன்?
இதில் தான் வேதத்தின் சத்தியம் அழகாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது அதாவது பிதா குமாரனை தொழுதுகொள்ளச்சொன்னால் உன்னதத்திலிருக்கிற தேவனை இவர்கள் தொழுதுகொள்கிறார்கள் இதிலிருந்து
பிறந்திருக்கிறவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியும்,
அவர்கள் குமாரனைத் தான் மகிமைப்படுத்தி சென்றார்கள் என்பது மறுக்கமுடியாத உணமை, உன்னதத்திலிருக்கிறவர்தான் அந்த மாம்சமாக வந்தவர் என்பதை அறியாமலா தேவதூதர்கள் உள்ளனர்.....
“தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் தேவதூதர்களால் காணப்பட்டார்........
இயேசு தேவன் தான் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்...
16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.1 தீமோ 3:16)
தேவ தூதர்களால் காணப்பட்டார் என்றால் என்ன அர்த்தம்? (தேவதூதர்கள் இயேசுவை பார்த்தனர்.) இதற்கு விளக்கம் என்ன? இது ஒரு இரகசியமா?
அதாவது அநேகர் நினைப்பது போல தேவதூதர்கள் இயேசு பிறக்கும் போது பார்த்தார்கள், ஊழியம் செய்யும் போது பார்த்தார்கள் அதைத்தான் வேதம் சொல்லுகிறது என்பர். இது உண்மையா? அப்படியானால் இது எப்படி இரகசியம் ஆகமுடியும்? இது ஒரு சாதாரணவிஷயம் தான் சகோதரர்களே..... தேவ தூதர்கள் இயேசு பிறப்பதை மாத்திரம் பார்க்கவில்லை எல்லோருடைய பிறப்பையும் தான் பார்க்கிறார்கள்............ஆனால் அதெல்லாம் இரகசியம் கிடையாது.....ஆனால் இந்த வசனத்தில்; ஒரு உண்மை அடங்கியுள்ளது....
அதாவது தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை ..... கிறிஸ்துவே வெளிப்படுத்தினார் என்று வேதம் சொல்லுகிறது..... தேவதூதர்கள் கூட தேவனை கண்டதில்லை ஏனெனில் ஒருவரும் காணக்கூடாதவர் என்பது அவருடைய தனித்தனமை. அது தான் அவரை மற்றவர்களிடமிருந்து அவரை பிரிக்கிறது. ஒரு உதாரணத்திற்கு கிறிஸ்து தேவனாயிருந்தால் அவரையும் யாரும் பார்க்கமுடியாது(கிறிஸ்து படைக்கப்பட்டவராக இருந்தால் தூதர்களால் பார்க்க முடியும்) பரிசுத்த ஆவிக்கும் இதே தன்மைதான். இதை வேதம் உறுதிபடுத்துகிறது.
அதாவது தேவதூதர்கள் கிறிஸ்துவை பார்த்தனர் என்பது தான் இந்த வசனத்தின் சரியான அர்த்தம். நான் கேட்கிறேன் இதற்கு முன் கிறிஸ்துவை தேவதூதர்கள் பார்க்கவில்லையா? அப்புறம் ஏன் தூதர்கள் பார்த்தார்கள் என்று போட்டு அது ஒரு இரகசியம் என வரவேண்டும்? ஏன் என்றால் தூதர்கள் இதற்கு முன் குமாரனின் முழுத்தன்மையையும் நிச்சயம் பார்க்கவில்லை. “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் தேவ தூதர்களால் காணப்பட்டார்” இப்படி வசனத்தை வாசித்துப்பாருங்கள் உண்மை தெளிவாக புரியும். ஒருவரும் ஒருக்காலும் கண்டிராதவர்; மாம்சத்தில் வெளிப்படும்போது தூதர்கள் பார்த்தனர் இதை பவுல் ஒரு இரகசியம் என்கிறார்.....
பழையஏற்பாட்டில் தரிசனமான தூதனுடைய(இயேசு) தோற்றமெல்லாம் மனிதர்கள் பார்ப்பதற்காக அவர் எடுத்த தோற்றம் தானே அன்றி அது அவருடைய முழுத்தன்மையான தோற்றமே அல்ல............... மனிதனாகவும், தூதனாகவும், நெருப்பாகவும், எப்படிவேண்டுமானாலும் அவர் தன்னை காண்பிக்கமுடியும். ஏன் மோசே கூட தேவனுடைய முதுகை பார்த்த்தாக வேதம் சொல்லுகிறது,,,, ஆனால் இவைகளெல்லாம் ஒரு தற்காலிக தோற்றம் அவ்வளவே இவைகள் தேவன் ஏற்படுத்தினதே அன்றி இது தேவனுடைய தோற்றமல்ல...... இப்படிப்பட்டவர் தான் குமாரனும் அவரை ஒருவனும் காண்முடியாது தேவதூதர்கள் உட்பட.....
ஆனால் தேவத்துவத்தின் இரகசியம் வெளிப்பட்டது.... முதன் முறையாக திரியேகத்தில் இரண்டாம் நபராக உள்ள குமாரனை யாரும் இதுவரை பார்த்திராத குமாரனை, பிதா ஆயத்தப்படுத்தின சரீரம் மூலம் இந்த உலகத்தில் வந்த தேவனை(குமாரனை) தேவதூதர்கள் முதன்முறையாக பார்க்கின்றனர்.. இப்பொழுது சொல்லுங்கள் நிச்சயம் இது ஒரு இரகசியம்........தானே! .
இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது கிறிஸ்து ஒருவனும் ஒருக்காலும் கண்டிராத தேவன் என்பதே.... .
அதனால் தான் தேவதூதர்களை தொழுதுகொள்ளும்படி பிதா கட்டளையிட்டார்..... தேவத்துவத்தின் பரீபூரண்மெல்லாம் சரீரபிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்ததே!....... மனிதசரீரத்தில் வந்த இயேசுவை பார்த்தோம்...... இனி நாம் பார்க்கப்போவதெல்லாம் மறுரூப சரீரமுள்ள இயேசுவைத்தானேயன்றி குமாரனின் முழுமையான திரியேகத்தின் இரண்டாம் நபருக்குரிய தெய்வீகத்தன்மையில் அல்ல அதை யாராலும் ஒருக்காலும் பார்க்கமுடியாது.....
இதை சிலர் உணராமல் தூதர்கள் இயேசுவின் ஊழியத்தைத்தான் பார்த்தார்கள் என்றால் இது என்ன உலக அதிசயமா இல்லை தான் உலக மகா இரகசியமா என்ன? புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!
குமாரனை இந்த உலகத்தில் பிரவேசிக்கச்செய்த போது தேவன் இயேசுவை தொழுதுகொள்ளும்படி சொன்னதாக எபி 1:6ல் வாசிக்கிறோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக வேதத்தில்கூறப்பட்டாலும் சற்று வித்தியாசமாய் வந்திருக்கிறதை நாம் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
லூக்கா 2: 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
இந்த வசனத்தில் இயேசுவை அவர்கள் துதித்த்தாகவோ; மரியாதை செலுத்தினதாகவோ நாம் பார்க்கமுடியாது, ஆனால் தேவன் குமாரனைத்தான் தொழுதுகொள்ளும்படி சொன்னார் இவர்கள் உன்னத்த்திலிருக்கிற தேவனை துதிக்கிறார்கள் அப்ப தவறு செய்துவிட்டார்களா?
***6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.****
தூதர்கள் தவறு செய்ய வாய்ப்பில்லை..... குமாரனை தொழுதுகொள்ளச்சொன்னால் அந்த மாதிரி ஒரு சம்பவமும் இந்த இடத்தில் நடக்கவில்லையே ஏன்?
இதில் தான் வேதத்தின் சத்தியம் அழகாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது அதாவது பிதா குமாரனை தொழுதுகொள்ளச்சொன்னால் உன்னதத்திலிருக்கிற தேவனை இவர்கள் தொழுதுகொள்கிறார்கள் இதிலிருந்து
பிறந்திருக்கிறவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியும்,
அவர்கள் குமாரனைத் தான் மகிமைப்படுத்தி சென்றார்கள் என்பது மறுக்கமுடியாத உணமை, உன்னதத்திலிருக்கிறவர்தான் அந்த மாம்சமாக வந்தவர் என்பதை அறியாமலா தேவதூதர்கள் உள்ளனர்.....
“தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் தேவதூதர்களால் காணப்பட்டார்........
இயேசு தேவன் தான் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்...
16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.1 தீமோ 3:16)
தேவ தூதர்களால் காணப்பட்டார் என்றால் என்ன அர்த்தம்? (தேவதூதர்கள் இயேசுவை பார்த்தனர்.) இதற்கு விளக்கம் என்ன? இது ஒரு இரகசியமா?
அதாவது அநேகர் நினைப்பது போல தேவதூதர்கள் இயேசு பிறக்கும் போது பார்த்தார்கள், ஊழியம் செய்யும் போது பார்த்தார்கள் அதைத்தான் வேதம் சொல்லுகிறது என்பர். இது உண்மையா? அப்படியானால் இது எப்படி இரகசியம் ஆகமுடியும்? இது ஒரு சாதாரணவிஷயம் தான் சகோதரர்களே..... தேவ தூதர்கள் இயேசு பிறப்பதை மாத்திரம் பார்க்கவில்லை எல்லோருடைய பிறப்பையும் தான் பார்க்கிறார்கள்............ஆனால் அதெல்லாம் இரகசியம் கிடையாது.....ஆனால் இந்த வசனத்தில்; ஒரு உண்மை அடங்கியுள்ளது....
அதாவது தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை ..... கிறிஸ்துவே வெளிப்படுத்தினார் என்று வேதம் சொல்லுகிறது..... தேவதூதர்கள் கூட தேவனை கண்டதில்லை ஏனெனில் ஒருவரும் காணக்கூடாதவர் என்பது அவருடைய தனித்தனமை. அது தான் அவரை மற்றவர்களிடமிருந்து அவரை பிரிக்கிறது. ஒரு உதாரணத்திற்கு கிறிஸ்து தேவனாயிருந்தால் அவரையும் யாரும் பார்க்கமுடியாது(கிறிஸ்து படைக்கப்பட்டவராக இருந்தால் தூதர்களால் பார்க்க முடியும்) பரிசுத்த ஆவிக்கும் இதே தன்மைதான். இதை வேதம் உறுதிபடுத்துகிறது.
அதாவது தேவதூதர்கள் கிறிஸ்துவை பார்த்தனர் என்பது தான் இந்த வசனத்தின் சரியான அர்த்தம். நான் கேட்கிறேன் இதற்கு முன் கிறிஸ்துவை தேவதூதர்கள் பார்க்கவில்லையா? அப்புறம் ஏன் தூதர்கள் பார்த்தார்கள் என்று போட்டு அது ஒரு இரகசியம் என வரவேண்டும்? ஏன் என்றால் தூதர்கள் இதற்கு முன் குமாரனின் முழுத்தன்மையையும் நிச்சயம் பார்க்கவில்லை. “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் தேவ தூதர்களால் காணப்பட்டார்” இப்படி வசனத்தை வாசித்துப்பாருங்கள் உண்மை தெளிவாக புரியும். ஒருவரும் ஒருக்காலும் கண்டிராதவர்; மாம்சத்தில் வெளிப்படும்போது தூதர்கள் பார்த்தனர் இதை பவுல் ஒரு இரகசியம் என்கிறார்.....
பழையஏற்பாட்டில் தரிசனமான தூதனுடைய(இயேசு) தோற்றமெல்லாம் மனிதர்கள் பார்ப்பதற்காக அவர் எடுத்த தோற்றம் தானே அன்றி அது அவருடைய முழுத்தன்மையான தோற்றமே அல்ல............... மனிதனாகவும், தூதனாகவும், நெருப்பாகவும், எப்படிவேண்டுமானாலும் அவர் தன்னை காண்பிக்கமுடியும். ஏன் மோசே கூட தேவனுடைய முதுகை பார்த்த்தாக வேதம் சொல்லுகிறது,,,, ஆனால் இவைகளெல்லாம் ஒரு தற்காலிக தோற்றம் அவ்வளவே இவைகள் தேவன் ஏற்படுத்தினதே அன்றி இது தேவனுடைய தோற்றமல்ல...... இப்படிப்பட்டவர் தான் குமாரனும் அவரை ஒருவனும் காண்முடியாது தேவதூதர்கள் உட்பட.....
ஆனால் தேவத்துவத்தின் இரகசியம் வெளிப்பட்டது.... முதன் முறையாக திரியேகத்தில் இரண்டாம் நபராக உள்ள குமாரனை யாரும் இதுவரை பார்த்திராத குமாரனை, பிதா ஆயத்தப்படுத்தின சரீரம் மூலம் இந்த உலகத்தில் வந்த தேவனை(குமாரனை) தேவதூதர்கள் முதன்முறையாக பார்க்கின்றனர்.. இப்பொழுது சொல்லுங்கள் நிச்சயம் இது ஒரு இரகசியம்........தானே! .
இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது கிறிஸ்து ஒருவனும் ஒருக்காலும் கண்டிராத தேவன் என்பதே.... .
அதனால் தான் தேவதூதர்களை தொழுதுகொள்ளும்படி பிதா கட்டளையிட்டார்..... தேவத்துவத்தின் பரீபூரண்மெல்லாம் சரீரபிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்ததே!....... மனிதசரீரத்தில் வந்த இயேசுவை பார்த்தோம்...... இனி நாம் பார்க்கப்போவதெல்லாம் மறுரூப சரீரமுள்ள இயேசுவைத்தானேயன்றி குமாரனின் முழுமையான திரியேகத்தின் இரண்டாம் நபருக்குரிய தெய்வீகத்தன்மையில் அல்ல அதை யாராலும் ஒருக்காலும் பார்க்கமுடியாது.....
இதை சிலர் உணராமல் தூதர்கள் இயேசுவின் ஊழியத்தைத்தான் பார்த்தார்கள் என்றால் இது என்ன உலக அதிசயமா இல்லை தான் உலக மகா இரகசியமா என்ன? புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!
Re: இயேசு தேவன்
Wed Dec 16, 2015 12:01 am
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரா இல்லை கிறிஸ்து மாமசத்தில் வெளிப்பட்டாரா?
16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
சில மொழிபெயர்ப்புகளில் அவர் மாமசத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது இன்னும் ஒரு சில மொழிபெயர்ப்புகளில் கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது ஏன் நாம் பயன்ப்டுத்தும் வேதத்தில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றிருக்கிறது, அப்ப உண்மையில் எதைத்தான் நாம் ஏற்றுக்கொள்வது?
ஏன் இப்படி வித்தியாசம் வந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொண்டால் பின்னர் இதற்கானவிடையையும் தெரிந்துகொள்ளலாம். அதாவது புதியஏற்பாட்டில் உள்ள எல்லா புத்தகங்களின் எழுத்து பிரதிகளின் காப்பி மட்டுமே நம்மிடம் உள்ளது பவுல் கைப்பட எழுதியது நம்மிடம் இல்லை. அது அழிந்துவிட்டது, அப்படி காப்பி செய்த பிரதிகளில் சில தவறுகள் ஏற்படுவது சகஜம்...... அதை மற்ற பிரதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் தவறு எளிதில் சரிசெய்யப்படும். நம்மிடத்தில் 27.000 காப்பிகள் புதியஏற்பாட்டிற்கு உள்ளன.....
ஒரு இடத்தில் கிறிஸ்து என்று 10.000 பிரதிகளில் சொல்லப்பட்டுள்ளது என்றூ வைத்துக்கொள்வோம், இதே வார்த்தை மற்ற ஒரு 1000 பிரதிகளில் இயேசு என்று வருகிறது என வைத்துக்கொண்டால் நாம் எப்படி சரியென முடிவெடுப்பது? நமக்கு தெரியும் அதிகமான பிரதிகள் எதை சொல்லுகிறதோ அதைதான்.......
ஆனால் ஒரு வார்த்தை 10.000 பிரதிகளில் ஒருமாதிரியும் இன்னொரு 10,000 பிரதிகளில் ஒரு மாதிரியும் இருந்தால் எப்படி ஒரு முடிவுக்கு வருவது ?
இந்த மாதிரி சூழ்நிலைகளில் எந்த பிரதி மிகப் பழைமையானதோ அந்த பிரதிகளை ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.....
Stephanus Textus Receptus 1550
καὶ ὁμολογουμένως μέγα ἐστὶν τὸ τῆς εὐσεβείας μυστήριον· Θεὸς ἐφανερώθη ἐν σαρκί ἐδικαιώθη ἐν πνεύματι ὤφθη ἀγγέλοις ἐκηρύχθη ἐν ἔθνεσιν ἐπιστεύθη ἐν κόσμῳ ἀνελήφθη ἐν δόξῃ
ஒரு பழமையான பிரதி மேலே காட்டப்பட்டுள்ளது இதில் தேவன் மாமசத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது.....
பொதுவாக இந்த மாதிரியான சிக்கல்கள் வரும்போது KJV போன்ற பைபிள்கள் பழைமையான பிரதிகளை தீர்வாக எடுத்துக்கொள்கின்றன.... இதில் தவறேதுமில்லை........பழைமையான பிரதிகளில் ஒரு வார்த்தை புதிய பிரதிகளில் வேறு மாதிரி வந்திருந்தால் நிச்சயம் தவறு புதிதாக காப்பிசெய்ததில் வந்திருக்க வாய்ப்புகள் உண்டு...... இதன் அடிப்படையில் பார்த்தால்
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே சரியான வசனமாக அமையும்.....
16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
சில மொழிபெயர்ப்புகளில் அவர் மாமசத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது இன்னும் ஒரு சில மொழிபெயர்ப்புகளில் கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது ஏன் நாம் பயன்ப்டுத்தும் வேதத்தில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றிருக்கிறது, அப்ப உண்மையில் எதைத்தான் நாம் ஏற்றுக்கொள்வது?
ஏன் இப்படி வித்தியாசம் வந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொண்டால் பின்னர் இதற்கானவிடையையும் தெரிந்துகொள்ளலாம். அதாவது புதியஏற்பாட்டில் உள்ள எல்லா புத்தகங்களின் எழுத்து பிரதிகளின் காப்பி மட்டுமே நம்மிடம் உள்ளது பவுல் கைப்பட எழுதியது நம்மிடம் இல்லை. அது அழிந்துவிட்டது, அப்படி காப்பி செய்த பிரதிகளில் சில தவறுகள் ஏற்படுவது சகஜம்...... அதை மற்ற பிரதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் தவறு எளிதில் சரிசெய்யப்படும். நம்மிடத்தில் 27.000 காப்பிகள் புதியஏற்பாட்டிற்கு உள்ளன.....
ஒரு இடத்தில் கிறிஸ்து என்று 10.000 பிரதிகளில் சொல்லப்பட்டுள்ளது என்றூ வைத்துக்கொள்வோம், இதே வார்த்தை மற்ற ஒரு 1000 பிரதிகளில் இயேசு என்று வருகிறது என வைத்துக்கொண்டால் நாம் எப்படி சரியென முடிவெடுப்பது? நமக்கு தெரியும் அதிகமான பிரதிகள் எதை சொல்லுகிறதோ அதைதான்.......
ஆனால் ஒரு வார்த்தை 10.000 பிரதிகளில் ஒருமாதிரியும் இன்னொரு 10,000 பிரதிகளில் ஒரு மாதிரியும் இருந்தால் எப்படி ஒரு முடிவுக்கு வருவது ?
இந்த மாதிரி சூழ்நிலைகளில் எந்த பிரதி மிகப் பழைமையானதோ அந்த பிரதிகளை ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.....
Stephanus Textus Receptus 1550
καὶ ὁμολογουμένως μέγα ἐστὶν τὸ τῆς εὐσεβείας μυστήριον· Θεὸς ἐφανερώθη ἐν σαρκί ἐδικαιώθη ἐν πνεύματι ὤφθη ἀγγέλοις ἐκηρύχθη ἐν ἔθνεσιν ἐπιστεύθη ἐν κόσμῳ ἀνελήφθη ἐν δόξῃ
ஒரு பழமையான பிரதி மேலே காட்டப்பட்டுள்ளது இதில் தேவன் மாமசத்தில் வெளிப்பட்டார் என்று வருகிறது.....
பொதுவாக இந்த மாதிரியான சிக்கல்கள் வரும்போது KJV போன்ற பைபிள்கள் பழைமையான பிரதிகளை தீர்வாக எடுத்துக்கொள்கின்றன.... இதில் தவறேதுமில்லை........பழைமையான பிரதிகளில் ஒரு வார்த்தை புதிய பிரதிகளில் வேறு மாதிரி வந்திருந்தால் நிச்சயம் தவறு புதிதாக காப்பிசெய்ததில் வந்திருக்க வாய்ப்புகள் உண்டு...... இதன் அடிப்படையில் பார்த்தால்
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே சரியான வசனமாக அமையும்.....
Re: இயேசு தேவன்
Wed Dec 16, 2015 12:01 am
கிறிஸ்து தேவன் தான் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்..
ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?
(1 சாமு 2:25- கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு)
வேதாகமத்தில் பரிந்து பேசக்கூடிய வேலையை பல தேவனுடைய தாசர்கள் செய்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும், அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மோசே மிக முக்கியமானவர். இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களுக்காக இவர் பரிந்து பேசினதைப் பார்க்கமுடியும். பல முறை தேவனும் மோசேயுடைய ஜெபத்தைக்கேட்டார் ஜனங்களை மன்னித்தார்......
ஆனால் மேலே கண்ட வசனத்தில் கடவுளுக்கு எதிராக யாராவது பாவம் செய்தால் அதற்காக பரிந்து பேசுகிறவர் யார் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் மோஸே முதலானவர்கள் பரிந்து பேசினதை; இந்த வசனத்தைச் சொன்ன பிரதான ஆசாரியனான ஏலிக்கு தெரியாதா? அப்புறம் ஏன் யார் பரிந்து பேச முடியும் என்று சொல்லுகிறார்?
மேற்கண்ட வசனத்தை சற்று ஆராய்ந்தால் விடை கிடைக்கும். அதாவது ஒரு மனிதனுக்கு விரோதமாக இன்னொரு மனிதன் பாவம் செய்யும் போது அவர்களுக்கு பொதுவாக உள்ள ஒரு மனிதன் பரிந்து பேசுகிறான் என்று வசனம் சொல்லுகிறது .......
இது எப்படி? எப்படி என்றால் பரிந்து பேசுகிறவனும் மனிதனாக இருப்பதால் அநீதி இழைக்கப்பட்டவனுடைய நிலைமையையும், அநீதி செய்தவனுடைய மன்நிலைமையையும் நன்கு அறிவான், ஏனெனில் அவனும் அவர்களில் ஒருவனாக மனிதனாக இருக்கிறான். இது அவனை பரிந்து பேசுவதற்கு தகுதியுள்ளவனாக்குகிறது. (1 கொரி 2:11)
அதே சமயம் தேவனுக்கு விரோதமாக ஒரு மனிதன் பாவம் செய்தால் யார் பரிந்து பேசுவது? ஒரு மனிதன் நிச்சயம் பரிந்து பேச முடியாது ஏனெனில் அந்த மனிதனால் மனிதனுடைய தன்மையை அறியமுடியுமேயன்றி தேவனுடைய இருதயத்தை முழு நிச்சயமாய் அறியமுடியாது....... இதை குறித்து யோபு எழுதுகிறார்....
32 அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே!
33 எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே!(9:32)
இது ஒரு அருமையான வசனம். இருவர் மேலும் தன் கையை வைத்து இடை நின்று தீர்ப்பவன் யாருமில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?
அதாவது இருவர் மேலும் கையை வைப்பவர் இருதரப்பினருக்கும் சமமானவராக இருக்கவேண்டும், ஒரு பக்கம் தேவன் இன்னொரு பக்கம் மனிதன், இந்த இருவரையும் இணைக்க நடுவில் உள்ளவர் தேவனாகவும் இருக்கவேண்டும், அதே சமயம் மனிதனாகவும் இருக்கவேண்டும்..... உண்மைதானே.....
அப்படி யாராவது இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறாரா என்று கேட்டால் இருக்கிறார் என்கிறது வேதம், அதாவது
1 யோவான் 2:1 என் பிள்ளைகளே, ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.......
இயேசு கிறிஸ்துவால் எப்படி பரிந்து பேச முடிகிறது இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறீர்களா? எப்படியென்று 1 தீமோ 2:5 நமக்கு விடை தருகிறது...
ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.(கத். பொது மொழிபெயர்ப்பு)
இந்த வசனத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள் 'தேவன் ஒருவர், இணைப்பவர் ஒருவர், மனிதனாகிய கிறிஸ்து தான் அவர்!' ............ புரிகிறதா? சிலர் இதை தவறாக வியாக்கியானம் செய்வார்கள் உண்மையில் இந்த வசனம் என்ன போதிக்கிறதென்றால் 'பரிந்து பேசுகிற நடுவராகிய ஒருவரை' பற்றி மட்டும் பேசுகிறது.
'தேவன் ஒருவர், இணைப்பவர் ஒருவர் இந்த இரண்டையும் செய்கிறவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு தான் அவர்... என்பது தான் இந்த வசனத்தின் அர்த்தம்.
மேலும் பவுல் மனுஷனாகிய கிறிஸ்து என்று எழுதுவதின் அர்த்தம் அவர் ஒரே தேவன் மாத்திரமல்ல மனுஷனும் கூட என்பதை விளக்கத்தான்........ ஆதாலால் அவரால் மனிதனை குறித்து பரிதபிக்கவும் முடியும் தேவனுடைய இருதயத்தை அறியவும் முடியும். இருவரையும் இணைக்கவும் முடியும்.
இதை சரியாக நிதானிக்கமுடியாமல் சில பிரிவினர் கிறிஸ்துவின் மானிடத்தன்மையை விளக்கூடிய வசனத்தை மட்டும் பிரதானமாக எடுத்துக்கொண்டு அவரின் தெய்வீகத்தன்மையை விளக்ககூடிய வசனங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதும் வேதனை......
எபி 2:17. அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்குஎவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
கொலே 1:20 சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் சமாதானம் உண்டாக்கி விண்ணிலும் மண்ணிலும் உள்ள யாவற்றையும் அவர் வழியாகத் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்.
21 முன்னர் நீங்கள் இறைவனோடு உறவிழந்து நின்றீர்கள்; அவர்மீது பகையுள்ளம் கொண்டவர்களாய்த் தீய செயல்களில் மூழ்கி இருந்தீர்கள்.
22 இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.(கத். பொது மொழிபெயர்ப்பு).....
இப்பொழுது சொல்லுங்கள் இயேசு கிறிஸ்து யார் என்று? அவர் தேவனுடைய மனிதர் அல்ல தேவமனிதர். அவரே தேவனாகவும் மனிதனாகவும் இருக்கிறவர்....... எல்லா மகிமையும் கனமும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் கிறிஸ்துவுக்கே உண்டாவதாக......
ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?
(1 சாமு 2:25- கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு)
வேதாகமத்தில் பரிந்து பேசக்கூடிய வேலையை பல தேவனுடைய தாசர்கள் செய்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும், அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மோசே மிக முக்கியமானவர். இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களுக்காக இவர் பரிந்து பேசினதைப் பார்க்கமுடியும். பல முறை தேவனும் மோசேயுடைய ஜெபத்தைக்கேட்டார் ஜனங்களை மன்னித்தார்......
ஆனால் மேலே கண்ட வசனத்தில் கடவுளுக்கு எதிராக யாராவது பாவம் செய்தால் அதற்காக பரிந்து பேசுகிறவர் யார் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் மோஸே முதலானவர்கள் பரிந்து பேசினதை; இந்த வசனத்தைச் சொன்ன பிரதான ஆசாரியனான ஏலிக்கு தெரியாதா? அப்புறம் ஏன் யார் பரிந்து பேச முடியும் என்று சொல்லுகிறார்?
மேற்கண்ட வசனத்தை சற்று ஆராய்ந்தால் விடை கிடைக்கும். அதாவது ஒரு மனிதனுக்கு விரோதமாக இன்னொரு மனிதன் பாவம் செய்யும் போது அவர்களுக்கு பொதுவாக உள்ள ஒரு மனிதன் பரிந்து பேசுகிறான் என்று வசனம் சொல்லுகிறது .......
இது எப்படி? எப்படி என்றால் பரிந்து பேசுகிறவனும் மனிதனாக இருப்பதால் அநீதி இழைக்கப்பட்டவனுடைய நிலைமையையும், அநீதி செய்தவனுடைய மன்நிலைமையையும் நன்கு அறிவான், ஏனெனில் அவனும் அவர்களில் ஒருவனாக மனிதனாக இருக்கிறான். இது அவனை பரிந்து பேசுவதற்கு தகுதியுள்ளவனாக்குகிறது. (1 கொரி 2:11)
அதே சமயம் தேவனுக்கு விரோதமாக ஒரு மனிதன் பாவம் செய்தால் யார் பரிந்து பேசுவது? ஒரு மனிதன் நிச்சயம் பரிந்து பேச முடியாது ஏனெனில் அந்த மனிதனால் மனிதனுடைய தன்மையை அறியமுடியுமேயன்றி தேவனுடைய இருதயத்தை முழு நிச்சயமாய் அறியமுடியாது....... இதை குறித்து யோபு எழுதுகிறார்....
32 அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே!
33 எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே!(9:32)
இது ஒரு அருமையான வசனம். இருவர் மேலும் தன் கையை வைத்து இடை நின்று தீர்ப்பவன் யாருமில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?
அதாவது இருவர் மேலும் கையை வைப்பவர் இருதரப்பினருக்கும் சமமானவராக இருக்கவேண்டும், ஒரு பக்கம் தேவன் இன்னொரு பக்கம் மனிதன், இந்த இருவரையும் இணைக்க நடுவில் உள்ளவர் தேவனாகவும் இருக்கவேண்டும், அதே சமயம் மனிதனாகவும் இருக்கவேண்டும்..... உண்மைதானே.....
அப்படி யாராவது இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறாரா என்று கேட்டால் இருக்கிறார் என்கிறது வேதம், அதாவது
1 யோவான் 2:1 என் பிள்ளைகளே, ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.......
இயேசு கிறிஸ்துவால் எப்படி பரிந்து பேச முடிகிறது இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறீர்களா? எப்படியென்று 1 தீமோ 2:5 நமக்கு விடை தருகிறது...
ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.(கத். பொது மொழிபெயர்ப்பு)
இந்த வசனத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள் 'தேவன் ஒருவர், இணைப்பவர் ஒருவர், மனிதனாகிய கிறிஸ்து தான் அவர்!' ............ புரிகிறதா? சிலர் இதை தவறாக வியாக்கியானம் செய்வார்கள் உண்மையில் இந்த வசனம் என்ன போதிக்கிறதென்றால் 'பரிந்து பேசுகிற நடுவராகிய ஒருவரை' பற்றி மட்டும் பேசுகிறது.
'தேவன் ஒருவர், இணைப்பவர் ஒருவர் இந்த இரண்டையும் செய்கிறவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு தான் அவர்... என்பது தான் இந்த வசனத்தின் அர்த்தம்.
மேலும் பவுல் மனுஷனாகிய கிறிஸ்து என்று எழுதுவதின் அர்த்தம் அவர் ஒரே தேவன் மாத்திரமல்ல மனுஷனும் கூட என்பதை விளக்கத்தான்........ ஆதாலால் அவரால் மனிதனை குறித்து பரிதபிக்கவும் முடியும் தேவனுடைய இருதயத்தை அறியவும் முடியும். இருவரையும் இணைக்கவும் முடியும்.
இதை சரியாக நிதானிக்கமுடியாமல் சில பிரிவினர் கிறிஸ்துவின் மானிடத்தன்மையை விளக்கூடிய வசனத்தை மட்டும் பிரதானமாக எடுத்துக்கொண்டு அவரின் தெய்வீகத்தன்மையை விளக்ககூடிய வசனங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதும் வேதனை......
எபி 2:17. அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்குஎவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
கொலே 1:20 சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் சமாதானம் உண்டாக்கி விண்ணிலும் மண்ணிலும் உள்ள யாவற்றையும் அவர் வழியாகத் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்.
21 முன்னர் நீங்கள் இறைவனோடு உறவிழந்து நின்றீர்கள்; அவர்மீது பகையுள்ளம் கொண்டவர்களாய்த் தீய செயல்களில் மூழ்கி இருந்தீர்கள்.
22 இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.(கத். பொது மொழிபெயர்ப்பு).....
இப்பொழுது சொல்லுங்கள் இயேசு கிறிஸ்து யார் என்று? அவர் தேவனுடைய மனிதர் அல்ல தேவமனிதர். அவரே தேவனாகவும் மனிதனாகவும் இருக்கிறவர்....... எல்லா மகிமையும் கனமும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் கிறிஸ்துவுக்கே உண்டாவதாக......
Re: இயேசு தேவன்
Wed Dec 16, 2015 12:02 am
ஆராதனை பிதாவுக்கா? இயேசுவுக்கா?
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத் 4:9,10)
இந்த பூமியில் மனிதனாக வந்த இயேசுகிறிஸ்து ஆராதனைக்கு ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார் அதாவது இங்கு பணிந்துகொள் என்று சாத்தான் சொன்னதை ஆராதனை என்று அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறார் இயேசு. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை προσκυνήσῃς .....
இது 60 முறை புதியஏற்பாட்டில் தொழுகை, பணிந்துகோள் ஆராதனை என்ற விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனிக்கவேண்டும். இப்போது கிறிஸ்து சொன்ன விளக்கம் உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு அவருக்கே ஆராதனை செய்வாயாக இது தான் சட்டம்.
ஆனால் எபிரேய நிரூபத்தில் ....6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
இது பிதா தேவதூதர்களைப் பார்த்து சொன்னது, இந்த தொழுதுகொள்ள்க்கடவீர்கள் என்ற வார்த்தைக்கும் அதே கிரேக்கவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்கவும், ஏன் யெகோவா இப்படி சொல்லவேண்டும். என்னதான் கிறிஸ்து பிதாவானவருக்கு உதவியிருந்தாலும் , உயிரைகொடுத்திருந்தாலும் அது அவருடைய கடமை தானே! படைத்தவர் ஏசாயா 48:11ல் கூறும் போது என்னுடைய மகிமையை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்கிறார், அப்ப இங்கு தொழுதுகொள்ள அதாவது ஆராதிக்க சொல்லுகிறார் ஏன்?
ஒன்று இந்த பிதா சரியில்லை என்று எடுத்துகொள்ளலாம்
இரண்டு இந்த எபிரேய புஸ்தகம் வேதமில்லை எனலாம்
மூன்று கிறிஸ்து ஆராதனைக்கு பாத்திரர் என்று எடுத்துக்கொள்ளலாம்.
கிறிஸ்து ஆராதனைக்கு பாத்திரர் என்று எடுத்துக்கொண்டால் கிறிஸ்துவே தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று சொல்லியிருக்கிறாரே அது எப்படி?
அதாவது கிறிஸ்துவாகிய இயேசு இப்போது இரண்டாம் ஆதாமாக ஒரு படைக்கப்பட்டவரைப்போல பூமியில் மனிதனாக இருக்கிறார், நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் ....அவருடைய ஒரே வேலை பிதாவை மகிமைப் படுத்துவது மாத்திரமே தனக்கு மகிமை கொண்டுவருவதில்லை. ஆனால் பிதாவானவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார் அதைதான் எபிரேய ஆக்கியோன் எழுதியுள்ளார்.
பரிசுத்த ஆவியான்வரின் வேலையும் கிறிஸ்துவை மகிமைப் படுத்துவதுதான் அதனால் தான் அவருடைய ஊழியத்தைகுறித்து இயேசு பேசும் போது "அவர் என்டையதிலிருந்து எடுத்து என்னை மகிமைப்படுத்துவார்" என்றார் (யோவான் 16:14)
ஒன்றை புரிந்து கொண்டால் போதும் கிறிஸ்து நமக்காக அடிமை கோலமெடுத்தார், ஆனால் அவர் ஆராதிக்க பாத்திரர் அவரே தேவன், மெய்யான தேவன், தேவாலயத்திலும் பெரியவர், மகாதேவன்,
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத் 4:9,10)
இந்த பூமியில் மனிதனாக வந்த இயேசுகிறிஸ்து ஆராதனைக்கு ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார் அதாவது இங்கு பணிந்துகொள் என்று சாத்தான் சொன்னதை ஆராதனை என்று அடுத்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறார் இயேசு. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை προσκυνήσῃς .....
இது 60 முறை புதியஏற்பாட்டில் தொழுகை, பணிந்துகோள் ஆராதனை என்ற விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனிக்கவேண்டும். இப்போது கிறிஸ்து சொன்ன விளக்கம் உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு அவருக்கே ஆராதனை செய்வாயாக இது தான் சட்டம்.
ஆனால் எபிரேய நிரூபத்தில் ....6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
இது பிதா தேவதூதர்களைப் பார்த்து சொன்னது, இந்த தொழுதுகொள்ள்க்கடவீர்கள் என்ற வார்த்தைக்கும் அதே கிரேக்கவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்கவும், ஏன் யெகோவா இப்படி சொல்லவேண்டும். என்னதான் கிறிஸ்து பிதாவானவருக்கு உதவியிருந்தாலும் , உயிரைகொடுத்திருந்தாலும் அது அவருடைய கடமை தானே! படைத்தவர் ஏசாயா 48:11ல் கூறும் போது என்னுடைய மகிமையை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்கிறார், அப்ப இங்கு தொழுதுகொள்ள அதாவது ஆராதிக்க சொல்லுகிறார் ஏன்?
ஒன்று இந்த பிதா சரியில்லை என்று எடுத்துகொள்ளலாம்
இரண்டு இந்த எபிரேய புஸ்தகம் வேதமில்லை எனலாம்
மூன்று கிறிஸ்து ஆராதனைக்கு பாத்திரர் என்று எடுத்துக்கொள்ளலாம்.
கிறிஸ்து ஆராதனைக்கு பாத்திரர் என்று எடுத்துக்கொண்டால் கிறிஸ்துவே தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று சொல்லியிருக்கிறாரே அது எப்படி?
அதாவது கிறிஸ்துவாகிய இயேசு இப்போது இரண்டாம் ஆதாமாக ஒரு படைக்கப்பட்டவரைப்போல பூமியில் மனிதனாக இருக்கிறார், நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் ....அவருடைய ஒரே வேலை பிதாவை மகிமைப் படுத்துவது மாத்திரமே தனக்கு மகிமை கொண்டுவருவதில்லை. ஆனால் பிதாவானவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார் அதைதான் எபிரேய ஆக்கியோன் எழுதியுள்ளார்.
பரிசுத்த ஆவியான்வரின் வேலையும் கிறிஸ்துவை மகிமைப் படுத்துவதுதான் அதனால் தான் அவருடைய ஊழியத்தைகுறித்து இயேசு பேசும் போது "அவர் என்டையதிலிருந்து எடுத்து என்னை மகிமைப்படுத்துவார்" என்றார் (யோவான் 16:14)
ஒன்றை புரிந்து கொண்டால் போதும் கிறிஸ்து நமக்காக அடிமை கோலமெடுத்தார், ஆனால் அவர் ஆராதிக்க பாத்திரர் அவரே தேவன், மெய்யான தேவன், தேவாலயத்திலும் பெரியவர், மகாதேவன்,
Re: இயேசு தேவன்
Wed Dec 16, 2015 12:03 am
வேதத்தில் உள்ள சத்தியங்களில் சில நேரடியாகச் சொல்லப்படவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டாகவேண்டும்,
ஏன் இவ்வாறு தேவன் வெளிப்படுத்துகிறார் நேரடியாக வெளிப்படுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் பிரிவுகள் இருக்காதே என்று நாம் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இது தேவனுடைய முறை என்பதை நாம் மறக்கக் கூடாது. அதாவது உண்மையான கீழ்படிதலோடு தன்னை தேடுகிறவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கருகலான வெளிபாட்டை புரிந்துகொள்ள தேவன் உதவுகிறார், இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் தரும் பரிசு இது என்று கூட சொல்லலாம்.
இயேசு கிறிஸ்துவை ஏன் தேவனாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? காரணம் வேதம் அமைந்த முறையே ....அதாவது வேதத்தில் சில கருகலான சத்தியங்கள் நம்முடைய ஆர்வத்திற்கும் கீழ்படியும் குணாதிசயத்திற்கும் ஏற்ற பிரகாரம் விளங்கிக்கொள்ளும் படி அமைந்திருக்கின்றன, தேவனே இப்படித்தான் வேதத்தை அமைத்துள்ளார்.
உதாரணத்திற்கு யோவான் ஸ்நானகன் இயேசுவிடம்,” வருகிறவர் நீர்தானா, இல்லை வேறொருவர் வர காத்திருக்கவேண்டுமா,?” என்று கேட்டதற்கு இயேசு நேரிடையாக பதில் தரவில்லை. அதற்கு மாறாக, “குருடர்கள் பார்வையடைகிறார்கள், பிசாசுகள் ஓடுகின்றன, தரித்திரருக்கு சுவிசேஷம் அறிவிக்கபடுகிறது என்று மறைமுகமாக பதில் சொன்னார் இயேசு. ஏன்?
இதே போல தான் பல இடங்களில் நேரிடையாக கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் ஆராய்ந்து பதில் கண்டுபிடிக்கும் படி பேசினார் இயேசு,
ஏன் அவ்வாறு செய்கிறார்?
இயேசு யார் என்பதை அவருடைய கிரியையும், குணாதிசயமும் வெளிப்படுத்தியது... இதை உணராதவன் அவர் தன்னை யார் என்று நேரிடையாக சொன்னாலும் அவனால் நம்பமுடியாது அப்படியே நம்பினாலும் அது மூடநம்பிக்கையாகவே இருக்கமுடியும்.
இன்றைக்கு வாஞ்சையோடு வேதத்தைக்கற்றுக்கொள்ளவும்,கீழ்படியவும் விரும்புகிறவர்களுக்கு தேவன் தன்னுடைய ஆழமான மறைவான சத்தியத்தை அவர்களுக்கு மாத்திரம் வெளிப்படுத்துகிறார் என்பதே உண்மை, இது தேவன் இவர்களுக்கு கொடுக்கும் கணம் என்று கூட சொல்லலாம்.
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனத்திற்கு செவிகொடுக்கிறான்......
அதனால் தான் பவுல் விசுவாசிகளைப் பார்த்து இப்படி ஜெபிக்கிறார்
17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத்தந்தருள வேண்டுமென்றும், வேண்டிக்கொள்கிறேன்……….
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
இந்த இரண்டு வசனங்களும் ஒன்றை தெளிவுபடுத்துகின்றன,,,, என்னதான் வசனம் கொடுக்கப்பட்டாலும் அதை வேறுமனே வாசிப்பதால் பிதாவையும் அறியமுடியாது, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே உள்ள இரகசியத்தையும் உணரமுடியாது.
அப்படியானால் எப்படிதான் அறிந்துகொள்வது?
எழுதித் தரப்பட்ட வசனத்தை பரிசுத்த ஆவியானவர் விளங்கச்செய்கிறார்,,,,, இது எல்லோருக்கும் கிடையாது என்பது மாத்திரம் நிச்சயம்………
ஏன் சில சத்தியங்களை தேவன் நேரடியாக சொல்லவில்லை .... காரணம் அவருக்கு கீழ்படிபவர்களுக்கு அவர் கொடுக்கும் கணம் அல்லது பரிசு எனலாம்…..
ஏன் இவ்வாறு தேவன் வெளிப்படுத்துகிறார் நேரடியாக வெளிப்படுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் பிரிவுகள் இருக்காதே என்று நாம் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இது தேவனுடைய முறை என்பதை நாம் மறக்கக் கூடாது. அதாவது உண்மையான கீழ்படிதலோடு தன்னை தேடுகிறவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கருகலான வெளிபாட்டை புரிந்துகொள்ள தேவன் உதவுகிறார், இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் தரும் பரிசு இது என்று கூட சொல்லலாம்.
இயேசு கிறிஸ்துவை ஏன் தேவனாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? காரணம் வேதம் அமைந்த முறையே ....அதாவது வேதத்தில் சில கருகலான சத்தியங்கள் நம்முடைய ஆர்வத்திற்கும் கீழ்படியும் குணாதிசயத்திற்கும் ஏற்ற பிரகாரம் விளங்கிக்கொள்ளும் படி அமைந்திருக்கின்றன, தேவனே இப்படித்தான் வேதத்தை அமைத்துள்ளார்.
உதாரணத்திற்கு யோவான் ஸ்நானகன் இயேசுவிடம்,” வருகிறவர் நீர்தானா, இல்லை வேறொருவர் வர காத்திருக்கவேண்டுமா,?” என்று கேட்டதற்கு இயேசு நேரிடையாக பதில் தரவில்லை. அதற்கு மாறாக, “குருடர்கள் பார்வையடைகிறார்கள், பிசாசுகள் ஓடுகின்றன, தரித்திரருக்கு சுவிசேஷம் அறிவிக்கபடுகிறது என்று மறைமுகமாக பதில் சொன்னார் இயேசு. ஏன்?
இதே போல தான் பல இடங்களில் நேரிடையாக கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் ஆராய்ந்து பதில் கண்டுபிடிக்கும் படி பேசினார் இயேசு,
ஏன் அவ்வாறு செய்கிறார்?
இயேசு யார் என்பதை அவருடைய கிரியையும், குணாதிசயமும் வெளிப்படுத்தியது... இதை உணராதவன் அவர் தன்னை யார் என்று நேரிடையாக சொன்னாலும் அவனால் நம்பமுடியாது அப்படியே நம்பினாலும் அது மூடநம்பிக்கையாகவே இருக்கமுடியும்.
இன்றைக்கு வாஞ்சையோடு வேதத்தைக்கற்றுக்கொள்ளவும்,கீழ்படியவும் விரும்புகிறவர்களுக்கு தேவன் தன்னுடைய ஆழமான மறைவான சத்தியத்தை அவர்களுக்கு மாத்திரம் வெளிப்படுத்துகிறார் என்பதே உண்மை, இது தேவன் இவர்களுக்கு கொடுக்கும் கணம் என்று கூட சொல்லலாம்.
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனத்திற்கு செவிகொடுக்கிறான்......
அதனால் தான் பவுல் விசுவாசிகளைப் பார்த்து இப்படி ஜெபிக்கிறார்
17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத்தந்தருள வேண்டுமென்றும், வேண்டிக்கொள்கிறேன்……….
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
இந்த இரண்டு வசனங்களும் ஒன்றை தெளிவுபடுத்துகின்றன,,,, என்னதான் வசனம் கொடுக்கப்பட்டாலும் அதை வேறுமனே வாசிப்பதால் பிதாவையும் அறியமுடியாது, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே உள்ள இரகசியத்தையும் உணரமுடியாது.
அப்படியானால் எப்படிதான் அறிந்துகொள்வது?
எழுதித் தரப்பட்ட வசனத்தை பரிசுத்த ஆவியானவர் விளங்கச்செய்கிறார்,,,,, இது எல்லோருக்கும் கிடையாது என்பது மாத்திரம் நிச்சயம்………
ஏன் சில சத்தியங்களை தேவன் நேரடியாக சொல்லவில்லை .... காரணம் அவருக்கு கீழ்படிபவர்களுக்கு அவர் கொடுக்கும் கணம் அல்லது பரிசு எனலாம்…..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|