வேதத்துக்கு செவி கொடு. வீண் வாதத்தை விலக்கிடு!
Tue Aug 11, 2015 12:29 am
ஒரு மனிதன் சந்தையில் கொழுத்த ஒரு ஆட்டை வாங்கினான். அவன் வீட்டுக்கும் சந்தைக்கும் அரை நாள் நடக்கும் தூரம். ஆட்டை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
வழியில் நாலு திருடர்கள் அவனை ஏமாற்றி ஆட்டை அபகரிக்க நினைத்தார்கள்.
அவன் கொஞ்சம் தூரம் நடந்த உடனே அவர்களில் ஒருவன் வந்து ' இந்த நாய் ரொம்ப அழகா இருக்கே ' என்றான். ஆட்டின் சொந்தக் காரனுக்கு சிரிப்பு வந்தது. "ஆட்டைப் போய் நாய்னு சொல்றானே இந்த பைத்தியக்காரன் ". என்றபடி நடந்தான்.
இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் அடுத்தவன் வந்து " நல்ல திடகாத்திரமான கழுதை. இது என்ன விலை? " என்றான். ஆட்டுக் காரனுக்கு சிரிப்புடன் பயமும் வந்தது. ஆட்டை திரும்பிப் பார்த்தான். அது ஆடாகத்தான் இருந்தது. பின்ன ஏன் அவன் இதைக் கழுதைன்னு சொல்றான் ?"
இப்போது அவன் நடக்கும் வேகம் அதிகரித்தது.
இன்னும் சில மணிநேரத்தில் வீட்டை அடைந்துவிடும் தூரம் வந்து விட்டது.
அதற்குள் அடுத்த திருடன் வந்து விட்டான். "என்னய்யா இது. இவ்வளவு பெரிய குதிரையை வைத்துக் கொண்டு எதுக்கு இந்த வெயிலில் நடந்து கஷ்டப் படுற? அதுலயே ஏறிப் போகலாம்ல?" என்றான்.
இப்போது ஆட்டின் சொந்தக்காரன் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்து விட்டான் .
ஆடு ஆடாகத்தான் இருந்தது. ஓட்டமும், நடையுமாக முன்சென்றான். வீட்டை அடைய இன்னும் அரை மணி நேரந்தான். இப்போது நாலாவது திருடன் எதிரே வந்து பயந்து நடுங்குது போல நடித்தபடி அவனிடம் கேட்டான் "இவ்ளோ பயங்கரமான கரடியை ஆட்டுக்குட்டி மாதிரி கட்டி இழுத்துட்டுப் போறியே, நீ மனுஷனா இல்லை வேறெதுமா?" . அவன் கேள்வியை முடிக்கவில்லை.
"ஐயய்யோ! இது ஆடு இல்லை . பிசாசு " என்று ஆட்டை விட்டு விட்டு, அலறி அடித்தபடி திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.
திருடர்கள் சந்தோஷமாய் அவனது முட்டாள்தனம் பற்றிப் பேசியபடியே அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு போனார்கள்.
செல்லமே! இந்த ஆடு மாதிரிதான் நம்முடைய ரட்சிப்பும். திருடிச் செல்லப் பல திருடர்கள் பல பொய்களைச் சொல்லி உன்னைக் குழப்புவார்கள். அதற்கெல்லாம் நீ செவி கொடுத்தால் இப்படித்தான் அருமையான ரட்சிப்பை இழந்து போவாய் . வேதத்துக்கு செவி கொடு. வீண் வாதத்தை விலக்கிடு!
வழியில் நாலு திருடர்கள் அவனை ஏமாற்றி ஆட்டை அபகரிக்க நினைத்தார்கள்.
அவன் கொஞ்சம் தூரம் நடந்த உடனே அவர்களில் ஒருவன் வந்து ' இந்த நாய் ரொம்ப அழகா இருக்கே ' என்றான். ஆட்டின் சொந்தக் காரனுக்கு சிரிப்பு வந்தது. "ஆட்டைப் போய் நாய்னு சொல்றானே இந்த பைத்தியக்காரன் ". என்றபடி நடந்தான்.
இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் அடுத்தவன் வந்து " நல்ல திடகாத்திரமான கழுதை. இது என்ன விலை? " என்றான். ஆட்டுக் காரனுக்கு சிரிப்புடன் பயமும் வந்தது. ஆட்டை திரும்பிப் பார்த்தான். அது ஆடாகத்தான் இருந்தது. பின்ன ஏன் அவன் இதைக் கழுதைன்னு சொல்றான் ?"
இப்போது அவன் நடக்கும் வேகம் அதிகரித்தது.
இன்னும் சில மணிநேரத்தில் வீட்டை அடைந்துவிடும் தூரம் வந்து விட்டது.
அதற்குள் அடுத்த திருடன் வந்து விட்டான். "என்னய்யா இது. இவ்வளவு பெரிய குதிரையை வைத்துக் கொண்டு எதுக்கு இந்த வெயிலில் நடந்து கஷ்டப் படுற? அதுலயே ஏறிப் போகலாம்ல?" என்றான்.
இப்போது ஆட்டின் சொந்தக்காரன் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்து விட்டான் .
ஆடு ஆடாகத்தான் இருந்தது. ஓட்டமும், நடையுமாக முன்சென்றான். வீட்டை அடைய இன்னும் அரை மணி நேரந்தான். இப்போது நாலாவது திருடன் எதிரே வந்து பயந்து நடுங்குது போல நடித்தபடி அவனிடம் கேட்டான் "இவ்ளோ பயங்கரமான கரடியை ஆட்டுக்குட்டி மாதிரி கட்டி இழுத்துட்டுப் போறியே, நீ மனுஷனா இல்லை வேறெதுமா?" . அவன் கேள்வியை முடிக்கவில்லை.
"ஐயய்யோ! இது ஆடு இல்லை . பிசாசு " என்று ஆட்டை விட்டு விட்டு, அலறி அடித்தபடி திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.
திருடர்கள் சந்தோஷமாய் அவனது முட்டாள்தனம் பற்றிப் பேசியபடியே அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு போனார்கள்.
செல்லமே! இந்த ஆடு மாதிரிதான் நம்முடைய ரட்சிப்பும். திருடிச் செல்லப் பல திருடர்கள் பல பொய்களைச் சொல்லி உன்னைக் குழப்புவார்கள். அதற்கெல்லாம் நீ செவி கொடுத்தால் இப்படித்தான் அருமையான ரட்சிப்பை இழந்து போவாய் . வேதத்துக்கு செவி கொடு. வீண் வாதத்தை விலக்கிடு!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|