தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உங்கள் கண்ணீர் எப்படிப்பட்டதாய் இருக்கிறது?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உங்கள் கண்ணீர் எப்படிப்பட்டதாய் இருக்கிறது?  Empty உங்கள் கண்ணீர் எப்படிப்பட்டதாய் இருக்கிறது?

Sat Aug 08, 2015 5:39 pm
கண்ணீர் - மனதில் ஏற்படும் பாரம் கண்ணீரின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சிறிது நேரங்களில், அல்லது நாட்களில் மனது இலகுவாகிறது. தேவன் நமக்கு கொடுத்த மிகபெரிய ஆறுதல் தான் இந்த கண்ணீர். உங்கள் துக்கம் கண்ணீர் என்னும் தண்ணீரினால் கரைகிறது. இந்த கண்ணீர் மனிதர்கள் பல்வேறு காரியத்திற்கு பயன்படுத்துகிறார்கள். 


பிறக்கும் குழந்தை தனக்கு ஏற்ப்படும் வலிகளை அம்மாவிடம் சொல்ல தெரியாது. அது கண்ணீரினால் வெளிப்படுத்தும். வளரும் பிள்ளைகள் பெற்றோரிடம் உள்ள பயத்தை கண்ணீர் மூலம் வெளிப்படுத்துவார்கள். வாலிபர்கள் தங்கள் எதிகால கவலை, காதலில் ஏற்படும் மன வலிகள், நண்பர்களின் ஏமாற்றங்களை கண்ணீரினால் வெளிப்படுத்துவார்கள். குடும்ப வாழ்க்கையில் வரும் ஏமாற்றங்கள் கண்ணீரை வரவழைக்கும். இப்படி மனிதன் கண்ணீரை பல வழிகளில் வெளிப்படுத்தி ஆறுதல் அடைகிறான். ஆனால் வேதாகமத்தில் இந்த கண்ணீர் எதற்காக சிந்தப்பட்டுள்ளது?

பல மனிதர்கள், போதகர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும் கண்ணீர் விட்டதாக இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. (லூக்கா 19:41, 
யோவான் 11:35)

சங்கீதம் 56:8 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

தேவன் உங்கள் கண்ணீரை நினைத்திருக்கிறார். உங்கள் அலைச்சல்களை மறவார். தைரியமாய் இருங்கள். 

சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

நிச்சயம் உங்களுக்கு பதில் உண்டு. மார்த்தாள் கண்ணீரோடு அங்கலாய்த்த போது இயேசு மனதுருகினார். அவர் ஆவியில் கலங்கி கண்ணீர் விட்டார். அவர் நம்மை போல வாழ்ந்தவர். நிச்சயம் நமது வலிகள் அவருக்கு நன்றாய் தெரியும். 

ஏசாயா 25:8 அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்

உங்கள் கண்ணீரை தேவன் துடைப்பார். அவர் உங்களை அவ்வளவாய் நேசிக்கிறார். நீங்கள் கலங்காதபடி உங்களை தம் பட்சத்தில் சேர்த்து கொள்வார். 

வேதாகமத்தில் மற்றவர்களுக்காக கண்ணீர் விட்ட சிலரை கண்டு அதிசயித்தேன். மற்றவர்கள் நன்றாய் இருக்க கண்ணீர் விட்டு ஜெபிக்கும் ஒரே மனிதன் கிறிஸ்தவனாய் தான் இருக்க முடியும்.

II கொரிந்தியர் 2:4 அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்

"அதிக கண்ணீரோடே" என்ற வார்த்தையில் ஆழத்தை பாருங்கள். மற்றவர்களை கொன்று குவிக்கும் மனிதர்கள் மிருகங்கள் என்கிறோம். மற்றவர்களை சந்தோசமாய் வாழ தேவனிடத்தில், திறப்பின் வாயிலில் நிற்கும் இவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறது?

அப்போஸ்தலர் 20:31 ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
II தீமோத்தேயு 1:3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து

மேலே உள்ள வசனத்தை பாருங்கள். ஒரு நாள் இரண்டு நாள் கண்ணீர் அல்ல. மூன்று வருடங்கள். ஒருவன் பாவ வாழ்க்கையில் இருந்து புத்தி அடைவதற்கு. நாம் நம்மை அழ வைப்பவர்களை சிறிது நாட்களில் வெறுத்து விடுகிறோம். ஆனால் இங்கே மூன்று வருடங்கள் கண்ணீரோடு ஜெபித்த வீரர்கள் நமக்கு ஓர் மிகப்பெரிய சாட்சியல்லவா?

பிலிப்பியர் 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

கண்ணீரோடு மற்றவர்கள் தேவனுக்கு விரோதமானவர்கள் என்று கூறும் இவரின் இருதயம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? இன்றும் வேதாகமத்தையும், கிறிஸ்துவின் உருவம் என்ற பெயரில் பல தவறான காரியங்களை பகிர்ந்து வரும் பிசாசின் உள்ளங்கள் எத்தனை எத்தனை? பரிசுத்த வேதாகமம் ஓர் மாயை என்றும், அது போய் என்றும், கிறிஸ்து மரிக்கவில்லை எனவும், கிறிஸ்தவமே கிடையாது என்று கூறும் இருள் நிறைந்த உள்ளங்கள் இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன. இவர்களுக்காக பாரத்தோடு கண்ணீரோடு ஜெபிக்க உங்களிடத்தில் வலிமை உண்டா?

அற்ப காரியங்களுக்காக கண்ணீர் விட்டு பின் தேவனை தூசிக்க துணியும் உள்ளமே..... நீயோ மேலானவைகளை நாடு. அறப்ப சுகங்களுக்காக தேவனை விற்று விடாதே. 

நீ துணிகரமாய் பாவம் செய்து தேவனை தூசிப்பாயானால், அற்ப காரியங்களுக்காக தேவனை விட்டு ஓடுவாயானால் நிச்சயம் நீ சாபத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். இதற்க்கு ஆதாரமாக இரண்டு வசனங்களை தருகிறேன். காலம் கடந்த பின்னர் உன் கண்ணீர் நினைக்கப்படாது. நீ வேதனைப்படுவாய்.

எபிரெயர் 12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்

ஆசீர்வாதத்தை சுதந்திரிக்க நீங்கள் விரும்பியும் நீங்கள் இழப்பது அதிகமாய் இருக்கும் என்று வேதாகமம் கடுமையாய் எச்சரிக்கிறது. பாவத்தோடு விளையாடாதீர்கள், பரிசுத்தத்தில் பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவோடும் விளையாடாதீர்கள். உங்கள் முடிவு நினைத்து பார்க்ககூட முடியாதபடி பரிதாபமாய் இருக்கும். நீங்கள் கவலையோடு தேடியும் மனது மாறாது. 

தேவனுக்கு துரோகம் செய்த யூதா ஜனங்களின் கண்ணீர் கானல் நீரானது. 

மல்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.

தேவனுடைய வழிகளை கைக்கொள்ளாமல், 
வேதாகமத்தை மதியாமல் இருக்கும் ஜனங்கள், 
காதல் என்ற போர்வையில் மயங்கி அந்நிய ஸ்திரீகளை (ரட்சிகப்படாத) மணக்கும் விசுவாசிகள் (வசனம் 11), 
தேவனுக்கு அருவருப்பான காரியங்கள் செய்துவிட்டு (பெண்கள் பின்னால் சுற்றுவது, 
கவர்ச்சியான காரியங்களை தொலைக்காட்சியில் பார்ப்பது, 
வாரத்தில் ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்காமல் தொலைகாட்சி, சினிமா என்று கண்களை மேய விடுவது,
 புகை பழக்கம், மது பழக்கம், மாது பழக்கம், வலைத்தளங்களில் ஆபாசத்தை தேடுவது) 
காணிக்கை கொடுக்கும் நண்பர்கள் ஒன்றும் இல்லாமல் அழிந்து போவார்கள் போவார்கள். அவர்களின் கண்ணீர் வீணாய் கரையும். 


இது வேதாகமம் நமக்கு கொடுக்கும் பயங்கர எச்சரிப்பு.

மல்கியா 2:13. நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.

நான் மேலே கூறிய கேடுகெட்ட செயலை நிர்விசாரமாய் மறுபடியும், மறுபடியும் செய்து விட்டு மீண்டும் தேவனுடைய ஆலயத்தில் வந்து கண்ணீராலும், அழுகையாலும், பெருமூசினாலும் நிரப்பும் யாவரையும் தேவன் வெறுக்கிறார். 

ஆதலால் உங்கள் கண்ணீர் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? 


உலகத்தில் உங்களுக்கு அனேக உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். உலகத்தின் ஆசைகளுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள். உங்கள் ஆத்துமா பரிசுத்தம் பண்ணப்படவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.

வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum