யார் தந்தது?
Fri Apr 24, 2015 7:20 pm
அந்த கிராமத்தில் இருந்த பெரிய ஆலயத்துக்கு வயதான பெண்மணி ஒருவர் அனுதினமும் வருவது வழக்கம். ஆலயத்தின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வநத ராமலிங்கம் வடிகட்டின நாத்திகர். அவருக்கு சற்றேனும் கடவுள் நம்பிக்கையே கிடையாது.
ஆலயத்துக்கு தவறாமல் வரும் அந்த வயதான பெண்மணியை கிண்டல் செய்வது ராமலிங்கத்தின் வாடிக்கை. ஆனால் அந்த வயதான அம்மையாரோ அதை பெரிதுபடுத்துவதில்லை.
ஒரு நாள் ஆலயத்துக்குள் நுழையும் போது அந்த அம்மையார் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ராமலிங்கம் கடை வாசலிலேயே மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த ராமலிங்கம் கடையில் வேலை பார்க்கும் பையனிடம் சோடா கொடுத்து அனுப்பினார். "யார் இதை தந்து உதவினார்கள் " என மூதாட்டி கேட்பார். அதற்கு "கடவுள் கொடுக்கவில்லை, பிசாசு தான் கொடுத்து அனுப்பினான்" என்று சொல்லச் சொன்னார் .
அந்தப் பையனும் அவ்வாறே மூதாட்டியை தூக்கி அமர்த்தி சோடாவை குடிக்கக் கொடுத்தான். சோடாவை குடித்ததும் மூதாட்டி நன்றி சொல்லிவிட்டு ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் .
கடைப் பையன் அவளை நிறுத்தி "பாட்டியம்மா இந்த சோடாவை யார் தந்தார்கள் என கேட்க மாட்டிர்களா ?" என வினவினான்.
பாட்டி புன்முறுவலுடன் "ஆண்டவர் கட்டளையிட்டால் பிசாசு கூட கீழ்படியும்" என சொல்லி கடந்து போனார்.
கடைக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ராமலிங்கத்தின் முகம் சுருங்கியது.
ஆலயத்துக்கு தவறாமல் வரும் அந்த வயதான பெண்மணியை கிண்டல் செய்வது ராமலிங்கத்தின் வாடிக்கை. ஆனால் அந்த வயதான அம்மையாரோ அதை பெரிதுபடுத்துவதில்லை.
ஒரு நாள் ஆலயத்துக்குள் நுழையும் போது அந்த அம்மையார் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ராமலிங்கம் கடை வாசலிலேயே மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த ராமலிங்கம் கடையில் வேலை பார்க்கும் பையனிடம் சோடா கொடுத்து அனுப்பினார். "யார் இதை தந்து உதவினார்கள் " என மூதாட்டி கேட்பார். அதற்கு "கடவுள் கொடுக்கவில்லை, பிசாசு தான் கொடுத்து அனுப்பினான்" என்று சொல்லச் சொன்னார் .
அந்தப் பையனும் அவ்வாறே மூதாட்டியை தூக்கி அமர்த்தி சோடாவை குடிக்கக் கொடுத்தான். சோடாவை குடித்ததும் மூதாட்டி நன்றி சொல்லிவிட்டு ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் .
கடைப் பையன் அவளை நிறுத்தி "பாட்டியம்மா இந்த சோடாவை யார் தந்தார்கள் என கேட்க மாட்டிர்களா ?" என வினவினான்.
பாட்டி புன்முறுவலுடன் "ஆண்டவர் கட்டளையிட்டால் பிசாசு கூட கீழ்படியும்" என சொல்லி கடந்து போனார்.
கடைக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ராமலிங்கத்தின் முகம் சுருங்கியது.
Re: யார் தந்தது?
Fri Apr 24, 2015 7:20 pm
ஒரு நாத்திகன் ஒரு சிறுவனிடம் போய்,
"உனக்கு 1000 ரூபாய் தருகிறேன். நீ கடவுள்
எங்கே உள்ளார் என்று எனக்கு காட்ட
வேண்டும்" என்றானாம்.
அச்சிறுவன் புன்முறுவலுடன், அவனிடம்
1000 ருபாய் திருப்பி கொடுத்துவிட்டு,
"உங்களுக்கு 2000 ரூபாய் தருகிறேன். கடவுள்
எங்கே இல்லையென்று உங்களால் சொல்ல
முடியுமா?" என்றான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஒரு
சிறுமி, ஓடி வந்து அவர்களிடம்,
"கடவுள் இல்லாத இடம் உண்டு. அது நரகம்.
மரியாதையா 3000 ரூபாய் குடுத்துட்டு ரெண்டு
பேரும் ஓடி போய்டுங்க". என்றாளாம்.
"உனக்கு 1000 ரூபாய் தருகிறேன். நீ கடவுள்
எங்கே உள்ளார் என்று எனக்கு காட்ட
வேண்டும்" என்றானாம்.
அச்சிறுவன் புன்முறுவலுடன், அவனிடம்
1000 ருபாய் திருப்பி கொடுத்துவிட்டு,
"உங்களுக்கு 2000 ரூபாய் தருகிறேன். கடவுள்
எங்கே இல்லையென்று உங்களால் சொல்ல
முடியுமா?" என்றான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஒரு
சிறுமி, ஓடி வந்து அவர்களிடம்,
"கடவுள் இல்லாத இடம் உண்டு. அது நரகம்.
மரியாதையா 3000 ரூபாய் குடுத்துட்டு ரெண்டு
பேரும் ஓடி போய்டுங்க". என்றாளாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|