பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
Sat Feb 14, 2015 6:36 pm
* பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் நடந்த சில நிமிடங்கள் தனது உறவினர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* நேரத்தை வீணாக்காமல் உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். குறிப்பாக புகார் மனுவை டைப்பிங் செய்யாமல் முடிந்தவரை தனது கைப்பட எழுதி கொடுப்பது நல்லது. ஒருவேளை புகார் மனு எழுதி கொடுக்கும் மனநிலையில் பாதிக்கப்பட்ட பெண் இல்லாத சமயத்தில் போலீஸ் அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவிக்க வேண்டும். அவர் மனு எழுதியபின் கையெழுத்து போடுவதற்கு முன் படித்து பார்த்து, தான் கூறிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்துகொண்டபின் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண் அந்த சமயத்தில் புகார் கொடுக்க முடியாமலோ அல்லது பேசுவதற்கு முடியாத சமயத்தில் அவளின் பெற்றோர், உறவினர்கள் அல்லது நலம் விரும்பிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தான் கண்ட சம்பவங்களை புகார் மனுவாக எழுதி கொடுக்கலாம்.
* குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது உறவினர்கள் புகார் கொடுத்தபின், அதன் நகலை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியின் கையெழுத்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை நடக்கும் வரை குளிக்கவோ, அவர் அணிந்திருந்த ஆடைகளை துவைக்கவோ கூடாது.
* முடிந்த வரை விரைவாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. மருத்துவ பரிசோதனை சமயத்தில் தனக்கு நடந்த அநியாயம் குறித்து முழுமையாகவும், தெளிவாகவும் டாக்டர்களிடம் தெரிவிக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர் பேச முடியாத பட்சத்தில் உடன் செல்வோர் சம்பவம் குறித்து முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு விசாரணை:
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் புகார் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போது பிற வழக்குகள் எப்படி திறந்தவெளி நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடக்கிறதோ அதுபோல் நடக்காமல், நீதிபதியின் அறையில் ரகசியமாக நடக்கும். அதில் பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவிப்பார். மேலும் இது தொடர்பாக சாட்சி கொடுப்பவர்களிடம் ரகசியமாக வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
* பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையின் போது சம்மந்தப்படாத நபர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதிக்கப்படும் பெண், குற்றவாளி, இரு தரப்பு வக்கீல்கள், சாட்சிகள் மற்றும் சம்மந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணையின் விவரங்களை பத்திரிக்கை மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள் செய்தியாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக சாட்சி கொடுப்போர் எந்தவித அச்சமில்லாமல் தைரியமாக நீதிமன்றம் வந்து சாட்சி கொடுக்கலாம். சாட்சிகள் சரியான நேரத்தில் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்யாமல் போகும் பட்சத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க நேரிடும். இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநியாயம் ஏற்படுத்தும். இந்நிலையை சமூக அக்கரை உள்ளவர்கள் செய்யாமல், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்.
* நேரத்தை வீணாக்காமல் உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். குறிப்பாக புகார் மனுவை டைப்பிங் செய்யாமல் முடிந்தவரை தனது கைப்பட எழுதி கொடுப்பது நல்லது. ஒருவேளை புகார் மனு எழுதி கொடுக்கும் மனநிலையில் பாதிக்கப்பட்ட பெண் இல்லாத சமயத்தில் போலீஸ் அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவிக்க வேண்டும். அவர் மனு எழுதியபின் கையெழுத்து போடுவதற்கு முன் படித்து பார்த்து, தான் கூறிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்துகொண்டபின் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண் அந்த சமயத்தில் புகார் கொடுக்க முடியாமலோ அல்லது பேசுவதற்கு முடியாத சமயத்தில் அவளின் பெற்றோர், உறவினர்கள் அல்லது நலம் விரும்பிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தான் கண்ட சம்பவங்களை புகார் மனுவாக எழுதி கொடுக்கலாம்.
* குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது உறவினர்கள் புகார் கொடுத்தபின், அதன் நகலை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியின் கையெழுத்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை நடக்கும் வரை குளிக்கவோ, அவர் அணிந்திருந்த ஆடைகளை துவைக்கவோ கூடாது.
* முடிந்த வரை விரைவாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. மருத்துவ பரிசோதனை சமயத்தில் தனக்கு நடந்த அநியாயம் குறித்து முழுமையாகவும், தெளிவாகவும் டாக்டர்களிடம் தெரிவிக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர் பேச முடியாத பட்சத்தில் உடன் செல்வோர் சம்பவம் குறித்து முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு விசாரணை:
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் புகார் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போது பிற வழக்குகள் எப்படி திறந்தவெளி நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடக்கிறதோ அதுபோல் நடக்காமல், நீதிபதியின் அறையில் ரகசியமாக நடக்கும். அதில் பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவிப்பார். மேலும் இது தொடர்பாக சாட்சி கொடுப்பவர்களிடம் ரகசியமாக வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
* பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையின் போது சம்மந்தப்படாத நபர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதிக்கப்படும் பெண், குற்றவாளி, இரு தரப்பு வக்கீல்கள், சாட்சிகள் மற்றும் சம்மந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணையின் விவரங்களை பத்திரிக்கை மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள் செய்தியாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக சாட்சி கொடுப்போர் எந்தவித அச்சமில்லாமல் தைரியமாக நீதிமன்றம் வந்து சாட்சி கொடுக்கலாம். சாட்சிகள் சரியான நேரத்தில் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்யாமல் போகும் பட்சத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க நேரிடும். இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநியாயம் ஏற்படுத்தும். இந்நிலையை சமூக அக்கரை உள்ளவர்கள் செய்யாமல், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|