தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மதமாற்றமும் - ஒபாமாவின் மடைமாற்றமும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மதமாற்றமும் - ஒபாமாவின் மடைமாற்றமும் Empty மதமாற்றமும் - ஒபாமாவின் மடைமாற்றமும்

Sun Feb 01, 2015 11:36 pm
கவிஞர் கலி. பூங்குன்றன்
மதமாற்றமும் - ஒபாமாவின் மடைமாற்றமும் Sphoto1

பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் வந்தது -_ இந்துத்துவ வாதிகள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டனர் மூர்க்கத்தனமான கொம்பு முளைத்துவிட்டது அவர்களுக்கு.
இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தாம். ஒருவர் முஸ்லீமாக இருக்கலாம், கிறிஸ்தவர்களாகவோ இருக்கலாம், அதைப் பற்றிக் கவலை யில்லை. இந்த நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே! இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பகவத் பச்சையாக பாசிசத்தின் ஈட்டியாக வார்த்தைகளைக் கொட்டிவருகிறார்.
இந்துக்களாக மாற்றுவதை யாரும் தவறு என்று கூறினால், அந்தத் தவறை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று 2015 ஜனவரி 5, 6, 7 நாட்களில் அகமதா பாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் தம் ஆர்ப்பாட்டமான அநாகரிக முகத்தைக் காட்டினார்.
மதமாற்றத்திற்கே புது இலக் கணத்தைத் தந்துள்ளார் ஆர்.எஸ். எஸின் அந்தப் பிதாமகன்.
இந்து மதத்திற்கு மாறுவது தவறல்ல; அது வழி தவறி வேறு மதத்திற்குச் சென்றவர்கள் தங்கள் தாய் மதம் திரும் புவதை மதமாற்றம் என்று சொல்லக் கூடாது. இந்துக்கள் பிற மதம் மாறுவது தான் மதமாற்றம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மூர்க்கத்தனத் தின் முற்றிப்போன பேர்வழியாக ஆக்ராவில் அக்னிப் பிழம்பாக வார்த்தைகளைக் கொட்டினார்.
தலையே இப்படி ஆடினால், அதன் வால்கள் எப்படியெல்லாம் அவிழ்த்துப் போட்டு ஆடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டாம். இதன் தீய விளைவே மதமாற்றம் என்ற தீ மூட்டப்பட்ட தற்கான உந்து சக்தியாகும்.
பி.பி.சி.யின் மூத்த பத்திரிகையாளர் ஷாகித் சுபேர் அகமத் சமீபத்தில் ஒரு செய்தியை ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி கூறியிருந்தார். அதில் இந்தி யாவில் அந்நிய மதங்களான கிறிஸ் தவமும் இஸ்லாமும் நுழையும் முன்பு எத்தனை மதக் கொள்கைகள் இருந்தன என்று தெளிவாக விளக்கி இருந்தார். அவையாவன:
சனாதனம் என்ற பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மதம். சைவம் என்ற சிவனை வணங்கும் ஒரு மதம், வைணவம் என்ற விஷ்ணுவை வணங் கும் ஒரு மதம், நல்ல கருத்துகளைச் சொன்னவர்களை தொன்று தொட்டு வணங்கும் ஒரு மதம் மற்றும் வீட்டில் இறந்த முதியவர்களைத் தொன்று தொட்டு வணங்கும் ஒரு மதம், சமக்யா மதம், யோகமதம், நாயக, விஷசிக, பூர்வா, மற்றும் நதிகளை வணங்கும் பிரிவினரின் மதம் என 2500க்கும் மேற்பட்ட மதங் களைக் கூறியுள்ளார்.
இவையெல்லாம் அப்போது பெரு வாரி மக்கள் பின்பற்றிய மதங்கள் இன்னும் எத்தனையோ! தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, குடும்பத்தில் மூத்த உறுப்பினர் மரண மடைந்துவிட்டால் அவர்களை வணங் கும் முறை, திருமணமாகாத மூத்த பெண் குழந்தை மரணமடைந்தால் அக் குழந்தையை கன்னித் தெய்வம் என வணங்கும் முறை என்று பல இருந்தன.
இதில் முற்றிலும் தனித்து விளங் கியது சனாதனம் மட்டுமே, இந்தச் சனாதனத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆரியர்கள். ஆகையால்தான் இன்றும் தங்கள் உடலைச் சுற்றி ஒரு நூலைப் போட்டு கோடானு கோடி மக்களிடம் இருந்து தங்களைத் தனித்துக் காண் பிக்கும் ஒரு திமிர்த்தனமான போக்கு அவர்களிடமுள்ளது.
வெள்ளைக்காரர்கள் தங்களது நிர்வாக வசதிக்காக அனைத்துப் பிரிவு மதங்களையும் இந்து என்ற குடையின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் சனாதனிகள் தங்களின் பிழைப்பிற்காக பாமர மக்களின் வழிபாட்டு முறையை தங்களதாக்கிக் கொள்ள அவற்றைக் கைப்பற்றி அங்கே தங்களது கொள் கையை வைத்தனர்.
சிந்து நாகரிகம் அழியப்பெற்று கங்கைச் சமவெளி மற்றும் தக்காணத் திலும் மக்கள் வாழத்துவங்கிய கால கட்டத்தில் (கி.மு.2000) மத்திய ஆசிய புல்வெளிகளில் வாழ்ந்த நாடோடிகள் கைபர் போலன் வழியாக இந்திய தீபகற்பத்திற்குள் நுழைந்தனர்.
கிறிஸ்து பிறப்பதற்குமுன் 1000 ஆண்டு களுக்குள் அவர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. உடலுழைப்பு இல்லாமல் ஏமாற்றிப் பிழைக்க திட்டமிட்டு அவர்களாகவே சில மதக் கோட்பாடுகளை உருவாக்கி, தங்கள் விருப்பம் போல் எழுதாத சட்ட மாக்கினர். இவர்களின் பிடியில் சிக்கிய மக்களைக் காப்பாற்றத்தான் இந்தி யாவிலேயே முதலில் சமணமும் பின்பு பவுத்தமும் மலர்ந்தன.
சமண, பவுத்த தாக்கம் என்பது - வேதனையின் விளிம்பில் இருந்த இந்தியத் துணைக் கண்ட மக்களுக்கு ஆறுதல் தரும் சோலையாக இருந்தது. இதன் விளைவாக பவுத்தம் தோன்றிய சில நூற்றாண்டுகளிலேயே இந்தியா முழுவதும் பரவிவிட்டது, இந்தியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசிய நாடு களிலும் பவுத்தம் பரவிவிட்டது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு கொள்கைகளுடன் வாழ்ந்த மக்கள் முதல்முதலாக சமண பவுத்த கொள்கைகளை தங்கள் கொள்கை களாக உடனடியாக ஏற்றுக்கொண் டனர். 800 ஆண்டுகள் ஆண்ட இஸ் லாமும், 250 ஆண்டுகள் ஆண்ட கிறிஸ் தவமும் இந்தியா முழுவதும் பரவ வில்லை. ஆனால் புத்தர் வாழ்ந்த 80 ஆண்டுகளுக்குள் புத்த கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்களின் வாழ்வியல் நெறி முறையை ஒற்றிய வகையில் உருவானதே பவுத்த, சமணக் கொள்கைகள் ஆகும்.
பவுத்த சமணங்கள் சிறந்து விளங் கியபோது சனாதனம் இல்லாமல் போய் விட்டது. அசோகர் காலத்திய ஒரு கல் வெட்டு ஒன்று கூறுகிறது. பிக்குகளுக்குப் பிச்சை இடுவதை பெருமையாகக் கருதிய மக்கள் பார்ப்பனர்களை பெருமளவு வெறுத்தனர் என்று கூறுகிறது. அந்த அளவிற்கு  பார்ப்பனீயக் கதை தீ நாற்றம் எடுத்துப் போயிற்று!
மிகவும் இழி நிலைக்குச் சென்ற பார்ப்பனர்கள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள எடுத்த ஓர் ஆயுதம் மதமாற்றமாகும். அசோகனின் ஆட்சிக்குப் பிறகு எந்த ஒரு நியா யத்தையும் பார்க்காமல் சனாதனம் தனது கோரத்தைக் காட்டியது. முதலில் பெண் ணாசைக்குப் பலியான மன்னர்களின் மூலம் சிறிய சிறிய பகுதிகளைக் கையில் வைத்துக்கொண்டு பிறகு இந்திய தீபகற்பம் முழுவதையும் தனது கையில் கொண்டுவந்தனர். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்ற தந்திரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பொம்மை அரசர்களை அமரவைத்து அவர்களின் பின்புலத்தில் இருந்து ஆட்டிப் படைத்தனர்.
தங்களின் சனாதனத்தையே மக்களுக் காக பல்வேறு வகையாக பிரித்தனர். அதில் வைணவம் சைவம் போன்றவை பிரபலமாகின. இவற்றின் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டில் மது ரையில் நடந்த சமண மற்றும் பவுத்த மதத்தினரின் கொலைகள் பற்றி கல்வெட்டுச் சுவரோவியம் விழாக்களாக இன்றும் வழங்கி வருகின்றன.
இந்தியாவெங்கும் சனாதனிகளின் வெறியாட்டம் நடைபெற்றது.
மதமாற்றமும் - ஒபாமாவின் மடைமாற்றமும் Sphoto4
எடுத்துக் காட்டாக இரண்டாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தை ஆண்ட மன்னர்கள் ஒரு பவுத்த பிக்குவின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் 10 பொற்காசுகளும ஒரு பவுத்த குடும்பத்தைக் கொலை செய்தால் அதற்கேற்ற சன்மானமும் தரப்படும் என்று தண்டோரா போட்ட தகவல்கள் ஏராளம். அதேநேரத்தில் கர்நாடகத்தில் ஒரு கல்வெட்டு காணப் படுகிறது. சமண பவுத்த மதக் கொள் கைகளை விட்டு நால்வருணக் கொள் கையை ஏற்றுக் கொள்பவர்கள் சமூகத் தில் உயர்ஜாதியினராக வைக்கப்படு வார்கள் என்ற அறிவிப்பால் கவுடா, காயக்வாட், கனாபூரே, ரெட்டி, ஒக்காரா, வியாஸ் போன்றவர்கள் வருணாஸ் ரமத்தை ஏற்றபிறகு சமூகத்தில் உயர் ஜாதியினராக ஆக்கப்பட்டனர். அவர் களுக்குப் பின்பு சனாதனிகளின் வர்ணக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் சூத்திரர்களாக ஆக்கப் பட்டனர். அய்ந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கொடூரமான சனாதனக் கொள்கைகள் மூலம் நாடு முழுவதும் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில்தான் 8ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மற்றும் 14ஆம் நூற்றாண்டில் வந்த கிறிஸ்தவ பாதிரி களின் சேவை _ வருண பேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. இதன் காரண மாக பெருவாரியான மக்கள் வருண பேதத்தில் இருந்து தப்பிக்க இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள். இதன் காரணமாக முக்கியமாக தென் மாநிலங்களில் கல்வித்தரம் உயர்ந்தது.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின்போது இந்தியாவில் சமூகப் பிளவு பெருவாரியாக குறைந்தது. தென் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவுடன் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. தெற்கே தந்தை பெரியார், வடக்கே பாபாசாகேப் அம்பேத்கர் போன்றோர் தோன்றி னார்கள்.
இந்திய வரலாற்றை நன்கு பார்த்தோ மென்றால் வருணாஸ்சிரமக் கொடுமை யிலிருந்து தப்பிக்கவே அந்நிய மதங்களை ஏற்றுக்கொண்டனர். மேலும் கல்வி, சமூகத்தில் மதிப்பு போன்றவை அந்நிய மதங்களில் கிடைத்தபடியால் மதம் மாறத் தொடங்கினர்.
மதமாற்ற வரலாற்றைப் பார்க்கும் போது அசோகரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை _ வரலாற்றை ஊன்றிப் படித்த அம்பேத்கரும் கொண்டுவர முற்பட்டார். ஆனால் அவருக்குப் பின் அவரது கொள்கைகளை சரிவர பின் பற்றாத காரணத்தால் மீண்டும் தாழ்த் தப்பட்ட மக்கள் வருணாஸ்சிரமத்தின் பிடியில் சிக்கி இன்றளவும் மீளாத துயரத்தில் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் இந்து அமைப்புகளின் ஊதுகுழலான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மீண்டும் வருணாஸ்சிரம மனுச் சட்டத்தைக் கொண்டு வரும் வகையில் தாய்மதம் திரும்புதல் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கி விட்டனர் என்று பி.பி.சி.யின் மூத்த பத்திரிகையாளர் ஷாகித் சுபேர் அகமத் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் வல்சாத்தில் உள்ள ஆராணை என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் உள்ள 17 கிறிஸ்தவ குடும்பத்தினர் அனைவரும் இந்துக் களாக மாற்றப்பட்டனர். இந்த விழாவை முன்னின்று நடத்திய குஜராத் விஷ்வ இந்து பரிஷத் கூறும்போது விரைவில் இந்துக்கள் மட்டும் வாழும் குஜராத்தாக மாற்றுவோம் என்று கூறியுள்ளது.
ஆக்ராவில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி நடந்த மதமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து வடஇந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் மதமாற்ற நிகழ்ச் சியைத் தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல், இது மாநில அரசின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்று கூறி கைகழுவிவிட்டது. இவ்விவகாரம் குறித்து கொல்கத்தாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மதமாற்றம் தொடர்ந்து நடக்கும் _ முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விட்டார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி யினர் கிராமத்தில் 17 குடும்பங்கள் கிறிஸ் தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளதாக குஜராத் மாநில விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
அமைப்பின் குஜராத் தலைவர் நாதுராம் பாட்டீல் கூறியதாவது குஜராத் மாநிலத்தில் இந்து மதம் திரும்புவோருக்கு நாங்கள் அனைத்து வசதியும் செய்து தருகிறோம். கிறிஸ்தவ மதத்தினரால் ஏமாற்றப்பட்டு அனை வரும் வேற்று மதத்திற்குச் சென்றுள் ளனர். அவர்களை நாங்கள் தாய்மதம் திரும்ப அழைப்பு விடுத்துள்ளோம். ஆகையால் அவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர் என்று கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி கிறிஸ்தவ மத குருவான டொமினிகன் பிரின்ஸ் என் பவர் கூறும்போது கடந்த சில மாதங் களாகவே இங்குள்ள கிறிஸ்தவ மக் களுக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை, மேலும் கடைகளில் பொருட்களும் வழங்க மறுத்துவிட்டனர். அப்படி கொடுத்த சில கடைகளிலும் சில இந்து அமைப்புகள் மிரட்டல் விடுக்கத் தொடங்கினர்.
இந்த மக்களுக்கு வாழ்வாதாரம் என்பது கூலித்தொழில்தான். அந்தத் தொழில் நிறுத்தப்படும்போது அவர் களுக்கு உணவுக்குக்கூட வழியில்லாமல் போய்விடுகிறது. மேலும் அரசு சார்பாக கொடுக்கப்படும் உதவிகளும் மறை முகமாக நிறுத்தச்சொல்லி இந்து அமைப் புகள் மிரட்டல் விட்டதன் காரணமாக அம்மக்கள் சொல்லொணாத் துயரத் திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் மதம் மாறினால் உங்களுக்கு எல்லா சலுகை களும் தருகிறோம் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினால் நேரடியாகவே ஏமாற்று வார்த்தைகள் கூறப்பட்டன. இதன் காரணமாக வேறு வழியின்றி பல்வேறு குடும்பங்கள் அவர்களின் கட் டளைக்கு அடிபணிய வேண்டியுள்ளது. மதம் மாற மறுத்த சிலருக்கு தற்போது சில இந்து அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டு இருக் கின்றன என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் தரம் ஜக்ரன் சமிதி என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இது இந்துத்துவ அமைப்பின் பிரச்சார பிரிவாகும். இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களில் இரக சியமாக வினியோகிக்கப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது: பாரதம் தற்போது தான் சுதந்திரம் பெற்றுள்ளது. இந்தச் சுதந்திரத்தை ஒவ்வொரு இந்துவும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இனி இந்த நாட்டில் வேறு மதத்தவர் என்று யாரும் இருக்கக்கூடாது.
வேற்று மதங்களில் உள்ள ஏழை களை இந்துக்களாக மாற்றினால் விரை வில் வேற்று மதத்தவர்களின் எண் ணிக்கை உடனடியாக குறைந்துவிடும். ஏழைகளுக்குச் சலுகைகள் தரவேண்டும், நமது அரசின் திட்டங்களை கையில் வைத்துக்கொண்டு அவர்களை அணுக வேண்டும். முக்கியமாக மதம் மாறு பவர்களில் முஸ்லீம்களாக இருந்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும். கிறிஸ்தவர்களாக இருந்தால் அவர் களுக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அதில் இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில்நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வது குறித்து யாரும் பயப்பட வேண்டாம். எதற்கும் நமது இந்துப் படையும் நமது அரசும் தயாராக இருக்கின்றன என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் முகலாய மன்னர் களைப் பற்றியும் கிறிஸ்தவ மிசினரிகளைப் பற்றியும் பல் வேறு கற்பனைக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கடிதம் மேற்கு உத்தரபிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மதக் கலவரத்தால் பாதிக் கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பிய முசாபர் நகரிலும விநியோகிக்கப்பட்டது.
அக்கடிதத்தில் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் என்ற பெயருடன் பணத் தேவை என்றால் தொடர்புக்கு என ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியான பிறகு அந்தத் தொடர்பு எண் இயங்கவில்லை.
இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின ரிடம் கேட்டபோது, நாங்கள்தான் இதை முன்னிறுத்திச் செய்கிறோம். இதை நாங்கள் கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறோம். தற்போது ஊடகங் கள்தான் இதைப் பெரிதுபடுத்தி ஆதாயம் பார்க்கின்றன. இதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அலிகர் நகரில் எங்கள் நிகழ்ச்சி கட்டாயம் நடைபெறும். அலிகரில் மாத்திரமல்ல உத்தரபிரதேசம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும்; எங்களை யாரும் தடுக்க முடியாது என்ற கூறியுள்ளனர். மேலும் பல்வேறு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று தாய்மதம் திரும்பும் பிரச்சாரம் செய்யவிருக்கிறோம். இது எங்கள் உரிமை என பதில் கூறியுள்ளனர்.
சிறுபான்மையினரை ஏமாற்றிப் படமெடுத்து மதம் மாறியதாக கூறிய இந்துத்துவ அமைப்புகளின் மோசடி அம்பலம். நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் உள்ள ஹரிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 387 முஸ்லீம்களை இந்துமதத்திற்கு வற் புறுத்தி மாறவைத்த பஜ்ரங்க தளத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள ஹரிபூர் என்ற கிராமத்தில் இருந்து 56 கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாறப் போவதாகவும் அவர்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக் கான முஸ்லீம்கள் இந்துமதத்திற்கு வரப்போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஆக்ரா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பஜ்ரங்தள் அமைப் பினரால் விளம்பரம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஹரிபூர் கிராமத்தில் தொடர்ந்து யாகங்களும் பூசைகளும் செய்யப்பட்டு 56 கிறிஸ்தவர்கள் இந்து மதத்தவர்களாகிவிட்டதாக பஜ்ரங் தள் அமைப்பு அறிவித்தது.
387 முஸ்லீம்கள் இந்துமதத்திற்கு மாறிவிட்டதாக அறிவித்தனர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்றும் ஆசை காட்டி போட்டோவிற்காக அவர் களை ஏமாற்றியது தற்போது தெரியவந் துள்ளது. இந்துக்களாகிவிட்டனர் என்று கூறப்பட்ட அனைத்து இஸ்லாமியர் களும் அன்று மசூதியில் தொழுகை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து பத்திரிகையாளர் களுடன் பேசிய மதம் மாறியவர் என்று கூறப்படும் ஒருவரான இஸ்மாயில் கூறும்போது தற்போதுள்ள அரசு பி.பி.எல். கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் தருவ தாகவும் இதன் மூலம் மற்ற அனைத்து அரசு உதவிகளும் அளிக்கப்படும் என்று கூறினார்கள்.
மேலும் இலவச வீடுகள் கட்டித் தருவதாகவும் கூறினார்கள். இதனால் நாங்கள் அனைவரும் ஊர் பஞ்சாயத்தின் முன்பு சென்றோம். அங்கு யாகம் செய்துகொண்டு இருந்தவர்கள் எங்களை வற்புறுத்தி கலந்துகொள்ளச் செய்தனர். அந்த யாகத்தில் எங்கள் கையில் இந்து சாமிப்படங்களைக் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். அதன் பிறகு எங்களுக்கு வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான ரேசன் அட்டையைத் தந்தனர். பிறகு சிலருக்குப் பணமும் தந்தனர். எவ்வளவு பணம் என்று எங்களுக்குத் தெரியாது. எங்களை அழைத்து வந்தவர் பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டார்.
மறுநாள் எங்கள் படங்களுடன் நாங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட்ட தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்களை ஏமாற்றும் செயலாகும் என்று தெரிவித்தனர். மேலும் எங்களை இந்து என அறிவித்த பஜ்ரங் தள் அமைப்பின் மீது வழக்குத் தொடர்வோம் என்றும் கூறினார்.
இஸ்மாயிலின் மனைவி மோனிரா பேகம் கூறியதாவது: கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதிக்கு வந்து அதிகாரிகள் வரப் போவதாகவும், எங் களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்போவதாகவும் அதிகாரிகள் வரும்போது நீங்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் சிலர் உருது மொழியில் கைப்பிரதிகளைத் தந்தனர். மேலும் இந்தப் பகுதியில் ஒரு கோவில் கட்ட அரசு அனுமதி அளித்துள்ள தாகவும் அதற்கு எனது கணவரிடம் (இஸ்மாயில்) வெள்ளைத் தாளில் கையெ ழுத்து வாங்கினர். இந்தப் பகுதியில் கோவில் கட்டினால்தான் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உங்களுக்கு சலு கைகள் கொடுக்கும் என்றும் கூறினார். இதனடிப்படையில் இவர்களின் பேச்சை நம்பி எனது கணவருடன் பிறரும் சென்றனர். ஆனால் பத்திரிகையில் வந்த பிறகுதான் தெரிந்தது எங்களை ஏமாற்றியுள்ளனர் என்று கூறினார்.
இந்துக்களாக மாறிவிட்டனர் என பஜ்ரங் தள் அமைப்புகளால் கூறப்பட்ட
56 கிறிஸ்தவர்களும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் பகுதியில் கிறிஸ்தவப் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இதற்கான விளையாட்டு மைதானம் தொடர்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தோம். திடீரென சிலர் எங்களிடம் வந்து மத்திய அரசு பள்ளிக்கூடத்திற்கு சில சலு கைகள் செய்திருக்கிறது. எங்களிடம் வந்தால் அவை எல்லாம் உடனடியாக கிடைத்துவிடும் என்று கூறி அழைத்துச் சென்றனர்.
மற்றபடி நாங்கள் மதம் மாறவில்லை. எங்களில் யாரும் இந்துக்கள் இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பஜ்ரங்தள் அமைப்பின் இந்தப் பொய்முகம் அம்பலமாகிவிட்டது கூடத் தெரியாமல் உத்தரப்பிரதேசம் முழுவதும் இதோ இவர்கள் தங்களது தாயை அடை யாளம் கண்டுக்கொண்டனர். நீங்களும் உடனடியாக இந்து மதத்திற்கு வந்து விடுங்கள். இந்த மோடி அரசு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்யும்; நீங்கள் எப்போது? என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை அடித்து ஒட்டிவைத்துள்ளனர்.
கட்டாய மதமாற்றம் தொடர்பான பஜ்ரங் தள் அமைப்பின் மோசடி நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இவ்விவகாரம் குறித்து நாடாளு மன்றத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரப்பிர தேசத்தில் இந்துத்துவ அமைப்புகள் கட் டாய மதமாற்றம் செய்து வருகின்றனர். மேலும் சிறுபான்மை மக்களிடையே பொய்யான செய்தியைப் பரப்பியும், மிரட்டியும், ஆசைகாட்டியும், மத மாற்றம் செய்து வருகின்றனர் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான திக்விஜய்சிங்கும் இந்துத்துவ அமைப்பின் இந்த மோச டியைக் கண்டித்துப் பேசினார். இது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் தரவேண்டும் என்று கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக கம்யூ னிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிரடி
இந்த நிலையில் இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் விழாவில் பங்கு கொள்ள மூன்று நாட்கள் வருகைதந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இறுதி நாளில் (27.1.2015) டெல்லியில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் இந்தியாவில் தறிகெட்டு நிர்வாண கூத்தாடும் மதவாதத்தின் மண்டையில் அடிப்பதுபோல கருத்தினை முன் வைத்தார். மதவாதம் இந்தியாவின் வளர்ச்சியை அழித்துவிடும் என்று எச்சரித்தார்.
இந்தியாவில் அதிகார பலத்தால் மேற்கொள்ளப்படும் மதமாற்றம் பற்றியும் சவுக்கடி கொடுத்தார்.
ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்று வதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும். அது தனிப் பட்ட மனிதருக்குரிய உரிமையும், அதிகாரமும் ஆகும். மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தி விடும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்துத்துவ வாதிகளின் இரு கன்னங்களும் பழுக்க கருத்துச் சூடு போட்டாரே!
இதற்குப் பிறகாவது இந்தியப் பிரதமர் பாடம் கற்றுக் கொள்வாரா? சங்பரிவார்கள் சரியான பாதைக்கு திரும்புவார்களா?
ஒபாமாவின் இந்தக் கருத்து உலகம் முழுவதும் எதிரொலிக் கும் ஆற்றல் வாய்ந்தது என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
அமெரிக்க அதிபருக்கு மூன்று நாள் விருந்து வைத்து உபசரித்திருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்து, சொல்ல வேண்டியதைச் சொல்லியே தீர வேண் டும் என்று சொன்ன அந்த அறிவு நாண யத்தைப் போற்றத்தான் வேண்டும்.
------------------
[size=16]துக்ளக்கில் வந்த கடிதம்[/size]
1.7.1981 துக்ளக் இதழில் மதம் மாற்றம் பற்றிச் சில கருத்துக்கள் என்ற தலைப்பில் உள்ள வாதப் பிரதிவாதங்களைக் கண்டேன். இதுகுறித்து இந்த இரு மதங்களையும் சாராத என்னுடைய கருத்தைக் கூறுகிறேன். அந்நிய நாட்டுப் பணம்தான் மத மாற்றத்திற்கு முக்கியக்காரணம் என்று கூறுவது; மடமையிலும் மடமை. இத்தகைய மடமை நிறைந்த இம்மதவாதிகள் துக்ளக் ஆசிரியரின் நோக்கில் மகான்களாகக் காணப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனென்றால், துக்ளக் ஆசிரியர் ஆரிய வழியில் வந்து, சனாதன தர்மங்களைத் தாங்கி நிற்கும் ஒரு குல்லுகப்பட்டர்தானே?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான சூத்திரர்களை, ஆதி திராவிடர்களான பஞ்சமர்கள் மீது ஏவி, தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் நசுக்குவதுதானே ஆரியர்களின் சூழ்ச்சி வேலை?
இந்து சமூகத்தினராகிய மேற்குடி மக்கள் (ஜாதி இந்துக்கள்) தங்களுக்குள் எவ்வளவு பிளவுபட்டிருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்கும் விஷயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். தீண்டாமை தடைச் சட்டம் எவ்வளவு வன்மையாக இருப்பினும், அவற்றை மதிக்காத ஜாதி இந்துக்கள் இன்று இந்தியாவெங்கும் நிரம்பியுள்ளனர். பல கிராமங்களில் வாழும்  தாழ்த்தப்பட்ட மக்கள் நீரின்றி வாடும்போது, பொதுக் கிணறுகளில்கூட தண்ணீர் எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை. அது மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசாங்க சலுகைகளைப் பெற்று, கல்வி பயின்று அரசு உத்தியோகங்களில் அமர்ந்து வருகின்றனர். மொத்தத்தில் இவர்களில் சுமார் அய்ந்து சதவிகிதத்தினர் மட்டுமே. இதைப் பொறுக்க இயலாத இந்த ஜாதி இந்துக்கள் தங்கள் பொறாமைத் தீயால் ஜாதிக் கலகங்களைத் தூண்டி விடுகிறார்கள். இதுவே இன்றைக்கு இந்திய நாடெங்கும் பரவி வருகின்ற நிலை.
 
பா. ராபர்ட் மனோகரன், சென்னை-7
நன்றி: துக்ளக் 15.7.1981


Read more: http://viduthalai.in/page8/95261.html#ixzz3QVnz0sJf
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum