எருசலேம் நகரத்தின் அழிவு:
Thu May 22, 2014 7:00 pm
லூக்21:20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
லூக்21:21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
லூக்21:22. எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
லூக்21:23. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
லூக்21:24. பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
கிறிஸ்துவாகிய இயேசு ஒருமாபெரும் தீர்க்கதரிசியாக இருந்தார் என்பதறு இந்த எருசலேமின் அழிவு ஒரு சான்று!
தம்முடைய உபதேசத்தை கேட்க வந்த மக்களுக்கும் தம் சீடருக்கும் இந்த எச்சரிப்பை கூறுகிறார்! எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு நிச்சயம் ! ஆதலால் நீங்கள் தப்பிக்க வழி சொல்லுகிறேன் என்றார்.
தப்பிக்க வழி:
******************
1.யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போங்கள்!
2. நகரத்தில் இருக்கிறவர்கள் வெளியே புறப்படுங்கள்.
3.கிராமபுறங்களில் இருக்கிறவர்கள் நகருக்குள் வராதீர்கள். என்று ஆலோசனை சொல்லுகிறார்.
இது எப்போது நடந்தது?
********************************
கிபி.66 ஆம் ஆண்டு யூத புரட்சியாளர்கள் எருசலேமை ரோமானியர்களிடமிருந்து மீட்டு, சுயாட்சியை ப்ரகடனம் செய்தனர். இதனால் ரோமப் படைகள் எருசலேமை முற்றுகைப் போட்டனர். அதன் பின் திரும்பி போய்விட்டனர். ஆனால் இயேசு சொன்ன ஆலோசனையை எவரும் நினைக்கவில்லை. யுதேயாவின் மற்ற பகுதிகளில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. டைட்டஸ் ரோம பேரரசன் தலைமையில் எருசலேமின் மீது 70ஆயிரம் பேர் கொண்ட ஒரு பெரும்படை எருசலேமை கைப்பற்ற கி.பி.70தில் வந்தது. நகரத்தை கைப்பற்றினர்.
லூக்21:23. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். இந்த வசனத்தின்படி,
11,00,000 யூதர்கள் கொல்லப்பட்டனர். 97,000 சிறைப்பிடிக்கப்பட்டனர். மற்ற யூதர்கள் சிதறி ஓடினர்.லூக்21:24. பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; இந்த வசனம் சரியாக நிறைவேறிற்று.
புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். இந்த வசனத்தின் படி 1948 ஆண்டுவரை எருசலேம் புறசாதியாரின் கட்டுப்பாட்டில் (பிரிட்டீஷ்காரர்கள்) இருந்தது! 1948 ஆம் ஆண்டு விடுதலைப்பெற்றது. புறசாதியார்காலம் முடிந்தது!!
இந்தபடம் ரோமபடைகள் சென்று தாக்கிய பாதை!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|