தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Empty கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Sat Aug 31, 2013 9:29 am
 இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.


காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.


நன்றி: உண்மையுடையான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Empty Re: கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Sat Aug 31, 2013 12:08 pm
தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 2

ஆரியத்துக்கு முன் இந்தியாவின் நிலை என்ன?

அறிஞர் அண்ணா அவர்களது ஆரியமாயை என்ற தலைப்பில், (முந்தைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட நூல் இது) வெளிவந்த அறிவுக் கட்டுரைகள் ஆராய்ச்சிப் பொழிவாக மலர்ந்துள்ளது.அதில் உள்ள முக்கியப் பகுதிகள் நம் இன இளைஞர்களுக்கும், பண்பாட்டுப் படையெடுப்பை உணர்த்த வேண்டியவர்களுக்குப் பாடமாகவும் கற்றுத் தரவேண்டிய பகுதிகளை அப்படியே கீழே தருகிறோம்:

கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும் ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல, ஓர் காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.

எமைநத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்

- என்று இன எழுச்சியே உருவானது போன்ற நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்!

தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர, அந்தப்பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளிக்கிளம்புகிறது! எதிரிக்கு அடிமையாகமாட்டேன். கோடி தரினும்! என்று கூறுகின்றார். கோடி ரூபாய் - பவுன்- வைரக்-கற்கள் - நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால் சரி, வேறு பொருள் கோடி தருகிறேன் என்று எதிரிகேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான்; உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேணும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். `தொடேன் என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் மட்டுமல்ல; கருத்தினாலும் தொடேன் என்ற பொருளும் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை,

எமை நத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்

இந்த உணர்ச்சியும், உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும், வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப்-பேச்சினை?
`நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும்
`நம்மால் ஆகுமா! என்று பேசும் தொடை நடுங்கிகளும்,
`ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளும்,
``எனக்கு இது பிடித்தமில்லை என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்-கிறோம்!

``மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!
- என்ற வீர முழக்கம், எப்போது தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், `கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழரா-யினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக்காட்டி நிற்பர்! பணிவர்!

பகைவரை அடுத்துக் கெடுத்தன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது, பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள் வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்!

ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்திகெட்ட போதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!

போதை ஏறியவன், கல்தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான். சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

`அய்யன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள், `ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள், நம்புவதில்லை. நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச்சூது, ஆரியச்சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள் என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர்.

`மழையாம் மழை மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப்பிராந்தியால் சிலர், இதுபோல ஆரியர்-திராவிடர் எனப் பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு, எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூறமுடியும்?

ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுள் கதையும் கூறிவரும்போது, அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா? என்பனபற்றி கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப்பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்ப்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, `தாத்தா இதை நான் நம்பமுடியாது என்று கூறுவதுண்டா? குழந்தைப்பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான், இடிதேவன், மின்னல்மாதா, மழைமாகாளி, தீக்கடவுள் எனக் கடவுள் கதைகள் கட்டி விடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருப்பதுடன், அதே கருத்துக்களை மக்களிடைப் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும், போதிக்கப்பட்டுவிட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்கமுடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன் ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவார்; ஆராயுந் திறனற்றாரோ, `அப்படியா! என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம், தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசங்கொண்ட வேங்கையானாலும், சதுப்பு-நிலத்திலே - படுகுழியிலே - வீழ்ந்துவிட்டால் சாகத்-தானே வேண்டும்! நீள்வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதக்குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்கவேண்டி நேரிட்டது.

``இந்தியாவில் ஆரிய ஆட்சி என்றோர் நூல், ஹாவல் (ழயஎநடட) என்பவர் எழுதியுள்ளார். அதிலே மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு மிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ, அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க-முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அற்பவிஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறிவைத்தனர்!! என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ``மந்திரம் என்று மயக்க மொழி-பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார்? `ஆரியமாயையிலே சிக்கி நம்மவர்மீது ``துவஜம் தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா, ``வேத கால முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும் ஏமாற்றவும் ஓர் கருவியாக உபயோகப்பட்டது என்றும் ஹாவல் எழுதுகிறார்.

மந்திரம், யாகம் என்பவைகள் பார்ப்பன புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ``தாசர்கள், இந்த ஆராய்ச்சிக்காரனின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக்-கொள்ளக் கூடாதா? `ஆரிய ஆட்சி, ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை மனத்தினரை வாட்டிவதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன்வருவார்களா என்று கேட்கிறேன்.``கருத்து, சுருண்டு அங்குமிங்கும் அலைந்து, உன் மனதிலே அலைமோதிடச் செய்யும் அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்தரிக்கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்கமூட்டுகிறது!`வதனமே சந்திரபிம்பமோ, மலர்ந்த சரோஜமோ என்று நீ சிந்துபாடுவாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து, காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!``அந்த சிரிப்பிலே நீ சொக்குகிறாய்; அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்! அதைக்கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்துவிட்ட அவளுக்கு, நீ அடி வருடுகிறாய்! உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே, நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை, நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! - என்று வெளிவேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக்கொண்டு, வாஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு, விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக்கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!

`அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவளிடமே சென்று அதற்கு மருந்து கண்டேன்! என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், ``போடா, உலகமறியாத உன்மத்தா! நீ என்னடா கண்டாய், அந்த எழிலுடையாளின் இச்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய், நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறு-முன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படிப் பிறக்கும்? என்று, கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்-படுகிறான்.

அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான்! அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்!ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து, பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாததுகண்டு கவலைகொண்டு, `கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரைபோலாகிவிட்டதே, அய்யோ! நான் என்ன செய்வேன். கட்டு மாத்திரையால் முடியாது கத்தியே இனித்துணை என்று கூறும்போது-தான், காமுகன் கலங்கி நடுங்கி, கை கூப்பிக் கதறி, `கத்தியா என்று கேட்டுக்கூவி `கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான், கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே! என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.

அதுபோலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, வாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும், அந்தச் சமயத்திலே, `சு. ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம். இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே! என்று, ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும்.

தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள், கீழே தரப்-பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ள ஆசிரியர்கள், இந்த ஆதாரங்களையும், இவை போன்ற வேறு ஆதாரங்களையும், தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்யவேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதிநாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்யவேண்டும்.

ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை இவைகளைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன் கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை, சரித்திராசிரியரான தோழர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-இல் பதிக்கப்பட்டுள்ள ``இந்திய சரித்திரம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

http://unmaionline.com/20071202/pa-19.html

Posted by உண்மை உடையான்  
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Empty Re: கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Sat Aug 31, 2013 12:11 pm
பார்ப்பனர் மேலானவர் என்று மனுசாஸ்திரம் சொல்லுதே..என்னப்ப அடையாளம்?

"மனுசாஸ்திரமா? அதையெல்லாம் இந்தக் காலத்துல யாருண்ணா ஃபாலோ பண்றா?" என்பார்கள் இந்தக் கால பிராமணர்கள். ஆனால் உண்மையில் இவர்களின் பார்ப்பன தர்மத்தின் அடிப்படை மனுசாஸ்திரத்தில்தான் இருக்கிறது.

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31). என்கிறது மனுசாஸ்திரம்.

பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்ரியவர்களாம் பிராமணர்கள். இப்படி சொல்கிரது மனுசாஸ்திரம். ஏன் முகம்? மற்ற பகுதிகள் என்ன பாவம் பண்ணியது? முகத்தில் தோன்றிய பார்ப்பனர்களுக்கு என்ன சிறப்பு? அதற்கும் மனுசாச்திரமே பதில் சொல்கிறது.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).

கடவுள் உண்மையிலேயே பார்ப்பனரை மேலானவர்களாக படைக்க நினைத்திருந்தால், அவர்களுக்கு மூன்று கண்களையோ, நான்கு கால்களையோ, அல்லது காவி கலர் ரத்தத்தையோ கொடுத்து ஒரு தனியான பிறவியாக படைத்திருக்கலாம்தானே? அப்படி இல்லாதப்போ, அவர்களும் மற்ற எல்லா மனிதர்களையும் போல படைக்கப் பட்டிருப்பதால், பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்று எப்படி நம்புவது? மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்குறப்போ, நான் மட்டும் மேலானவன் என்று சொல்கிறாயே, என்னப்பா அடையாளம்?

 நன்றி: உண்மை உடையான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Empty Re: கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Sat Aug 31, 2013 12:13 pm
திராவிட நாகரிகம் வேறு! ஆரியர் வாழ்க்கை முறை வேறு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் அவர்கள் 8-2-08 தேதிய தினமணி இதழில் இந்தியப் பண்பாடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் தலைப்பே சாரே ஜஹான்ஸே அச்சா . . . என்பதாகும். உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் சிறந்தது எங்கள் இந்துஸ்தான்(!) என்பது அந்தப் பாடலின் முதல் வரி.

உலகில் சிறந்த நாட்டை ஏன் இஸ்லாமியர்கள் படையெடுத்து அடிமைப்படுத்தினார்கள்? எப்படி இஸ்லாமியர்களால் இந்த நாட்டை 700 ஆண்டுகள் ஆள முடிந்தது? இந்தியாவை வெற்றி கொண்ட மொகலாயர்களால் துறவியர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆலயங் கள் தகர்க்கப்பட்டன என்று எழுதுகிறார். இக்கொடுமைகளை ஏன் இந்துக் கடவுள்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சோமநாதபுரம் கோயிலைப் பதினெட்டு முறை கஜினி முகமது படையெடுத்து அதன் விக்கிரகங்கள், செல்வங்களைக் கொள் ளையடித்துச் சென்றானே. ஏன் கோயிலில் வீற்றிருக்கும் ஆண்டவனால் கஜனியை அழிக்க முடியவில்லை?

இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாந்தரைப் பற்றி பெங்களூரில் ஒரு நாடகத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பார்த்தாராம். இந்திய நாட்டுப் பண்பாட்டுச் சின்னங்களான ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, கண்ணனை நினைவூட்டும் புல்லாங்குழல் ஆகியவற்றை அலெக்சாந்தருக்குக் கொடுத்து அவற்றை விளக்கினார்களாம்!

ராமாயணமும், மகாபாரதமும் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகள் அல்ல; அவை பஞ்ச சந்திரம், அரேபியன் இரவுகள் போன்ற கற்பனைக் கதைகள் என்று பண்டித நேரு தாம் எழுதிய நான் கண்ட இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதாகக் கூறும் கற்பனைக் கதைகள் என்று நேரு கூறுகிறார்.

தசரதன் அறுபதாயிரம் மனைவியர்களைக் கொண்டிருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது. அது தமிழர் பண்பாடா?

சம்பூகன் என்ற சூத்திரன் தன் குலத் தொழிலுக்கு மாறாகத் தவம் செய்ததால், என் மகன் இறந்து விட்டான் என்று ஒரு பார்ப்பான் ராமனிடம் முறை யிட்டானாம். ராமன் உடனே சம்பூகன் தலையை வெட்டி விட் டானாம். பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டானாம்! இதுதான் கணேசன் புகழ்ந்து கூறும் பாரதப் பண்பாடா?

அய்ந்து சகோதரர்களுக்கு மனைவியாக இருந்த திரவுபதி எப்படி பத்தினியாக முடியும்? என்று தந்தை பெரியார் கேட்டாரே அதற்குப் பாரதீய ஜனதா கட்சி என்ன பதில் அளிக்கமுடியும்?

சிறியவனாக இருந்த போது வெண்ணெய் திருடி - பெரியவன் ஆனபோது பெண்கள் குளிக்கும்போது அவர்கள் சேலைகளைத் திருடியவனா நமது கடவுள் என்று அறிஞர் அண்ணா கேள்வி கேட்டாரே? அதற்கு இந்து மதவாதிகளின் பதில் என்ன?

பகவத் கீதையில் கண்ணன், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கூறுகிறான். இந்த நால்வகை வர்ணங்கள் தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மனித சமத்துவத்தைப் பாடினார்.

இந்தியாவை வெற்றி கொள்ள என்ன தந்திரம் கையாள வேண்டும் என்று மெக்காலே 1835 பிப்ரவலி 2 ஆம் நாள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திட்டம் ஒன்று வைத்தாராம். இந்தியா முழுதும் மெக்காலே பயணம் செய்தாராம். ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ இந்தியாவில் அவரால் பார்க்க முடிய வில்லையாம்!

மெக்காலே இந்தியாவில் பெருநகரங்களின் மூலை முடுக்களெல்லாம் சுற்றிப் பார்த்தவரா? இன்று அமெரிக்கா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிலே கூட திருடர்கள் இருக்கிறார்கள் என்றால் அக்கால இந்தியாவில் கேட்க வேண்டுமா? அக்காலத்தில் கள்வர்கள் இருந்த காரணத்தால்தான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கள்ளாமை என்ற அதிகாரத்தையே வைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

என்று எச்சரித்திருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் இருபது கோடி மக்கள் ஒரு வேளைக்குத் தான் உணவு பெற முடிகிறது என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கூறுகிறார். மெக்காலே பயணம் செய்த காலத்தில் பசிக் கொடுமையும், பிச்சை எடுத்தலும் இல்லாமலா இருந்திருக்கும்?

இந்தியாவின் தொன்மையான கல்வி முறை, கலாசாரத்தை அழிக்காமல் நாம் இந்தியாவை முழுவதும் வெற்றி கொள்ள முடியாது என்று மெக்காலே அறிக்கை வைத்தாராம்.இந்தியாவின் கல்வி முறை என்பது பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்தது அல்லவா? சூத்திர மக்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம முறை அல்லவா இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது!

டி.நோபிலி என்ற வெளிநாட்டுப் பாதிரியார் 1610 ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்திருக்கிறார். மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில், கல்வி கற்று வந்த பத்தாயிரம் மாணவர்களும் பார்ப்பனராகவே இருந்ததாக நோபிலி தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்! இந்த மனுதர்ம முறையை விட ஆங்கிலேயரின் கல்வி முறை எவ்வளவோ சமத்துவத் தன்மை கொண்டதாகும்.

தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் 12-1-2008 அன்று லயோலா கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில் கிறித்தவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வியைப் பரப்புவதில் சிறப்பான தொண்டு ஆற்றி இருக்கின்றனர் என்று புகழ்ந்திருக்கிறார். (விடுதலை 4-2-08).

1901 இல் தமிழர்களில் படித்தோர் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை மெக்காலே கல்வி முறை அழித்துவிட்டது என்று கணேசன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுவதைப் பகுத்தறிவு வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இமயம் முதல் குமரி வரை இதை ஒரே நாடாக, ஒரே தேசமாக இந்தப் பண்பாடுதான் ஆக்கியிருக்கிறது என்று மிகப் பெரிய பொய்யை கணேசன் கூறியிருக்கிறார். பல்வேறு சிறு நாடுகளாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் படைவலிமையால் ஒரே நாடாக ஆக்கினார்கள்.

சென்ற ஜனவரி மாதம் சென்னையில் கூடிய பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது; அது நமது கலாசாரத்தைக் கெடுத்துவிடும் என்று பேசியிருக்கிறர்கள். பார்ப்பனர் கலாச்சாரம் வேறு; தமிழர்களின் நாகரிகம், பண்பாடு வேறு. தமிழர் களின் நாகரிகத்தை நாம் எதிர்காலத்திலும் போற்றிக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி - விடுதலை
Sponsored content

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? Empty Re: கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum